அத்தியாயம்-39

“ஹர்ஷா கேட்கறேன்ல எதுக்கு இங்க வந்துருக்கோம்”.

“ம்ம்ம்….. இங்க ப்ரியா ஆம வடையும், அவிச்ச முட்டையும் தர்றாங்கலாம் வா போய் வாங்கிட்டு வரலாம்”.
“எனக்கு அதெல்லாம் வேண்டாம். நீ போய் வாங்கிட்டு வா. நான் இங்கயே இருக்கேன்”.

“எதே…. என்ன கிண்டலா. நீ இங்க இருந்தா அங்க யாரு பில் பே பண்றது. வா போகலாம்”.

“எதே….. பில் பே பண்ணனுமா” என்று அதிர்ந்தவள் ‘ஒருவேளை இங்கேயே சாப்பிட்டு போகலாம்னு நினைக்கறானோ’ என்று யோசித்தவள் அதுக்கும் ஹோட்டல்கு போகாம இங்க எதுக்கு வந்திருப்பான். ப்ச்….. சரி அவன்கிட்டயே கேட்போம் “வீட்டுக்கு போயே சாப்பிடலாம் ஹர்ஷா. எனக்கு வெளி சாப்பாடு பிடிக்காது ” என்றவள் சொல்ல,

தலையில் அடித்து கொண்டவன் “நாம ஒன்னும் இங்க சாப்பிட வரல”

“அப்புறம் எதுக்குதான் வந்தோம்” என்று பொறுமை இழந்தவள் கடுப்பாக கேட்க,

“ஏன் செல்லம் கோவப்படுற. கல்யாணம் ஆகி முதல் முதல்ல வெளியில வந்திருக்கோம் மாமாவுக்கு நீ கிப்ட் வாங்கி தரணும்ல அதுக்கு தான் வந்திருக்கோம்”.

“என்ன கிப்ட்டா……” என்றவள் வாயைப் பிளக்க. அவள் வாயை தன் கை கொண்டு மூடியவன் “ஆமா கிப்ட் தான், வா…. வா… சீக்கிரம் போய் வாங்கிட்டு வரலாம்” என்று அவள் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான்.

“ஹேய்….கிப்ட் எல்லாம் வாழ்க்கை முழுக்க ஹேப்பியா ஒன்னா வாழற ஜோடிங்க ஒருத்தருக்கு ஒருத்தர் வாங்கி கொடுக்கிறது. நான் எதுக்கு உனக்கு வாங்கி கொடுக்கணும். அது மட்டும் இல்லாம பையன்தான் பொண்ணுக்கு வாங்கி தரணும். நான்…..” என்று சொல்ல,

“ஷ்….. நாம அந்த கல்ச்சர மாத்துவோம். எப்ப பாரு பசங்களே பொண்ணுங்களுக்கு வாங்கி தரணும்னு எழுதபடாத சட்டம் இருக்கா என்ன. அப்படி இருந்தாலும் அத இன்னைக்கு நாம சுக்கு சுக்கா உடைக்கிறோம் வா போலாம்.

அப்புறம் நாம வாழ்க்கை முழுக்க ஒன்னாதான் வாழ போறோம். நீ அதை மறந்து மறந்து போற போல, இருக்கட்டும் நீ மறக்காத மாதிரி வீட்டுக்கு போன உடனே மாமா உன் மனசுல பதியற மாதிரி செயல்ல புரிய வைக்கறேன்.

ச்ச…. அதை விடு. இப்போ எதுக்கு அந்த பேச்சு அப்புறம் மாமா மூட் மாறி நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு போயிடுவேன். உன் அம்மா வீட்டுக்கு எல்லாம் போக முடியாது. அதனால கொஞ்ச நேரம் அமைதியா வா”

“எதே…. ஹர்ஷா……” என்றவள் பல்லை கடித்து கத்தும்போதே மொபைல் ஷாப் உள்ளே இழுத்து சென்றுவிட்டான்.

