அத்தியாயம் -35

அழகான அலங்காரம் எதுவும் இல்லாமல் ரூம் ஸ்ப்ரே உதவியுடன் மல்லிகையின் மணம் நிறைந்திருந்தது அந்த அறையில். பால்கனியில் நின்று வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான் ஹர்ஷா.

பால் சொம்புடன் உள்ளே வந்த ஹாசி ஆணவனை தேட, அவனை காணவில்லை ‘எங்க போய் தொலைஞ்சான்’ என்று எண்ணியவாறு கண்களை சூழலவிட்டவள் பால்கனியில் நின்றிருந்தவனை கண்டுகொண்டாள்.

வேகமாக அவன் அருகில் சென்று நின்றவள் அவனை பார்க்க, அவனோ ஆழ்ந்த யோசனையில் இருந்தான்.

“ம்கூம்…..” என்று கனைத்து தன்னை பார்க்க வைக்க முயற்சிக்க,

அவனோ அவளை கண்டு கொள்ளாமல் நிலவையே பார்த்து கொண்டிருந்தான். அதில் கடுப்பானவள் “என்ன ஹர்ஷா விட்டுட்டு போன காதலி நியாபகமா” என்று நக்கலாக கேட்க,

புருவம் சுருக்கி அவளை பார்த்தவன் “என்ன?……” என்க,

அவளோ “இல்ல….. ரொம்ப பலமான யோசனையா இருக்கே. உன் பழைய அதான்ப்பா உன் விட்டுட்டு போன காதலி நியாபகமான்னு கேட்டேன்” என்றவளை ஆழ்ந்து பார்த்தவன் ‘இல்லை…..’ என்பது போல் மறுப்பாக தலையசைத்து,

“என் புது பொண்டாட்டி அதான்ப்பா வாழ்க்கை முழுக்க கூட வாழ போற பொண்ணோட யோசனை” என்று மெல்லிய சிரிப்புடன் சொல்ல,

பல்லை கடித்தவள் “என்னை பத்தி யோசிக்க என்ன இருக்கு” என்றாள் பார்வையை திருப்பி கொண்டு,

“நிறைய இருக்கு ஹாசி. நம்மை பத்தி யோசிக்க” என்று சொன்னவன் ‘நம்மை’ என்பதில் அழுத்தம் கொடுத்து சொல்ல,

அவனை பார்த்து வேகமாக திரும்பியவள் “ஹர்ஷா நீ பேசறது சரியில்ல……” என்றாள்.

“என்ன தப்பா பேசிட்டேன்”

“நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி என்ன சொன்ன. இப்போ என்ன பேசற? மாத்தி மாத்தி பேசாத. உள்ள வா உன்கிட்ட பேசணும்” என்றுவிட்டு அறையின் உள்ளே சென்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள்.

ஹர்ஷாவோ பெரு மூச்சுடன் உள்ளே சென்று அவள் அருகில் அமர போக,

உடனே எழுந்து கொண்டவள் “நீ இங்க உட்காரு. நான் பெட்ல உட்காருறேன்” என்றுவிட்டு சென்றவள் அவனை அழுத்தமாக பார்த்தவாறு “ஏன்?” என்ற ஒரே ஒரு கேள்விதான் கேட்டாள்.

ஆனால் அதற்கு பதில் சொல்ல முடியாமல் முதலில் தவித்தவன் பின் ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டு “ஏன்னா நீ என் மனைவி. நான் உன் கணவன். நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு”

“என்ன பேசற? கணவன், மனைவி…. கல்யாணம்னு உளறிட்டு இருக்க”

“உளறலா….. நமக்கு கல்யாணம் ஆனது உண்மைதானே….”

‘ஹாசி மனத்துக்குள் பல்லை கடித்து கொண்டாள். ஆமான்டா….. ஆமா….. நமக்கு கல்யாணம் ஆகிடுச்சுதான். ஆனா அதை என்னால சந்தோஷமா ஏத்துக்க முடியல.

