Advertisement

அவளே என் பிரபாவம் 24

“இன்னும் வேற ஏதாவது இருக்கா..? இல்லை இவ்வளவு தானா..?” என்ற ப்ரேமின் கேள்வியில் மது அவனை அதிர்ந்து பார்த்தாள்

என்ன..? என்ன இன்னும் இருக்கா..?” என்று மது கணவனை பார்த்து கேட்க, லேசாக சிரித்த அவன்

அதான் இவ்வளவு நேரம் என்னை ஏதேதோ கேட்டுட்டு இருந்தியே அதெல்லாம் தான் முடிஞ்சிருச்சா..? இல்லை இன்னும் ஏதாவது  இருக்கான்னு கேட்டேன்..?” என்று தெளிவாக கேட்டவன்மனைவியை ஏந்தி கட்டிலுக்கு சென்றான்

நல்லா வெய்ட் குறைஞ்சிருக்கடி..” என்றவாறே அவளை கட்டிலில் அமரவைத்தவன், அவள் முன் கை கட்டி நின்றான்

என்ன..?” என்று அவனின் குறுகுறு  பார்வையில் புரியாமல் கேட்டாள்

இல்லை..  இது  நீயான்னு ஆச்சரியமா இருக்கு.. அதிர்ச்சியா இருக்கு.. இன்னும் சொல்ல போனால் அதிர்ப்தியாவும் இருக்கு..” என்று சொல்ல, மது கண்ணை சுருக்கி பார்த்தவள்

ஏன்..? நான் என்ன தப்பா பேசிட்டேன்..?” லேசாக கோபத்தோடு கேட்டாள்

தப்பா பேசல..  நிறைய தப்பா யோச்சிருக்கன்னு சொல்றேன்..” 

எது தப்பு சொல்றீங்க..? நான் உங்களோட வீட்டுக்கு  வரமாட்டேன்னு சொன்னதையா..?”

ம்ம்.. அதுவும் தான் இருந்தது, பட் நீ இப்போ  சில விஷயங்கள் பேசினத்துக்கு அப்பறம் இல்லை..” என்று உதடு பிதுக்கி சொல்ல, மது அவனை முறைத்தவள்

எது பேசறதா  இருந்தாலும் கிளியரா பேசுங்க..” என்றாள்

ம்ம்.. அதுதான் பிரச்சனையே..?  எனக்கு உன்னை போல கிரிஸ்டல் கிளியரா எல்லாம் பேச தெரியாது.. நீ இவ்வளவு நேரம் பேசுனது போல யோசிச்சி, ஆராய்ஞ்சு எல்லாம்  எனக்கு பேச  முடியாது..”

இந்த செகண்ட்  என் மனசுல என்ன வருதோ அதை தான் பேசவேன், அந்த பேச்சும் உன்னை மாதிரி பக்குவப்பட்ட, நிதானமான பேச்சா இருக்காது, கொஞ்சம்.. ம்ம்.. நிறைய கரடு முரடா தான் இருக்கும்.. என்ன செய்ய..?” என்று உதடு பிதுக்கியவன், 

“ஏன் அப்படி கேட்ட..?” என்று கேட்டான். 

“என்ன கேட்டேன்..?” 

“அதான் நம்ம மூணு பேர்ல யாராவது விட்டு கொடுக்கணும்ன்னு..?”

“ஆமா அதிலென்ன தப்பு..?  என்னால உங்க ரெண்டு பேருக்கு இடையில் மாட்டிகிட்டு தவிக்க முடியாது, அதனால தான் கேட்டேன்..” என்று தெளிவாக சொல்ல, ப்ரேம் மறுப்புடன்  தலையை கோதி கொண்டான்

உன் கிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கல மித்ரா..” 