தங்கள் செல்லும் கடையை பார்த்தவள் ‘ஹோ….போன் வாங்கதான் வந்து இருக்கானா, ஆனா எதுக்கு என்னை பே பண்ண சொன்னான்’ என்று புரியாமல் அந்த கடையை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஹர்ஷாவோ கெத்தா போய் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன் “ஆப்பிள் ஐ போன் காட்டுங்க” என்று சொல்ல,

அவன் சொல்வதை கேட்டு கண்களை விரித்தவள்’சமூகம் ரொம்ப பெரிய இடம் போல, ஐ போன்லாம் வாங்குது என்று நினைத்து கொண்டிருக்க,

சேல்ஸ் மேன் காட்டிய அனைத்தையும் அலசி, ஆராய்ந்து ஒரு போன் பிடித்து போக, அதை எடுத்து கொள்வதாக சொல்ல,

அதன் விலையை சொன்ன சேல்ஸ் மேனிடம் “நோ ப்ராப்ளம் பேக் பண்ணுங்க” ஹாயாக உட்கார்ந்து இருக்க,

அவரோ “சார் பில் கேஷா, கார்டா” என்று கேட்க,

ஹாசி புறம் திரும்பயவன் அவளை கிண்டலாக பார்த்து கொண்டே “கார்ட்….” என்றுவிட்டு தன்னிடம் இருந்த அவள் கார்டை கொடுத்தான்.

அவளோ ‘என்னமோ பண்ணுடா எனக்கென்ன வந்துச்சு இவன் வாங்க என்னை எதுக்கு இழுத்துட்டு வந்தான்னே தெரியல’ என்று கருவி கொண்டு இருக்க,

அவள் போனில் மெசேஜ் வந்ததற்கான சத்தம் கேட்டது. இந்த நேரத்துல என்ன மெசேஜ் என்று அதை எடுத்து பார்த்தவள் கண்கள் ரெண்டும் வெளியே தெரித்து விடும் அளவிற்கு பெரிதாக விரிந்து கொண்டது.

கோபமாக அவன் அருகில் சென்றவள் “ஹர்ஷா என்ன இது”.

“மெசேஜ்…. இதுகூடவா உனக்கு தெரியாது சில்லி கேர்ள்”

“டேய்….. என் பொறுமைய ரொம்ப சோதிக்காத “

“சரி…. சரி…. கோவப்படாதா. உன் கார்ட் யூஸ் பண்ணுனா உனக்குதானே ஹாசி மெசேஜ் வரும். அதான் வந்திருக்கு இது கூடவா உனக்கு புரியல”.

“நான் எதுக்கு உனக்கு போன் வாங்கி தரணும்”.

“ஏன்னா என் பொண்டாட்டி கொடுத்த வாக்க மீற கூடாதுங்கற நல்ல எண்ணத்துலதான்”

ஹாசிக் புரியாமல் அவனை பார்த்து “என்ன வாக்கு மீறுறது. எனக்கு ஒன்னும் புரியல” என்று பல்லை கடித்துக் கொண்டு தலையில் கை வைத்தவாறு அங்கிருந்த சேரில் அமர,

“வை டென்ஷன் பேபி”என்று சொல்லி அவள் தலையில் இருந்த கையை எடுத்து விட்டவன், அவள் முகத்தின் முன்னால் வட்ட வட்டமாக கையால் வளையம் வரைய அதை கடுப்பாக தட்டி விட்டவள் “என்ன இது?” என்று கேட்க,

அவனோ “பிளாஷ்பேக்மா பிளாஷ்பேக். நல்லா யோசிச்சு பாரு. நாம ஏர்போர்ட்டில் இருந்து வந்துகிட்டு இருந்தோம், அப்போ ஒழிவாங்கி….என் போனு…. போட்டோ…” என்று சொல்ல,

அப்பொழுதுதான் நினைவு வந்தவளாக “ஓ அதுக்காகவா…” என்றவள் திடீரென நினைவு வந்தவளாக “ஹேய் நீ யூஸ் பண்ணுன போன் ஆண்ட்ராய்டு தானடா எதுக்குடா ஐ போன் வாங்கின” என்றவள் கேவமாக கேட்க,

“ஹிஹிஹி…. அது வாங்கி கொடுக்கிற ஆளோட மதிப்பு பொருத்து போனோட விலை மாறும்மா. நான் முதல்ல வச்சிருந்த போனு நானே வாங்குனது, அதனால ஆண்ட்ராய்டு போன்.

