அத்தியாயம் -38

மகனும் மருமகளும் சொல்வதை கேட்டு நெஞ்சில் கைவைத்தவரை கண்டு பதறி இருவரும் அருகில் வர,

அவரோ “என்கிட்ட ஏன்டா சொல்லல” என்று கேட்டார்.

“இல்லம்மா கல்யாண வேலை பிசில இருந்தோம். சரி எல்லாம் முடிஞ்சு ப்ரீ ஆன அப்புறம் உங்ககிட்ட இதைபத்தி பேசிக்கலாம்னு இருந்தோம். ஆனா அதுக்குள்ள நீங்களே போய் பேசி மாட்டி இருக்கீங்க”.

“டேய்…. மகனே இந்த கிறுக்கு பய ஏன்டா லவ் பண்ற விஷயத்தை அவகிட்ட முதல்ல சொன்னான்”

“தெரியலையே”

“கிருஷ்ணா கொஞ்சம் நல்லா யோசிச்சு பாரு. அவளுக்கு தெரிஞ்ச விஷயத்தை. இந்த வீட்ல எனக்கு மட்டும்தான் தெரியும்னு பெருமையா நான் சொன்னனே அப்போ என்னைய எவ்ளோ நக்கலா பார்த்திருப்பா. ஒரே அசிங்கமா போச்சு குமாரு” என்று சொல்ல,

வந்த சிரிப்பை அடக்கிய பத்மா “சரி விடுங்க அத்த நம்ம அசிங்கப்படுறது என்ன புதுசா பீல் பண்ணாதீங்க ஃபீல் பண்ணாதீங்க” என்க,

அவரை முறைத்த பாட்டி “ஏன்டிம்மா மருமகளே நான் அசிங்கப்பட்டது உனக்கு சந்தோஷமா இருக்கா? குதூகாலமா சொல்ற” என்க,

அவரோ “நான் அப்படி சொல்ல வரல அத்த…..” என்று இழுத்தார்.
“என்ன நொப்படி சொல்ல வரல,ஏன் இப்படி என்னை படுத்துறீங்க? என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நான் கொஞ்சம் அலர்ட் ஆகி இருப்பேன்ல. நேத்துல இருந்து பக்கு பக்குனு இருந்தேன்.

அந்த சீம சிறுக்கி வரட்டும் பேசிக்கிறேன். நேத்து மிரட்டுனது போதாதுன்னு இன்னைக்கு காலைல வந்து மிரட்டிட்டு போறா தெரியுமா” என்றவர் மூக்கை சீந்த,

மற்ற இருவரும் அவரை புரியாமல் பார்த்தனர்.

பத்மா “என்ன சொல்றீங்க அத்தை?”

அவரும் இரவு நடந்ததையும் காலை நடந்ததையும் சொல்ல பத்மாவோ வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தார்.

அவர் சிரிப்பதை பார்த்து கடுப்பான பாட்டி “டேய் மகனே அவளை அமைதியா இருக்க சொல்லுடா. இல்லை இருக்க கடுப்புல காதை புடிச்சு கடிச்சு வச்சுடுவேன்” என்று கூற,

திகைத்து போன பத்மா “எதே கடிப்பீங்களா…..” என்று கேட்க,

அவரோ “பின்ன எவ்ளோ நேரம்தான் நானும் வலிக்காத மாதிரியே நடிக்கறது. என்னை அவ போட்டு படுத்துனான்னு சொல்றேன் சிரிக்கிற நீ”,

“ஏன்த்த இவ்ளோ அப்பாவியா இருக்கீங்க. சரி விடுங்க இதுவும் நல்லதுக்குதான். சரி….. சரி முறைக்காதீங்க. அவங்க இங்க இருந்தா ப்ரியா இருக்கலாம்னு நினைக்குறா, அதுவே நல்லதுதானே. நாம எதுக்கு இருக்கோம் எதாவது பண்ணி அவங்கள சேர்த்து வைக்கலாம்.

