Advertisement

கன்னி மனது

கலங்கமடைய

கண்ணனவன்

குழலோசை

வழி செய்யுமா??

 

ரெஸ்டோரண்டில் தன் நண்பர் பட்டாளத்துடன் கொட்டம் அடித்துக்கொண்டிருந்தாள் ஶ்ரீ…

“ஏன் ஶ்ரீ நீ எதுக்கும் பயப்பட மாட்டியா??” என்ற கேள்வி கேட்ட சஞ்சுவிற்கு

“பயமா?? ஹா.. அதெல்லாம் என்னோட டிக்ஸனரியிலேயே இல்ல….” என்று கெத்தாக சொல்லிய ஶ்ரீயிடம் ரவி

“ஏன் ஶ்ரீ நான் லிப்கோ டிக்ஸனரி, ஒக்ஸ்பர்ட் டிக்ஸனரி இப்படிலாம் கேள்வி பட்டுருக்கேன்… இதென்னா புதுசா ஶ்ரீ டிக்ஸனரி??? இது எங்க விக்கிறாங்க??” என்று வம்படிக்க

“கரெக்டா கேட்டடா ரவி… இவ ஆ ஊனா என்னோட டிக்ஸனரினு சொல்லுறா…அப்படி எந்த கடையில இருக்கு இவ சொல்லுற டிக்ஸனரி…??” என்று ரவியின் கேலியில் ஹேமா பங்கெடுக்க

“கூட்டு சேர்ந்துட்டாய்ங்கயா கூட்டு சேர்ந்துட்டாய்ங்க” என்று வடிவேல் ஸ்டைலில் ஶ்ரீ கூற அந்த பட்டாளமே சிரிக்கத்தொடங்கியது…

“ஶ்ரீ பீ சீரியஸ்… எதுக்கு யாருனு தெரியாதவங்க கூட எல்லாம் இன்டரக்ட் பண்ணுற?? அவரு நல்லவரா இருக்க போய் ஒன்றும் சொல்லாம அவரோட வெடிங்க்கு உன்னை இன்வைட் பண்ணியிருக்காரு….. இதுவே வேற யாரா இருந்து அவங்க ஏதும் மிஸ் பிஹேவ் பண்ணியிருந்த என்ன பண்ணியிருப்ப?? இனிமே இப்படி அதிகப்பிரசங்கி வேலை பார்க்காமா இருக்க ட்ரை பண்ணு…” என்று சுந்தர் அறிவுரை கூற ஶ்ரீயோ

“டேய் இதுவரைக்கும் யாருனு தெரியாதவங்க கூட நாம இன்டரக்ட் பண்ணதில்லையாடா?? என்னமோ ஸ்கூல் போற பசங்களுக்கு சொல்ற மாதிரி அட்வைஸ் பண்ணிட்டு இருக்க??? யாரு எப்படினு கூட கெஸ் பண்ண முடியாத கூமூட்டையா டா நான்??” என்று எதிர் கேள்வி கேட்டாள்….

“நான் சொல்ல வருவதை நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட…. அன்நோன் பர்சனோட இன்டரக்ட் பண்ணுறதுனு தப்புனு நான் சொல்லலை… பட் நம்ம சேப்டியை என்சுவர் பண்ணிட்டு இன்டரக்ட் பண்ணுனு சொல்லுறேன்… இப்போ அவரு தப்பானவருனு வச்சிக்கோ… நீ இப்போ இன்டரக்ட் பண்ணதை அட்வான்டேஜா யூஸ் பண்ணி பியூச்சரில் ஏதும் பிராப்ளம் கிரியேட் பண்ண என்ன பண்ணுவ??? இதுங்க உசிப்பேத்தி விடுதுங்கனு நீ எப்பவும் இப்படி ஏதாவது இடக்குமுடக்காக செய்ற.. அது ஜாலிக்கு தான்னாலும் அது பிறகு ஏதும் பிரச்சனையை கிளப்பிடக்கூடாது….. அதனால கொஞ்சம் கவனமா நடந்துக்கோ….”