ஆனா இது அப்படியா, முதன் முதலில் என் பொண்டாட்டி எனக்காக வாங்கித்தர்ற கிப்ட் அது காஸ்ட்லியா இருக்கணும்ல. அதான் ஐபோன்…. “ ,

“டேய்… அதுக்காக மூணு லட்சம்லாம் அதிகம் டா”

“சூ…என் பொண்டாட்டியோட கெப்பாகுட்டிக்கு இதுவே கம்மிதான்”

“ஹையோ முடியலையே இவனை எங்கிருந்து டா பிடிச்சிட்டு வந்தீங்க. என்னை இப்போவே இப்படி புலம்ப வைக்கறானே, எதிர்காலத்துல எப்படி சமாளிக்க போறேன்னு தெரியலையே” என்று புலம்பிக்கொண்டே உட்கார்ந்து இருக்க,

அதற்குள் போன் தயாராகி வந்துவிட அதை வாங்கிக் கொண்டவன், அவரிடம் நன்றியை தெரிவித்துவிட்டு “சரி ஓகே. வந்த வேலை சிறப்பா முடிஞ்சது. வா பொண்டாட்டி போலாம்” என்று அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்று காரில் அமர வைத்தான்.

அவளோ போனில் இருந்த மெசேஜை எடுத்து பார்த்து ‘கல்யாணமான முதல் நாளே லட்சம் ஹோகையா…. கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்சேனே…. இப்படி மொத்தமா முழுங்கிட்டானே’ என்று புலம்பிக்கொண்டு அமர்ந்து இருந்தவள் நினைவு வந்தவளாக,

“டேய் ஒழுங்கா என் கார்டை குடுடா”என்று கேட்க,

“ம்ம்…. பொண்டாட்டி வாடா போடான்னு சொல்றதும் நல்லா கிக்காதான் இருக்கு. அதான் வாங்க வேண்டியதை வாங்கிட்டேனே இனி இது எனக்கு எதுக்கு இந்தா” என்று கார்டை நீட்ட,

அதை வெடுக்கென பிடிங்கியவள் இதை எப்படி எடுத்துருப்பான்’ என்று யோசிக்க,

‘அது எல்லாம் தொழில்ரகசியம் ஐயா சாமி. சொல்றதுக்கு இல்ல’என்க,

நெஞ்சில் கை வைத்தவள் அவன் புறம் திரும்பி “அவ்வளவு சத்தமாவா கேக்குது” என்று கேட்க,

அவனோ தோள்களை குலுக்கி கொண்டான்.

இப்படியே பேசி கொண்டு ஒரு வழியாக இருவரும் ரேவதி வீட்டை அடைந்தனர்.

தங்கயை பார்த்தவுடன் ரஞ்சன் “ஹாசி…..” என்று அவள் அருகில் செல்ல,

“மச்சான்….” என்று கத்தி கொண்டே இருவருக்கும் இடையில்ஹர்ஷா புகுந்து கட்டி கொள்ள, அங்கு வந்த மித்ரா இருவரையும் ஆராய்ச்சியாக பார்க்க,

ஹர்ஷாவை பிடித்து தள்ள நினைத்தவன் மித்ரா அங்கு இருக்கவும் பல்லை கடித்து தன்னை அமைதிபடுத்தி கொண்டு தள்ளி நிறுத்தியவன் மென்மையாக சிரித்து “வா ஹர்ஷா” என்று சொல்ல,

அவன் தலையில் தட்டிய ரேவதி “வீட்டு மாப்பிள்ளைய இப்படிதான் கூப்பிடறதா. ஒழுங்கா மாப்பிள்ளைன்னு கூப்பிடுடா” என்று சொல்ல,

கடுப்பானாலும் வெளியில் காட்ட முடியாத நிலையில் நின்ற நிரஞ்சன் மித்ரா தங்களையே பார்த்து கொண்டிருப்பதை கண்டு “ஹிஹிஹி…. வாங்க மாப்பிள்ளை” என்று சொல்ல,

நமுட்டு சிரித்த ஹர்ஷா “ம்ம்…. ஒரே நாளுல நல்ல மாற்றம்தான். சும்மா சொல்ல கூடாது என் தங்கச்சி என் மேல ரொம்ப பாசம் வச்சிருக்கா போல” என்று ரஞ்சன் காதில் சொன்னவன் ரேவதி ஆரத்தி எடுத்தவுடன் உள்ளே செல்ல,

