Advertisement

மகிக்கு வந்த வீடியோவில் மணவறை போல இருந்தது மணமகன் அமர்ந்திருந்தான் , மணப்பெண் வந்து அமர்ந்ததும், தாலி எடுத்து கட்டும் முன் யாரோ மணமகனை துப்பாக்கியால்  சுட்டு விடுகிறார். மணமகன் இறந்தும் விடுகிறான்.. ஏதோ சீரியல் வீடியோ போல இருந்தது. அதன் கீழ் ஒரு மெஸேஜும் இருந்தது “நீ யாரை கல்யாணம் பண்ணிகிட்டாலும் மாப்பிள்ளைக்கு இந்த நிலமை தான்.. மரியாதையாக கல்யாணத்தை நிறுத்து”  
ஆது, “யாரு என்ன அனுப்பினாலும் நம்பிடுவியா?  இந்த நம்பர் கால் பண்ணியா?”
“ம்ம்ம் ஆப் பண்ணி இருக்கு”
“இது தெரியாமல் கூட உனக்கு வந்திருக்கலாம்.. எல்லாத்தையும் சீரியசாக எடுக்க வேண்டாம்.. என்ன பிரச்சனை வந்தாலும் நான் கூட இருப்பேன்.. ப்ளீஸ் இனி இந்த மாதிரி முடிவு எதுவும் எடுக்காதே..”
“இந்த நம்பர் ப்ளாக் பண்ணட்டுமா?”
“வேண்டாம் வேறு எதாவது வருதானு பார்ப்போம்.. ரொம்ப வலிக்குதா?”
“இல்லை ஆது”
“சாரி டி”
“பரவாயில்லை..”
“ஐயோ நல்லா சிவந்து போயிருக்கு இரு தண்ணீர் வாங்கி வரேன்”  
சிவந்த கன்னத்தில் குளிர்ந்த நீர் பட்டதும் எரிந்தது அவளுக்கு.. அதை பார்த்த ஆதவன் துடித்துவிட்டான்.
“சரியாகி விட்டது ஆது”
சிறிது நேரம் கதை பேசி அவள் பயத்தை போக்கிநான்.
“சாரி கேட்க மறந்திட்டேன், தலை காயம் எப்படி இருக்கு?”
“சரியாயிடுச்சு மா.. வெளியே எங்கேயாவது போகலாமா?”
“வேண்டாம்.. அப்பாகிட்ட பொய் சொல்லிட்டு வந்திருக்கேன்.. சீக்கிரமாக போகனும்.. ஐயோ ஆது.. வாங்க அந்த பக்கம் போகலாம் வாங்க வாங்க.. “ ஆதுவின் கை பிடித்து இழுத்துக் கொண்டு போய் ஓரமாக மறைந்து நின்றாள் 
“ஏன்டி இப்படி இழுத்து வர என்ன?”
“நிலாவும் மகேஷும் அங்கே பூங்கா உள்ளே வராங்க”
“ராகுலோட தம்பி மகேஷா?”
“ஆமாம் ரெண்டு பேரும் லவ்….. ஆமாம் ராகுல் அத்தான் தெரியுமா?”
“என் ரூம் மெட், காலேஜிலேர்ந்து… அப்பா எதுவும் சொல்லலையா.. எங்க வீட்டிற்கு வரும் பொழுது தாமரை அம்மா கிட்ட பேசினேன்“
“இல்லை.. கல்யாணம் பத்தி தான் சொன்னாங்க”
“ராகுல் உன்னை பத்தி நிறைய சொல்லுவான்”
“அப்படியா.. ஆனால் நேரில் பேசினதே இல்லை.. தேவைக்கு தான் பேசுவாங்க.. மகேஷ் தான் என் தோஸ்த்.. அவன் சாயங்காலம் வருவேன் சொன்னான்.. பயபுள்ள முன்னாடியே வந்து நிக்குது..   “
“சரி வா போய் பேசலாம்”
“வேண்டாம்.. அவங்க ரொம்ப நாள் கழிச்சு பாக்குறாங்க.. நாம தொல்லை பண்ண வேண்டாம்.. நாளைக்கு நீங்க ப்ரீயா?”
“லீவ் தான் அம்மா எதாவது ப்ளான் வச்சிருக்காங்களா தெரியவில்லை ஏன்?”
“நாங்க நகை கொஞ்சம் புடவை வாங்க போவோம்.. அதான்”
“நீங்க போயிட்டு வாங்க இப்பவே நான் வந்தால் நல்லா இருக்காது.. நிச்சயம் ஆகட்டும் நாம் தனியா ஊர் சுத்தலாம் சரியா?” 
