அத்தியாயம் -40

“மச்சி……” என்று அங்கு நின்றிருந்தவன் பின்னால் போய் ஹர்ஷா நிற்க,

“ஹையோ….. இவனா…..” என்ற அலறலோடு திரும்பினான். அவனின் அப்பாவி நண்பன் சுமேஷ்.

“டேய் நீ இங்க என்னடா பண்ணுற”

“சும்மா காத்து வாங்க……” என்று அவன் நண்பன் சொல்லும்போதே அவர்கள் அருகில் வந்த பெண் “சுமேஷ்….” என்று இழுக்க,

அவனோ ‘ஹையோ இவ்ளோ நேரம் தனியா நின்னுட்டு இருந்தேன் அப்போ எல்லாம் வராம, இவன் கண்ணுல படற நேரத்துலயா வரணும்’ என்று மனதில் புலம்பி “ஹிஹிஹி…. நான்தான்” என்று சொல்ல,

ஹர்ஷா இருவரையும் யோசனையாக பார்த்து கொண்டிருந்தான்.

“நான் அன்ஷிதா…. அப்பா..,” என்று அந்த பெண் சொல்லி முடிக்கும் முன்,

“டேய் மச்சான் யாருடா இந்த பொண்ணு. அப்போ உன்னையே நம்பிகிட்டு இருந்த அன்பிற்கினியாள் நிலைம என்னடா ஆகறது. ஏன்டா இப்படி பண்ணுற” என்றவன் சொல்ல,

சுமேஷோ “எந்த அன்பிற்கினியாள்” என்றான் அரண்ட குரலில்.

“டேய் அதான்டா…. உனக்கு டெயிலி லன்ச் கொண்டு வருமே….” என்றவன் சொல்ல,

வந்த பெண்ணோ சுமேஷை முறைத்துவிட்டு “நமக்குள்ள செட் ஆகாது. உங்க வீட்டுக்கு அப்பா போன் பண்ணி பேசுவாரு” என்றுவிட்டு போய் விட,

புருவம் சுருக்கிய ஹர்ஷா “ஏன்டா சுமேசு….. லன்ச் கொண்டு வர ஆயாவபத்தி சொன்னதுக்கு இந்த பொண்ணு ஏன்டா கோவிச்சுட்டு போகுது”

“பாவி சண்டாளா அன்பிற்கினியாள் ஆயான்னு அந்த பொண்ணு இருக்கும்போதே சொல்றதுக்கு என்னடா. ஆபிஸ்லதான் ஒருத்தரையும் செட் ஆக விடாம பண்றன்னு என் அப்பன், ஆத்தா காலுல விழுந்து பொண்ணு பாருங்கன்னு சொல்லி கெஞ்சி, கதறி கடைசில அவங்க மனசு இறங்கி பார்த்த பொண்ணையும் இப்படி கலச்சுவிட்டியே ஏன்? ஏன்டா இந்த கொலை வெறி உனக்கு? என்றவன் கடுப்பாக கேட்க,

ஹர்ஷாவோ “அப்போ நான் தப்பு பண்ணிட்டனா மச்சான்” என்று அப்பாவியாக கேட்க,

பல்லை கடித்த சுமேஷ் “டேய் நாயே தயவு செஞ்சு இப்படி அப்பாவி நடிப்பு நடிக்காத. சகிக்கல. ஆமா அது என்ன சைக்கிள் கேப்ல அந்த ஆயா என்னை நம்பிகிட்டு இருக்குன்னு சொல்ற”

“அது ஒன்னும் இல்ல மச்சி. அவங்க சமையல் ரொம்ப நல்லா இருக்கும். நீப்பாட்டுக்கு பொறுப்பு இல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டா அவங்ககிட்ட சாப்பாடு வாங்க மாட்ட. வீட்ல இருந்து கொண்டு வந்துருவல்ல,