மித்ரா “அண்ணா…..” என்று அவன் அருகில் வர, அவள் தலையில் கை வைத்தவன் “எப்படிடா இருக்க” என்று பாசமாக கேட்க,

அப்போது அங்கு வந்த பேச்சி பாட்டி அதெல்லாம் என் பேரன் உன் தங்கச்சிய நல்லாதான் பார்த்துக்கறான்” என்று சொல்ல,

அவர் அருகில் சென்றவன் “என்ன பாட்டி இங்கயே செட்டில் ஆகிட்டீங்களா அங்க உங்க மக நீங்க இல்லாம ரொம்ப கவலைல இருக்காங்க”

“என் மகதானே இருப்பா…. இருப்பா. ஏன் இவ்வளவு நேரம். சீக்கிரம் உங்களை கிளப்பி அனுப்பாம அப்படி என்ன வெட்டி முறை முறிச்சுட்டு இருந்தா உன் அம்மா” என்று கேட்க,

அவனோ ஓர கண்ணால் ஹாசியை பார்த்தான். அவள் தந்தையின் தோளில் சாய்ந்து இருப்பதை கண்டு கடுப்பாக “அது ஹாசி கிளம்பதான் நேரம் ஆகிடுச்சு பாட்டி. என்ன பண்றது. நான் சீக்கிரமே கிளம்பி வந்து எவ்ளோ நேரம் வெயிட் பண்ணுனேன் தெரியுமா” என்று சோகம் போல் சொல்ல,

அவர்களை சாப்பிட அழைக்க வந்த ரேவதி காதில் இது விழ மகள் அருகில் சென்று “எத்தன முறை சொன்னேன் காலைல சீக்கிரம் எந்திரின்னு கேட்டியா. இப்போ பாரு மாப்பிள்ளை எப்படி சொல்றாருன்னு. எவ்ளோ நேரம் அவரும் சாப்பிடாம இருப்பாரு. கொஞ்சம் கூட சுறு சுறுப்பே இல்ல” என்று திட்ட,

ஹர்ஷாவோ அப்போதுதான் அவரை பார்ப்பது போல் வாயில் கை வைத்தவன் “நீங்க எப்போ அத்தை வந்தீங்க. ஹாசி என்னால தான் லேட் ஆச்சுன்னு அம்மா கிட்ட சொல்லாதீங்கன்னு கார்ல வரும்போதே சொல்லித்தான் கூட்டிட்டு வந்தா, நான் பாட்டுக்கு உளறிட்டனா, என்றவன்,

ஹாசி புறம் திரும்பி “ஹாசி அத்தை வந்ததை நான் பாக்கவே இல்ல டா. சாரி…..”என்று பாவம் போல் சொல்ல, ரேவதி மகளை உக்கிரமாக முறைத்தார்.

உலகமாக நடிப்புடா சாமி என்று ரஞ்சன் நினைக்க, ஹாசியோ’போட்டு குடுத்துட்டியேடா பரட்டை’ என்று அவனை முறைத்தாள்.

மகள் முறைப்பை கண்டு அவள் தலையில் தட்டிய ரேவதி “எதுக்குடி மருமகனை முறைக்கற” என்க,

ஹர்ஷாவோ நமுட்டு சிரிப்பு சிரித்து கொண்டு குனிந்து கொண்டான்.

பேச்சிதான் சூழ்நிலையை மாற்றும் பொருட்டு “சரி…. சரி ரேவதி நேரம் ஆகுது பாரு. புள்ளைங்கள கூட்டிட்டு போய் டிபன் குடு. ஏற்கனவே நேரம் ஆகி போச்சு”என்று சொல்ல அனைவரும் உணவருந்த சென்றனர்.

மைக் அப்போதுதான் குளித்து ரெஸ்ட் எடுத்துவிட்டு கீழே வந்தான். “ஹேய் நண்பா……” என்று அவனை ஓடி சென்று ஹர்ஷா அணைத்து கொள்ள, மொத்த குடும்பமும் அவர்களை ஆச்சர்யமாக பார்த்தது.

“நண்பா ஒலி வாங்கி உன் புண்ணியத்துல ஒரு செம்ம போன் எனக்கு கிடைச்சிருக்கு. வா என் பக்கத்துல உட்கார்ந்து சாப்பிடு” என்றவனின் ஒரு புறம் ஹாசியும், மறு புறம் மைக்கும் அமர்ந்தனர்.