“ஏன்..?” என்று மது புருவம் சுருக்கி கேட்டாள்

ஏன்னா..? உன்னோட எண்ணம் தப்புன்னு, நீ எதிர்பார்க்கிற விஷயம் தப்பு..” என்ற ப்ரேம் மனைவியை கூர்மையாக பார்த்தவன்

சொல்லு..? ஏன் அப்படி கேட்ட..? இதுல சம்மந்தப்பட்டது நான்.. நீ.. உங்க அப்பா.. இதுல யார் யாரை விட்டு கொடுக்கணும்ன்னு நீ எதிர்பார்க்கிற..? என்னையா..? இல்லை உங்க அப்பாவையா..? இல்லை நீ எங்க ரெண்டு பேரையுமா..? சொல்லு.. யார் விட்டு கொடுக்கலாம்..?” என்று சற்று ஆவேசத்துடன் கேட்க, மது புரிந்தும் புரியாமல் கணவனை பார்த்தாள்

நீ எதிர்பார்க்கிற மாதிரி யாராவது விட்டு கொடுக்கணும்ன்னா..? உங்க அப்பாவை கேட்போமா..? உங்க பொண்ணை எனக்கு  விட்டு கொடுத்துடுங்கன்னு..?” என்று கேட்க, மது திக்கென்று அதிர்ந்து தான் போனாள்

என்ன..? என்ன பேசுறீங்க நீங்க..? அப்பாகிட்ட போய்..” என்று  கணவனை பார்த்து வெடிக்க, அவளை தீர்க்கமாக பார்த்த ப்ரேம்

ஏன் உங்க அப்பாகிட்ட கேட்கறதுல என்ன தப்பு..? அவரோட மகளுக்காக அவர் இதை கூட செய்ய மாட்டாரா..? நீ ஏன் இவ்வளவு கோவப்படுற..? அப்போ நான் உன்னை விட்டு கொடுத்துடுவா.. உங்க அப்பாக்கு சிறந்த மகளா இருமான்னு நான் உன்னை அவர்கிட்டேயே கொடுத்துடுவா..” என்று தீவிரமாக கேட்க, மதுவின் இதயம் நின்று துடித்தது

என்ன இப்படி எல்லாம் கேட்டுகிட்டு இருக்கீங்க..?” 

ஏய்.. எதுக்கு இப்போ இவ்வளவு டென்சன் ஆகுற..? நீதானே கேட்ட..? அதுக்கு தான் நான் பதில் சொல்லிட்டு இருக்கேன்..” 

“நான்.. நான் இப்படியா கேட்டேன்..?” என்று தாளாமல் கொதித்தாள்

ஆமா.. இப்படித்தான் கேட்ட, நம்ம மூணு பேர்ல யாராவது விட்டு கொடுக்கணும்ன்னு, அதுக்கு இது தானே மீனிங்..”

இல்லை இது  வேண்டாம்ன்னா.. நீ எங்கள்ல யாரையாவது சூஸ் பண்ணு, என்னை சூஸ் பண்றதா இருந்தா உங்க அப்பா ஒதுங்கிக்கட்டும், இல்லை அவரை நீ சூஸ் பண்ணா நான் ஒதுங்கிகிறேன், எனக்கு இதென்ன புதுசா என்ன..?”

நீங்க வேணும்ன்னே என்னோட பேச்சை டைவர்ட் பண்றீங்க..? நான் கேட்டதுக்கு இது மீனிங் இல்லை, எப்போவும் நீங்க ரெண்டு பேரும் முட்டிக்கிறீங்கன்னு தான் நான்  கேட்டேன்..” 

நாங்க ஏன் முட்டிக்கிறோம் மித்ரா.. அவருக்கு எனக்கும் என்ன வாய்க்கால் தகறாரா..? இல்லை பங்காளி பிரச்சனையா..? சொல்லு எதுக்கு முட்டிக்கிறோம்..?”

