இராஜ பவனி 14

இன்னும் என்னம்மா பண்றீங்க..? டைம் ஆச்சு..” தனா அவசரப்படுத்த

வைதேகி   “நானும் வரணுமா தனா..?”  கேட்டு நின்றார்

வராம..? இங்க என்ன செய்ய போறீங்க..?  கிளம்புங்க, கிளம்புங்க..” என்றான் மகன்

இல்லை தனா, கடையில வந்து நான் என்ன பண்ண..? எனக்கு என்ன தெரியும்..?” அவர் தயங்கினார்

நான் மட்டும் எல்லாம்  தெரிஞ்சா அவ்வளவு பெரிய கடைய திறந்தேன்..? போக போக கத்துகிறது தான், வாங்கம்மா..” என்றான்

அவன் விட மாட்டான் என்று புரிந்து கொண்ட வைதேகி, “சரி.. இரு, புடவை மாத்திட்டு வரேன்..” என

நானும் போய் குகன்கிட்ட சாவி வாங்கிட்டு வந்துடுறேன், நீங்க ரெடியா இருங்க..” என்று கீழே வந்தான்

ஒரு வாரத்திற்கு முன்,  இனி  வேறு வேறு போர்ஷன் என்று சொன்ன நாளே அம்மாவை கூட்டி கொண்டு மேல் தளம்  தான் சென்றான். குருமூர்த்திக்கு கீழ் உள்ள வீட்டை முழுதும் கொடுத்துவிட்டு, மேலே இன்னும் இரண்டு ரூம் எழுப்பி, வெளிப்புறம் தனியே படி, வாசல் வைத்து, பூஜையும் செய்துவிட்டான். எல்லாம் ஒரு வாரத்திலே

வீட்டிற்க்கு தேவையானது கூட  புதிதாகவே வாங்கிவிட்டான். அவனின் இந்த அதிரடி, வேகசெயலில் குருமூர்த்திக்கு ஒன்றும் முடியவில்லை. இதை அவர் எதிர்பார்க்கவும் இல்லை. அவரின் ஆங்காரம், அதிகாரம் எல்லாம் கொஞ்ச கொஞ்சமாக சரிந்து கொண்டிருக்க, மனிதர் எப்போதும் வெடித்து கொண்டே தான் இருந்தார்

இப்போதும் தனா கீழிறங்கி வர, அவரின் சத்தம் உள்ளே பெரிதாக கேட்டது. யாரோ வந்திருக்கின்றனர் என்று புரிந்து கொண்டவன், பைக் எடுத்து கொண்டு கிளம்பிவிட்டான்.   வைதேகி உடை மாற்றி கிளம்பி வந்தவர்மகன் வருவதற்குள்  கிச்சனில் எல்லாம் எடுத்து வைக்க,  “வைதேகி..” என்று வந்தார் பேச்சி

அவர் குரல் கேட்கவும் வைதேகிக்கு  படபடப்பானது. இந்த ஒரு வாரமாக  இவர்  எப்போது வருவார் என்று வைதேகிக்கு உள்ளுக்குள் அச்சம் தான். இன்று சரியாக மகன் வெளியே சென்ற  நேரம் வந்து நிற்க, “வாங்.. வாங்கண்ணி..” என்று வரவேற்றார்

எங்க வர வைதேகி..? வரது போலவா உன் வேலை இருக்கு..? என் அம்மா உனக்கு கொடுத்துட்டு போன வீட்டை வச்சு என் தம்பியையவே ஆட்டி படைக்கிற..? இதுக்கு தான் என் அம்மா உனக்கு வீட்டை கொடுத்தாங்களா..?” எடுத்தவுடன் கணீர் குரலில் பெரிதாக ஆரம்பித்தார்.  

பக்கத்து தெரு என்பதால் உடனே சாவி வாங்கி  வந்துவிட்ட  தனாவிற்கு அவர் குரல் கீழ் வரை கேட்டது. வாசலில் நின்று இவனை பார்த்து நக்கலாக சிரித்து கொண்டிருக்கும் குருமூர்த்தி வேறு  ஓர கண்ணில் பட, தனாவிற்கு அவ்வளவு வெறுப்பு

அவர் பக்கமே திரும்பாமல் மேலேறியவன், ஒரு நொடி யோசித்து, வாசலிலே கை கட்டி நின்றுவிட்டான். உள்ளே செல்லவில்லை. அவனக்கு வைதேகி என்ன செய்வார், பேசுவார் என்று பார்க்க வேண்டும்

பதில் பேசு வைதேகி, இப்படி அமைதியா இருந்து இருந்து தான் காரியத்தை சாதிச்சுக்கிட்ட நீ..? உனக்கு உள்ளுக்குள்ள எங்க குடும்பத்துல எவ்வளவு இருந்திருந்தா காலம் போன கடைசில இந்த குடும்பத்தை இப்படி உடைச்சிருப்ப..?”