ஹர்ஷாவும், மைக்கும் பேசி கொள்வதை பார்த்த ரேவதி “ஏன் மாப்பிளை மைக்க உங்களுக்கு முன்னாடியே தெரியுமா” என்று கேட்க,

அவனோ “தெரியுமாவா… அவனை நாங்கதானே ஆஆஆஆ……” என்றவன் கத்த அவன் வாயில் கேசரியை வைத்து திணித்த ஹாசி “தெரியும்மா. நேத்து வீடியோ கால்பண்ணி எங்களுக்கு விஷ் பண்ணுனான். அப்போத்துல இருந்து தெரியும்” என்று தாயிடம் சொன்னவள் “ஹர்ஷா உனக்கு ஏதோ வேலை இருக்கு. வெளிய போகணும்னு சொன்னியே……..” என்றவள் சொல்லும்போதே ’இல்லை’ என்று மறுத்தவன் தலையசைக்க போக,

கையில் போர்கை எடுத்து அவன் இடையில் வைத்து குத்துவது போல் சைகை செய்து கண்ணால் மிரட்ட, அரண்டு போனவன் “ம்ம்… ஆமா ஆமா போகணும்” என்று சொல்ல,

அவனை பார்த்து நக்கலாக சிரித்தவள் சாப்பிட ஆரம்பிக்க, ரேவதி மருமகனை விழுந்து விழுந்து கவனித்து கொண்டு இருந்தார்.

மித்ரா, ரஞ்சன் கண்களாலேயே காதல் கதை பேசி கொண்டு சாப்பிட, அவர்கள் உலகத்தில் அவர்கள் மட்டுமே.

ஹர்ஷா சாப்பிட்டு முடித்தவுடன் ஹாசி சொன்னதுக்காக வெளியே சென்று விட, ஹாசி அவள் அறையில் அடைந்து கொண்டாள்.

சற்று நேரம் கடந்து ஹாசி அறைக்கு வந்த ரஞ்சன் அவள் ஏதோ யோசனையில் இருப்பதை பார்த்து புருவம் சுருக்கியவன் “என்ன ஹாசி யோசனை” என்க,

அவளோ “ம்ம்….. என்ன யோசனை எல்லாம் அந்த குரங்கு பயல நினைச்சுதான்”.

“அவனைப்பத்தி யோசிக்க என்ன இருக்கு”.

“நானும் அப்படிதான் நினைச்சேன். ஆனா அவன்கிட்ட இருக்க மாற்றம் என்னை யோசிக்க வைக்குது” என்று தலையில் கை வைத்தவள் அருகில் அமர்ந்த ரஞ்சன் “என்னடா எதுவும் சீரியஸான விஷயம். அவன் மறுபடியும் அந்த பொண்ணுக்கூட……”

“ச்ச…. ச்ச….. அப்படி இல்ல ரஞ்சு. அவன்….. அவன்……”

“ம்ம்ம்….. அவன்…. அவன்…..”

“அவன் இப்போல்லாம் ரொம்ப வித்தியாசமா பார்க்குறான். பேசறான். இந்த கல்யாண பேச்சை ஆரம்பிச்சப்ப ஒரு வருஷம் கழிச்சு பிரியலாம்னு சொன்னான். இப்போ இனி வழ்க்கை முழுக்க நீ மட்டும்தான்னு சொல்லிட்டு தெரியறான்”.

“ஹோ……. நீ என்ன நினைக்கற…… ஒரு வேலை அவன் உன்னை லவ் பண்றானோ….”

“ம்கூம்….. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. கல்யாணம் ஆகிடுச்சு வேற வழி இல்ல, கூட அவன் தங்கச்சி வாழ்க்கையும் யோசிச்சு இந்த முடிவு எடுத்துருப்பான்னு நினைக்கறேன்”.