அதுமட்டும் இல்லாம அங்க ரேவதி முன்னாடி அவளோட வாலு தனத்தை எல்லாம் காட்ட முடியாது. ஹர்ஷாவை கடுப்பேத்த முடியாது. நல்ல பிள்ளையாதான் இருக்கணும். அதனாலதான் அங்க தலையை காமிச்சிட்டு இங்க வந்துடலாம் அப்படின்னு பிளான் பண்ணி இருக்கா, நீங்களும் அவ சொன்னதுக்கு ஏத்த மாதிரி மண்டைய ஆட்டிட்டு இருந்திருக்கீங்க,

எங்க கிட்டயும் உங்க மகனை எண்ணெய் சட்டில போட்டு வறுத்து எடுக்காத குறையா வறுத்து பிரட்டி எடுப்பேன். நீங்க அதையெல்லாம் கண்டுக்காம இருக்கணும்னு கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லிட்டா, பார்த்துக்கலாம் விடுங்க” என்று சொல்ல,

பாட்டியோ கன்னத்தில் கை வைத்தவராக “ஆத்தி ரொம்ப விவரமானவளா தான் இருக்கறா. மொத்த குடும்பத்தையும் கையில வச்சு ஆட்டி இருக்காளே” என்று சொல்ல கிருஷ்ணனும் பத்மாவும் ‘ஆமா’ என்பது போல் தலையசைத்தனர்.

பாட்டி, “ஏண்டி கல்யாணத்துக்கு முன்னாடியே பழிவாங்குறேன்னு சொன்னாளே, அப்போவே அம்மாடி உன் சங்காத்தமே வேண்டாம். என் புள்ளையே ஒரு அப்பாவி அம்மாஞ்சி. உன் கடுப்புக்கு எல்லாம் அவன் ஆள் இல்லைன்னு சொல்லிட்டு வந்து, வேற நல்ல பொண்ணா பார்த்து நம்ம அர்ஷாக்கு கட்டி வச்சிருக்கலாம்ல“ என்க,

உடனே பத்மா வேகமாக “அது எப்படி வேற பொண்ண கொண்டு வர முடியும். நாங்கதான் இவங்க சின்ன புள்ளையா இருக்கும்போதே பேசி வச்சிட்டோம்ல”

“நீ பேசுனங்கறதுக்காக, என் பேரன் வாழ்க்கைய கேள்விக்குறியாக்கறதா. பாவம் என் பேரன் சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம தவிக்கிறான். நேத்து வேற ஊமை குத்தா குத்தியிருப்பா போல, அடி ஒன்னும் வெளிய தெரியல” என்று சோகமாக சொல்ல,

பத்மாவோ அதெல்லாம் ஒன்னும் கேள்வி குறியாகாது. அது மட்டும் இல்லாம உங்க பேரன் ஒன்னும் அப்பாவி எல்லாம் இல்ல. என் மகன்தான் இருந்தாலும் உண்மைய சொல்லிதானே ஆகணும். அப்புறம்….. முக்கியமான விஷயம் ஹாசி அவனை லவ் பண்றா. அதனால அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருப்பாங்க. நீங்க கவலைப்படுற அளவுக்கு எதுவும் நடக்காது” என்று கூற,

அதைக்கேட்ட பாட்டியின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது. “என்னடி சொல்ற” என்றவர் கேட்க,

“அட ஆமா அத்த திடீர்னு ஹாசி இந்தியா வரேன்னு சொல்லவுமே, ரேவதிக்கு சந்தேகம்தான், அதான் அவ இங்க வந்த உடனே அவ ரூமை போய் ஆராய்ச்சிபண்ணி கன்பார்ம் பண்ணிட்டா, அப்புறம்தான் சரி இவங்களுக்கு கல்யாணத்தை பண்ணிவச்சிடலாம்னு முடிவு பண்ணி மொத்த குடும்பமும் இங்க வந்து இறங்கி இருக்காங்க.

இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா நம்ம மித்துவும் நிரஞ்சனும் கூட லவ் பண்ணிகிட்டுதான் இருந்திருக்காங்க. அதான் அவங்க கல்யாணத்தையும் முடிச்சாச்சு”.

