Advertisement

 
“ஆனாலும் உன் கற்பனை ஓவர் கற்பனை”
 
“அப்போ அந்த மாதிரிலாம் வராதா…”
 
“வரும் ஆனா அதையெல்லாம் எப்படி கடந்து போகணும்ன்னு எங்களுக்கு தெரியும். எந்த இடத்துல என்ன இருக்கும்ன்னு ஒரளவுக்கு பழக்கம் உண்டு தானே”
 
“அப்போ புயல், சுனாமிலாம் வந்தா…”
 
“புயல் வரும், சுனாமிலாம் வந்ததில்லை…”
 
“புயல் வந்தா கப்பல் ஆடும்ல கவுந்துடுமோ… ஒரு வாட்ஸ்அப் வீடியோ பாத்தேன். பெரிய பெரிய அலையா வந்து கப்பல்குள்ள விழுகுது…”
 
“நல்லது எல்லாம் உன் கண்ணுக்கு தெரியவே தெரியாது போல”
“கப்பல்ல போறதுல என்ன நல்லது??”
 
“என்னோட ஒரு ட்ரிப் வர்றியா??”
 
“ஆத்தி நா வரல சாமி…”
 
“சும்மா வா வள்ளிக்கண்ணு… உன்னோட போகணும்ன்னு ஆசையா இருக்கு…”
 
“எனக்கு பயம் கப்பல் கவுந்துடா என்னா செய்ய??”
 
“அப்போ ரோடுல பஸ் கவிழாதா, டிரைன் தடம் புரளாதா, பிளைட் கீழே விழாதா…”
 
“எல்லாமே நடக்க தான் செய்யும். நம்பிக்கை வேணும், இந்த நிமிஷம் நிஜம் அதை நம்பணும். எதுவும் ஆகிடும்ன்னு நினைச்சுட்டே இருந்தா வாழ்க்கையை வாழ முடியாது… அதோட சுவாரசியமும் குறைஞ்சு போகும்…”
 
“நாலு மாசம் முன்னாடி எனக்கு கல்யாணம் நடக்கும்ன்னே எனக்கு தெரியாது. இதோ இப்போ நீ என் கூட இருக்க, இந்த நிமிஷம் நிஜம்…”
 
“உன்னை எனக்கு பிடிக்குமா பிடிக்காதுன்னு கூட நம்ம கல்யாணம் வரைக்கும் எனக்கு தெரியலை. ஆனா நாம சேர்ந்து வாழலையா…”
 
“இப்படி உன்னை கட்டிப்பிடிச்சி கிஸ் பண்ணிட்டு இருப்பேன்னு நினைச்சேனான்னு…” சொல்லிட்டே ஒவ்வொண்ணா செஞ்சேன். அவளோட உதடுகிட்ட போகவும் என்னை பிடிச்சி தள்ளிவிட்டுடா…
 
“இதுக்கு தான் இம்புட்டு அலப்பறையா கூட்டுனீங்களோ”
 
“வள்ளிக்கண்ணு” என்று சொல்லி அவளை இழுத்து என் மேல சாய்ச்சுக்கிட்டேன்.
 
“டூ யூ லவ் மீ…”
 
“சொல்லு…”
 
“என்ன சொல்லணும்??”
 
“சே எஸ் ஆர் நோ…”
 
“நோ…”
 
“வாட்??”
 
“நோன்னு சொன்னா நம்பிருவியலோ”
 
“எதுக்கு நீ எப்போ பார்த்தாலும் என்னை பதற வைக்குறே??”
 
“நா ஒண்ணும் உங்களை பதற வைக்கலை… எனக்கு எதுக்கு இந்த வீடியோ காமிச்சிய”
 
“ஏன் என்னாச்சு??”
 
“எனக்கு பயமாயிருக்கு?? நீங்க இந்த வேலைக்கு தான் போவியளா”
 
“என்ன பயம் உனக்கு??”
 