“ம்ம்ம்ம்”
“மகி ..”
“நாளைக்கு பத்திரமாக போயிட்டு வரனும், எதாவது பிரச்சனை வந்தால் உடனே எனக்கு கால் பண்ணனும் சரியா”
“சரி ஆது.. “
:இது என் கார்ட் தேவை பட்டால் யூஸ் பண்ணிக்கோ பின் xxxx”
“வேண்டாம் ஆது என் கிட்ட இருக்கு”
“ப்ச்ச்ச்ச்…” அவன் முறைத்துப் பார்த்ததும் வாங்கி பர்ஸுக்குள் வைத்துக் கொண்டாள்.
“ரொம்ப பிடிவாதம் பிடிக்கிரீங்க “
“நான் அப்படி தான் .. சரி கிளம்பலாமா”
வெளியே வந்ததும் “பைக்கில் ஏறு”
“பக்கத்தில் தானே நடந்து போகிறேன்”
“உன்னை யாரு இப்ப வீட்டுக்கு போக சொன்னது ?”
“நான் எங்கேயும் வரவில்லை”
“சரி நான் இங்கிருந்து போக மாட்டேன்”
முறைத்துக்கொண்டே வண்டியில் ஏறி அமர்ந்தாள்
“மகி”
பதில் இல்லை
“பட்டு குட்டி”
“கோபமா”
பதில் பேசாததும் அவனும் மேற்கொண்டு எதுவும் கேட்காமல் சிறிது தூரம் சென்றான், ஒரு சிறிய வில்லா டைப் வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான்.
“இறங்கு மகி”
“யார் வீடு இது?” என கேட்டுக்கொண்டு  சுத்தியும் பார்த்தாள்.. இதே மாதிரி வீடு தான் வரிசையாக இருந்தது.. 
தன் சாவியை வைத்து வீட்டை திறந்தவன், “மேடம் வலது காலை வைத்து உள்ளே வாங்க நீங்க வாழப்போகிற வீடு”
“இது நம்ம வீடா? ரொம்ப நல்லாயிருக்குங்க”
“ஆம்.. இப்ப இருக்கிற வீடு வாடகை வீடு.. எனக்கு லோன் போடுவதில் இஷ்டம் இல்லை, அப்பா சேவிங்ஸ் பிஅப் (pf) பணம் , என்னுடையது, அம்மா நகை கொஞ்சம் எல்லாம் சேர்த்து இந்த வீடு வாங்கியாச்சு “
கீழே 1 பெட்ரூம், ஹால், கிச்சன் , டைநிங் ஏரியா இருந்தது.. மேலே 2 பெட்ரூம், ஹால், பால்கனி இருந்தது.. 
“பிடிச்சிருக்கா?”
“ம்ம்ம் ரொம்ப..”
“வீடு மட்டுமா?”
“உங்களையும் தான்”
அங்கே பால்கனியில் செடிகள் வளர்க்க தோதாக மண் தொட்டிகள் நிறைய இருந்தது அதை பார்த்த மகி “ஐஐஐஐ இங்க அழகா செடி வளர்க்கலாம் ஆது”
“ம்ம்ம் உனக்காக வாங்கினது அம்மா உன் வீட்டிலுள்ள செடிகளை பார்த்து ஒரே பாராட்டு..  அதனால் நானும் அம்மாவும் போய் வாங்கினோம்.. “
“ரொம்ப தேங்க்ஸ் ஆது நான் ரொம்ப லக்கி” என அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். சிறிது நேரம் எதுவும் பேசவில்லை.
“மகி”
“ம்ம்ம்ம்”
“எனக்கும் இப்படியே இருக்க ஆசை தான்.. ஆனால் வீட்டுக்கு போக வேண்டாமா?”
அப்போது தான் அவள் அவனை கட்டி கொண்டிருப்பது தெரிந்து விலகினாள்.. வெட்கத்தில் தலை குனிந்து கொண்டாள். 
அவள் கையை பிடித்து இழுத்து மீண்டும் கட்டி கொண்டான்
“மகி நான் எதுவும் ப்ளான் பண்ணி கூட்டிட்டு வரலை.. பட்“
(நீ பண்ணி தான் பாரேன்..)
இவன் என்ன சொல்றாங்கனு யோசிக்கும் முன்
“கன்ட்றோல் பண்ண முடியலை டி “ என கூறி இதழ் அணைத்தான்
முதலில் மிரண்ட அவள் பிறகு அவளும் ஒன்றினாள்.