“ஆத்தி என்னடி சொல்ற”

“ஆமா அவங்க லவ் பண்ற விஷயம் எங்க எல்லாருக்கும் தெரியும். இருந்தாலும் தெரியாத மாதிரியே மெயின்டெயின் பண்றோம்”.

“ம்ம்ம்….. உலகத்துலயே எல்லாருக்கும் தெரியற மாதிரி லவ் பண்ணுன ஜீவன்கள் நம்ம வீட்டு ஜீவன்களாதான் இருக்கும்” என்று பாட்டி சலித்து கொள்ள,

பத்மா சிரித்து கொண்டே “எல்லாம் உங்க பிளட் ஒரு கிரைம் கூட மறைச்சு பண்ண தெரியறது இல்ல. நாங்க எல்லாம் ஒரு சம்பவம் பண்ணுனா காத்துக்கு கூட தெரியாம சைலன்ட்டா முடிச்சுட்டு போயிக்கிட்டே இருப்போம் தெரியுமா” என்றவர் கெத்தாக சொல்ல,

அவரை ஏற இறங்க பார்த்த பாட்டி “என்னடிம்மா பண்றது. நாங்க எல்லாம் சூது வாது தெரியாத அப்பாவியா இருந்துட்டோம். அதான் ஈஸியா எல்லாரையும் நம்பி ஏமாந்து போயிடறோம். நீ அப்படியா, அதான் முழு விஷமா நிக்குறியே. உன்னை போய் யாரவது ஏமாத்த முடியுமா” என்க,

கிருஷ்ணன் வந்த சிரிப்பை கஷ்ட்டப்பட்டு அடக்கி கொண்டு நின்றிருக்க,

அவ்வளவு நேரமும் கெத்தாக பார்த்து கொண்டிருந்த பத்மா மாமியார் விஷம் என்றவுடன் கடுப்பாகி அவரை முறைத்து “என்னை விஷம்னு சொல்றீங்களா” என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கோபமாக கேட்க,

அவரோ “நீ என்னடி மூக்குல காத்தடிச்சே சூறாவளிய கொண்டு வந்துருவ போல, நான் எங்க விஷம்னு சொன்னேன் விவரம்னுதானே சொன்னேன்” என்று மழுப்ப,

அவரை யோசனையாக பார்த்த பத்மா “அப்படியா சொன்னீங்க. எனக்கு வேற மாதிரி விழுந்திச்சே” என்றவர் யோசனையாக சொல்ல,

பாட்டியோ அவரை அதிக நேரம் யோசிக்க விடாமல் “அட என்ன மருமகளே…. அதை விடு அதுவா இப்போ முக்கியம் கழுதை அதை தூக்கி ஓரமா வை. இப்போ என் கேள்விக்கு பதில் சொல்லு. அவதான் அர்ஷாவ லவ் பண்ணிக்கிட்டு இருக்காளே, அப்புறம் ஏன் இப்ப கோவமா இருக்கா? பலி வாங்கறேன் பால் வாங்கறேன்னு சொல்லிட்டு திரியறா” என்று பாட்டி புரியாமல் கேட்க,

அவர் அருகில் வந்த பத்மாவோ “ஹையோ என்னத்த நீங்க இவ்ளோ மக்கா இருக்கீங்க. கொஞ்சம்கூட யோசிக்க மாட்டீங்களா” என்க,

அவர் காதை பிடித்த பாட்டி “அடியே என்னடி சைக்கிள் கேப்ல என்ன மக்குன்னு சொல்ற” என்று கேட்க,

“ஹிஹிஹி…ஆஆஆஆ……அத்த வலிக்குது விடுங்க……ஆஆஆஆ…..” என்றவர் கத்த, போனா போகுது என்று மருமகள் காதை விட்ட பாட்டி