நீ சாப்பாடு வாங்கலைனா அவங்களுக்கு ஒரு கஸ்டமர் இல்லாம போயிடும். நீ ஒரு ஆள் குடுக்கற பணத்தை வச்சி அவங்க வேற பிளான் எதாவது வச்சிருந்து அந்த காசு இல்லாம போனா என்ன பண்றது. அதான் அவங்க நிலைமைன்னு சொன்னேன்”

“ஆமாண்டா….. நான் குடுக்கற லட்ச ரூபாய் வச்சிதான் அவங்க வீடு கட்ட போறாங்க இல்லை அவங்க பொண்ண படிக்க வைக்க போறாங்க. ஏன்டா ஏன்? நான் என்னமோ என்னமோ அன்பிற்கினியாள லவ் பண்ணி ஏமாத்துன மாதிரி அந்த பொண்ணு நினைச்சுட்டு போகுதுடா” கடுப்பாக சொல்ல,

வாயில் கை வைத்த ஹர்ஷா “டேய் மச்சான் நான் சொன்னதுக்கு இப்படி எல்லாம் கூட அர்த்தம் இருக்கா என்ன?” என்று அப்பாவி லுக்கில் கேட்டவனை கொலை காண்டாக பார்த்த சுமேஷ் “டேய்….. டேய்…. நான் யாருன்னு உனக்கு தெரியும்…. நீ யாருன்னு எனக்கு நல்லாவே தெரியும். உன் டைம் பாஸ்க்கு நான் ஆள் இல்ல, யாரும் போகாத மொக்க படத்துக்கு போய் சும்மா உட்கார்ந்து இருந்தாலும் இருப்பேன். ஆனா உன்கூட இருக்க மாட்டேன். போடா……” என்றவன் போக,

செல்பவன் காலரை பிடித்து இழுத்து தன் அருகில் நிற்க வைத்த ஹர்ஷா “எங்க மச்சி போற? உன் உயிர் நட்பு நான் இங்க இருக்கும்போது”

“ம….”

“டேய்….. நண்பா…..”

“வாயில நல்லா வருது. ஒழுங்கா ஓடிடு. அதான் வந்த வேலை சிறப்பா முடிஞ்சுதுல்ல போ இனி போய் நிம்மதியா தூங்கு. நான் போறேன்”

“நானும் வரேன்”

“வேண்டாம்” என்றவன் நிற்காமல் செல்ல,

அவனை இழுத்து தன் காரில் தள்ளியவன் “வாடா நண்பா…. நானே எப்படி நேரத்தை ஓட்டுறதுன்னு பார்த்தேன். நல்லவேலை நீ வந்த, என்ன இருந்தாலும் நீ என் உயிர் நண்பேன்டா….” என்றவனை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்து கொண்டிருந்தான் சுமேஷ்.

நண்பன் மேல் இருந்த கடுப்பில் திட்டி கொண்டே வந்தவனை கண்டு கொள்ளாமல் வந்தவனின் கார் நின்ற இடம் ஒரு சினிமா தியேட்டர்.

‘ஒரு மனுஷன் கத்துறனே ஏதாவது கண்டுக்காறானா பாரு கல் நெஞ்ச காரன்’ என்று தனக்குள் புலம்பி கொண்டிருந்தவன் கார் நிற்கவும் ‘எங்க இழுத்துட்டு வந்துருக்கான்’ என்று நிமிர்ந்து பார்த்தவன் நெஞ்சில் கை வைத்து கொண்டான்.

“டேய் இங்க எதுக்குடா கூட்டி வந்த”

“படம் பார்க்க மச்சி”

“டேய் படமாடா இது. நான்லாம் வரல. நீ வேணும்னா போய் பாரு”

“நீதானே மச்சி சொன்ன, யாரும் வராத படத்துக்கு போய் சும்மா உட்கார்ந்து இருப்பேன்னு. வா போய் சும்மா உட்கார்ந்து இருக்கலாம்”.