பின் அவனே விடுவித்து,  “மகி குட்டி போகலாமா?”
“ம்ம்ம்ம் “
இருவரும் மௌனமாக வந்தனர். மகிக்கு இருந்த குழப்பம் போய் ஒருவித நிம்மதியுடன் வீடு திரும்பினாள். ஆது குழப்பத்தில் இருந்தான். இப்பொழுது சந்தேகம் தீர்ந்தது யாரோ வேண்டும் என்றே செய்கிறார்கள் என்று.
“உள்ளே வாங்க ஆது”
“இல்லைடா அப்புறமாக வருகிறேன்.. பயப்படாமல் இரு.. பை”
********************************************************************************** 
“அத்தான் எவ்வளவு நேரம் இங்கேயே இருக்கிறது ப்ளீஸ் வாங்க வீட்டுக்கு போகலாம்”
“2 மாதம் கழித்து பார்க்கிறோம் வேறு எதாவது பேசுடி. வந்ததிலிருந்து வீட்டுக்கு போகலாம் பல்லவியே பாடிட்டு இருக்க”
“வீட்டில் கோவிலுக்கு போயிட்டு போகிறேனு சொல்லிட்டு வந்தேன் அதனால தான் சொல்கிறேன்”
“ம்ம்ம் கொஞ்ச நேரம் இப்படியே இரு” அவள் மடியில் படுத்து கொண்டான்.
அத்தான் மகிழ் கல்யாணம் முடிந்து போயிட்டா, நான் தனியா இருக்கனும் நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு”
“கவலை படாதே பட்டு.. நீ படிச்சு முடித்ததும் நாம் கல்யாணம் பண்ணலாம் “
“அப்போ அப்பா தனியா இருப்பாரே?”
“நம்ம கூட கூட்டிட்டு போகலாம் பட்டு”
(ரெண்டு பேரும் இதையே சொல்லி ஏமாத்துங்க டா)
சிறிது நேரம் அங்கே அமர்ந்து கொண்டு இருந்தவர்கள் வீட்டிற்கு சென்றனர்.
************************************************************************************ 
தாமரை “என்னங்க நிச்சயம் புடவை எடுக்கனும், பொண்ணுக்கு நகை வாங்கனும், வேலை நிறைய இருக்கு மகிழ் வீட்டில் பேசுறீங்களா? நல்ல நாள் பார்த்து வாங்கி வரலாம்”
“சரிமா ஆதவன் வரட்டும் அவன் எப்ப ப்ரீயா இருப்பானு பார்த்துட்டு பொண்ணு வீட்டில் பேசலாம்”
ஆதவன் சரியாக வீட்டினுள் நுழைந்தான்.
“டேய் ஆதவா வெளிய போனால் நேரமாய் வீட்டுக்கு வர மாட்டியா?”
“சொல்லுமா சதீஷை பார்க்க போனேன்”
“மகிழை பார்க்க போனியா?”
(மம்மிக்கு எப்படி தெரியும்)
“இல்லை மா.. ஏன்?”
“பொய் சொல்லாதேடா”
“ஹிஹிஹி எப்படி மம்மி கண்டு பிடிச்ச?”
“மகனே மண்டை மேலே உள்ள கொண்டைய மறந்துட்ட “ 
“உன் சட்டையில் உள்ள லிப்ஸ்டிக்கை (lipstick) தொடைடா”
அப்போது தான் கவனித்தான்… கிஸ் அடிச்சிட்டு சட்டையில் வாயை துடைச்சிட்டேன் போலவே.. மகி குட்டி இனி லிப்ஸ்டிச்கே கிடையாது உனக்கு (நல்ல வேளை வாயை மட்டுமாவது தொடைச்ச)
“ஹிஹிஹி அது சும்மாம்மா இதோ வருகிறேன்.. தன் அறைக்கு ஓடிவிட்டான்”
************************************************************************************* 
இரவு உணவை அனைவரும் உண்ண தாமரை பரிமாறினார்.