“ என்னடி யோசிக்கணும்னு சொல்ற” என்று கேட்க,

அவரோ “பின்ன என்ன அத்த. ஹாசி நம்ம ஹர்ஷாவ பார்த்து எப்படியும் குறைஞ்சது பத்து வருஷமாவது இருக்கும். ஆனாலும் அவனை லவ் பண்ணறா, எப்போல இருந்து இந்த லவ்ன்னு தெரியலைனாலும், லவ் பண்ணுனால ஆனா உங்க பேரன் என்ன பண்ணுனான் இங்கேயே ஒரு பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருந்திருக்கான். அவனை உருகி உருகி லவ் பண்ணிக்கிட்டு இருக்குற அவள பத்தி யோசிக்காம, இன்னொருத்தி பின்னாடி போனான்ல அப்போ அவளுக்கு கோவம் வரத்தானே செய்யும்”.

“என்னடி இது அநியாயமா இருக்கு. அவ லவ் பண்றது ஹர்ஷாக்கு எப்படி தெரியும். இன்னும் சொல்ல போனா ஹாசி நியாபகமே அவனுக்கு இருந்திருக்குமான்னு தெரியல. அப்புறம் எப்படி அவனுக்காக ஒருத்தி காத்திட்டு இருக்கான்னு தெரியும். அவ அமெரிக்கால இருந்து வரா போய் கூட்டிட்டு வாடான்னு சொன்னதுக்கு போக மாட்டேன்னு எவ்ளோ மல்லு கட்டுனான்.

அவ நியாபகமே இல்லாம இருந்தவன் இங்க ஒரு பொண்ணை பார்த்து லவ் பண்ணுனது எனக்கு என்னமோ தப்பா தெரியல. நீ அவனை பெத்த ஆத்தாதானே அப்புறம் ஏன்டி அவனுக்கு எதிராவே யோசிக்கற” என்ற பாட்டியை பத்மா முறைக்க,

“என்னை ஏன்டி முறைக்கற உண்மையதானே சொல்றேன்”,

அவரோ “உங்க லாஜிக் எல்லாம் கரெக்ட்தான். ஆனா உங்க பேரன் வேற பெரிய கிரைம் ஏதோ பண்ணியிருக்கான்னு எனக்கு தோணுது. இல்லைன்னா சும்மா ஹாசி இவ்ளோ கோவப்படமாட்டளே”.

“ஏய் இதெல்லாம் அநியாயம்டி பெத்த ஆத்தாவா யோசிடி”

“நான்லாம் யோசிக்க மாட்டேன் எனக்கு டைம் இல்ல. நீங்க லாஜிக் பேசுனீங்கன்னா உங்க மூக்குல ரத்தம் வர வச்சுடுவா உங்க பேத்தி பார்த்துக்கோங்க” ,

“என்னடி பயமுறுத்துற”

“ஆமா அத்த. ஹாசி ஒரு வைரம். ஈஸியா அவ கிடைச்சிட்டதால அவளோட அருமை உங்க பேரனுக்கு தெரியல. கொஞ்சம் கஷ்டப்படட்டும். அப்போதான் அவளையும் அவ காதலையும் புரிஞ்சுப்பான்.

இப்போ நம்ம மூணு பேரும் என்ன பண்ணனும்னா கண்ணு காது வாய் மூணையும் மூடிகிட்டு அவங்க கோமாளிதனம் பண்ணுனாலும் கண்டும் காணாம அமைதியா மெயின்டன் பண்றோம் அவ்வளவுதான்” என்று சொல்ல,

பாட்டியோ “என்னமோ சொல்றீங்க, நானும் கேட்கறேன். இருந்தாலும் அவ வரட்டும் இன்னைக்கு நான் கேட்கற கேள்வில வாயடச்சு போக போறா பாரு” என்று பாட்டி கடுப்பாக சொல்ல,

கிருஷ்ணன், “அம்மா ஹாசிகிட்ட வாய் கொடுக்காதீங்க.அப்புறம் நீங்கதான் கஷ்ட்டப்படணும்”.என்ற மகனை முறைத்தவர் “என்னடா அதுக்குள்ள மருமகளுக்கு சப்போட்டா”