எவ்வளவு ஆசை எவ்வளவு கனவு தெரியுமா? நாம ரெண்டு பேரு மட்டும் தனிமைல இருக்க கூடிய இந்த தருணத்திற்கு எவ்வளவு ஆசையா காத்திருந்தேன். ஆனா இப்போ இந்த நிமிஷத்தை என்னால ஏத்துக்கவே முடியல. உன்னை பார்க்க பார்க்க எனக்கு கோபமா வருது. இதுக்கு கண்டிப்பா நீ பதில் சொல்லியே ஆகணும்’ என்று கருவி கொண்டவள் அவனை உக்கிரமாக பார்த்து முறைக்க,

“இங்க பாரு ஹாசி. நமக்கு கல்யாணம் முடிஞ்சுருச்சு”

“பேசி…. பேசி…. நீதான் முடிச்சிருக்கேன்னு சொல்லு”

“சரி. நான்தான் முடிச்சுருக்கேன். எப்படியோ முடிஞ்சுருச்சு. நமக்கு கல்யாணம் ஆனது உண்மைதானே. அதை யாராலயும் மாத்த முடியாதுதானே”

“நீ ஒன்னும் என்னை ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணல. உன்னோட சுயநலத்துக்கு என்னை யூஸ் பண்ணிக்கிட்ட. அதுவும் ஒரு வருஷத்துக்கு…கண்டிப்பா நாம நினைச்சா மாத்த முடியும்.”

“நாம நினைச்சாதானே அதுமட்டும் இல்லாம என்னோட சுய நலம்னு மட்டும் சொல்லாத. உனக்கும் இதுல இலாபம்னு நீ சொன்னதா எனக்கு நியாபகம். அதோட நாம வாழ போறது…. வாழ்க்கை முழுக்க ஒரு வருஷம் ரெண்டு வருஷம் இல்ல”.

“என்ன?…வாழ்க்கை முழுக்கவா…..”

“ஆமா”

“முடியாது. இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்”

“ஏன் ஒத்துக்க மாட்ட” என்றவனை நக்கலாக பார்த்தவள் “என்ன பேசற. நான் வளர்ந்த கல்ச்சர் என்ன. என்னால எப்படி வாழ்க்கை முழுக்க ஒரே ஆள் கூட வாழ முடியும்”

“ஹாசி. நீ பாரின்ல இருந்தாலும். தமிழ் கல்ச்சர் மறக்காமதான் இருக்கன்னு எனக்கு தெரியும். நீ இங்க வந்ததுல இருந்து நான் கவனிச்சுட்டுதானே இருக்கேன். சும்மா என்னை கடுப்பேத்தாத. ஏன் அமெரிக்காவவிட்டு இங்க இருக்க முடியாதுன்னு நினைக்கறியா.

எல்லாத்துக்குமே நம்ம மனசுதான் ஹாசி காரணம். அங்க விட, இங்க எல்லாமே இருக்கு. நீ அங்க எப்படி இருந்தியோ அப்படியே இங்கயும் இருக்கலாம். யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. மீறி எது சொன்னாலும் நான் பார்த்துக்கறேன்”.

“வெயிட்…. வெயிட்….. நான் எப்படி இருக்கணும்னு அனுமதி குடுக்க நீ யாரு. யாரு என்னை என்ன சொல்லுவாங்க. நீ ஏன் ஹர்ஷா புதுசா பேசற. நான் வந்ததுல இருந்து நீ இப்படி எல்லாம் பேசுனது இல்லையே”

“ஏன் இப்படி பேசறன்னா, நீ என் பொண்டாட்டி அதான் இப்படி பேசறேன்”.

“ஜஸ்ட் ஸ்டாப் இட் ஹர்ஷா. நீ அந்த வார்த்தையை சொன்னா எனக்கு கோபம் கோபமா வருது. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ.

நீ சொல்ற எதையும் என்னால ஒத்துக்க முடியாது…… இதெல்லாம் சரிப்பட்டு வரும்னு எனக்கு தோணல.

அதுபோகட்டும் அது என்ன இடைல நான் தமிழ் கல்ச்சர மறக்கலைன்னு சொல்ற. உனக்கு நல்லா தெரியுமோ!…. எதை வச்சி இப்படி சொல்ற. என்னோட நடவடிக்கை எதுவும் அப்படி இருந்தது இல்லையே. ஏன்னா நீயே பல தடவை சொல்லியிருக்க. பாரின்ல இருந்த பொண்ணு நீ. இதை எல்லாம் பெருசா எடுத்துக்காதன்னு” என்றவள் அவனை கூர்ந்து பார்க்க,

இருவருக்குமே அன்று ஒருநாள் இரவில் மொட்டை மாடியில் நடந்த இதழ் ஒற்றல் நினைவு வந்தது. ஆனால் அதன்பின் அவன் பேசியதை எண்ணி ஹாசியின் முகம் உக்கிரமாக மாறியது என்றால் ஹர்ஷாவோ மனதுள் ‘ஆத்தி பாக்கறாளே……. என் வாய்தான் எனக்கு எதிரி. இப்படி நிக்க வச்சி கேள்வி கேட்பன்னு தெரிஞ்சுருந்தா, நான் ஏன் அப்படி எல்லாம் பேசியிருக்க போறேன். இப்போ என்ன சொல்லி இவளை சமாளிக்கறது’ என்று மனதில் புலம்பி,