பதில் சொல்லாம என் மேல சாஞ்சுக்கிட்டா… மனசுக்கு என்னவோ செய்யுது. அவளுக்காக தான் கொஞ்சம் யோசியேன்னு மனசு சொல்லுது.
 
“கொஞ்சம் டைம் கொடு அப்புறம் மாத்திக்கறேன் வேற வேலைக்கு…”
 
என்னை நிமிர்ந்து பார்த்து நிஜமாவான்னு அந்த மச்சம் இருக்கற புருவத்தை தூக்கி கேக்குறா…
 
நான் அந்த மச்சது மேல முத்தம் வைச்சு ஆமான்னு தலையாட்டினேன். என் கன்னத்துல பச்சக்கன்னு ஒரு இச் அம்மாடியோவ் இது கனவா நினைவான்னு இருந்துச்சு.
 
ஐ லவ் தட் மொமென்ட் எனக்கு பிடிச்ச பொண்ணோட எனக்கு பிடிச்ச கடலை என்ஜாய் பண்ண மொமென்ட், இது போல நேர்லயும் ஒரு முறை ஒரே ஒரு முறை அவளை கூட்டிட்டு போகணும்ன்னு எனக்கு ஆசையா இருக்கு.
 
மை காட் பிளைட் இஸ் லேன்டிங் நான் இன்னும் பெல்ட் போடலை. ரொம்ப நேரமா அனவுன்ஸ்மென்ட் பண்ணிட்டு இருக்காங்க, நான் என் கனவுலேயே இருந்திட்டேன். ஓகே வீட்டுக்கு போய் அவளை பாக்குறேன்.
 
ஒரு காரை பிடிச்சு வீடு வந்து சேர்ந்தேன். காலிங்பெல் அடிக்க முன்னாடி அம்மாக்கு போன் பண்ணேன்.
 
“சொல்லுலே என்ன இந்த நேரத்துல போன் போட்டுக்கிட்டு இருக்கவன்…”
 
“அம்மா நான் வீட்டுக்கு வந்திட்டு இருக்கேன். ஒரு பைவ் மினிட்ஸ்ல அங்க இருப்பேன். கதவை திறந்து வைங்க. அதுக்கு தான் போன் பண்ணேன்…”
 
“என்னலே சொல்லுத, நீ வாறன்னு முன்னாடியே சொல்லலை… உம் பொண்டாட்டியும் கமுக்கமா இருந்துகிட்டா”
 
“அம்மாம்மா… நான் அவகிட்டயும் சொல்லலை… நான் வர்றது அவளுக்கு தெரியவே தெரியாது. வேலை முடிஞ்சது சும்மா சர்பிரைஸ் பண்ணலாமேன்னு நான் கிளம்பினதை சொல்லலை…”
 
“என்னத்த சர்பிரைஸ் போ…”
 
வீட்டுக்கு வந்திட்டேன். என் பொண்டாட்டி ரூமை லாக் பண்ணி வைச்சிருக்காலோ இல்லை திறந்து வைச்சிருக்காலோன்னு யோசிச்சிட்டே படியேறினேன்.
 
கதவை மெதுவா திறந்து பார்த்தேன், லாக் போடலை போல. உள்ள வந்து நானே லாக் போட்டேன்.
“வள்ளிக்கண்ணுன்னு…” சொன்னது மட்டும் தான் தெரியும் ஓடி வந்து கட்டிப்பிடிச்சிக்கிட்டா…

 

அவிய ஊருக்கு போனதுல இருந்தே எனக்கு மனசே சரியில்லை. அவிய நினைப்பாவே இருந்துச்சு.
 
எப்போ வருவாவ எப்போ வருவான்னு அதே யோசனை தான் எனக்கு எப்பவும். இங்க இருந்த கொஞ்ச நாள்ல அவியளையே ஒவ்வொரு நிமிஷமும் என்னைய யோசிக்க வைச்சுட்டாவ.
 
அவியளுக்கு என்னைய கப்பல்ல கூட்டிட்டு போவணும்ன்னு கொள்ளை ஆசை போல. எனக்கு அவிய வேலைய பத்தி கொஞ்சம் பயந்து தான் வருது.
 