“மருமகளுக்கு சப்போர்ட் எல்லாம் இல்லம்மா. உங்கள காப்பாத்துறேன் அவ்வளவுத்தான். அதுவும் ஹாசியைபத்தி தெரிஞ்சதனால சொல்றேன் பாத்துக்கோங்க” என்று விட்டு வெளியில் செல்ல,

பாட்டியோ “என்னடா ஆளாளுக்கு மிரட்டுறீங்க” என்றவாறு அமைதியாக உட்கார்ந்து விட,

அவர் அருகில் வந்த பத்மா “இப்படி அமைதியா இருங்க. போதும் எல்லாம் அதுப்பாட்டுக்கு நடக்கும். சரி….. சரி…. இன்னும் எவ்வளவு நேரம் இப்படி இங்கயே ஒளிஞ்சுட்டு இருக்க போறீங்க அவங்க கிளம்பிட்டாங்க வெளிய வாங்க சாப்பிடலாம்” என்றுவிட்டு செல்ல,

பாட்டியும் “அது சரி அந்த சீமகாரிய சமாளிக்க தெம்பு வேணுமே. அதுக்காகவாவது சாப்பிட்டு உடம்ப தேத்தறேன். பசிக்குது வாங்க சாப்பிடலாம்” என்றுவிட்டு சாப்பிட சென்றார்.

அங்கு மறுவீட்டிற்கு ஹாசியும் ஹர்ஷாவும் சென்று கொண்டிருந்தனர்.

காரில் அமைதியே நிலவ பாட்டு கேட்கலாம் என்று நினைத்தவள் பாட்டை ஓட விட
‘தோழியா என் காதலியா
யாரடி என் கண்ணே
தோழியாய் என் காதலியா
யாரடி என் கண்ணே…….

மடி மீது தூங்க சொல்கிறாய்,
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்,
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்…
ஓஹோஹோ பெண்ணே….

ஏனடி என்னை கொள்கிறாய்….
உயிர் வரை சென்று தின்கிறாய்..
மெழுகு போல் நான் உருகினேன்..
என் கவிதையே என்னை காதல் செய்வாய்……’

என்ற பாடல் ஒலிக்க, கடுப்பான ஹாசி பாட்டை ஆப் செய்தாள்.

“ஏன் ஹாசி? பாட்டு நல்லாதானே இருக்கு”

“கேவலமா இருக்கு” என்று எரிச்சலாக சொன்னவள் வெளியே வேடிக்கை பார்க்க,

“கல்யாண பேச்சை ஆரம்பிச்சதுல இருந்து நீ ரொம்ப மாறிட்ட ஹாசி. இப்போ எதுக்கு இவ்ளோ கோவமா இருக்க”

அவனை பார்த்து திரும்பியவள் “நீ பண்றது, பேசறது எல்லாமே மாறி இருக்கும் போது நான் மாற கூடாதா? நானா மாறல. நீதான் என்னை இப்படி மாற வச்சிருக்க. இல்லை நான் தெரியாமதான் கேட்குறேன். நீ என்ன ப்ரூப் பண்ண ட்ரை பண்ற. என்னதான் நினைச்சுட்டு இருக்க”

“உன்னைதான் நினைச்சுட்டு இருக்கேன்” என்றவன் கண்ணடித்து சொல்ல,

சத்தமாக சிரித்தவள் “எத்தனை நாளைக்கு. ஹான்…..”

“நான்தான் சொன்னனே வாழ்க்கை முழுக்கன்னு”

“ஹர்ஷா மறுபடியும் ஆரம்பிக்காத. நைட்டே நாம இதைப்பத்தி பேசிட்டோம். மறுபடியும் ஆரம்பிக்காத. அப்புறம்……இனி பொண்டாட்டின்னு கூப்பிடற வேலை வச்சிக்காத எனக்கு பிடிக்கல” என்றவள் சொல்ல,

அவள் மனமோ’நிஜமா உனக்கு பிடிக்கலையா. அவன் அப்படி கூப்பிடறதை ரசிக்கறதானே. அவன் அப்படி கூப்பிட்டா நீ மயங்கிடுவன்னு பயப்படுறதானே, அதனாலதானே அவனை அப்படி கூப்பிட வேண்டாம்னு சொல்ற’ என்ற மனசாட்சியின் கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை.