இதுக்கு தான் என் அம்மாக்கு அவ்வளவு நல்ல மருமகளா நடிச்சு வீட்டை எழுதி வாங்கிட்டியா நீ..? இவ்வளவு சாமர்த்தியம் உனக்கு ஆகாது வைதேகி, அம்மாகிட்ட வீட்டை எழுதி வாங்கி, மகனை வீட்டை விட்டு துரத்துற தந்திரம் உனக்கு மட்டும் தான் தெரியும், எங்க அம்மா வீட்டு மரியாதை, கௌவரத்துக்கு இப்படி ஒரு மருமகளா..?”  பேச்சி இன்னும் குரலுயர்த்தினார்

ஹ்ம்ம்.. இப்படி கத்தி பேசியே எதிர்ல இருக்கிறவங்களை அடக்கிற புத்தி தானே இவங்களுக்கு..?”  தனா கசப்பாக நினைத்து  கொண்டான்.

“உனக்கும், உன் பிள்ளைகளுக்கும் உழைச்சி கொட்ட மட்டும் என் தம்பி வேணும், அவன் பணம் வேணும், சேர்த்து வச்ச சொத்து வேணும், ஆனா அவன் வேணாம், என்ன அக்கிரமம் இது..?”

அன்னைக்கு ஊரே மெச்ச டுபா டுபான்னு மேளம் அடிச்சு, பந்தி போட்டு உன் மகளுக்கு கல்யாணம் பண்ணிங்களே, அந்த காசு எல்லாம் எங்கிருந்து வந்திச்சு உங்களுக்கு..? எல்லாம் என் தம்பி பணம் தானே..?” பேச்சி சாரு திருமணம் பேச, தனாவிற்கு சுர்ரென்று ஏற ஆரம்பித்தது

சில ஆயிரங்களில் தங்கை திருமணத்தை முடித்திருக்கிறான், அதுவும் குகனின் பங்கும் அதில் உள்ளது. அதற்கே இந்த பேச்சா..? ம்ம்.. பொறு தனா, அவங்க பேசட்டும்.. கட்டுப்படுத்தி நின்றான்.  

என்னமோ உன் மகன் அன்னைக்கு அவ்வளவு பேச்சு பேசினானாம்..? ஏன் ஊர் உலகத்துல யாரும் செய்யாததையா என் தம்பி பண்ணிட்டான், இல்லை உனக்கு இது இப்போ தான் தெரியுமா..? ஆரம்பிச்ச காலத்துலே எல்லா சங்கதியும் தெரிஞ்சவ தானே நீ, இப்போ என்ன புதுசா மகனுக்கு சொல்லி கொடுத்து என் தம்பி மரியாதையை கெடுக்க எழுந்திருக்க..?” பேச்சி பேச்சிலே குருமூர்த்தி தங்கை என்று நிரூபிக்க, தனா பல்லை கடித்து நின்றான்

ஊர்ல பெரிய மனுசன்னா அப்படி இப்படி இருக்கிறது தான், ஏன் உன் மகன் இந்த வயசுக்கே பொண்ணு பார்த்துக்கல, அவன் என் தம்பிய பேசுவானா..?”

அண்ணி.. தனா பத்தி பேசாதீங்க.. அது வேற, இது வேற..” வைதேகி குரல் நமநமத்து இருந்தாலும் உறுதியாக இருந்தது

என்ன வேற வேற..? இதுக்கு மட்டும் வாய் திறக்கிற..? அவ்வளவு பாசமா மகன் மேல, என் தம்பி இல்லாம உனக்கு மகன் வந்துட்டானா..?” பேச்சி எகத்தாளமாக  கேட்க, வைதேகி, தனா இருவரும் வெறுப்புடன் முகம் திருப்பி கொண்டனர்

இங்க பாரு வைதேகி, நான் பலமுறை உனக்கு சொன்னது தான், பெரிய குடும்பத்து மருமகளா இருக்கிறதுன்னா சும்மா இல்லை, நிறைய விஷயங்களை கண்டும் காணாம போயிடனும், இத்தனை வருஷம் நீயும் அப்படி பொழப்பு பண்ணவ தான், இன்னைக்கு உன் மகன் பேச்சை கேட்டு ஏதோ கிறுக்கு தனம் பண்ணிட்டு இருக்க..”