அப்படியே அவர் மகளுக்காக விட்டு கொடுத்தாலும் நீ அதை தாங்குவியா..? சொல்லு உன்னால முதல்ல உங்க அப்பாவை விட்டு தள்ளி இருக்க முடியுமா..?” என்று மித்ராவை அறிந்தவனாக கேட்க, அவள்தான் வாய் மூட வேண்டியதாகி போனது

நான் எந்த இடத்துல தப்பு செய்றேன்..?” என்று சுவரை பார்த்து வெறித்தவளை வேதனையுடன் பார்தத ப்ரேம், அவளின் பக்கத்தில்  இருந்து ஜுஸை எடுத்து டம்ளரில் ஊற்றி மனைவியிடம் நீட்டினான்

எனக்கு ஒன்னும் வேண்டாம்..” என்று கோவத்தோடு மறுத்தவளை கண்டிப்புடன் பார்த்தவன்

இந்த நேரத்துல இது போல பேச்சே நமக்குள்ள வந்திருக்க கூடாது, வந்துருச்சு.. பேசியே ஆகணும்.. இல்லை மீதி இருக்கிற நாள் எல்லாம் இதையே யோசிச்சு உன்னை நீயே வருத்திப்ப.. அது கண்டிப்பா உனக்கும் நல்லதில்லை, நம்ம பேபிக்கும் நல்லதில்லை..”

அதனாலதான் நான் பொறுமையா பேசிட்டு இருக்கேன், இல்லை நீ என்னை பேசின பேச்சுக்கு போடின்னு போயிருப்பேன்..” என்று பொருமியவன், வலுக்கட்டாயமாக  ஜுஸை குடிக்க வைத்துவிட்டு, காலை தொங்க போட்டு அமர்ந்திருந்தவளின் கால்களை எடுத்து பெட்டின் மேல் நீட்டி வைத்தான்

ம்ப்ச்.. விடுங்க..” என்று அவனின் பிடியில் இருந்த தன் காலை இழுத்தவளை கண் இடுங்க பார்த்தவன், அவளின் காலை எடுத்து தன் மடியில் வைத்து அமர்ந்துகொண்டான்

என்ன..? என்ன செய்றீங்க..?  யாராவது வரபோறாங்க.. விடுங்க..” என்று மறுத்தவளை கண்டு கொள்ளாமல், அவளின் பாதத்தை வருடியவன், இதமாக விரல்களுக்கு சுளுக்கு எடுத்துவிட்டான்

போதும்.. விடுங்க..” என்று காலை இழுத்த மனைவியை பார்த்து  வெறுமையாக சிரித்தவன்

என்ன கேட்ட..? உன்னை விட எனக்கு என்னோட தன்மானம், சுயமரியாதை முக்கியமா போயிடுச்சா, நீ அதோட சம்மந்தபடலையான்னு கேட்கற..? ஏன் அப்படி கேட்ட மித்ரா..?”

நீ அப்படி நினைக்கிறது போல நான் எப்போ உங்கிட்ட ஈகோயிஸ்ட்டா நடந்திருக்கேன், எந்த இடத்துல நீ என்னோட இந்த கேரக்டரால அஃபக்ட் ஆன சொல்லு..?”

ஏன் இல்லையாங்க..? இப்போ நடந்த பிரச்சனையில நீங்க என்னை விட்டுட்டு போனதும் உங்களோட தன்மானத்தை, சுயமரியாதையை ப்ரூப் செய்யதானே..? பணத்தை கொடுத்திட்டு என்னை கூட்டிட்டு போறேன்னு சொன்னது மாதிரியே, பணத்தை கொடுத்திட்டு என்னை வான்னு கூப்பிட்டேங்க தானே..?” என்று வலியுடன் சொன்னவளை விரக்தியாக பார்த்த ப்ரேம்

மித்ரா.. எல்லா விஷயத்துக்கும் ரெண்டு பக்கம் உண்டு, அதுல எது சரிங்கிறது அவங்க யோசிக்கிற கோணத்தை பொறுத்ததுதான், உன்னை பொறுத்தவரைக்கும் நான் என்னோட தன்மானத்தை, சுய மரியாதையை ப்ரூப் செய்ய தான் அப்படி செஞ்சேன்.. சரி.. ரொம்ப சரி.. ஏன் அதிலென்ன தப்பு..?”