அதே சமயம் ஆணவனோ “தோடா…..பொண்டாட்டிய பொண்டாட்டின்னு கூப்பிடாம…. வேற எப்படி கூப்பிடறது. பொண்டாட்டிய பொண்டாட்டின்னு கூப்பிடாம இருந்தா பாக்கறவங்க என்ன இவன் பொண்டாட்டிய பொண்டாட்டின்னு கூப்பிட மாட்டிக்கிறான் இவன் இப்படி பொண்டாட்டிய பொண்டாட்டின்னு கூப்பிடாம இருந்தா அந்த பொண்டாட்டி…….” என்றவன் சொல்லும்போதே கையெடுத்து கும்பிட்டவள் “போதும்….. போதும்… போதும் நான் எதுவும் சொல்லல, கொஞ்சம் அமைதியா வர்றியா எனக்கு தலை வலிக்குது” என்றுவிட்டு ஜன்னல் புறம் திரும்ப,

ஹர்ஷாவோ நமட்டு சிரிப்பு சிரித்து’யாருகிட்ட, போனா போகுது சின்ன பொண்ணுன்னு விட்டா ஓவரா போற’ என்றுவிட்டு மீண்டும் அவளிடம் பேச்சு கொடுக்க துவங்கினான்.

“அப்புறம் வைப்….. காலைல என்ன சாப்பிட்ட”என்க,

அவளோ அவனை முறைத்து பார்க்க “என்னடி கண்ண உருட்டி உருட்டி மாமனை பார்க்குற மாமா அம்புட்டு அழகாவா இருக்கேன்”.

“ம்ம்….. வாயில நல்லா வருது”

“என்ன வருது”

“கொஞ்சம் அமைதியா வர்றியா ப்ளீஸ்”

“முடியாது. எனக்கு போர் அடிக்கும். எதாவது பேசிக்கிட்டே வா. இப்போ நான் என்ன கேட்டேன். சாப்பிட்டியான்னு கேட்டேன். சாப்பிட்டா ஆமா சொல்லு. இல்லைன்னா இல்லைன்னு சொல்லு. அதுக்கு எதுக்கு கோபம்”

‘ஆண்டவா என்னால முடியலையே. இவனை நாம வச்சு செய்யலாம்னு பார்த்தா, இவன்தான் நம்மள வச்சு செஞ்சுட்டு இருக்கான். பேசாம கண்ணை மூடி உட்காருவோம். அப்போதான் அமைதியா இருப்பான்’ என்று நினைத்தவள் கண்களை மூடி சீட்டில் பின்னால்சாய்ந்து கொண்டாள்.

சற்று நேரத்தில் நேரத்தில் கார் நின்றுவிட,

‘அதுக்குள்ளவா வீட்டுக்கு வந்துட்டோம்’ என்று யோசித்தவாறே கண்களை திறந்தவள் எதிரில் இருந்த கட்டிடத்தை கண்டு திகைத்து “ஹர்ஷா இங்க எதுக்கு வந்துருக்கோம்”

“எல்லாம் காரணமாதான் வா போகலாம்”

“இல்ல. நான் வரல. நீ வண்டிய எடு. வீட்டுக்கு போகலாம்” என்றவள் கையை கட்டி கொண்டு அப்படியே அமர்ந்திருக்க,

அவனோ “வாடி பொண்டாட்டி” என்றவாறு அந்த மாலுக்குள் இழுத்து சென்றான்.
மறுவீட்டுக்கு போக வேண்டியவன் இங்கு மாலுக்கு வருவதற்கான காரணம் என்ன? அடுத்த எபியில் பார்க்கலாம்.

உயரமான அந்த மாலை அண்ணாந்து பார்த்த ஹாசி’என்ன முடிவோட இங்க கூட்டிட்டு வந்துருக்கான்னு தெரியலையே என்று முணு முணுத்து கொண்டே அவனோடு உள்ளே சென்றாள்.