பின் சமாளிக்கும் பொருட்டு அதைப்பற்றி பேசாமல் பேச்சை மாற்றும் விதமாக “ஹாசி தேவையில்லாம பேசாத. முடிஞ்ச விஷயங்கள் முடிஞ்சதாகவே இருக்கட்டும். இனி நம்ம வாழ்க்கை நல்லபடியா இருக்கணும்னு நினைக்கறேன்”

“நீ நினைச்சா போதுமா. நான் நினைக்க வேண்டாமா?”

“ஏன் இப்படி சொல்ற நீயும் நினை. ஒருவேலை நான் அர்ச்சனாவ லவ் பண்ணது உனக்கு கஷ்டமா இருக்கோ. அது முடிஞ்சு போன விஷயம்”.

“எனக்கு ஏன் கஷ்டமா இருக்க போகுது. நீ எனக்கு யாரு? நான் கஷ்டப்பட, அப்படியே அது காரணமா இருந்தாலும் நீ காதலிச்சது உண்மைதானே அது இல்லைன்னு ஆகாதுல்ல” ,

அவள் பதிலில் நெஞ்சில் கை வைத்தவன் “பாரு ஹாசி டிபிக்கல் இந்தியன் பொண்டாட்டிங்க மாதிரி யோசிக்காத. நீ பாரின்ல வளர்ந்த பொண்ணு அதுக்கு ஏத்த போல பிராட் மைண்டடா இரு” என்றவனை கொலைவெறியோடு முறைக்க,

‘இவ ஏன் இப்படி பாக்குறா…’ என்றவன் விழிக்க,

அவன் அருகில் வந்தவள் “எவ்ளோ சீப் மெண்டாலிட்டி இருக்க ஆளுடா நீ. உனக்கு தேவைன்னா நான் பாரின் பொண்ணு மாதிரி திங்க் பண்ணனும். இல்லைனா இங்க இருக்க கல்ச்சர பாலோ பண்ணி தமிழ் பொண்ணா புருஷன் குடும்பம் குழந்தைன்னு இருக்கணும். அப்படிதானே?

எப்படி இந்தியன் ஆம்பளைங்க எல்லாரும் இப்படி இருக்கீங்க.? கல்யாணம் ஆன உடனே வர்ற பொண்ண உங்க இஷ்டத்துக்கு ஆட்டி படைக்கணுங்கற ஆணத்திக்க உணர்வு?

ச்ச…..அதான் எனக்கு இந்த சிஸ்டமே பிடிக்கறது இல்ல. இங்க இருக்க ஆண்களையும் பிடிக்கறது இல்ல. நேரத்துக்கு நேரம் மாறுற குணம்.

எனக்கு இங்க இருக்க பிடிக்கல. ஒரு வருஷம் இல்ல. கூடிய சீக்கிரமே நான் அமெரிக்கா போயிடுவேன். என்னோட வேலை கிட்டத்தட்ட முடிய போற கண்டிஷன். அதை முடிச்சுட்டா நான்……ஷ்ஷ்ஷ்….” என்று கையில் பிளைன் பறப்பது போல் சைகை செய்ய,

அதிர்ந்து போன ஹர்ஷா “ஹாசி என்ன பேசற. அப்போ நம்ம கல்யாணம். நம்ம வாழ்க்கை”

“நீ சொன்ன மாதிரி டைவஸ்தான்”

“நோ…. இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன். கல்யாணம்னா உனக்கு விளையாட்டா போச்சா. கொஞ்சம் யோசிச்சு பேசு.

இதுல யோசிக்க என்ன இருக்கு. எனக்கு பிடிச்சதுதான் செய்வேன். என்னை யாராலயும் கண்ட்ரோல் பண்ண முடியாது. என்கிட்ட கதை அளக்கறது இருக்கட்டும். உன்னோட அந்த ரெண்டு வருஷ ஆத்மார்த்தமான காதல் என்ன ஆச்சு? திடீர்னு வாழ்க்கை முழுக்க நீதான்னு சொல்ற” என்க,

“ஹாசி புரிஞ்சுக்கோ. இறந்த காலத்தை நினைச்சு எதிர்காலத்தை அதுவும் பெரியவங்க எடுத்த முடிவை பாதியோட முடிஞ்சு போக, நான் விட மாட்டேன். உன் கழுத்துல தாலி கட்டும்போதே உனக்கு உண்மையா இருக்கணும், என் வாழ்க்கைல உன்னை தவிர வேற எந்த பொண்ணுக்கும் இடம் இல்லைன்னு முடிவு பண்ணிட்டுதான் கட்டினேன்.