“டேய் ஒரு பேச்சுக்கு சொன்னா. உண்மையாலுமே இப்படி ஒரு படத்துக்கு கூட்டிட்டு வருவியா. டேய் சொன்னா கேளுடா படம் பயங்கர மொக்கையாம்டா எல்லாரும் சொல்றாங்க. சொன்னா கேளுடா. நாம வேணா நம்ம சலீம் பாய் கடைக்கு போய் பிரியாணி சாப்பிடலாம்”

“இல்ல மச்சி மாமியார் வீட்டு விருந்து, புல் கட்டு கட்டிட்டுதான் வந்தேன். ஏன்டா பயப்படுற. இந்த படத்துல ஒரு பாட்டு செம்மையா இருக்கும் அதுக்காகவே பார்க்கலாம் வாடா” என்று சுமேஷ் கதறுவதை கண்டு கொள்ளாமல் இழுத்து சென்றான்.

தியேட்டரின் உள்ளே இருந்த பத்து பேரை பார்த்து பெரு மூச்சு விட்டவன் தங்களது சீட்டில் போய் அமர்ந்தனர்.

படம் துவங்கிய சற்று நேரத்தில் எல்லாம் ‘யப்பா சாமி என்னால முடியலடா’ என்று சுமேஷ் தூங்கி விட, ஹர்ஷாவும் தூங்க ஆரம்பித்துவிட்டான்.

எவ்வளவு நேரம் ஆனதோ ஹர்ஷா போன் அடிக்கவும் எழுந்தவன் மணியை பார்க்க அது ஐந்து என்று காட்டியது.அழைத்தது யார் என்று பார்க்க ஹாசிதான் அழைத்தாள்.

அவள் எண்ணை பார்த்தவுடன் மென்மையாக சிரித்தவன் எழுந்து வெளியில் சென்று “சொல்லுங்க பொண்டாட்டி. என்ன புருஷன் நியாபகம் வாந்துருச்சா” என்று கேட்க,

இங்கு பல்லை கடித்தவள் “உன் மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்க. மறுவீட்டுக்கு வந்துட்டு இங்க இருக்காம வெளிய சுத்திட்டு இருந்தா என்ன அர்த்தம் என் அம்மா அப்பா என்ன நினைப்பாங்க. மணி என்ன ஆச்சு இன்னும் வீட்டுக்கு வரல”

“ஹேய்…. ஹேய்…மூச்சு வாங்கி பேசுடி. நானாவா வெளிய வந்தேன். நீதானேடி வேலை இருக்குன்னு சொல்லி வெளிய போக வச்ச. இப்போ அவங்க என்ன நினைப்பாங்கன்னு என்னை கேட்டா, நான் என்ன பண்ண முடியும்.

நீ சொல்லிட்டியே அதை செய்யணுமேன்னு தான் வெளிய வந்தேன். அங்கேயும் இங்கயும் சுத்தி கடைசில ஏசி காத்துல தூங்கலாம்னு தியேட்டர்ல வந்து உட்கார்ந்து இருக்கேன்.

உலகத்துலயே கல்யாணமான அடுத்த நாளே பொண்டாட்டிக்கூட இல்லாம ஒரு வீணா போனவன் கூட படத்துக்கு வந்தது நானா மட்டும்தான் இருப்பேன். இது எல்லாம் யாரால உன்னாலதான்டி உன்னால மட்டும்தான்”

“சூ….. சும்மா நச நசன்னு பேசிட்டு இருக்காம டக்குனு கிளம்பி வர வழிய பாரு. கிழவியாட்டம் பேசுனா வாய் ஓயாம பேசிட்டே இருப்ப” என்றவள் போனை கட் செய்ய,

“எதே……நான்…. நானு… நச நசன்னு ….. கிழவி மாறி பேசுறானா சொல்லுடி சொல்லு….” என்றவன் கத்தலுக்கு பதில் அந்த பக்கம் போன் வைக்கப்பட்டதற்கான பீப் ஒழியே வந்தது.