“ டேய் ரொம்ப பண்ணுறடா சுந்தர்… சும்மா இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லாத சொல்லிட்டேன்… எப்படி தான் இவனுக்கு மட்டும் இப்படி யோசிக்கத் தோனுதோ தெரியல… ஓய் பப்ளி இவனை எப்படி சமாளிக்கிற?? இப்படி பிளேடு போட்டே சாவடிக்கிறானே” என்ற ஶ்ரீயை கண்டித்தான் ரவி..

“அவன் சொன்னதுல என்ன தப்பு ஶ்ரீ?? அவரு மிஸ்டர் ஆதேஷ்னு தெரிஞ்சதால தான் நீ செய்வதை பார்த்துட்டு நான் சும்மா இருந்தேன்… இல்லைனா உன்னை இங்க இருந்து நகர விட்டுருக்க மாட்டேன்…. அவன் உன்னோட சேப்டிக்கு தான் சொல்லுறான்… கொஞ்சம் அவன் சொல்லுறத காது குடுத்து கேளு..”

“நீ ஏன்டா அவன் கூட கூட்டு சேர்ந்த??? அவன் தான் ஒன்னும் இல்லாத மேட்டரை தூக்கிபிடிச்சிட்டு பேசுறானா நீயும் அதையே ரீ பிளே பண்ணுற???”

“ஶ்ரீ உனக்கு நாங்க சொல்லுற விஷயம் ஒன்னும் இல்லாத மேட்டரா தெரியிதா?? எந்த பிரச்சனையும் வந்திரக்கூடாதுனு நாங்க உனக்கு சொல்லுறது உனக்கு பிளேடு போடுற மாதிரி இருக்கா?? என்று சுந்தர் எகிற அதுநேரம் வரை அவர்கள் உணர்த்த முற்பட்டதை உணர்ந்தும் உணராதது போல் வாதாடிக்கொண்டிருந்த ஶ்ரீ

“என்னடா விட்டா அடிக்க வருவீங்க போல… ஒரு சின்ன பொண்ண இப்படி மிரட்டுறீங்கல?? இருங்க அப்பாகிட்ட சொல்லித்தரேன்..”என்றவாறு அவள் குழந்தை போல் கண்களை கசக்க அவ்வளவு நேரம் எகிறிக்கொண்டிருந்த ரவியும் சுந்தரும் அவளது பாவனையில்  சிரிக்கத்தொடங்கினர்… அப்போது ரவி

“ஒரு போல் தான்டா போடுவா… ஆடியன்ஸ் அவ்வளவு பேரும் கிளீன் போல்ட் ஆகிருவாங்க. எப்படி ஶ்ரீ நீ மட்டும் இப்படி அந்நியன் பட விக்ரம் மாதிரி பல ரோலில் இப்படி பர்போமன்ஸ் பண்ணுற??? இவ்வளவு சீரியசாக நானும் சுந்தரும் உனக்கு அட்வைஸ் பண்ணிட்டு இருக்கோம் நீ என்னடானா இப்படி காமடி பண்ணிட்டு இருக்க???”

“ இப்படி ஏதாவது பண்ணா தானே உங்க ரெண்டு பேரையும் மலையிறக்க முடியும் அதான் இப்படி…” என்று ஶ்ரீ கூற சுந்தர் சஞ்சனாவின் புறம் திரும்பி

“ என்ன நீ அவளுக்கு ஒன்னும் சொல்ல மாட்டியா?? ஏன் ஹேமா நீயும் பேசாம இருக்க??” என்று வினவ

“ எங்களை எதுக்குடா கேள்வி கேட்குற??? நீங்க ரெண்டு பேரும் தானே அவளை தலையில தூக்கி வச்சிட்டு ஆடுறீங்க….  எங்க பேச்சு இங்க என்னைக்காவது எடுபட்டுருக்கா?? நாங்க ஏதும் சொல்லும்போதெல்லாம் அவளுக்கு ஜால்ரா தட்டிட்டு இப்போ எதுக்குடா எங்ககிட்ட வந்து நியாயம் கேட்குறீங்க????” என்று ஹேமா எகிற அதற்கு ஶ்ரீயோ

“ ஏன்டா என் ஹேமா டார்லிங்கை கடுப்பாக்குறீங்க??? பாரு அவளுக்கு கோபத்துல மூக்கு விடைச்சிட்டு வருது…காம் டவுன் டார்லிங்…. அவன்ங பேச்சை எல்லாம் கண்டுக்காத…இதுங்க ரெண்டுக்கும் இதே வேலை தான்…” என்ற ஶ்ரீயை ஏகத்துக்கு முறைத்தாள் ஹேமா… அவளின் சார்பாக சஞ்சனா தன் வசை கச்சேரியை ஆரம்பித்தாள்..

