இராஜ பவனி 4

மிஸ் உங்களை பார்க்க யாரோ வந்திருக்காங்க..”  ஸ்டாப் ரூமில் இருக்கும் சித்ராவிற்கு தகவல் வர, யாரா இருக்கும் என்ற கேள்வியுடன் வெளியே வந்தாள் சித்ரா

நான் தான்..” குரல் பின்னால் கேட்க, திரும்பி பார்த்தால் சஞ்சய்

சஞ்சய் அவளை பெண் பார்த்து சென்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகியிருக்க, எந்த தகவலும் இல்லாமல் இருந்தவன், திடீரென ஸ்கூல் வந்து நிற்கவும் சித்ரா முகத்தில் டக்கென ஒரு மாற்றம் வந்து போக, “எஸ்.. சொல்லுங்க..” என்றாள் யாரோ போல

கொஞ்சம் தள்ளி போய் பேசலாமா.. இங்க எல்லாம் வர போக இருக்காங்க..”  என்றான் காரிடோரை காட்டி. நடப்பவர்கள் இவர்களை பார்த்து நடக்க, சித்ரா அவனுடன் கிரவுண்ட் வந்தவள் கேள்வியாக பார்த்தாள்.

“அது அன்னைக்கு அம்மா ஒன்னு சொன்னாங்க இல்லை, அது தப்பு, உங்களுக்கும் எனக்கு ஒரே வயசு இல்லை..” என்றான்

இதை சொல்லத்தான் வந்தியா..”சித்ரா அவனை கண்கள் இடுங்க பார்க்க

ஆமாங்க.. நமக்குள்ள பதினோரு மாச வித்தியாசம் இருக்கு.. நீங்க என்னை விட பெரியவங்க..” என்றான் முகத்தை சோகமாக வைத்து

சித்ரா அதிர்ச்சியை மறைத்து, “இப்போ என்ன என்னை அக்கான்னு கூப்பிட்டு போக வந்திங்களா..?”  பல்லை கடித்து கொண்டு கேட்டாள்

கூப்பிட்டாலும் அது முறை தானே, ஆனா ப்ரோ கூப்பிட்டு பொண்ணுங்க லவ் பண்றது போல, அக்கான்னு கூப்பிட்டு நானும் உங்களை கல்யாணம் பண்ண முடியுமா தெரியலையே..”  என்றான் சோகமாக

என்ன பேசிட்டு இருக்கீங்க நீங்க..? முதல்ல இங்கிருந்து கிளம்புங்க.. போங்க..”  வெடுவெடுத்தாள்  சித்ரா

ஏங்க  வயசுல பெரியவங்களை கல்யாணம் பண்ண கூடாதா..? எனக்கு உங்களை புடிச்சிருக்கு.. இப்போ இது ட்ரெண்ட்  தான்..” என்றான் அவன்.   

டைவோர்ஸ் கூட இப்போ ட்ரெண்ட்  தான்னு அதையும் பண்ணுவீங்களா..?”

லிவிங் டூ கெதர் கூட இப்போ ட்ரெண்ட் தான்னு நான் உங்களை கேட்க முடியமா..? பாருங்க இப்போவே இப்படி கண்ணாலே எரிக்கிறீங்க, கேட்டா அறைஞ்சிட மாட்டீங்க..”

உங்க பேச்சே சரியில்லை.. எனக்கு உங்ககூட பேச இஷ்டம் இல்லை..” சித்ரா நடக்க, வேகமாக அவள் முன் வந்து நின்றவன்

ஏய்.. இது சும்மா, நான் தான் உன்னை விட பெரியவன்..”  என்றான் சிரிப்புடன்

உங்களுக்கு என்னை பார்த்தா விளையாட்டா இருக்கா..?” சித்ரா முகம் கசங்கி போனது

ஈஸி.. ஈஸி.. ப்ளீஸ்.. நமக்குள்ள இருக்க டென்ஷனை குறைக்க தான்..”  என்ற சஞ்சய்,  “எனக்கு அம்மாவை காம்ப்ரமைஸ் பண்ண இவ்வளவு நாள் ஆகிடுச்சு.. அதான் தகவல் சொல்ல முடியல, உங்களை  வந்து பார்க்கவும் முடியல..” முகம் விகசிக்க சொன்னான்

சித்ராவிற்கோ முகம் சுருங்கி போக, “அப்படி ஒன்னும் யாரையும் காம்ப்ரமைஸ் பண்ணி எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்..” என்றாள்

எனக்கு வேணுமே.. இந்த டீச்சர்  என் கண்ணுக்குள்ளே நிக்கிறாங்க..”