என் பயத்தை போக்கத்தேன் வீடியோவெல்லாம் போட்டு காமிச்சாவ. எனக்கு அதை பாத்து இன்னமும் பயம் தான் கூடிப்போச்சு.
 
இருந்தாலும் அவியளுக்காக அவிய ஆசைப்படி கப்பல்ல போய்தான் பாப்போமேன்னு தோணிச்சு. சும்மாயில்லாம யூடியூப்ல வீடியோலாம் போட்டு பார்த்தேன்.
 
அதுல புயல் வரும் போது கப்பல் எப்படி ஆடுதுன்னு வீடியோ இருந்துச்சு. அதை பாத்ததும் உயிரே போச்சே, இவிய வேற கப்பல்ல தான் வேலை பாப்பேன்னு பிடிவாதம் பிடிக்காவ.
 
நா பேசாம இருந்திருக்கணும், என்னைய யாரு இதெல்லாம் பாக்க சொன்னது. நா சரியான மட்டி, நா ஒரு கோட்டிக்காரி என்னைய நானே வைஞ்சுகிட்டேன்.
 
அவிய ஊருக்கு போய் இத்தனை நாளாச்சு. தினமும் போன் பண்ணிருவாவ, இன்னைக்கும் பண்ணாவ, ஆனா நேரமே பண்ணிட்டாவ, உறக்கமா இருக்கு சீக்கிரமே உறங்கணும்ன்னு  சொன்னாவ.
 
எனக்கு தான் உறக்கமே போச்சு. மெத்தையில இங்கிட்டு அங்கிட்டும் உருண்டுட்டு இருந்தேன்.
 
அத்தை வேற எப்போ பாத்தாலும் என்னைய சிடுசிடுங்காவ. என்னைய அவியளுக்கு பிடிக்கலை போல.
 
ஒரு வேலை செய்ய மாட்டேங்கன்னு சொல்லி ஏசுதாவ. இவியளும் இப்போ இல்லையா எனக்கு அழுகையா வருது.
 
வாரியலை எடுத்து கூட்ட தெரியாது, சொலவு எடுத்து புடைக்க தெரியாதுன்னு வரிசையா சொல்லிட்டே இருக்காவ.
 
நா கொஞ்சம் மெதுவா தான் வேலை செய்வேன். அதுக்குன்னு என்னைய ஒவ்வொண்ணுக்கும் குறை சொன்னா நா என்ன செய்வேன்.
 
நீங்க எப்போ வருவீயன்னு மனசுக்குள்ள கேட்டுக்கிட்டே படுத்திட்டு இருந்தேன்
அவிய ஊருக்கு போனதுல இருந்து நா கதவைடைச்சு தாப்பா போடுறதேயில்லை. கதவை அடைக்கறதோட சரி.
 
கதவு திறக்கற சத்தம் கேட்டாப்புல இருக்கு. நா தென் உறங்கலையே எனக்கு ஒவ்வொரு சத்தமும் நல்லா கேக்குது.
 
அவிய ஊர்ல இருந்து வந்துட்டாவ… எனக்கு சந்தோசமா இருந்துச்சு. நா எழுந்துக்க போனேன். அவிய குரல் கேக்கு வள்ளிக்கண்ணுன்னு என்னைய கூப்பிடுதாவ.
 
நா ஓடி போய் அவியளை இறுக்கி கட்டிக்கிட்டேன். நானா போய் அவியளை இன்னைக்கு தான் கட்டிப்பிடிச்சேன்.
 
என்ன நினைப்பாவளோ, நினைச்சா நினைச்சுட்டு போகட்டும்.
 
“ஹேய் வள்ளிக்கண்ணு… என்ன செய்யறே, சட்டை நனையுது. அழறியா என்ன…”
 
“இல்லை கண்ணு வேக்குது…”
 
“எங்க பாப்போம்…”
 
“வேணாம்…”
 
“ஏன் என்ட சொல்லலை நீங்க வர்றீங்கன்னு…”
 
“சர்ப்ரைஸ்ன்னா அப்படித்தானே… என்னை மிஸ் பண்ணியா…”
“ஹ்ம்ம் ரொம்ப…”
 
“ஷோ மீ…”
 
“என்னத்த ஷோ பண்ண சொல்லுதிய??”
 
