இராஜ பவனி 7

“எங்க உன் மகன் கிளம்பிட்டானா..?” குருமூர்த்தியின் சத்தம் வீட்டில் எங்கும் அதிகாரமாக  எதிரொலிக்கரூமில் இருந்த தனா கண் மூடி திறந்தான்

இதோ கிளம்பிடுவான்ங்க..”  வைதேகி சொல்ல

ஏன் துரைக்கு இன்னும் விடியலையாமா..? அப்படி என்ன வெட்டி முறிக்கிறான்..?”  என்றார் மேலும் குருமூர்த்தி

இல்லைங்க.. காலையிலே போய் நீங்க சொன்ன வேலையை முடிச்சுட்டு தான் வந்தான்..” என்றார் வைதேகி

ஆமா பெரிய கொடி நாட்டுற வேலை, மத்தது எல்லாம் செய்ய தெரிஞ்ச உன் மகனுக்கு இது எல்லாம் பிசுக்கோத்து வேலை தான்..” குருமூர்த்தி சொல்ல, தனா முகம் இறுகி போனது

ஏங்க..”  வைதேகி ஆட்சேபமாக குரல் எழுப்ப

என்னடி அன்னைக்கு மாதிரி பூசை வேணுமா..? வந்துட்டா மகனுக்கு கூஜா தூக்கிட்டு, போய் சோத்தை போடு போ, அது ஒன்னுக்கு தான் உன்னை வச்சிருக்கிறதே, இல்லை அன்னைக்கே   உன்னை துரத்தியிருப்பேன்..”   வார்த்தைகளை கொட்டி விட்டு செல்ல, தனா கட்டிலில் அமர்ந்தேவிட்டான்

அவனால் அம்மாவிற்கு மேலும் பேச்சு கூடி போனது. குருமூர்த்தி கிளம்பும் வரை ரூமிலே இருந்தவன், அதன் பிறகே வெளியே வந்தான். சாருவும் அவளின் ரூமில் இருந்து வர, அவளை பார்த்த தனாவிற்கு இன்னும் நெஞ்சம் மறுகி போனது

அவனால் இன்று அவள் வீட்டில் இருக்கிறாள். சாரு ஆசைப்பட்ட படி மாஸ்டர் படிக்க முடியவில்லை. விடவில்லை குருமூர்த்தி. ஆடி தீர்த்தார் மனிதர். இன்னும் ஆடி கொண்டிருக்கிறார்

குகன் நீயும் சாப்பிட வா..” வைதேகி குரல் கொடுக்க, அவனும் வந்தான். மூவருக்கும் உணவு வைத்தார். தனா மிகவும் அமைதியாக சாப்பிடஅவனை அப்படி பார்க்க வீட்டினருக்கு தாளவில்லை

ண்ணா.. எனக்கு புது மொபைல் வேணும்.. இது  பழசாகிடுச்சு..” சாரு வேண்டுமென்றே அண்ணனை வம்பிழுக்க முயன்றாள்

அவனோ, “வரும் போது வாங்கிட்டு வரேன்..” என்று கை கழுவ சென்றுவிட்டான். வைதேகிக்கு என்று இந்த வாழ்க்கை மாறும் என்ற விரக்தி உண்டானது

“நான் ஏதோ வாழ்ந்தாலும் என் பசங்க சந்தோஷமா இருக்கணும்ன்னு தானே இவரோட பாடுபடுறேன், ஆனா..?” வெறுமையுடன் வயிற்றுக்கு இரண்டு இட்லி சாப்பிட்டவர், நால்வருக்கும் காபி எடுத்து வந்தார்

ஏதோ இந்த நேரம் தான் அவர்களுக்கு கொஞ்சம் அமைதியை கொடுக்கிறது. ஒருவருக்கு ஒருவர் துணை எனும் விதமாக உணர்ந்தனர். “மண்டிக்கு நான் போறேன் தனா, நீ கடைக்கு போ..” குகன் சொல்ல

இல்லைடா.. நானே போறேன்..” தனா  கிளம்பிவிட்டான். இல்லை என்றால் மனிதர் இரவு வீடு வந்து சேர்த்து வைத்து பேசுவார்

அங்கு சென்றதும்,  “இவ்வளவு நேரம் கழிச்சு வந்தா இந்த லோடை எல்லாம் அவன்  அப்பனா ஏத்துவான்..?” அவனை பார்த்ததும் குருமூர்த்தி சத்தமாக பேசிவிட்டு சென்றார்

ஏன் இவர் லோட் ஏத்துனா நகராதா..?”

