அத்தியாயம்-36

ரேவதி கொடுத்த பால் சொம்பை எடுத்து கொண்டு மனதில் பயத்துடனே ரஞ்சனின் அறைக்குள் நுழைந்தாள் மித்ரா.

கண்களை நாளா புறமும் சூழலவிட்டவள் ரஞ்சன் அங்கு இல்லாததை கண்டு நெஞ்சில் கை வைத்து நிம்மதி மூச்சுவிட்டவள்.

‘நல்லவேளை ஆள காணோம். அவன் வர்றதுக்குள்ள போய் தூங்கிடணும்’ என்று சொல்லி கொண்டவள் காதோரம் “எதே தூங்க போறியா” என்ற அதிர்ச்சியான குரல் கேட்க,

பயந்து போனவள் “ஆஆஆ…..” என்று கத்தி கையில் இருந்த பால் சொம்பை நழுவ விட, அதை நொடி பொழுதில் சரியாக கேட்ச் பிடித்தவன் “ஹேய்….. ஏன்டி…இப்படி கத்துற வெளில இருக்கவங்க என்னைப்பத்தி என்ன நினைப்பாங்க” என்று ரகசிய குரலில் கேட்டு அவள் வாயில் கை வைத்து மூட,

அவன் கையை தட்டி விட்டவள் “கொஞ்சமாவது அறிவு இருக்கா நிரன் உனக்கு?”

‘ம்கூம்…. அது இருந்தா நான் ஏன் லவ் பண்ண போறேன்? கல்யாணம்தான் பண்ண போறேன்?’ என்று புலம்ப,

“என்ன சொன்னீங்க” என்று கோபமாக கேட்டவளை பார்த்து வழிசலாக சிரித்தவன் “அது ஒன்னும் இல்ல செல்ல குட்டி கல்யாணம் ஆகி முதல் முதல்ல உன்கிட்ட இல்லாத விஷத்தை மாமாகிட்ட கேட்குற,

அதை போய் நான் இல்லைன்னு சொல்லி தராம விட முடியுமா. அதான் எந்த அறிவை எப்படி? எந்த முறைல உனக்கு குடுக்கலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன்”

“என்ன கிண்டலா? சிரிப்பு வரல, எதுக்கு இப்படி பின்னாடி வந்து நின்னு பயமுறுத்துறீங்கன்னு கேட்க வந்தா….. எனக்கே அறிவு இல்லைன்னு சொல்லுவீங்களா?” என்று உக்கிரமாக அவனை முறைக்க,

அவனோ “என்னது பயமுறுத்துனனா…. அடியே இது நம்ம ரூம் என்னை தவிர வேற யார் இங்க வருவாங்கன்னு நீ பயந்த”

“ம்கூம்….. நீ வந்ததை பார்த்துதான் பயந்தேன்”

“எதே…… என்ன பார்த்து பயந்தியா. என்னடி இது அநியாயமா இருக்கு. பர்ஸ்ட் நைட்ல பயம் இருக்க கூடாதுடி, வேற இருக்கணும்.

வா பெட்ல போய் உட்கார்ந்து பால குடிச்சுட்டு தெம்பா என்ன இருக்கணும் என்ன இருக்க கூடாதுன்னு மாமா உனக்கு எல்லாம் சொல்லி தரேன்”, என்றவாறு கட்டிலை நோக்கி செல்ல,

மித்ராவிற்கு பயம், வெட்கம், கோபம் என அனைத்து உணர்வும் போட்டி போட ‘இவன்கிட்ட பேசுனா நம்ம மனசை மாத்தினாலும் மாத்திடுவான். பேசாம தூக்கம் வருதுன்னு சொல்லிட்டு படுத்துட வேண்டியதுதான்’ என்று தனக்குள் நினைத்து கொண்டவள் அவன் அருகில் அமராமல் பெட்டின் அடுத்த புறம் சென்று “எனக்கு பால் எல்லாம் வேண்டாம் தூக்கம் வருது. நீங்க குடிச்சுட்டு தூங்குங்க. குட் நைட்” என்றுவிட்டு படுத்துவிட,

ரஞ்சனுக்கு குடித்து கொண்டிருந்த பால் புரை ஏற இறும துவங்கினான். மித்ராவோ’அவன் என்ன குரங்கு வித்தை காட்டினாலும் கண்ணை திறக்காத மித்து. அவன் சரியான கள்ளன்’ என்று தனக்குள் சொல்லி கொண்டு கண்களை இறுக மூடி கொண்டவள் அசையாமல் அப்படியே படுத்திருக்க,