“என்னைய மிஸ் பண்ணேன்னு சொன்னல. எந்தளவுகுன்னு எனக்கு புரிய வை…”
 
“அதெப்படி செய்ய, சொல்ல தாம் செய்வாவ. எப்படி செய்வாவ…”
 
“நான் எப்படி செய்யணும்ன்னு சொல்லி தர்றேன்னு” சொல்லிட்டு என்னைய உறங்கவிடாம செஞ்சுட்டாவ.
 
இன்னும் ஒரு மாசத்துல அவிய கப்பலுக்கு போயிருவாவலாம், ஊருக்கு போயிட்டு வரவுமே சொன்னாவ.
 
எனக்கு பயமாத்தான் இருக்கு, ஆனாலும் அது அவியளோட வேலையாச்சே. இத்தனை வருஷமும் அவிய அப்படி தானே போயிட்டு வந்திருப்பாவன்னு நினைச்சு மனசை தேத்திட்டேன்.
 
அன்னைக்கு ஏதோ யோசனையில காபில சீனியை போட மறந்திட்டேன். மாமா லேட்டா தான் காபி சாப்பிடுவாவ, இவிய தம்பி காபி டீ எதுவும் சாப்பிடுறதில்லை. அத்தைக்கு காபியை கொண்டு போய் கொடுத்தேன்.
 
இவியளுக்கு கொடுக்கலாம்ன்னு படியேறினேன். அத்தை என்னை கூப்பிட்டாவ.
 
“சொல்லுங்க அத்தை…”
 
“இதெல்லாம் ஒரு காபியா உனக்கு காபி போடத் தெரியுமா தெரியாதா… சீனி கூட போடாம நீயெல்லாம் என்ன காபி போடுத…”
 
“உன்னைய இப்படித்தான் உங்க வீட்டுல வளத்தாவலா. ஒரு வேலையும் உனக்கு செய்ய தெரியலை. எல்லாமே சொல்லி சொல்லி தான் செய்யுத. நீயெல்லாம் ஊர்ல வளர்ந்த பொண்ணு தானான்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு…”
 
“உன்னைய போய் என் புள்ளைக்கு கட்டி வைக்கணும்ன்னு ஒத்தை கால்ல நின்னனே. அவன் அப்போவே சொன்னான் உன்னைய கட்ட வேணாம்ன்னு நான் தான் என் பிரண்டு பொண்ணு நல்ல பொண்ணுன்னு சொல்லி கட்டியே ஆவணும்ன்னு அடம் பிடிச்சேன்”
 
“அதுக்கு நீ எனக்கு நல்ல மரியாதை செஞ்சுட்ட, ராஜமாச்சும் ஒரு வார்த்தை சொல்லியிருக்கணும் எம் பொண்ணுக்கு ஒண்ணுமே தெரியாது. நீ தான் சொல்லி தரணும்ன்னு…”
 
“உங்க அக்கா நல்லா செய்யுதாலே நீயும் நல்லா வேலை செய்வ, நல்ல பழக்கமெல்லாம் படிச்சிருப்பேன்னு பாத்தா இப்படி இருக்கியேன்னு” இன்னும் என்னென்னவோ சொல்லி வசவுதாவ. எனக்கு அழுகையா வருது, ரொம்ப கோவமாவும் வருது.
 
எதுத்து பேசினா தப்பாகி போவுமேன்னு நா ஒண்ணுஞ்சொல்லலை. நேரா மேல வந்திட்டு இவியகிட்ட தான் சண்டை பிடிச்சேன்.
 
இவிய கோவமாகி என்னைய அந்த வாரமே கூட்டிட்டு போய் எங்க வீட்டுல விட்டுட்டாவ…

Advertisement