‘ம்கூம்….. வச்சிட்டா, பொண்டாட்டி ஆகிட்டா இவங்களுக்கு எல்லாம் கொம்பு முளைக்கும் போல’ என்று புலம்பியவாறு திரும்பியவன் அங்கு அவனையே பாவமாக பார்த்து கொண்டிருந்த சுமேஷை கண்டு “மச்சி….. படம் பார்க்கல பாப் கார்ன் வேணுமா” என்றவன் முன் கையெடுத்து கும்பிட்டவன்,

“போதும் டா போதும். நானா உன்னை படத்துக்கு போலாம்னு சொன்னேன். வேண்டாம்னு சொன்னவன பாட்டு நல்லா இருக்கும்னு சொல்லி இழுத்துட்டு வந்துட்டு இப்போ வீணா போனவன்னு சொல்றியா நான் கோவமா போறேன். இனி உனக்கும் எனக்கும் வந்தா போனா இல்லை.

உனக்கும் எனக்கும் ஒட்டும் இல்லை உறவும். நான் கோவமா போறேன்”

ஹர்ஷா, “நான் பிரியாணி சாப்பிட போறேன்”

கோவமாக சென்ற சுமேஷ் ஒரு நொடி நின்றவன் ‘டேய் சுமேசு பிரியாணியாம்டா, இருந்துட்டு போகட்டும் நான் மட்டும் போய் நாலு பிரியாணி வாங்கி திம்பேன். இனி இவன் பக்கம் போக மாட்டேன்’ என்று நினைத்தவன் வேகமாக போக,

ஹர்ஷாவோ ‘சரி நம்ம மச்சிதானே பார்த்துக்கலாம்’ என்ற எண்ணத்தோடு மனைவியை பார்க்க சென்றுவிட்டான்.

சுமேஷ், ‘கல் நெஞ்சக்கார நாதாரி அவன்லாம் நல்லா இருப்பானா, இப்படி ஒரு மொக்க படத்துக்கு கூட்டி வந்து கழுத்த அறுத்துட்டானே’ என்று திட்டி கொண்டே எதிரில் வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறி கொண்டான்.

வீட்டிற்கு வந்த ஹர்ஷாவிடம் சென்ற மித்ரா “எங்க அண்ணா போன?” என்க,

அவனோ “வேலை டா. நீ எப்படி இருக்க? வீடு செட் ஆகிடுச்சா”

“ம்ம்ம்…. எனக்கென்ன பழகுனவங்கதானே ஒன்னும் பிரச்சனை இல்லை. அடுத்த வாரம் அமெரிக்கா கிளம்பணும்னு நிரன் சொல்லிட்டு இருக்காரு”

“அடுத்த வாரமேவா” என்று தங்கையை பிரிய போகும் கவலையோடு ஹர்ஷா கேட்க,

“ம்ம்…. அங்க இருந்து அவருக்கு போன் வந்துட்டே இருக்கு. அப்புறம் அண்ணா உண்மையா உனக்கும் அவருக்கும் இடைல என்னத்தான் பிரச்சனை? ஏன்?

“ஷ்…. என்ன மேடம் பெரிய மனுஷி மாதிரி பேசிட்டு இருக்கீங்க. எங்களுக்குள்ள ஒரு பிரச்சினையும் இல்ல, நாங்க எப்போவும் போலதான் இருக்கோம். அப்படியே எதாவது இருந்தாலும் அதை நாங்க பார்த்துக்கறோம்.

நீ தேவை இல்லாம அதைப்பத்தி யோசிச்சு ஒன்னும் இல்லாத உன் மண்டைய குழப்பிக்காத சரியா” என்றவன் அவள் தலையில் கை வைக்க,

அதை தட்டி விட்டவள் “என் தலைல ஒன்னும் இல்லைன்னு சொல்றியா” என்று அவன் வயிற்றில் குத்த, அவனும் வலிப்பது போல் நடிக்க என்று இருவரும் தங்கள் உலகத்தில் இருந்தனர்,