‘என்ன இவ தூங்க போறேன்னு சொல்றா’ என்று யோசனையாக பார்த்தவன் பின் அவள் முகத்தை பார்க்க, பெண்ணவளின் மனதை அறிந்தவன் போல் கொடுப்புக்குள் சிரித்து லைட்டை அணைத்து இரவு விளக்கை போட்டுவிட்டு வந்து படுக்க, மித்ராவிற்கு அப்போதுதான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

உடனே அவள் புடவை முந்தானை இழுபடுவது தெரிய, தான்தான் சேரியில் படுத்திருக்கிறோமோ என்று அசைந்து அசைந்து படுத்து கொண்டிருந்தவள் முதுகில் சூடான மூச்சு காற்று பட,

தன் மூச்சை இழுத்து பிடித்தவள் ‘ஆத்தி சேட்டையை ஆரம்பிச்சுட்டானோ’ என்று பயந்தவாறு தலையை மட்டும் திருப்பி பார்த்தவளை கண்டு குறும்பு கண்ணனாக சிரித்தவன் அவளை பார்த்து கண்ணடிக்க,

இவளோ கடுப்பாக “இங்க பாருங்க நிரன். நான் உங்க மேல கோபத்துல இருக்கேன். மரியாதையா புடவையை விடுங்க”,

“ஏது…… மரியாதையா யாரு கேட்டா இப்போ அதை. எனக்கு அது எல்லாம் வேண்டாம். வேறதான் வேணும்………” என்று ஹஸ்கி குரலில் கூறியவாறு அவளை மேலும் நெருங்கி படுக்க,

பயந்து போனவள் படக்கென எழ, ஆணவன் கையோடு அவள் அணிந்திருந்த புடவை சென்றுவிட, “ஆஆ……” என்று கத்தியவள் கைகளை மார்புக்கு குறுக்காக வைத்து மறைத்து “நிரன்….”என்று கத்த,

அதே சமயம் “வாவ்……” என்று கத்தியிருந்தான் ரஞ்சன்.

“நிரன் என்னை கடுப்பேத்தாதீங்க. நான் உங்க மேல செம்ம காண்டுல இருக்கேன் புடவைய……” என்றவள் மேலும் பேச வருவதற்குள் ரஞ்சன் புடவையை இழுக்க, மொத்த புடவையும் அவன் கையோடு சென்றுவிட,

“ஆஆஆஆ……” என்று கத்தியவள் சுழன்று சுவற்றில் மோதி நின்றாள். “நிரன்….. அங்கேயே நில்லு. எதுக்கு இப்போ பக்கத்துல வர்ற. நில்லு….. நில்லுன்னு சொல்றேன்ல….. நிரன்” என்று சொல்லிவாறே அந்த அறையை சுற்றி ஓட துவங்கினாள்.

அவனோ கூலாக சேலையை கைகளில் சுத்தியவாறு அவள் பின்னோடு நடக்க, ஓடி ஓடி சோர்ந்து போனவள் மூச்சு வாங்க பெட்டில் அமர,

“ஹப்பாடா டயர்ட் ஆகிட்டியா இதுக்குதான் ஐயா வெயிட்டிங்” என்றவாறே தாவி அவள் மேல் குதித்தான்.

“அம்மா……” என்ற கத்தலோடு மித்ரா கீழே இருக்க, அவள் மேல் ஜம்மென்று படுத்திருந்தான் ரஞ்சன்.

“நிரன்…. என்ன பண்ற. எந்திரி முதல்ல. மூச்சு முட்டுது”

“என்ன லட்டு பேபி, கல்யாணத்துக்கு முன்னாடி நீ கோபமா இருந்தாலே உன்னை சும்மா விட மாட்டேன். இப்போ கல்யாணம் ஆகி லைசன்ஸ் வேற கிடைச்சிருச்சு. இப்போ போய் சும்மா இருப்பனா என்னடி பேசற” என்றவன் பார்வை அவள் இளமை வனப்புகளில் ரசனையாக பதிந்து மீண்டது.

ஆணவனின் பார்வை பெண்ணவளுள் குறு குறுப்பை ஏற்படுத்த தன் கரம் கொண்டு அவன் கண்களை மூட, அவள் கையை மென்மையாக விலக்கியவன் “சும்மா சொல்லக்கூடாதுடி என் மாமனார் எனக்காகவே பாலும் நெய்யும் குடுத்து செம்மையா வளர்த்து விட்ருக்காரு உன்னைய” என்று கண்ணடித்து சொல்ல,

முகம் சிவந்தவள் “ச்சி…. நிரன் உன் பேச்சு, பார்வை எதுவும் சரியில்ல, ஒழுங்கா எந்திரி நான் உன் மேல கோபமா இருக்…..” என்று மேலும் அவள் மேலும் பேச போக,

ஆணவன் கரங்கள் அவளுள் தன் வேலையை துவங்கியது. அதில் தடுமாறியவள் “நி….. நி…. நிர……”

“ம்ம்ம்ம்…….”

