“ஓஹ்.. இப்படி தான் அண்ணா அவங்களை பத்தி தெரிஞ்சுகிறானா..?” சாரு கேட்க

ம்ம்.. போன வருஷம் அனு அவங்க அம்மாகிட்ட வாங்கின அடி, பொண்ணு பார்க்க ஆரம்பிச்சது, அனு உறுதியா நின்னது, அவங்க அப்பா அறைஞ்சுது, அனு அவர்கிட்ட கல்யாணமே வேணாம்ன்னு  கையேந்தி அழுததுன்னு எல்லாம் சொன்னாங்க, கேட்க கேட்க  எனக்கே ரொம்ப கஷ்டமா போச்சு, உங்க அண்ணன் சொல்லவே வேண்டாம், கண் எல்லாம் கலங்கி போச்சு அவனுக்கு..”   குகன் சொல்லி கொண்டிருக்கஅங்கு தனா பூவம்மா வீட்டு வாசலில் தான் நின்றிருந்தான்

என்ன ஆச்சுக்கா.. இப்போவும் அடிச்சுட்டாங்களா..?”   குரல் கமற கேட்டான்

ஏன்ப்பா உங்களுக்கு இந்த தலையெழுத்து, இதெல்லாம் நடக்குமான்னு யோசிக்க வேண்டாமா..? பாவம் அனு பொண்ணு, அவங்க அம்மா அப்படி ஒரு பேச்சு, அடிக்க சித்ரா பொண்ணு விடல, ஆனா பேச்சு, எனக்கே கேட்க முடியல.. பாவம் அழுதுன்னு தான் இருந்துச்சு..”  அவர் சொல்ல, தனாவிற்கு அவ்வளவு இயலாமை

அனுவிற்கு தோள் கொடுக்க முடியவில்லை. சாரு, வைதேகியை குருமூர்த்தி நம்பி  விட முடியாது, இவன் மேல் உள்ள கோவத்தில் அவர்களை ஏதும் செய்துவிட்டால்..?  செய்துவிட்டால் என்ன செய்ய கூடியவர் தான் அவர்

இப்போது என்ன செய்ய வேண்டும்..? போன வருடம் இதே போலான சூழ்நிலை வந்த போது அவன் எண்ணம் வேறு. இப்போது அனு உறுதி பற்றி தெரிந்த பிறகு வேறு.

“அக்கா எனக்கு ஒரு உதவி  மட்டும் பண்ணுங்க..” பூவம்மா மூலம் அன்றிரவு போனில் அனுவிடம் பேச செய்தான்.  சில நொடிகள் மட்டுமே பேச முடிந்தது. போதும் அவனுக்கு.

“நன்றிக்கா..”  பைக் எடுத்து கிளம்பினான்.  சூழ்நிலை நெருக்குகிறது, இனியும் எதையும் பார்க்கும் நிலை இல்லை. தாமதம் செய்வதில் பலனில்லை

என்று இருந்தாலும், சாரு, குகன் திருமண பேச்சு, இவனின் காதல் பிரச்சனை தான், புரிந்தும் ஏன் தள்ளி போட வேண்டும்..? பல தீவிர யோசனைகள். அடுத்தநாள் பொழுது விடிந்து திருவிழா கொண்டாட்டங்கள் ஆரம்பித்தது

தனா சொந்த முடிவின் காரணமாக வீட்டிற்கும், வெளியேயும் அலைந்தான்தேரோட்டம் ஆரம்பித்த போதும் செல்லவில்லை. குகன் அவ்வளவு  போன் செய்த போதும் எடுக்கவில்லை. வைதேகி, சாருவிற்கு அவன் என்ன செய்கிறான் என்று கலக்கமாக இருந்தது

பேச்சி வேறு சாருவிற்கான பெண் பார்க்கும் ஏற்பாட்டில் படு மும்மரமாய் சுற்றி கொண்டிருந்தார். மாலை போல, குகன் அவனை தேடி கண்டுபிடித்தவன், “என்னடா உங்க அத்தை சாருக்கு பொண்ணு பார்க்க  ஏற்பாடு பண்ணிட்டிருக்கு, நீ கண்டுக்காம சுத்திட்டிருக்க..” என்று சண்டையிட்டான்.  