அப்போ அந்த கண்ணை பிடுங்கி போட்டு வேலையை பாருங்க..”  என்றாள் நக்கலாக

என்ன கண்ணை பிடுங்கணுமா..? அப்போ என் ஹார்ட்டுக்குள்ள பில்டிங் எழுப்பி உட்கார்ந்திருக்கீங்களே அதை என்ன பண்ண..?” சஞ்சய் சீண்டலாக கேட்டவன்,  “அதையும் பிடுங்கி போடு சொல்லாதீங்க, என் உயிர் எனக்கு வெல்லக்கட்டி..”  என்றான் வேகமாக

சித்ரா முகத்தில் மெல்லிய புன்னகை கோடாக மலர, அவளை ரசித்து பார்த்த சஞ்சய், “இன்னும் இரண்டு நாள்ல வீட்டுக்கு வருவோம், அதுக்கு முன்னாடி உங்களை பார்த்து போக வந்தேன்..” என்றான். சித்ரா எதுவும் சொல்லாமல் அமைதியாக நிற்க

சாரி சித்ரா, அன்னைக்கு அம்மா பண்ணது தப்பு, அப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு நாங்களும் எதிர்பார்க்கலை..”

அதை எல்லாம் மறந்து மன்னிச்சு இந்த குழந்தை பையனுக்கு வாழ்க்கை கொடுத்தா சந்தோஷபடுவேன், இரண்டு நாள் டைம்  இருக்கு, யோசிச்சு சொல்லுங்க.. நான் வரேன்..” அவளிடம் கோரிக்கையாக வைத்தவன் விடைபெற, சித்ரா குழம்பி போய் நின்றாள்.

*************

இங்கு அன்பழகனுக்காக எல்லாம் காத்திருக்க,  “அவர் இது போல செய்ய வாய்ப்பில்லை குகன்..”  தனா தள்ளி நின்று சொன்னான். 

“அன்பழகன் சாரை பத்தி நமக்கு தெரிஞ்ச அளவு கூட இவங்களுக்கு தெரியல பாரேன் தனா, இத்தனை வருஷம் அவர் கூட தொழில் பண்றாங்க, அவர் இப்படி செய்வாரா மாட்டாரான்னு யோசிக்க மாட்டாங்களா..?” குகன் ஆச்சரியமாக கேட்டான். 

“அதெல்லாம் யோசிச்சா இங்க ஏன் வர போறாங்க, எனக்கு இப்போ பிரச்சனையே இதை வச்சு எங்க அப்பா அனு அப்பாவை என்னென்ன பேச போறார்ங்கிறது தான்..” நெற்றியை நீவி கொண்டான். 

“நீ எதுக்கும் அவரை கூப்பிட்டு பேசி பாரேன், அவர் அந்த லேண்ட் பிரச்சனையே மனசில வச்சிட்டு எக்குத்தப்பா பேசுவார்..” குகன் சொல்ல, 

“அது தான் நானும் யோசிக்கிறேன், எனக்கு வேற வழியும் இல்லை..”  தனா சொன்னவன், குருமூர்த்தி தனியே கூட்டி வந்தான். 

“என்ன தனா..”  அவர் கேட்க, 

“ப்பா.. இது.. அவர் செஞ்சிருப்பார்ன்னு எனக்கு தோணல, நீங்க கொஞ்சம் பொறுமையா பேசுங்க, இல்லை விடுங்க, வந்தவங்களே பேசிக்கட்டும்..” என்றான். 

“என்ன பேசுற நீ..? அவன் எவ்வளவு பெரிய பித்தலாட்ட வேலை செஞ்சிருக்கான், பொறுமையா பேச சொல்ற, அவனை நேர்ல பார்த்து நாலு வார்த்தை கேட்காம விடமாட்டேன்..”  குருமூர்த்தி சொன்னவர் நிற்காமல் அவர் இடம் சென்றுவிட, தனாவிற்கு தலையிடியாக இருந்தது. 

“விடுடா.. அவரை பத்தி தெரிஞ்சது தானே..?” குகன் அருகில் வந்தான். 