“நா…. நா….. நான்……கோ…. கோ….”

“ஷ்……லட்டு கோவமா இருக்க நேரமாடி இது……” என்று கர கரப்பான குரலில் அவள் காது மடலை மென்மையாக கடித்து கேட்க,

அதில் உடல் சிலிர்த்தவள் “நிரன்…. நீ….”

“உனக்கும் எனக்கும் இடைல எதாவது பிரச்சனையா”

“இல்ல….”

“உனக்கு பிடிக்காத எதாவது நான் செஞ்சேனா……”

“ஆமா…. என்னோட அண்ணா……”

“ஷ்….. அண்ணா…. ஆட்டு குட்டி எல்லாம் வேண்டாம். இதுக்கப்புறமான வாழ்க்கைல நாம மட்டும்தான் இருப்போம். நல்லதா இருந்தாலும் கெட்டதா இருந்தாலும் நமக்குள்ள மட்டும்தான்.
நமக்குள்ள அம்மா அப்பாக்கூட மூணாவது நபர்தான். இப்போ சொல்லு நமக்குள்ள எதாவது பிரச்சனை இருக்கா….. நமக்குள்ள மன கசப்புகள் இருக்கா….”

“இல்லதான்….. ஆனா……” என்றவள் கண்களை ஆழ்ந்து பார்த்தவன் “உன் அண்ணனை நம்பலைனா என் தங்கச்சிய அவனுக்கு கல்யாணம் செய்து குடுத்திருக்க மாட்டேன். ஆனாலும் எங்களுக்குள்ள தனி கணக்கு ஒன்னு இருக்கு. அதை நாங்களே பார்த்துக்கறோம்.

நீ இந்த பிரச்சினைய உன்னோட இந்த குட்டி மண்டைல ஏத்திக்காம, இந்த மாமான எப்படி மயக்கி முந்தாணில முடிஞ்சுக்கலாம்னு மட்டும் யோசிடி” என்றவாறு அவள் நெற்றியில் முத்தமிட்டவன் இப்போது கண்களால் அவளிடம் அனுமதி கேட்க,

அவளோ அவனை புரியாமல் பார்த்து “என்ன நிரன் அன்னைக்கு கடைல கொஞ்ச நேரம் என் அண்ணன் கூட ஹாசிய விட அவளோ யோசிச்சீங்க. இப்போ கல்யாணம் செய்து குடுத்திருக்கீங்க. இப்போ தனி கணக்குன்னு……..”

“அடியே என் லட்டு பேபி அதையெல்லாம் யோசிக்கற நேரமாடி இது” என்றவன் கண்களால் அவளிடம் கெஞ்ச,

அவளோ வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்ற நினைத்து “எனக்கு தூக்கம் வருது” என்று பாவம் போல் முகத்தை வைத்து கொண்டு சொல்ல,

ரஞ்சன் முகம் பியூஸ் போன பல்பாக மாறி போனது. உடனே அவள் மீது இருந்து எழுந்தவன் தள்ளி அமர்ந்து ஆழ்ந்த மூச்சை இழுத்து தன்னை சமன் செய்து கொள்ள முயற்சிக்க,

அவனவளால் மட்டுமே எழுப்பப்படும் உணர்வுகள் அவனுள் பேயாட்டம் போட, தன்னை கட்டுப்படுத்தவும் முடியாமல், தூங்க வேண்டும் என்பவளை கட்டாயப்படுத்தவும் முடியாமல் திணறியவன் “சரி நீ தூங்கு” என்றுவிட்டு பால்கனியை நோக்கி நடக்க துவங்கினான்.

இரண்டு எட்டு எடுத்து வைத்தவனை அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் அவன் இடையை வளைத்து பிடித்தது ஒரு மென் கரம்,

“என்ன நிரன் அவ்வளவுதானா” என்று வெட்கம் நிறைந்த குரலில் கேட்டவளை, குழப்பமாக பார்த்தவன் பின்தான் அவள் முகத்தில் இருந்த குறும்பை கண்டான்.