“எல்லாத்தையும் நீ பண்ணுவ… அதுக்கு நாங்க திட்டு வாங்கனுமா??? எப்பவும் என்கிட்ட திட்டு வாங்குற சுந்தர் உன் விஷயத்துல என்னை திட்டுறான்… நாங்க சொல்லுறத கேட்காம நீ ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணுவ… அவன் உன்னை கொஞ்சிட்டு என்னை திட்டுவான்… இனிமேலும் இதே மாதிரி பண்ணிட்டு இருந்தனா நீயும் வேணாம்…உன் சங்காத்தமும் வேணாம்னு ஊரை விட்டு ஓடிருவேன்… பார்த்துக்கோ….” என்ற சஞ்சனாவிடம்

“பப்ளி ஊரைவிட்டு ஓடுறேனு சொன்னியே??? தனியாவா இல்ல சுந்தர் கூடவா??” என்று தன் அதி முக்கிய சந்தேகத்தை ஶ்ரீ முன்வைக்க அங்கிருந்த அனைவரும் அவளை தம் கண்களால் பஸ்மமாக்க முயன்றனர்…

இவ்வாறு தம் மதிய உணவை முடித்துக்கொண்டு மீண்டும் தம் பணியிடத்திற்கு திரும்பினர்…

மாலை வழமை போல் வீடு திரும்பிய ஶ்ரீயிடம் அவள் அன்னை ராதா

“ என்ன தான்யா வர  லேட்டாகும்னு சொன்ன…இப்போ சீக்கிரம் வந்துட்ட…”

“தங்களை காணாது என் இரு விழிகள் இரண்டும் பூர்த்துக்கிடந்தது… ஆகையால் என் தாய்குலத்தை காண தங்களது அருமை புத்திரியான யான் ஓடோடி வந்துள்ளோம்”என்று ஶ்ரீ அரச நாடக மொழி பேச

“யாரு…???நீ ….??? சரி போதும் உன் நடிப்பு… இப்போ காரணத்தை சொல்லு….”

“யான் செப்புவது மெய் தாய்குலமே… உம் புத்திரியின் பிதற்றலை கண்ணுற்று என்நட்பு வட்டாரமே கண்கலங்கிய விந்தையை நீவிர் அறிய மாட்டீர்…”

“வாழைக்காய் பஜ்ஜி போட்டு ஹாட்பேக்கில் வச்சிருக்கேன்….. அனுவுக்கு கொஞ்சம் வச்சிட்டு மீதியை சாப்பிடு… தொட்டுக்க சாஸ் பிரிஜ்ஜில் இருக்கு…. நான் போய் மாடியில போட்டிருக்க உடுப்பெல்லாம் எடுத்துட்டு வந்துர்றேன்”என்று அவ்விடம் அகன்ற ராதாவிடம் ஶ்ரீ

“என்ன குடும்பம்டா இது… நான் எவ்வளவு பீல் பண்ணி பேசிட்டு இருக்கேன்… என் தாய்குலம் பஜ்ஜி வச்சிருக்கேன் சாப்பிடுனுட்டு போகுது…. தான்யா வரவர இந்த வீட்டுல உனக்கு மரியாதையை குறைந்திட்டே போகுது…” என்று தன் பாட்டில் பேசிக்கொண்டிருந்தவளை கலைத்தது அனுவின் குரல்…

“என்ன அக்கா தனியா பேசிட்டு இருக்கீங்க… என்னமோ பஜ்ஜினு காதுல விழுந்துச்சி….என்ன ஸ்பெஷல் வீட்டுல?”