விளையாட்டாக பேசி கொண்டிருந்த மித்ரா ஹர்ஷா தோள் மீது சாய்ந்து கொண்டு “அண்ணா அம்மா, அப்பாவை நல்லா பார்த்துக்கோ. நீ பார்த்துப்பன்னு எனக்கு தெரியும் இருந்தாலும் சொல்றேன். ஏனோ மனசு ரொம்ப கஷ்டமா இருக்குண்ணா” என்றவள் சோகமாக சொல்ல,

அவனும் அண்ணனாக அவளுடன் பேசி கொண்டிருந்தான். இதை பார்த்த மொத்த குடும்பமும் ஹாலுக்கு வராமல் அவர்களுக்கு தனிமை கொடுத்து அவரவர் அறையில் இருந்தனர்.

சற்று நேரம் கடந்து ஓரளவு தெளிவான மித்ரா “நாம பேசணும்னு எல்லாரும் அவங்கவங்க ரூம்ல இருக்காங்க போல, நான் போய் அத்தை, மாமாவை எல்லாம் கூட்டிட்டு வரேன்” என்று எழுந்து சென்றாள்.

ஒருவழியாக அனைவரும் வர, அவர்களுடன் பேசியவன் இரவு உணவையும் சாப்பிட்டுவிட்டே கிளம்பினர்.

காரில் செல்லும்போது ஹாசி யோசனையோடே இருந்தாள்.

ஹர்ஷா அவளை சைட் அடித்து கொண்டே வந்தவன் பாட்டை போட்டுவிட்டான்.

கள்ளுற பார்க்கும்
பார்வை உள்ளூற பாயுமே,
துள்ளாமல் துள்ளும்
உள்ளம் சல்லாபமே,
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொள்ளுதே
பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே…. ‘ என்ற பாடல் ஓட, இரவு நேர இதமான அமைதியில் தன்னவளுடனான தனிமையில் அப்பாடல் ஹர்ஷாவின் மனதில் இதமான உணர்வை தர,

முகத்தில் தோன்றிய மந்தகாச சிரிப்புடன் ஹாசியை ஓர கண்ணால் பார்த்து பாடி கொண்டே காரை செலுத்த துவங்கினான்.

தன் யோசனையில் இருந்த ஹாசி பாட்டு சத்தம் கேட்டு உணர்வுக்கு வந்தவள் ‘இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. நாய் மாதிரி இன்னொருத்தி பின்னாடி சுத்திட்டு இப்போ பாட்டு போட்டு என்னை கரெக்ட் பண்ண பாக்குறியா? இதுக்கு எல்லாம் அசர மாட்டா இந்த ஹாசி.

பாட்டா போடுற பாட்டு இப்போ பாரு என்ன பண்றேன்னு என்று கடுப்பாக நினைத்தவள் கோபமாக திட்ட திரும்பினாள்.

அவனை திட்டத்தான் நினைத்தாள் ஆனால் வார்த்தைகள் வர மறுத்தது, ஆணவன் முகத்தில் இருக்கும் வசீகர சிரிப்பையும் காற்றில் பறக்கும் அவன் அலையலையான முடியையும், கூர் நாசியும் இரவு நேர தெரு விளக்கு வெளிச்சத்தில் பார்த்தவள் தன்னையும் மீறி அவனை சைட் அடிக்க துவங்கிவிட்டாள்.

அவனை கோபமாக பார்த்தவாறே அமர்ந்திருந்தவளை கண்டு ஹர்ஷாவிற்குதான் ஜர்க் ஆனது.

‘இப்போ இவ எதுக்கு நம்மை இப்படி முறைக்கறா. என்ன பண்ணுன்னேன். ஒரு பாட்டு போட்டது குத்தமாடா. கல்யாணம் பண்ணுனாலும் பண்ணுனேன் இவ என்னை ரொம்ப படுத்தறா. என்னன்னு கேட்டா எதாவது வம்பிலுக்கற மாதிரி பேசுவா.