“ஹோ……துறை எனக்கு வாழ்க்கை பிச்சை போடறீங்க….. அப்படிதானே”

“ச்ச….. ச்ச….. ஏன் ஹாசி இப்படி எல்லாம் பேசற. நாம பிரிஞ்சா நம்ம ரெண்டு பேமிலி நிலைமை என்ன ஆகும்னு யோசி. நீ என்கூட இல்லாம உங்க வீட்டுக்கு போனா மித்து நிலைமை என்ன ஆகும்னு…..”

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது. மத்தவங்களுக்காக பொண்டாட்டிய விலக்கி வைக்கற ஆளு என் அண்ணன் இல்ல”.

“ஹாசி நாம ஒன்னா இருக்கறதுல்ல உனக்கு என்ன பிரச்சினை”

“ஏன்னா எனக்கு உன்னை பிடிக்கல”

ஹாசி அப்படி சொன்னவுடன் ஹர்ஷாவுக்கு கோபம் அதிகமாக “என்னை பிடிக்கலன்னா வேற யாரை பிடிக்கும் அந்த குண்டு கார்த்தியா இல்ல அந்த வெள்ள எலி ஒலி வாங்கியா”

“அதை உன்கிட்ட சொல்லணும்னு அவசியம் இல்ல” என்றவளை நெருங்கி சென்று அவன் மூச்சு காற்று அவள் முகத்தில் படும் தூரத்தில் நின்றவன் “என்கிட்ட மட்டும்தான் இனி நீ எதையும் ஷேர் பண்ண முடியும் ஹாசி”

“அப்படி ஒன்னும் அவசியம் இல்ல. நீ ஏன் மாத்தி மாத்தி பேசற. முதல்ல தள்ளி நில்லு” என்று அவன் மார்பில் கை வைத்து தள்ள,

அவள் கை மீது தன் கையை வைத்தவன் “இல்ல ஹாசி. நானும் கல்யாணத்தை சாதாரணமாதான் நினைச்சிட்டேன். ஆனா நான் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னவுடன் வீட்டில் இருக்கவங்க முகத்துல வந்த சந்தோஷத்தை பார்க்கும்போது ஏதோ தப்பு பண்ற பீல். என்னை உறுதித்திக்கிட்டே இருந்துச்சு. விட்டுட்டு போன ஒருத்தருக்காக உன் வாழ்க்கையும் ஏன் அளிக்கணும்னு பல தடவை என்னை நானே கேட்டுக்கிட்டேன்.

ப்ளீஸ் ஹாசி இதுக்கு பேரு வாழ்க்கை பிச்சைன்னு சொல்லாத. பழசை எல்லாம் மறந்து உன்னோட வாழனுங்கற முடிவ, நான் தெளிவா எடுத்த அப்புறம்தான் உன் கழுத்துல தாலியே கட்டினேன்.

எனக்கு புரியுது இவ்வளவு நாளும் நாம நல்ல பிரண்ட்சாதான் இருந்தோம். உடனே என்னை ஹஸ்பண்டா உன்னால ஏத்துக்க முடியாதுன்னும் எனக்கு தெரியும்.

உனக்கும் டைம் வேணும். எனக்கும் டைம் வேணும். இப்போவே எந்த முடிவும் எடுக்க வேண்டாம். இன்னும் நாள் இருக்கு. பொறுமையா எல்லாரையும் பத்தி யோசிச்சி ஒரு முடிவெடு” என்றுவிட்டு பெட்டின் ஒரு ஓரத்தில் சென்று படுத்து கொள்ள,

அவனையே வெறித்து பார்த்து கொண்டிருந்தவள் கண்கள் கலங்கியது.
‘இது எதுவும் என் மேல இருக்க காதலால பேசல, எல்லாம் கடமை….. தாலி கட்டியாச்சுங்கற கடமை அதானே உன்னை இப்படி பேச வைக்குது’ என்று நினைத்தவள் இதழில் கசப்பான புன்னகை தோன்றி மறைந்தது.