“ஹேய்……கள்ளி….. உன்னை….” என்று தன் கரங்களில் அவளை அள்ளி கொண்டவன் ஒரு சுற்று சுற்றி அவளுடன் சேர்ந்து பெட்டில் விழுந்தான்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள, மித்ராவோ “இப்படியே பார்த்துட்டுதான் இருக்க போறீங்கன்னா. தள்ளி உட்கார்ந்து பாருங்க. நான் தூங்கறேன்” என்றவாறு கொட்டாவி விட, அவள் இடையை கிள்ளி துள்ள விட்டவன்,

“இப்போ தூக்கம் போயிடுச்சா…. இன்னைக்கு என்ன நாள். சும்மா தூக்கம் வருது…தூக்கம் வருதுன்னு சொல்லிட்டு இருக்க. சரியான கல் நெஞ்சக்காரிடி” என்றவன் கரங்கள் அவள் உடலில் தன் தேடுதலை துவங்க,

பெண்ணவள் வெட்கத்தில் சிணுங்க, அந்த சிறுங்கார சிணுங்கல் அவனுள் ஏதேதோ உணர்வுகளை தோற்றுவிக்க, அவள் மென் இதழில் முரட்டுதனமாக தன் இதழை பதித்தான்.

வெகுநேரம் நடந்த முத்த யுத்தத்தில் பெண்ணவள் மூச்சு காற்றுக்கு திணற, அவளிடம் இருந்து பிரிந்தவன் இதழ் அடுத்ததாக கழுத்தை நோக்கி செல்ல,

பெண்ணவள் நாணத்தில் கண்களை இறுக மூடி கொள்ள, சங்கு கழுத்தில் மென் முத்தத்தை பதித்தவன் அடுத்த தேடுதலை துவங்க,

பெண்ணவள் உடல் பயத்தாலோ அல்லது உணர்வுகளின் தாக்கத்தாலோ நடுங்க துவங்கியது. அதை உணர்ந்தவன் தன் மென்மையான செய்கையால் அவளது நடுக்கத்தை குறைத்து,

இரண்டு வருட காதலின் ஏக்கத்தையும் தேடலையும் அவளிடம் காட்ட ஆரம்பிக்க, அங்கு அழகான இல்லறம் அரங்கேற துவங்கியது.

அடுத்த நாள் காலை ஹர்ஷா எழுந்து பார்க்க, ஹாசி அறையில் இல்லை. ‘எங்க போனா இவ’ என்று யோசிக்கும்போதே பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்க, மீண்டும் சோபாவில் படுத்தவன் கண்களை மூடி கொண்டான்.

வெளியே எட்டி பார்த்த ஹாசி ஹர்ஷா தூங்கி கொண்டிருப்பதை கண்டு நிம்மதி மூச்சுவிட்டவள் ’ஹப்பாடா நல்லவேளை தூங்கறான். அவன் எந்திரிக்கறதுக்குள்ள புடவையை கட்டிடலாம். உள்ள ஈரமா இருக்கு’என்று நினைத்தவள் வெளியே வந்து புடவை கட்ட துவங்கினாள்.

சற்று நேரம் கண்களை மூடி இருந்தவன் ‘இவ்ளோ நேரம் என்ன செய்யறா வளையல் சத்தம் கேட்டுட்டே இருக்கு’ என்று நினைத்தவன் ஒரு கண்ணை மட்டும் லேசாக திறக்க, விக்கித்து போனான்.

‘ஆத்தி என்ன இவ நம்ம முன்னாடி இப்படி அறையும் குறையுமா நிக்கறதையே வேலையா வச்சிருக்கா’ என்று நினைத்தாலும் கண்களை உடனே மூடி கொண்டு ‘டேய் நீ நல்லவன்…. வல்லவன்னு நம்பிதான் இந்த ரூம்குள்ள புடவை கட்டிட்டு இருக்கா. கோக்கு மாக்கு வேலை பார்க்காத’ என்றொரு மனம் எச்சரிக்க,

‘எதே நல்லவனா……டேய் பொண்டாட்டிகிட்ட நல்லவன் பேர் வாங்கி என்ன டா பண்ண போற, என்ன நினைச்சு முதல்ல நீ கல்யாணம் பண்ணுன அதை யோசி.