“ அதுவா… என்னை பொண்ணு பார்க்க வருகிறார்களாம்…. அதான் அம்மா பஜ்ஜி சுடுறேனு சொன்னாங்க…”

“அக்கா சும்மா காமடி பண்ணாத….அம்மா பஜ்ஜி சுட்டுருக்காங்க… அதை நீ தனியா அபேஸ் பண்ண பிளான் பண்ணிட்ட…அதான் இப்படி உடார் விடுற…. தனியா சாப்பிடனும்னு மட்டும் நினைக்காது….  எந்த நிலையிலும் அனுவுக்கு கிடைக்காத பஜ்ஜி வேறு யாருக்கும் இல்லை….” என்றுவிட்டு அனு கிச்சன் பக்கம் ஓட அவளை துரத்தி சென்றாள் ஶ்ரீ…

உடைகளை எடுத்துவிட்டு மாடியிலிருந்து கீழிறங்கிய ராதா ஶ்ரீயை தேட அவளும் அனுவும் கிட்சனில் இருந்த ஹாட்பக்குடன் மல்லுகட்டிக்கொண்டிருந்தனர்… ராதாவை கண்டதும் சமரசமாகிய இருவரும் அவளை பார்த்து இளிக்க அவரோ இருவரையும் சாப்பிடும் வேலையை முடித்துவிட்டு ஹாலிற்கு வரச்சொன்னார்…

அனுவும் தான்யாவும் தம் நளபாகத்தை முடித்துவிட்டு வந்த போது ராஜேஷ்குமாரும் ஹாலில் அமர்ந்திருந்தார்… அவரருகில் சென்றமர்ந்த இருவரும் அவரது காதை கடிக்க அவர்களது எதிரே அமர்ந்திருந்த ராதா அவர்கள் மூவரையும் முறைத்தார்…

“என்ன ராதா எங்களை பார்த்து இப்படி முறைக்கிற?? நாங்க என்ன தப்பு பண்ணோம்??? ஓ எங்களை இப்படி முறைச்சிப்பார்க்க தான் ஹாலில் உட்கார வச்சியா??”

“ஆமா.. எனக்கு வேற வேலை இல்ல பாருங்க…. இப்படி நடு ஹாலில் உங்க எல்லாரையும் உட்காரவைச்சி முறைச்சிட்டு இருக்கதுக்கு..நான் சொல்ல வந்த விஷயம் வேற.. இப்ப அத கேட்கப்போறீங்களா இல்லையா??”

“சொன்னாதானே ராதா கேட்க முடியும்??”

“என்னை சொல்லவிட்டா தானே நான் சொல்லுறதுக்கு?? என்ற ராதா மற்றும் ராஜேஷிடம்

“இப்போ இங்க என நடக்குதுனு நாங்க தெரிஞ்சிக்கலாமா?? என்னமோ பட்டிமன்றப் பேச்சாளர்கள் மாதிரி எதிர் கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க.. மிசஸ்.ஆர் சொல்லவந்த விஷயத்தை சொல்லிட்டு டின்னருக்கு ஆகுறதுக்கு ஏதாவது பண்ணுங்க…. அதை விட்டுட்டு மிஸ்டர். ஆர் கூட வம்பளந்துகிட்டு..” என்ற ஶ்ரீயை ராதா முறைத்தவாறு தான் கூற வந்த விடயத்தை தெரிவித்தார்…

“ரமா அக்கா பொண்ணு ப்ரீதாக்கு கல்யாணம் பிக்சாகிருச்சாம்… இன்னும் இரண்டு வாரத்துல கல்யாணம்… நாம அங்க ஒரு கிழமை தங்குற மாதிரி போகனும்…நீங்க மூன்று பேரும் லீவு சொல்லிருங்க…. ஶ்ரீ இந்த சண்டே சாப்பிங் போகனும் நீ எதும் வேலையை வச்சிக்காத…நாம அடுத்த வெள்ளிக்கிழமை ஊருக்கு போகனும்…அதுக்கு தகுந்த மாதிரி உடை எடுத்து வைங்க… நான் அயர்ன் பண்ணி பக் பண்ணிர்றேன்…”

“ஹேய் சூப்பர் மா..நான் ப்ரீக்கு விஸ் பண்ண போறேன்” என்றவாறு சென்ற ஶ்ரீயுடன் சென்றாள் அனு…

Advertisement