அப்படி சொல்லுப்பா.. என்னமோ  ஊர், உலகத்துல நடக்காததை  தனா தம்பி பண்ணிட்டாப்ல, ரொம்ப ஆடுறார் மனுஷன்..”   மூட்டை ஏற்றும்  ஆட்கள் தங்களுக்குள் பேசி புகைந்து கொண்டனர்

தனா லோட் ஏற்றி அந்தந்த இடங்களுக்கு அனுப்பி வைத்தவன், மதிய உணவு நேரம் வரவும், எப்போதும் போல பணம் கொடுத்தவன், குருமூர்த்தி ரூம் செல்லவிலை. நேரே அவன் மார்க்கெட் சென்று உணவு உண்டான். அதில் குருமூர்த்திக்கு இன்னும் ஆங்காரம்

பண்றதையும் பண்ணிட்டு என்கிட்டே மூஞ்சை திருப்பிட்டு போற, பார்க்கிறேன் இன்னும் எத்தனை நாளைக்குன்னு..”  ஒரு வருடமாக  மகன் தன்னை பார்க்க கூட செய்யாததில் உள்ளுக்குள் கருவி கொண்டார்.

“குகன்.. காலியான சரக்கு லிஸ்ட் கொடு..” தனா கேட்க, கொடுத்த குகன்

வரும் போது சித்ராக்காவை பார்த்தேன்..”   என்றான் மெல்ல. லேப்பில் இருந்த தனா விரல்கள் நின்று அடிக்க, “கூட அனுவும் வந்திருப்பான்னு நினைக்கிறேன்பூமிகாகிட்ட  கேட்டா தெரியும், கேட்டு சொல்லவா..” கேட்டான்

ம்ப்ச்.. வேண்டாம்டா..” தனா சொன்னவன், கடையை சூப்பர்வைஸ் செய்வது போல் எழுந்து சென்றுவிட்டான். அவன் கால்கள் நேரே அனு எப்போதும் வரும் ஸ்டேஷனரி பக்கம் தான் சென்றது. அங்கிருந்த ஸ்டடி டேபிள் மேல் சாய்ந்து கண் மூடி கொண்டான்

அவனின் மனக்கண்ணில் கடைசியாக  பார்த்த அவளின் முகம். ஒருபக்க கன்னம் வீங்க, கையை வைத்து மறைந்து குனிந்து நின்றிருந்தாள். இப்போதும் தனாவின் கண்கள் சிவந்தது. தொண்டை குழி அடைத்தது. உடல் மௌனமாக அதிர்ந்தது துடிப்பில். ஒவ்வொரு அணுவும் அவனின் அனுவிற்கான ஏக்கத்தில் வெந்து கொண்டிருந்தது

ஆயிற்று ஒரு வருடம். அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகான நீண்ட ஒரு வருடம். இரு வீட்டிலும் புயல் அடித்து முடிந்த பின்னும் இன்னும் அதன் சேதம் மாறாத பனிரெண்டு மாதங்கள்

எப்படி நாட்கள் போகிறது என்றால் போகிறது, நானும் போகிறேன் அவ்வளவு தான் பதில். மனம் முழுக்க வேதனை, கசப்பு, தவிப்பு தான். குருமூர்த்தியின் ஆட்டம் என்ன கொஞ்சமா நஞ்சமா..?

திருவிழா அன்று..  

“அன்பழகன் தெரு தான்ப்பா பிரச்சனை, தேர் போறது கஷ்டம்..” பெரியவர் சொல்ல, 

“சரி வாங்க பார்ப்போம்.. போக முடிஞ்சா சரி, இல்லை மாத்திவிடுவோம். அவர் தெரு ஆளுங்க கேட்டா அவரே சமாளிச்சுக்கட்டும்..” என்று அன்பழகன், குருமூர்த்தி உடன் மூன்று ஆட்கள் சந்து  வழியாக அங்கு வந்துவிட்டனர். 

குகன் சொன்ன சில நொடிகளிலே இப்படி திடீர் என்று வந்து நிற்பார்கள் என்று எதிர்பார்க்காத   தனா, அனு, குகன், பூமிகா நால்வரும் அதிர்ந்து தான் போய்விட்டனர். குகன் தனா பக்கத்திலே நிற்க, பூமிகாவிற்கு வேர்த்தே போனது. 

“என்ன நடக்குது இங்க..?” குருமூர்த்தி எடுத்ததும் கத்த, அனு நடுங்கி தனாவுடன் ஒன்றிவிட்டாள். இருவரின் இணைந்த கைகள் அங்கிருந்தவர்கள் கண்களுக்கு பளிச்சென்று தெரிய, தனா, அனுவை மிகவும்  கடுமையாக பார்த்தனர் பெற்றவர்கள்.  