ஏன் உனக்கு என்ன..? நீ தான் வேணாம் சொல்லிட்ட இல்லை..” என்றான் தனா சாதாரணமாக

தனா.. அது அப்போ, அப்படி.. ச்சு.. இப்போ என்னடாஎனக்கு சாரு வேணும், கல்யாணம் பண்ணி கொடு..” நேரடியாக கேட்டான்

டூ லேட்..” தனா கிளம்பிவிட, குகனுக்கு பிபி எகிறியதுஇங்கு குருமூர்த்திக்கோ அங்கங்கு சுற்றும் மகன் மேல் சந்தேகம் வந்ததுநின்று கவனிக்க நேரம் இல்லை. பேச்சி கவனித்தாலும் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த வருடத்திற்கான தேரோட்டம் முடிந்து அதன் இடத்தில் அடங்கிய பின்னும், தனா வீட்டிற்கு வரவில்லை

எங்க போயிட்டான் உன் மகன்..? எதுவும் ஆகாத வேலை பண்ண பிளான் போடுறானா..? அப்படி எதாவது நடந்துச்சு உன்னை வைக்க மாட்டேன், சொல்லி வை உன் மகன்கிட்ட..” குருமூர்த்தி மனைவியை எச்சரித்தார்

வைதேகிக்கோ  மகன் என்ன செய்கிறான் என்று தெரியாமல் பேசவும் முடியாதே. வாய் மூடி நின்றார். மறுநாள் பொழுதும் விடிந்தது. பேச்சி ஏற்பாடு செய்த வரன் மாலை சாருவை பெண் கேட்க வர போகின்றனர். இங்கு காலையிலே குருமூர்த்தி வீட்டிற்கு நான்கு பேர் வந்தனர்

குருமூர்த்தியின் பெரியப்பா, சித்தப்பா, வைதேகியின் அண்ணா, தம்பி என்று நால்வர். வைதேகி என்னமோ ஏதோவொன்று மகனை பார்க்க, அவனோ ஒரு முடிவுடன் நின்றிருந்தான்

“என்ன விஷயம்..? இவன் ஏதும் வர சொன்னானா..? என்ன அவனுக்கு சப்போர்ட் பண்ண வந்திருக்கீங்களா..?” குருமூர்த்தி  எடுத்ததும் குதிக்க ஆரம்பித்தார்

குருமூர்த்தி பொறுப்பா.. தனா தான் வர சொன்னான், ஆனா விஷயம் சாரு பத்தி..” என்றார் பெரியப்பா

சாருவை பத்தி என்ன..?” குருமூர்த்தி சந்தேகமாக கேட்க

எல்லாம் நல்ல விஷயம் தான், சாருவை  உன் மச்சான் மகன் குகனுக்கு கேட்குது பரிமளம்..” என்றார். என்ன..? அவர் குகனை முறைக்க, அவனுக்கும் இது புதிய செய்தி என்றாலும் தயங்காமல் குருமூர்த்தி பார்வையை எதிர்கொண்டான்

என்ன தைரியம் இந்த வெறும்..”

தாத்தா.. இவர் குகனை பத்தி ஒரு வார்த்தை மரியாதை இல்லாம பேச கூடாதுஅதுக்கு இவருக்கு உரிமை இல்லை..” தனா மிகவும் அழுத்தமாக அவரின் பேச்சை தடை செய்தான்

நீ என்னடா சொல்றது, நான் கேட்பேன், ஏதோ அப்பா இல்லாத பையன் கஷ்டத்துல இருக்கானேன்னு வீட்டுக்குள்ள விட்டா சிம்மாசனம் கேட்குதா உனக்கு..?” குகனை நேரே பார்த்து கேட்டார் குருமூர்த்தி

தனா கை பிடித்து  தடுத்து வைத்திருந்த  குகன், “எனக்கு உங்க சிம்மாசனம் வேண்டாம் மாமா, எனக்கு சாருவை கொடுங்க, நல்லா வச்சுப்பேன் அவளை..” தானே முறையாக கேட்டான்

அடிங்க வெறும் பையலே, என்கிட்ட கையேந்தி நிக்கிற உனக்கு என் பொண்ணு கேட்குதா..?” குருமூர்த்தி வார்த்தைகளை விட

நான் உங்ககிட்ட பிச்சைக்கு கையேந்தலை மாமா, உழைச்சு தான் வாங்கினேன்..” குகனின் கோவம் அவன் வார்த்தையில் தெரிந்தது

