Advertisement

பகுதி 11

“எனக்கு யாரோ தான் “ என கூறிவிட்டு இவன் சென்றுவிட, ஷாக் அடித்தாற்ப்போல் நின்றிருந்தாள் ப்ருந்தா.

அவள் கொண்டு வந்திருந்த காரை தேடி நடந்தது இவள் கால்கள். கதவை திறந்து உள்ளே அமர்ந்தவள், கண் மூடி சாய்ந்துவிட, கண்ணோரமாய் கண்ணீர் துளிகள் உருண்டோடியது.

ஒரு முறை காதலை உணர வைப்பவன், மறுமுறை காதலே இல்லை என தூக்கி எறிவதை தாங்கவே முடியவில்லை அவளால்.

பிர்லாவின் மீது இருப்பது சிறு ஈர்ப்பு, ஒரு வகையான அன்பு என ஒதுக்க முடியவில்லை. இவனை சந்தித்த ஒவ்வொரு இடமும் காதலை பறைசாற்றும் இடமாக மாறிப்போனது அவள் மனதில் அப்படி ஒரு எண்ணமெல்லாம் சாதாரணமாய், எல்லோரின் மீதும் வராதே  இதுவரை தனக்கு வந்ததும் கிடையாதே, முதல் முறை வந்ததும், அதை உணர்ந்ததும் பிர்லாவிடம் மட்டும் தானே!

என்ன நடந்தாலும் சரி, பிர்லாவை விட மாட்டேன் என அந்த நிலையிலும், இறுமாப்பாய் முடிவெடுத்தது இவள் மனம்.

அதன் பின் அங்கேயே காத்திருந்து, யோகா கிளாஸ் முடியும் வரை அவளது அன்னையை அழைத்துகொண்டு வீட்டிற்கு வந்தாள்.

எப்படி மறைத்தாலும் அழுத விழிகள் காட்டி கொடுக்க தானே செய்யும், அது அறியாமல் அழுந்த துடைத்த முகத்தோடு இவள் வீட்டினுள் நுழைந்தாள். அவள் பின்னேயே அவளது அன்னையும் வந்தார். வந்தவர் சமையலறைக்குள் நுழைந்து விட.

“ரோட்ல யார்மேலையும் வண்டியை விட்டு அடி வாங்கிட்டியா ” என சோபாவில் அமர்ந்தபடி ப்ருந்தாவை வம்புக்கு அழுத்தம் விமல்.

பதில் கூறாமல் நின்றபடி இவள் திரும்பி முறைக்க

“இல்லை  முகமெல்லாம் அழுத எபக்ட் தெரியுதே அதான் கேட்டேன்”  சும்மா செல்பவளை வெத்தலை பாக்கு வைத்து வம்புக்கெ இழுத்தான் விமல்.

“நானே செம்ம  காண்டுல இருக்கேன் வாயை மூடிட்டு இரு” ப்ருந்தா அவனை எச்சரிக்கை செய்ய

“ஆஹா  உனக்கு இருக்குற கோபத்தை பார்த்தா நிஜமாகவே யார்க்கிட்டயோ செமத்தியா வாங்கிருக்க போல ” இவன் விடுவேனா என பேச

“யார் மேலையும் விடல  இது வேற பிரச்சனை” என இவள் பற்களுக்குள் பொறுமையை பிடித்துக்கொண்டு பேச

“நம்புற மாதிரி இல்லை  ஏதோ பெரிசா ஆப்பு வாங்கி இருக்க  அதை எனக்கு சொல்லாமல் சமாளிக்கிற அப்படிதான” அவள் அழுத விழிகளை இவன்  துடைப்பது போல் பாவனை செய்ய

பதிலுக்கு இவள் முறைத்த முறைப்பில் “ஒரு வேளை மாமா வேற பொண்ணை செலக்ட் பண்ணிட்டங்களா ” என இன்னும் அவளை வெறுப்பேற்ற

“என்னது வேற பொண்ணா  நான் இருக்கும் போது வேற பொண்ணு கேட்குதா ?” என இவள் போட்ட சத்தத்தில்

“என்னது  வேற பொண்ணா.? யாரு ? என்ன ? என்ன விசயம் ?” இருவரின் பேச்சை அறைகுறையாய் கேட்டபடி சமையலறையில் இருந்து ப்ருந்தாவின் அன்னை வர

அதை பார்த்த ப்ருந்தா ‘சிக்குனடா நீ’ என மனதினுள் கணக்கு போட்டபடி

“வேற யாரு…? எல்லாம் உன் மருமக தான் ! ஏற்கனவே உன் பையன் ஒரு பொண்ணை கரெக்ட் பண்ணி இருந்தான், இப்போ அவளை கழட்டி விட்டுட்டானாம், வேற பொண்ணை பிக் அப் பண்ணி் இருக்கனாம்  என்னனு கேளும்மா  உன் மகனை !” என கமலேஷை வாகாய் சிக்க வைத்தாள்

அதை விழி விரிய கேட்ட கமலேஷிற்கு வழக்கம் போல் வாயில் இருந்த தீணி உள்ளே இறங்காமால் திறந்த வாயினுள் உருண்டு கொண்டிருக்க

 “ஏண்டா பத்தாவது கூட முடிக்கலை அதுக்குள்ள பொண்ணா ? அதுவும் இரண்டு வேறையா…” கையில் இருந்த தோசைக்கரண்டியில் கமலேஷை அடி வைத்துக்கொண்டே அவனை பின்னி எடுத்தார்.