ராம் , “தாமரை நாளைக்கு நானும் மச்சானும் போய் ஹோட்டல் ஹால் பார்த்து புக் பண்ணிட்டு வருகிறோம்.. சம்பந்தி போன் பண்ணினார், புடவை எடுக்க அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை போகலாம் சொன்னாங்க.. அதனால் நீங்க 4 பேரும் போய் எல்லாம் வாங்கிட்டு வாங்க”
“சரிங்க அண்ணா”
“பழைய நகை பணம் கொஞ்சம் மகேஷ் கிட்ட குடுக்குறேன் 35 சவரன் வாங்கிடலாம் அதுல .. மாப்பிள்ளை வீட்டில் நல்ல மாதிரி தான் தெரியுது நகை பணம் எல்லாம் உங்க இஷ்டம் சொல்லிட்டாங்க”
“மாமா கவலை படாதிங்க 50 சவரன் வாங்கிடலாம்”
“இல்லை மகேஷ் அப்புறம் நிலாவிற்கு பத்தாம போயிடும்”
“மாமா நான் 15 சவரன் வாங்குறேன் மகிழ் கல்யாணத்துக்கு”
“வேண்டாம் பா”
“அண்ணா நீங்க சும்மா இருங்க.. நாங்க ஏற்கனவே முடிவு பண்ணிட்டோம்”
“ஆமாம் மச்சான்..”
“காலையில் 8 மணிக்கு எல்லாம் தயாராக இருக்கவும்.. குண்டாத்தி நைட் போன் பேசிட்டு காலையில் லேட்டாக கிளம்பாத”
“போடா மங்கி”
நிலா அமைதியாக உணவை உண்டு விட்டு தன் அறைக்கு சென்றாள். மகேஷ் கண்டு கொள்ளவில்லை
“ஏன்டா எருமை நிலா கூட சண்டை போட்டியா அவள் முகமே சரியில்லை?”
“இல்லை.. தெரியவில்லை  நான் பேசுறேன் அவள் கிட்ட தயவு செஞ்சு நீ கரடி வேலை மட்டும் பார்த்திடாத நைட்”
“போடா தடியா”
நிலா படுத்துக்கொண்டு இருந்தாள்.. மகேஷ் நேராக அவள் ரூமிற்கு சென்றான். 
“என்னடி ஏன் ஒரு மாதிரி இருக்க?”
“அவன் மடியில் படுத்து அழ ஆரம்பித்தாள்”
“என்ன சொல்லுமா”
“அக்காவை ரொம்ப மிஸ் பண்ணுவேன்”
“சீசீ இதற்காக அழுது நீ அவளை பயப்படுத்தாதே நான் இருக்கேன் அப்படி எல்லாம் உன்னை தனியா விட மாட்டேன் சரியா?”
“ம்ம்ம்ம்”
“மறந்திடாத நாளைக்கு உனக்கும் ஏதாவது நகை வாங்கு சரியா?”
“சரி “
“அழுமூஞ்சி மாதிரி இருக்காதே சிரி கொஞ்சம்”
“போங்க அத்தான்”
“11 மணிக்கு மொட்டை மாடிக்கு வந்திடு.. “
“மாட்டேன்”
“ஹஹஹா வாய் மாட்டேன் சொல்லுது கண்ணு ஓகே சொல்லுதே”
“தூங்காமல் வாடி” என கூறிவிட்டு கீழே சென்றான்.
மகிழ் ஆதவனிற்கு அழைத்து  நாளை கடைக்கு போவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள்.
“என்ன வேண்டுமானாலும் வாங்கு ஆனால் இனி லிப்ஸ்டிக் மட்டும் கிடையாது டி”
“ஏன்”
“இன்னிக்கு என் மானமே போச்சு அம்மா முன்னாடி சட்டையில் உன் லிப்ஸ்டிக் கரைதான்”
“போங்க ஆது ‘
அப்போது ஒரு மெஸேஜ் வந்தது.. ஹெட் செட் போட்டுக்கொண்டு பேசியதால் உடனே ஓபன் செய்தாள். அதே மிரட்டல் காரன் தான் “ உனக்கு ஒரு தடவை சொன்னால் புரியாதா? நாளைக்கே சாம்பிள் காட்டுறேன் மகிழினி “
இதை பார்த்ததும் அப்படியே அவனிடம் கூறினாள்.
2 நிமிடம் யோசித்தவன் 
“மகி இதை பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம்.. நாளைக்கு எங்க போறீங்க மட்டும் மெஸேஜ் பண்ணு நானும் வருவேன்  சரியா?”
“ம்ம்ம்”
“பயப்படாதே எனக்கு ஒரு வேலை இருக்கு முடிச்சிட்டு கூப்பிடுறேன்”
“ம்ம்ம்”
“பை மகி குட்டி.. லவ் யூ”
  • தொடரும்
 

Advertisement