என்னடா பண்ணிட்ட..?” தனா தன்னை தானே அடித்து கொள்ளும் நிலையில் நின்றவன், குருமூர்த்திய பார்க்க, அவரோ மகனை குதறி விடும் வேகத்தில் நின்றிருந்தார்

அன்பழகனோ மகளை மிகவும் வெறுப்பாக, அதிருப்தியாக பார்த்து கொண்டிருந்தார். அப்பாவின் பார்வையில் அனு கண்கள் தன்னாலே கண்ணீரை சிந்தியது. பிள்ளைகளை கூட்டி கொண்டு இரண்டு தாய்மார்கள், ஆண்கள் சிலர் என்று  அங்கு கூட்டம் சேர ஆரம்பிக்க, சுதாரித்த பெரியவர்கள்  இது வேற மாதிரி ஆகிவிடும் என்று நிலைமையை உணர்ந்து

பொண்ணுங்களா வீட்டுக்கு போங்க, குகன் தம்பிய கூப்பிட்டுட்டு போப்பா..” என்றனர்

தனாவிற்கு அனுவை தனியே விட முடியவில்லை. அன்பழகன் அவளை என்ன செய்வார் என்று உள்ளுக்குள் நடுக்கம் கொண்டவன், அவளின் கையை இறுக்கமாக பற்றி கொண்டான்

அதை கவனித்த குருமூர்த்திக்கு  கோவம் உச்சிக்கு ஏற, “முதல்ல அவ கையை விடுடா..” என்றார் கத்தலாக. அனு உடல் தூக்கி போட, திரும்பி கண்களாலே தைரியம் சொன்னவன்அவளின் கையை தன் இருகைகளாலும் பிடித்து கொண்டான்

தனா..” குருமூர்த்தி மகனின் செயலில் இன்னும் கத்த, அன்பழகனோ வேகமாக மகளிடம் சென்று அவளின் மற்றொரு கையை பிடித்து, “வீட்டுக்கு வா..”  என்றார் கன்னங்கள் துடிக்க

அனு அச்சமாக அப்பாவை பார்க்க, தனாவிற்கு இந்த நொடி என்ன செய்ய என்றே  புரியவில்லை. அனுவின் விரல்கள் அவனின் கரங்களை இன்னும் இறுக்கமாக பிடிக்க, அவளை அவர்களுடன் அனுப்ப கூடாது என்று அந்த நொடி  முடிவெடுத்தான்.

அவளை விட்டுட்டு வீட்டுக்கு போ தனா..”  குருமூர்த்தி மகனிடம் கர்ஜிக்க, தனா அனுவின் கையை விடவே இல்லை. “இப்போ நீ அவளை விடல மகன்னு கூட பார்க்க மாட்டேன்..” குருமூர்த்தி எச்சரிக்க

அன்பழகனோ, மகளை பிடித்து இழுத்தபடி, “ஒழுங்கா என்னோட வீட்டுக்கு வா..”   என்றார் ஆத்திரத்தில் பல்லை கடித்து. ம்ஹூம்.. அனு பயத்திலே தனா கையை விடாமல் இருக்க, தனாவிற்கோ வேறு எண்ணம் தான். அவனின் முகத்திலே அவன் எண்ணம் புரிந்த பெரியவர்களுக்கு, இது என்ன பூதம் கிளம்புகிறதே என்றானது

தம்பி.. பொண்ணை விடுப்பா, இது திருவிழா நேரம், ஊரே ஒன்னு கூடியிருக்கு, நம்ம ஆளுங்க மட்டுமில்லை, உறவுக்காரன், தெரிஞ்சவன், பக்கத்து ஊர்க்காரன்னு பெரிய கூட்டமே இருக்கு, இப்போ எதாவது பிரச்னையாச்சுன்னா அது நெருப்பை ஊருக்குள்ள எரிஞ்ச மாதிரி தான், தேர் வேற கிளம்பிடுச்சு.. விடுப்பா.. ஏம்மா கையை விட்டு உன் அப்பாவோட போம்மா.. அட போம்மா..”   அவர்களை நெருக்க ஆரம்பித்தனர்

இல்லை அவளை அனுப்ப மாட்டேன், என்னோட இருக்கட்டும், நாளைக்கு காலைல என்ன செய்றதுன்னு பேசி முடிவெடுப்போம்..” என்றான் தனா உறுதியாக