அடித்த அடியில் மடியில் இருந்த சிப்ஸ் தரையிலும், வாயில் இருந்த சிப்ஸ் வயிற்றுக்குள்ளும் அவசரமாய் போய் விழ

“அம்மா…

ஆ…

அய்யோ…

ம்மா  விடும்மா…

அம்மாஆஆஆஆஆஆஆஆஆஆ….” தன் வெண்கலகுரலில் தன் தாயை தடுத்து நிறுத்தியவன்

பலமாய் மூச்சுக்களை விட

அதே நிலையில் அவனது தாயும் இருக்க

அய்யோ அதுக்குள்ள முடிஞ்சதே என ப்ருந்தா இருக்க…

“இப்போ நான் டென்த் முடிக்காதது தானே உன் பிரச்சனை ! டென்த் முடிச்சிட்டு லவ் பண்ணினா தப்பில்லையா ?” என அதி முக்கியமான கேள்வியை கேட்டான் விமல்

ஒரு நிமிடம் திருதிருத்த அவனின் அன்னை, ப்ருந்தாவின் பேய் சிரிப்பில், அவனை மீண்டுமாய் அடி விளாசி தள்ளிவிட்டார்.

“ஆ  அய்யோ… ஆ ” கமலேஷின் குரல் வீட்டையே உலுக்கியது எனில் ப்ருந்தாவின் சிரிப்பு மலர்ந்து மணம் வீசியது.

………….

“ஏய்  ப்ருந்தா  போதும் ” அடித்துக்கொண்டிருந்த இரண்டாவது பாட்டிலை அவளிடமிருந்து வலுக்கட்டாயமாய் பிடுங்கினாள் திவ்யா, ப்ருந்தாவின் தோழி

“ஏய் நானே பிர்லாவை  பார்க்கமுடியலைன்ற கடுப்பில் இருக்கேன்  இதில் நீ வேற எக்ஸ்ட்ரா கடுப்படிக்காத போய்டு ” மீண்டுமாய் பாட்டில் ப்ருந்தாவிடமே வந்து அமர்ந்து கொண்டது.

“முன்ன, பிர்லாவை பார்க்கமுடியலைன்ற ஆதங்கத்தில் தண்ணி அடிக்காம இருந்த, இப்போ அதுக்காக தான் அடிக்கிறேனு சொல்ற  பயித்தியாமாடி நீ ”

“ஆமாம் பயித்தியம் தான்  பிர்லா மேல பயித்தியம் அதுக்கென்னன்ற ?”

“ஏய், நைட்னா கூட தப்பிச்சுடுவ, இப்போ ஈவ்னிங்டி  ,இப்போ நீ தண்ணி அடிச்சிட்டு போன  உங்கம்மாக்கு தெரிஞ்சி பிரச்சனை ஆகப்போகுதுடீ !”

“தெரியட்டும்னு தான் குடிக்கிறேன்  அப்பிடியாவது என் மேரேஜ் நடக்குதானு பார்ப்போம் ” மீதமிருந்ததை சிப் சிப்பாய் அருந்த தொடங்கினாள் ப்ருந்தா.

“பிர்லான்ற பையனை லவ் பண்றேன், மேரேஜ் பண்ணி வைங்கன்னு உன் அப்பாகிட்ட சொன்னா தானே நடக்கும்  அதை விட்டுட்டு குடிச்சா, தன்னால நடந்துடுமா?”

“எங்கப்பா ஓகே சொல்லீடுவாங்க,ஆனா பிர்லா ஓகே சொல்ல மாட்ரானே!” இதுக்கு தான் குடிக்கிறேன் என

“ஏண்டி, ஒன் சைடா லவ் பண்ணிட்டே இந்த அட்டூழியம் பண்றியா நீ ” என வாய் பிளந்தவள் “நீ இப்போ வர்றியா இல்லையா ? நான் கிளம்ப போறேன்” என கேட்க

“நான் முழுசா குடிச்சுட்டு தான் வருவேன் ” அதுவரை கிளம்பவே மாட்டேன் என இவள் பேச

 “நீ என்னமும் செய்  நான் வீட்டுக்கு போறேன், இல்லை எங்கம்மா என்ன பின்னிடுவாங்க ” இப்போதைக்கு இவள் வரமாட்டாள் என தெரிந்து இடத்தை காலி செய்தாள் திவ்யா.

அன்று வழக்கத்தை விட ஜாஸ்தியாக குடித்தாள், இதற்கு மேல் முடியாது என அவளே உணர, பில் செட்டில் செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்

 “உரசாத மனசத்தான்  உருக்காத உயிரை தான்…!” என்ற பாடல் வரிகள்  காரில் அலறவிட்டபடி சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தாள் பிர்லாவை நினைத்தபடியே.