நாம நம்மளை விட அதிகமா ஒருத்தரை  நம்பும் போது கிடைக்கிற அந்த ஏமாற்றம், அதை அனுபவிச்சாதான் அந்த வலி தெரியும், அந்த வேதனையை நீ எனக்கு கொடுத்திருக்க..?”

அதுவே நீ இதை  என்கிட்ட சொல்லியிருந்தா அப்படியென்ன செஞ்சிருப்பேன்..? மிஞ்சி மிஞ்சி போன ரெண்டு கத்து கத்தியிருப்பேன், ஒரு ரெண்டு, மூணு நாளைக்கு பேசாம இருந்திருப்பேன், அதுக்கு மேல என்னால இருக்க முடியாதுன்னு உனக்கே தெரியும்..”

அப்படியும் இவ ஏன் என்கிட்ட இதை சொல்லலைங்கிற என்னோட கோவம் தப்புன்னு சொல்றியா..? இல்லை உங்க அப்பா சொல்லிட்ட வார்த்தையை ஏத்துக்கிட்டு உன்னை இங்கிருந்து கூட்டிட்டு போயிருக்கணும் சொல்றியா..?” 

“ஏன் கூட்டிட்டு போனா என்ன தப்பு..?  என்னை இங்க விட்டுட்டு போகாம உங்களோடே  கூட்டிட்டு போய்ட்டு பணத்தை ரிட்டர்ன் கொடுத்திருக்கலாம் இல்லை, என்னை அந்த இடத்துல நீங்க விட்டு கொடுத்ததா தான் நான் இப்போவும் பீல் பண்றேன்..” என்று மது துயரத்துடன் சொன்னாள்

மே பி.. நான் அதை செஞ்சிருக்கலாம், ஆனா அந்த இடத்துல எனக்கு அவ்வளவு டீப்பா யோசிக்க முடியல, அவர் அவரோட பொண்ணுன்னு பிரிச்சு பேசினத்துக்கு அப்பறம், உன்னை என்னோட கூட்டிட்டு போக மனசு வரல, இதுதான் உண்மை..”

ஆனா நீ இப்படி யோசிச்சு ஹர்ட் ஆவேன்னு நான் நினைக்கல, அதுக்காக நீ இந்தளவு பேசுவேன்னும் நான்  சுத்தமா எதிர்பாரக்கல, உன்னைவிட்டு என்னால இருக்க முடியலன்னு தான் நான் வேகவேகமா பணத்தை ரெடி செஞ்சு எடுத்துட்டு வந்தேன், ஆனா நீ என்கூட வரமாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கற..”

உனக்கு தெரியாது மித்ரா.. நீயெல்லாம் ப்ளஸ்ட்.. இப்படி ஒரு அப்பா கிடைக்க, பேமிலி கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும், என்னை போல நிறைய பேர் இருக்காங்க, பேமிலி இருக்கும்..ஆனா இருக்காது..”

எப்படி சொல்ல..? எப்போவும் மனசுல ஒரு தனிமை, வெறுமை.. அந்த  வெறுமையை  தினம் தினம் அனுபவிக்கும் போது  நமக்கே நமக்குன்னு ஒரு உறவு கிடைச்சா எப்படி இருக்கும்..? தூக்கி வச்சு கொண்டாட தோணும், அவங்களை நமக்குள்ள முழுசா மறைச்சுக்க தோணும்..”

அப்படித்தான் நானும் இருக்கேன்நீ எனக்கே எனக்கான உறவு.. உன்னை எந்த இடத்திலும் என்னால விட்டு கொடுக்க முடியல, அதை  நீயும் ஏதோ ஒரு இடத்துல புரிஞ்சுகிட்டு என்னை தாங்குற, என்னோட இத்தனை வருஷ வெறுமையை இந்த சில மாசத்துல நிறைச்சிட்ட..”

ஆனா நீ ஒரு விஷயத்துல என்னை புரிஞ்சுக்க தவறிட்ட.. உங்க அப்பா.. அவரோட  உரிமையையும் நான் எப்போவும் பறிக்க நினைச்சதில்லை, அவர்கிட்ட இருந்து உன்னை நான் மொத்தமா விலக்க  ஆசைப்பட்டதில்லை..”