அவதான் உன் வாழ்க்கைன்னு முடிவு பண்ணிதானே தாலிகட்டுன அப்புறம் என்ன நல்லவன் கெட்டவன் அதெல்லாம் தப்பு இல்ல. உன் பொண்டாட்டிதான் பார்க்கலாம் பாரு’ என்றொரு மனம் சொல்ல,

‘டேய் வேணாம் சொன்னா கேளு. நேத்து நைட்டுதான் அவளோ பேசுனா. அவளோட விருப்பம் என்னன்னு கேட்டு…. தெரிஞ்சு……’

‘ஆமா சொல்ல வந்துட்டாரு பெரிய பீட்டரு. புடிஞ்சுக்கணும் அறிஞ்சுக்கணும்னு. டேய் ஹர்ஷா அவன் சொல்றதை கேட்டுட்டு இருந்தா நீ இந்த ஜென்மத்துல கன்னி கழிய மாட்ட, உன் பொண்டாட்டிதானே அவ. உன்னோட உரிமைய காட்டு, சும்மா பேசணும், பழகணும் புரிஞ்சுக்கணும், அறிஞ்சுக்கணும்னு நினைக்கறதுக்கு அவ ஒன்னும் உன்னோட லவ்வர் இல்ல,

பொண்டாட்டி…. பொண்டாட்டிய எப்படி ஹேண்டில் பண்ணனும்னு உனக்கு தெரியாதா’

‘டேய் ஹர்ஷா அவன் சொல்றதை கேட்காத. மோசமான பையன் அவன். ஏற்கனவே நீ சொன்னதுனாலதான் கல்யாணம் வரைக்கும் வந்துருக்குன்னு சொல்றா, உன்னோட காதலை வேற அவகிட்ட சொல்லி இருக்க,

உனக்கும் டைம் வேணும்னு முடிவு பண்ணுனியே அந்த முடிவு என்ன ஆச்சு?’ என்று இரு மனமும் மாத்தி மாத்தி பேசி கொண்டிருக்க, கடுப்பானவன் “ஹேய் ச்சூ….. போங்க ரெண்டு பேரும் நானே ஏற்கனவே குழப்பத்துல இருக்கேன் இதுல நீங்க வேற வந்து நொய் நொய்ன்னுட்டு போங்கடா அங்கிட்டு. நான் என் பொண்டாட்டிய பார்க்க போறேன்.

அவளை அப்படி பார்க்கறதுக்கான எல்லா உரிமையும் எனக்கு இருக்கு. வந்துட்டானுங்க லூசு பயலுக” என்றுவிட்டு ஆர்வமாக கண்ணை திறக்க, அவள் நின்ற இடம் வெறுமையாக இருந்தது.

உடனே அடித்து பிடித்து எழுந்தவன் அறையை சுற்றி முற்றி பார்க்க, கதவு திறந்து இருந்தது. அதை வைத்தே அவள் வெளியில் சென்றுவிட்டாள் என்பதை புரிந்து கொண்டவன்’மானங்கெட்ட மனசாட்சிகளா உங்களை இப்போ வாங்க. வந்து அட்வைஸ் பண்ணுங்கன்னு நான் கேட்டேன்னா….. நான் கேட்டேனாடா.

தேவையில்லாம வந்து பேசி பேசி இப்படி காலைல எனக்கு கிடைக்க இருந்த தெய்வீக தரிசனத்தை கெடுத்து விட்டுட்டீங்களேடா பாவிங்களா ஏன்டா இப்படி பண்ணுனீங்க? அப்படி நான் உங்களுக்கு என்னடா பாவம் பண்ணுனேன்? இனிமே அட்வைஸ் பண்றேன் கருத்து சொல்றேன்னு முன்னாடி வாங்க. சுடு தண்ணி புடிச்சு மூஞ்சுல ஊத்தறேன்” என்றுவிட்டு தானும் குளிக்க சென்றான்.

‘இவே என்ன நம்ம மேல சுடு தண்ணி ஊத்தரேன்னு சொல்றான். அவன் மேல அவனே கொதிக்கற தண்ணிய ஊத்திக்குவானா என்ன? ஒரு சீன் போன கடுப்புல அவன்தான் நாமங்கற விஷயத்தையே மறந்துட்டு உளறிட்டு போறான் பாரு.

இவன் லூசா நாம லூசா. சரியான பைத்தியக்கார பயலுக கூட சேர்ந்துட்டு நாம படற பாடு. சரி விடு பய எங்க போயிட போறான். எப்படியும் நம்மகிட்டதான் வருவான் அப்போ பேசிக்கலாம்’ என்றுவிட்டு இரு மனசாட்சியும் சென்று மறைந்தது.

இந்த ஹர்ஷா பய பார்த்த விஷயம் ஹாசிக்கு தெரிஞ்சா அவன் நிலமை….. அடுத்து என்ன நடக்கும் என்பதை அடுத்தடுத்த எபியில் பார்க்கலாம்…