நைட் நல்ல மூட ஏன் கெடுத்துப்பானே அப்படியே கண்டுக்காத மாதிரியே மெயின்டெயின் பண்ணிரலாம் ’ என்று நினைத்தவள் மீண்டும் பாட்டை முணு முணுத்து கொண்டே அவள் திரும்பாமல் வந்தான்.

அவனுக்கு எப்படி தெரிய போகிறது அவனை ஆரோஷமாக திட்ட வந்தவள் அவனை தன்னை மறந்து முக பாவத்தை கூட மாற்ற மறந்து பார்த்து கொண்டிருக்கிறாள் என்று,(ஓ….. இதுக்கு பேர்தான் அழகுல மயங்குறதா)

ஒரு வழியாக இருவரும் வீடு வந்து சேர ஹர்ஷாவிற்கு அப்போதுதான் நிம்மதி மூச்சே வந்தது.’ஹப்பாடா வந்துட்டோம்’ என்று நினைத்தவாறு திரும்பி ஹாசியை பார்க்க, இப்போதும் அவள் அவனை முறைத்து கொண்டுதான் இருந்தாள்.

“ஷ்…. ஷப்பா….. முடியல. ஹாசி…..இப்போ என்ன? எதுக்கு இப்படி முறைக்கற?” என்றவன் கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை.

“ஹாசி……” என்றவன் கத்தலில் தன்னிலை அடைந்தவள் மலங்க மலங்க விழித்து கொண்டு ஆணவனை பார்க்க, அவனோ அவளை புரியாமல் பார்த்து “வீட்டுக்கு வந்தாச்சு” என்ற பின் திரும்பி பார்த்தவள் வீட்டு வாசலில் கார் நிற்பதை கண்டு மானசீகமாக தலையில் அடித்து கொண்டவள்’என்னடி இப்படி பார்த்து வச்சிருக்க. ம்கூம்…. இதெல்லாம் சரிப்பட்டு வராது.

இனி இவன்கூட தனியா எங்கயும் போக கூடாது. சிரிச்சே மயக்கி புடுறான் ராஸ்கல்’ என்று அவனை மனதில் திட்டி கொண்டே வந்தவள் ஹாலில் அமர்ந்திருந்த பத்மாவிடம் ஓரிரு வார்த்தை பேசிவிட்டு தங்கள் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

ஹர்ஷாவோ’என்ன இவ முகமே சரி இல்ல. கார்ல முறச்சிட்டு வந்தா, இப்போ யோசனையாவே இருக்கா, ம்கூம்…. இவ அமைதி நமக்குதான் ஆபத்து எதுக்கு வம்பு கொஞ்ச நேரம் கழிச்சு உள்ள போயிக்கலாம். இப்போவே போய் திட்டு வாங்க தெம்பு இல்ல. ஒரு படம் பார்த்தே டயர்ட் ஆகிட்டேன்.

படமா எடுத்து வச்சிருக்கானுங்க ச்சை…. மனுஷனா அவனுங்க, அந்த பட குரூப்பையே கூப்பிட்டு உட்கார வச்சு முழு படத்தையும் பார்க்க வைக்கணும்.

அப்போதான் எங்களோட வலி தெரியும்’ என்று மனதில் புலம்பியவன் சற்று நேரம் சோசியல் மீடியாவில் சுற்றி வந்து மணியை பார்க்க அது இரவு பதினொன்று என்று காட்டியது.

சூப்பர் டைம் ஆச்சு எப்படியும் ஹாசி தூங்கி இருப்பா, இப்போ போய் சத்தம் இல்லாம படுத்தற வேண்டியதுதான்’ என்று தனக்குள் சொல்லி கொண்டவன் மெதுவாக சென்று அறை கதவை திறக்க, அவன் அங்கு கண்ட காட்சியில் அதிர்ந்து போனவன் “ஆத்தி…..” என்று நெஞ்சில் கை வைத்து விட்டான்.

அப்படி அதிர்ந்து போற அளவுக்கு என்னவா…… இருக்கும் அடுத்த எபியில் பார்க்கலாம்.