என்னோட ஒரே கோவம், ஏன் என்னை உன்கிட்ட இருந்து பிரிக்க பார்த்தாரு, ஏன் உனக்கு மாப்பிள்ளை பார்த்தாரு.. இதுதான்.. இதுல ஒரு அப்பாவா அவர் சரிதான்னாலும், என்னோட விஷயத்துல அவர் தப்பு தானே..?”

ஆனா அதுக்காக யாரும் யாரை விட்டு கொடுக்க முடியாது, யாரோட இடத்தை  யாரும்  எடுத்துக்க முடியாது, யாரோட உரிமையையும் யாரும் பறிக்க முடியாது..”

அவர் உன்கிட்ட அவரோட அம்மாவை பார்க்கிறார்ன்னா..? நான் உன்னை என்னோட ஒட்டுமொத்த வாழ்க்கையாவும் பார்க்கிறேன்இதுல நீதான் எங்களுக்கு பொதுவா இருக்கநீதான் பார்த்துக்கணும்..”

என்னோட காதல்அவரோட பாசம்.. உனக்கு புரியும் போது, இதுவும் உனக்கு புரியனும், எங்களை நீதான் பேலன்ஸ் செய்யணும், அதுக்காக எங்ககிட்ட மாட்டிகிட்டு உன்னை கஷ்டப்பட சொல்லலை..”

எங்க ரெண்டு பேர்ல யார் அதிகமா போனாலும் கேளு.. உரிமையா சத்தம் போடு, அதுக்கான முழு உரிமையை நானும் கொடுத்திருக்கேன், அவரும் கொடுத்திருக்கார்.. அதைவிட்டு சின்ன குழந்தை மாதிரி யோசிக்காத..”

யாருக்கு தெரியும் ஒரு நாள் எல்லாம் மாறும்.. இல்லை மாறாம கூட போகும், அதை யோசிச்சு இப்போ இருக்கிற நிம்மதியை, சந்தோஷத்தை இழக்காத.. அதுவும் நீ இருக்கிற நிலையில் உன்னோட எண்ணம் முழுசும் நம்ம பேபியை நல்லா படியா பார்த்துகிறதால் தான் இருக்கனும்..”

அதைவிட்டு இப்படி  எல்லாம் யோசிச்சு உன்னை நீயே வருத்திகிட்டு எங்களையும் வேதனை படுத்தகூடாது, நீ பயங்கர மெச்சூர். இப்போ நான் சொன்னதை எல்லாம் பொறுமையா யோசி.. உனக்கே கண்டிப்பா புரியும்..” என்று மிக நீண்ட விளக்கம் கொடுத்தவன், எழுந்து சென்று மனைவியின் முன் நின்றான்

நான் இப்போ பேசினது எல்லாம் என் மனசுல இருந்து அப்படியே பேசினது, எதையும் யோசிக்கல, பில்டர் பண்ணல, இதில ஏதாவது தப்பா  இருந்தா கேளு, உனக்குள்ளே வச்சு மருகாத..”

உங்க அப்பாக்கும்.. எனக்கும் இருக்கிற எல்லாத்தையும் நான் முழுசா பேசிட்டேன், இனி இதை பத்தி நான் எப்போவும் பேசவும் மாட்டேன். பார்த்துக்கோ.. டைம் எடுத்து நிறைய யோசி..” என்று குனிந்து மனைவியின் நெற்றியில் இதழ் பதித்தவன், புடைவையை விலக்கி தன் பேபிக்கும் முத்தம் வைத்தான்.

உன்னை என்னோட கூட்டிட்டு போகணும்ன்னு ரொம்ப எதிர்பார்ப்போட வந்தேன்ஆனா இனி அது முடியாது.. ”

நான் கிளம்புறேன்.. பார்த்துக்கோ.. உன்னையும்.. நம்ம பேபியையும்..” என்றவன், கிளம்பியும்விட்டான்

Advertisement