“ஹோ….. சரி நீ என்ன முடிவு எடுத்துருக்க”

“என் முடிவுதானே இனிமே தெரியும். சரி நீ எப்போ அமெரிக்கா கிளம்பற””ம்ம்…. நெக்ஸ்ட் வீக் . நானும் மித்ராவும்தான் கிளம்பறோம். அப்பா, அம்மா இங்கதான் இருப்பாங்க. உனக்காக அப்பா இங்கயே இருக்கேன்னு சொல்லிட்டாரு. நீ….. ஒரு வருஷம் கழிச்சு……”

“அங்கதான் வருவேன் என் ரூமை நீட்டா மெயிண்டைன் பண்ணு”

“ஏன்டா அதான் அவன்……”

“ம்கூம்…. அவனுக்கு நான் ஈஸியா கிடைக்க கூடாது. நல்லா அலையவிடணும். எனக்காக எந்த லெவல் வரைக்கும் போறான்னு பார்க்கணும். அப்போதான் இவ்வளவு நாள் அவனுக்காக காத்திருந்த என்னோட காதலுக்கு மரியாதை….”

“ஹாஹா…. என்ன காதலுக்கு மரியாதையா”

“டேய் அண்ணா என்ன நக்கலா. நானும்தான் வந்ததுல இருந்து பார்த்துட்டு இருக்கேன் மனைவிக்கு மரியாதைய”

“அதை ஏன்டி கேட்கற. நைட்டு புல்லா ஒரே அழுகை என் அண்ணன நீங்க மதிக்க மாட்டிக்கிறீங்க. அவன்கூட பேச மாட்டிக்கிறீங்கன்னு. அதான் கழுதைகிட்ட பேசிட்டு போவமேன்னு……ஆஆஆஆ……ஏய் வலிக்குது. எதுக்குடி கொட்டுன”

“நீ எப்புடிடா என் புருஷனை கழுதைன்னு சொல்லலாம்”

“எதே……. புருஷனா. அப்போ நீ பிக்ஸ் ஆகிட்டியா?”.

“நான் சின்ன வயசுலயே பிக்ஸ் ஆகிட்டேன். அதனால ஒழுங்கா அவனை மரியாதை குடுத்து பேசு”

“நீ மட்டும் அவன்னு சொல்ற””நான் சொல்லுவேன்டா…ஏன் அவனை தூக்கி போட்டு ரெண்டு மிதி கூட மிதிப்பேன். ஆனா நீ பண்ண கூடாது. ஏன்னா எனக்கு உரிமை இருக்கு. லைசன்ஸ் இருக்கு” என்று சொல்ல,

அவளை மேலையும் கீழையும் பார்த்தவன் “விதி வலியது. என்ன ஆக போறானோ?”

“டேய் அண்ணா மறுபடியும்……”

“சரி….. சரி….. என்ன ஆக போறாரோ..” என்றவன் பின் தன் விளையாட்டுதனத்தை கைவிட்டு “ஹாசி…..” என்று சீரியஸாக அழைக்க,

அவளோ “நீ இப்படி உருக்கற அளவுக்கு எல்லாம் ஒன்னும் இல்ல. நீ ஜாலியா உன் லைப்பை பாரு. எனக்கு ஒரு எண்டர்டெயின்மெண்ட் கிடைச்சுருக்கு அதை நல்லா வச்சு செஞ்சுட்டு வரேன்” என்று கண்ணடித்து சொல்ல,

அவனும் அவள் தலையை கலைத்துவிட்டு “எப்படியோ இன்னொரு அடிமை உனக்கு சிக்கிட்டான். மீ ஹேப்பி” என்றுவிட்டு சென்றுவிட்டான்.

வெளியே சென்ற ஹர்ஷா எங்கு செல்வது என்று தெரியாமல் சுற்றி கடைசியில் பார்க்கில் வந்து அமர்ந்துவிட்டான்.

‘ச்ச….. இப்படி கல்யாணம் ஆன முதல் நாளே என் பொண்டாட்டி ரோடு ரோடா சுத்தவிட்டுட்டாளே’ என்று புலம்பியவாறு கண்களை சுற்ற விட,

ஒரு இடத்தில் அவன் கண்கள் நிலைக்குற்றி நின்றது. உடனே தன் பார்வையை கூர்மை ஆக்கியவன் அந்த நபர்தானா என்று ஊன்றி பார்க்க,

சந்தேகமே வேண்டாம் அது நீ நினைக்கும் ஆள்தான் என்று அவன் கண்கள் உறுதி செய்ய, வேகமாக அவர்களை நோக்கி சென்றான்.

அங்கு இருந்தது யாராக இருக்கும்…. அடுத்த எபியில் பார்க்கலாம்.