குருமூர்த்தி.. தேவையில்லாம பேசாத, குகனுக்கு முறை இருக்கு, உரிமை இருக்கு அவன் கேட்கிறான், சரி இல்லைன்னு மரியாதையா சொல்லு..” பெரியப்பா அதட்டலிட்டார்

முடியாது..”  குருமூர்த்தி சொல்ல, 

“என் தங்கச்சியை குகனுக்கு கொடுக்க சம்மதம்..” என்றான் தனா அப்பாவின் குரலை விட பெரிதாக

அவளுக்கு அப்பா நான் இருக்கேன், நீ யார்டா..?” குருமூர்த்தி மகன் மேல் பாய்ந்தார்

அவளோட அண்ணா.. என் தங்கச்சி வாழ்க்கை மேல எனக்கு உரிமை, உறவு, அக்கறை எல்லாம் இருக்கு..”

இல்லைடா.. உனக்கு அவ மேல எந்த உரிமையும் இல்லை..” குருமூர்த்தி கத்த

அதை நீங்க சொல்ல முடியாது மாமா, தனாவுக்கும் எல்லா உரிமையும் இருக்கு..”  என்றனர் அவனின் தாய் மாமன்கள். அவர் ஏதோ பேச வர

நீங்க எங்களையும் எதுவும் சொல்ல முடியாது மாமா, ஊர்க்காரனா பொறந்துட்டு, ஊர் கவுண்டரா இருந்துகிட்டு தாய் மாமா உரிமை, உறவு பத்தி உங்களுக்கு தெரியாம இருக்காது, என் தங்கச்சிய இல்லை எங்க அப்பாவை ஏச்சு கொடுமைபடுத்திட்டு இருக்கிறது,   என் மருமகளையும், மருமகனையும் அப்படி செய்ய முடியாது நீங்க, விடவும் மாட்டோம் நாங்க..” என்றனர் இத்தனை வருட கோபத்தையும் சேர்த்து

என்னடா பண்ணுவீங்க..?” குருமூர்த்தி எகிற

நாங்களே கல்யாணம் செஞ்சு வைப்போம்.. சாருக்கு சம்மதம் இருந்தா மட்டும் போதும்எங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது..” பெரிய மாமன் குரலில் அப்படி ஒரு உறுதி

அண்ணன், தம்பி பேசவும் வைதேகி கண்ணில் கண்ணீர் நிற்கவில்லை. அம்மா வீட்டு சொந்தம் தூணாக வந்து நின்றது. அம்மாவை அணைத்து கொண்ட சாருவிற்கும் மாமன்களின் பாசம் நெகிழ்ச்சியை கொடுத்தது.

“குருமூர்த்தி இது பசங்க வாழ்க்கை சம்மந்தப்பட்டது, பொறுமையா இருக்கணும்..”  அவரின் பெரியப்பா கண்டிப்பாக சொல்ல, குருமூர்த்திக்கு உள்ளுக்குள் தீ கனன்றது. பெற்ற மகன் அவரை முந்துவது புரிந்ததுமகளை பார்க்க, அவளிடம் சம்மதம் தான் இருந்தது. உஷாரானார் மனிதர்

என்னையே மடக்குறான்.. விட கூடாது, விட மாட்டேன், தேடி பிடிச்சு வலுவான ஆளை கூட்டி வந்திருக்கான், ம்ஹூம்.. என்னை மீறி எதுவும் நடக்க கூடாது..” சில நொடிகள் உள்ளுக்குள் அவரின் குரூர புத்தியை தீட்டியவர் முகத்தில் வழி கிடைத்த வெற்றி சிரிப்பு. 

மகனை மிகவும் எகத்தாளமாக பார்த்தவர், “சரி நான் இதுக்கு ஒத்துகிறேன், ஆனா அதுக்கு பதில் இந்த பையன் நான் சொல்ற பொண்ணை தான் கல்யாணம் செஞ்சுக்கணும்..” என்றார்

தனா இதை எதிர்பார்க்காமல் அதிர, மற்றவர்களும் அப்படி தான் இருந்தனர். சில நொடிகள் தான் தனா சுதாரித்து கொண்டான்

அவன் பேசினான். அவன் பேச பேச குருமூர்த்தி கட்டிப்போட்டது போல நின்றார்.