பின் உறுதியான குரலில் “என்னால உன்னோட வாழ முடியாது” பிடிவாதமாக கூற,

படுத்தவாறே அவளை திரும்பி பார்த்தவனுக்கு ஏனோ அப்போது அவளை பார்க்க பிடிவாதக்கார குழந்தையை பார்ப்பது போல் இருக்க, மென்மையாக சிரித்தவன் “சரி படுத்து தூங்கு. நாளைக்கு உங்க வீட்டுக்கு விருந்துக்கு போகணும். ஏற்கனவே டைம் ஆச்சு” என்றுவிட்டு கண்களை மூட,

அங்கிருந்த சோபாவில் தொப்பென்று அமர்ந்தவள் அவனையே பார்த்து கொண்டிருந்தாள் ‘எனக்கு இந்த உலகில் வாழ, நீ மட்டும் போதும் என்று நினைத்திருந்தேன்.

கனவுகள் சுமந்த மனதை நொறுக்கிவிட்டு , இப்போது உன்னைவிட்டு வெகு தூரத்தில் இருக்க நினைப்பவளை உன் அருகில் இழுக்க நினைக்கிறாயே ஏன்?

நான் நெருங்க நினைக்கும் போது, நீ விலகி நின்றதும், நீ நெருங்க நினைக்கும்போது நான் விலகி நிற்பதும் விதியின் சதியா. அது விளையாட என் காதல்தான் கிடைத்ததா’ என்று கண்ணீரோடு பார்த்து கொண்டிருந்தவள் “சாரி ஹர்ஷா என்னால உன்னை ஏத்துக்க முடியல.

உயிருக்கு உயிரா நேசிச்ச நான் உனக்கு ஒரு ஆப்சனாதான் தெரிஞ்சுருக்கேன்னு நினைக்கும்போது எனக்கு எவ்வளவு அசிங்கமா இருக்கு தெரியுமா. என்னால கொஞ்சம் கூட இதை ஏத்துக்க முடியல. கண்டிப்பா நாம சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை.

இப்போ ஏதோ ஒரு எண்ணத்துல என்னை உன்கூட வச்சிக்கணும்னு நினைக்கற, கொஞ்சம் நாள் போனா அந்த எண்ணம் மாறிடும். கண்டிப்பா மாற வைப்பேன். நீ எனக்கு வேண்டாம்.

நான் உன்னை நினைச்சு உருகிட்டு இருந்த நேரத்துல நீ இன்னொருத்தி கூட சுத்திட்டு இருந்திருக்க, என் நினைப்பு உனக்கு கொஞ்சம் கூட இல்ல. காத்திருந்த என்னோட காதல் காத்திருப்பிலயே முடிஞ்சுடுச்சு’ என்று சோர்ந்து போய் சோபாவில் சாய்ந்தவள் அப்படியே உறங்கி போனாள்.

கண்கள் மூடி இருந்தாலும் அவள் என்ன செய்கிறாள் என்று காதுகளை அவள் பக்கமே வைத்திருந்த ஹர்ஷா ஆழ்ந்த அமைதியை உணர்ந்து திரும்பி பார்க்க,

ஹாசி அமர்ந்த வாக்கிலேயே உறங்கியிருந்தாள். அதை கண்டு அவள் அருகில் சென்றவன் “ஹாசி உன் முடிவை நமக்காக மாத்திக்கோ. இந்த கல்யாண பேச்சு ஆரம்பிச்சதுல இருந்து என்னோட பிரண்ட் ஹாசிய ரொம்ப மிஸ் பண்றேன்.

ஆனா இனி நீ என்னோட ப்ரண்ட் மட்டும் இல்ல. என்னோட மனைவி. நான் உன்னை மனைவியா ஏத்துக்க ஆரம்பிச்சுட்டேன்.நீயும் கூடிய சீக்கிரம் மாறுவன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு’ என்று மெதுவாக பேசியவன் அவளுக்கு போர்வையை போர்த்திவிட்டு மீண்டும் பெட்டில் வந்து படுத்து கொண்டான்.

காதலில் தோற்றாலும், திருமண பந்தத்தில் தோற்க கூடாது. பெரியவர்களின் சந்தோசத்திற்காக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஹர்ஷாவிற்கு மற்றவர் சந்தோஷம் மட்டும் திருமண வாழ்க்கைக்கு முக்கியம் இல்லை. காதலும் முக்கியம் என்று எப்போது புரிய போகிறது.

காதலின் வலியை தாங்கி நிற்கும் பெண்ணவள் வலியை போக்கி திருமண வாழ்வில் வெற்றி பெறுவானா ஹர்ஷா,

ஆணவனின் தவறை மன்னித்து அவனுடனான வாழ்க்கையை துவங்குவாளா ஹாசி, இல்லை உன் காதலும் போதும் என் வலியும் போதும் என்று அமெரிக்கா கிளம்பிவிடுவாளா பொருத்திருந்து பார்ப்போம் அடுத்தடுத்த எபியில்…….