காரின் வேகத்தை சட்டென குறைத்து, சடன் பிரேக் போடவைத்தான் பிர்லா

ஆம்  ரோட்டை கடந்து, பிரபல ஹைப்பர் மார்க்கெட்டினுள் நுழைந்து கொண்டிருந்தான் பிர்லா.

அவ்வளவு தான் இவளின் மனதோடு, விழிகளும் அவன் பின்னேயே சென்றது. காரை கிடைத்த இடத்தில் பார்க் செய்தாலும், கண்கள் பிர்லாவை தேடி சென்று அவனோடு ஒட்டிகொண்டது.

லேசாக ஏற ஆரம்பித்த போதை சற்று தடுமாற்றத்தை கொடுக்க, அதை இமைதட்டி சரிபடுத்தும் முன் அவள் கண்களில் இருந்து தப்பிவிட்டான்.

கண்கள் படபடவென தேட, தடுமாறிய கால்களை சமாளித்து வேகவேகமாய் உள்ளே சென்றாள். நின்ற இடத்திலேயே பார்வையை சுழல விட, எஸ்கலேட்டரில் இருந்த ஒரு உருவம்  பிர்லாவை போல் அடையாளம் காட்டியது. சற்று உன்னிப்பாய் கவனிக்க அது அவன் தான்.

அதன் பின் ஏறி கொண்டிருந்த எஸ்கலேட்டரில் விறுவிறுவென பாய்ந்தோடினாள் ப்ருந்தா. ஒரு வழியாய் மூச்சுவாங்க அவனை மறைத்தபடி “ஹேய் பிர்லா  உன்னை எங்கெல்லாம் தேட !” என அவன் முன் வந்து நிற்க.

“எக்ஸ் க்யூஸ் மீ” லேசாய் தலை குனிந்து மூச்சு வாங்கி கொண்டிருந்த ப்ருந்தாவை நிமிர்ந்து முகம் காண செய்தது, அந்த வேற்றானின் குரல்

அதில் பட்டென நிமிர்ந்து பார்த்தவள் ‘அய்யோ இது பிர்லா கிடையாது’ என அவள் உணர

“சாரி  நான் என்னோட லவ்வர்னு நினைச்சிட்டேன்.” என அவள் வாய் தானாகவே மன்னிப்பை வேண்டியது.

ஆனால் பதிலுக்கு அவனோ “இதுக்கெதுக்குங்க சாரி  இப்போ  கூட ஓகே சொல்லுங்க நான் உங்க லவ்வரா மாறிடுறேன் ” அவன் சிரித்து கொண்டு பதில் சொல்ல, அவனோ ‘குடிச்சிருக்கா’ என தெளிவாய் கண்டு கொண்டது.

ஆளையும் மூஞ்சையும் பாரு  என முறைத்து விட்டு, அங்கிருந்து இவள் நகர எத்தனிக்க.

“கேட்டதுக்கு பதிலே சொல்லாமல் போற, என்ன உன் லவ்வரா மாறிடவா?” என அவளின் போதையான நிலை தைரியமாய் அவள் கைகளை பிடிக்க வைத்தது.

தன் கையை பிடித்திருந்தவனை நிதானமாய் பார்த்து “ஓ  தாராளமா மாறலாமே !” என்றவள்  கண் இமைக்கும் நொடிக்குள் அவன் கால்களின் ஊடே இவள் காலை விட்டு  தள்ள,எஸ்கலேட்டரில் இருந்து உருண்டு கொண்டிருந்தான் அந்த வாலிபன்

“டேய் டேய் டேய்…” என அவனது நண்பர்கள் அவனை பிடிக்கும் முன் எஸ்கலேட்டரை தாண்டி கீழே கிடந்தான் அந்த வாலிபன்.

“ஏன் தம்பி பார்த்து வரமாட்டியா ” என ஒரு சிலர் அவனை தூக்கிவிட “அந்த பொண்ணுகிட்ட என்னடாவம்பு பண்ணின !” என அவனது நண்பர்களும் கேட்க

“எல்லாம் அந்த லூசால் தாண்டா” என எஸ்கலேட்டரில் ஏறிக்கொண்டிருந்த ப்ருந்தாவை காட்டி நடந்ததை கூறிக்கொண்டிருந்தான்  அதற்குள் அங்கே கூட்டம் கூடி விட அங்கே வந்த பிர்லா ,இதையெல்லாம் கேட்டு ‘யார் அந்த பெண்’ என்பது திரும்பி பார்த்தான்.

யாரோ என நினைத்தவனுக்கு அந்த பெண் ப்ருந்தா என தெரிய அதிர்ந்து போனான்.

அதே நேரம் ப்ருந்தாவும் அவனை பார்க்க  பிர்லாவை மீண்டும் கண்டு கொண்ட ஆனந்தம் மனதை தாக்கியது என்றால், “ஏய் உனக்கு போதை ஏறிப்போச்சு  பார்க்குறவனெல்லாம்  பிர்லாவா தெரியுறான்  முதல்ல வீட்டுக்கு கிளம்புடீ ” என அவளது மனசாட்சி கூக்குரல் இட,

Advertisement