சரி போனது போகட்டும், எல்லாம் தூக்கி போடு, ஒரே வீட்ல இரண்டு அடுப்பு இருக்க கூடாது, என் தம்பிகிட்ட போய் சேரு, அவன் உன்னை திரும்ப சேர்த்துப்பான், நான் சொல்லிட்டு போறேன்..” ஏதோ பெரிய மனதுடன் சொன்னவர்

உனக்கு சொல்ல வேண்டியதில்லை,  குடும்ப மானம், கௌரவம் எல்லாம் வீட்டு பொம்பிளைங்ககிட்ட தான், நாம தான் அதை பொத்தி வச்சுக்கணும், விரிச்சு போட நினைச்சா நமக்கும் அசிங்கம் தான்.. புரிஞ்சுதா..” என

அப்போ எரிச்சுடலாமாத்தை..”  என்று வந்தான் தனா. அவனுக்கு அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. வைதேகியும் பேசுவதை போல தெரியவில்லை. பேச்சி அவனை பார்த்ததும் ஏகத்துக்கும் முகம் திருப்பினார்.  

“சொல்லுங்கத்தை, ஏன் அசிங்கமா விரிச்சு போடணும், தீ வச்சு கொளுத்திடலாமா..?”  தீர்க்கமாக கேட்டான்.

“உனக்கு நான் ஏன் பதில் சொல்லணும்..?  உன்கூட எனக்கு பேச்சு இல்லை..”  என்றார் அவர்

அப்போ என் அம்மா மட்டும் உங்களுக்கு ஏன் பதில் சொல்லணும்..?” என்றான் அவன்

நான் இந்த வீட்டு பொண்ணு தனா, மறந்துடாத..”

மறக்கிற ஆளா நீங்க எல்லாம்..?” தனா நக்கலாக சொன்னான்

ஏண்டா பேச மாட்ட, நல்லா இருந்த குடும்பத்துல கும்மி அடிச்சுட்ட இல்லை, இதுவும் பேசுவ, இன்னமும் பேசுவ நீ..?”

கண்டிப்பா இன்னும் பேசுவேன்த்தை, அதுக்கு முதல்ல எனக்கு இதுக்கு பதில் சொல்லுங்க, எங்க அம்மா கையில தான் இந்த குடும்பத்தோட மானம், மரியாதை எல்லாம் இருக்கா..? அவங்க தான அதை எல்லாம் பொத்தி வச்சுக்கணுமா..?  அப்போ உங்க  தம்பி என்ன மானம் மரியாதை இல்லாதவரா..?” பட்டென கேட்டான்

தனா..”

என்னத்தை.. நான் சரியா தானே கேட்டேன், நீங்க தானே பெரிய மனுசியாய் இப்படி இப்படின்னு என் அம்மாக்கு பாடம் எடுத்திட்டு இருந்தீங்க..?”

வைதேகி என்ன உன் மகனை பேச விட்டு வேடிக்கை பார்க்கிறியா..?”

ஆமாத்தை.. இப்போ உங்க தம்பிக்கு நீங்க பேசுறது போல என் அம்மாக்கு நான் பேசுறேன், நீங்க எனக்கு பதில் சொல்லுங்க, என் தங்கச்சி கல்யாணத்தை பத்தி ஏதோ கேட்டுட்டு இருந்தீங்க..?”

ஆமா கேட்டேன், என் தம்பி பணத்துல தானே எல்லாம் பண்ண..?”

ஆமா.. உங்க தம்பி தானே சாருக்கு அப்பா, அப்போ அவர் பணத்துல தானே  செய்யணும்..? செஞ்சேன், போன தலைமுறை நீங்களே நான் இந்த வீட்டு பொண்ணுடான்னு சவுண்ட் விடும் போது என் தங்கச்சி என்ன குறைஞ்சு போயிட்டா..?”  

பேச்சி பதில் பேச முடியாமல் மூச்சு வாங்க,  “உங்களுக்கு இன்னும் ஒன்னு தெரியுமா..? அவளுக்கு நான் சொத்தும் கொடுக்க போறேன், எல்லாம் என் தாத்தா, உன் தம்பி, நானும் இத்தனை வருஷம் உழைச்சி சேர்த்து வச்ச சொத்து தான்..”  என்றான் மேலும்

இதுக்கு மட்டும் என் தம்பி வேணுமா உங்களுக்கு..?”