அவ்வளவு தான் குருமூர்த்தியின் பொறுமை பறக்க, “தனா..” என்று மகன் மேல் ஏறி சென்றவர், அவன் கன்னத்திலே கையை இறக்கிவிட்டார். அனு அதிர்ந்து கேவல் சத்தமாக வர, தனாவோ தலையை உதறி, வலுவாக காலை ஊன்றி, தளர்ந்த அனு கையை  பிடித்தான்

மாமா..” குகன் ஓடி வந்து அவரை பின்னிருந்து பிடித்து கொண்டான். அவர் கோவத்தில் திமிறி கொண்டே, “யோவ் என்ன பார்த்துட்டு நிக்கிற, உன் பொண்ணை இழுத்துட்டு போயா.. நல்லா பிடிச்சிருக்கா என் மகனை..” என்றுவிட, அன்பழகனுக்கு தாங்கவே முடியவில்லை

அனுவை இழுக்க, தனா விட்டால் தானே..?  “இப்போ நீ என்னை பொண்ணை விடல என்ன செய்வேன்னே எனக்கு தெரியாது, விடுடா அவளை..” ஆவேசமாக இழுத்தார்

தனா யாருக்கும் அசையாமல் நிற்க, “இது என்னடா பிரச்சனை, ஏம்பா தனா நீ நல்லா புத்தி தெரிஞ்ச பிள்ளை, இது பொம்பிளை பிள்ளை விவகாரம், விடுப்பா, பொறுமையா பேசிக்கலாம், ஊர் தேரோட வந்தா என்ன ஆகும்..?”


ஏம்மா பொண்ணு உன் அப்பாவோட போம்மா, உன்னை இப்படி பார்த்தா உன்னால உங்க வீட்டுக்கு தான் மானம் போகும்.. உங்க அப்பாங்க ஊருக்குள்ள எவ்வளவு கௌரவமா வாழ்ந்துட்டு இருக்காங்க, இப்படி தான் அவங்களை ஊர் கூட்டி நடுத்தெருவில அசிங்க படுத்துவீங்களா..?” பெரியவர் ஒருவர் காட்டமாக கேட்க, அனுவிற்கு அவர் கேள்வி இன்னும் அழுகையை கொடுத்தது

யம்மா தாயே..  உங்க அக்காக்கு  இத்தனை வருஷம் கழிச்சு இப்போ தான் கல்யாணம் கூடி வந்திருக்கு, அதை கெடுத்துடுவ போலயே..” இன்னொருவர் சொல்லிவிட, அனு அதில் அதிர்ந்து தந்தையை பார்த்தாள்

தனாவை அசைக்க முடியாது என்று புரிந்து கொண்டு அவர்கள் அனுவை விலக்க, அன்பழகனோ ஒரு படி மேலே சென்று இருவரையும் பார்த்து, “இவ இன்னும் என் பொண்ணு தானே..?” அழுத்தமாக கேட்க, அனு கூசி போய் தானே அவளின் கையை விலக்கி கொண்டாள்

அனு.. வேண்டாம்..” தனா அவளின் கையை திரும்ப பிடிக்க வர, அனு அழுகையுடன் மறுப்பாக தலையாட்டினாள். தனாவிற்கு அவளின் நிலை புரிய, அன்பழகன் மகளை இழுத்து கொண்டு நடக்க ஆரம்பித்தார். பூமிகா பின்னால் ஓடதனா வேகமாக அவர் முன் சென்று நின்றவன்

அவளை நீங்க எதுவும் செய்ய மாட்டீங்கன்னு நம்புறேன். அவளுக்கு எதுன்னாலும் கேட்க நான் இருக்கேன்..” என்றான் தீவிரமாக

இவ என் பொண்ணு தானே, எனக்கு தெரியும்நீ யாருடா சொல்றதுக்கு..?”  அன்பழகன் அவனிடம் கொதித்து, மகளை கூட்டி கொண்டு சென்றுவிட்டார்

டேய் அவனை இழுத்துட்டு போடா, என் மானத்தை வாங்கிட்டு உட்கார்ந்திருக்கான்..” குருமூர்த்தி குகனிடம் கத்த, தனா பின்னால் சென்ற பூமிகாவிடம் ஏதோ சொல்லி அனுப்பி வைத்து கொண்டிருந்தான்

குகன் சென்று,  “தனா.. நாம போலாம்.. தேர் வந்துடுச்சு..”  என்றான். தனா நகராமல் நிற்க, “அன்பு பெரியப்பா அப்படி எல்லாம் செய்ய கூடிய ஆள் இல்லை.. நீ வாடா..” என்று அங்கிருந்து தள்ளி கூட்டி கொண்டு வந்துவிட்டான்.