“நீ வாசலுக்கு போய் அனு அப்பாவை  கூட்டிட்டு வாடா, வந்துடுவார்..” தனா சொல்ல, குகன் வாசலுக்கு வந்தான். சில நொடிகளில் கார் வந்து நிற்க, அன்பழகன் இறங்கி வந்தார். 

“வாங்க வாங்க..”  குகன் அவரை வரவேற்று அழைத்து வந்தான்

இந்த பக்கம் சார்..” கை காட்ட

அட சார் என்னப்பா.. சும்மா சித்தப்பான்னே கூப்பிடு..” என்று முன்னே நடந்தார் அன்பழகன். குகனுக்கு அவரை பற்றி தெரியும் என்பதால் மெலிதான சிரிப்புடன், அவருக்கு பின் சென்றான்

வணக்கம்..” அன்பழகன் உள்ளே வந்தவுடன் எல்லோருக்கும் பொதுவாக  கை குவித்து வணக்கம் வைத்தார். அவர் மட்டும் வந்திருக்க, தனா கண்கள் சுருங்கின

வாங்க.. உட்காருங்க..” குருமூர்த்தி சேரை காண்பித்தார்

டேய் டீ எடுத்துட்டு வா..”   குருமூர்த்தி குரல் தொடர்ந்து டீயும் வந்தது

எல்லாம் இங்க தான் இருக்கீங்க போல, எதாவது வணிக சங்கம் விஷயமா..?” அன்பழகன் கேட்க, வந்திருந்தவர்கள் அவரை பார்த்து மற்றவர்களை யோசனையாக பார்த்தனர்

இவங்க எல்லாம் உங்களை பத்தி கம்பளைண்ட் பண்ண வந்தவங்க..” ஆரம்பித்தார் குருமூர்த்தி

கம்பளைண்ட்டா..” அன்பழகன் புரியாமல் பார்க்க

இது தான்..” குருமூர்த்தி அவர் சேரில் இருந்து எழுந்து வந்தவர், அரிசி மூட்டையில் இருந்த அரசிய இருகைகளால்  வாரி டேபிள் மேல் இறைத்தார். அது அங்கும் இங்கும் பட்டு சிதறியது. அன்பழகன் மேலும் விழ, பார்த்த தனாவிற்கு அப்பாவின் செயல் சுத்தமாக பிடிக்கவில்லை

கையில கொஞ்சமா எடுத்து காமிச்சா என்ன இந்த மனுஷனுக்கு..”  குகன் வாய்க்குள் முணுமுணுத்தான்

அன்பழகன் தன் மேலிருந்த அரிசியை கையில் எடுத்து பார்க்க, “என்ன வித்தியாசம் தெரியுதா மில் முதலாளிக்கு..?” குருமூர்த்தி நக்கலாக கேட்டார். அன்பழகன் அதை கவனிக்கும் நிலையில் இல்லை. அவரின் கண்கள்  மிகவும் சுருங்கி அந்த அரிசியை பார்த்து கொண்டிருந்தது

என்னங்கய்யா.. என்கிட்ட அந்த குதி குதிச்சிங்க, இப்போ கம்முன்னு உட்கார்ந்திருக்கிங்க, கேளுங்க..” குருமூர்த்தி வந்திருந்தவர்களை பார்த்து கத்தினார். அன்பழகன் அவர் குரலில் நிமிர்ந்து பார்க்க

இவ்வளவு நேரம் என்கிட்ட வந்து எப்படி இப்படி ஒரு கேவலமான வேலையை செய்யலாம், நீங்க மட்டும் பொழைச்சா போதுமா, நாங்க பொழைக்க வேண்டாமான்னு, எங்க வயித்துல ஏன் மண்ணை.. இல்லையில்லை கல்லை போடுறீங்கன்னு கத்திட்டிருந்தாங்க..” என்றார் குருமூர்த்தி தொடர்ந்து

அதில் அன்பழகன் முகம் இறுகி போக, திரும்பி மற்றவர்களை பார்த்தார். “உங்களை நம்பி தானே உங்க பிராண்ட் அரசி எடுக்கிறோம் அன்பு, இப்படி பண்ணலாமா நீங்க..?”   ஒருவர் கேட்க

ஆமாம் இத்தனை வருஷம் இல்லாம இப்ப என்ன ஆச்சு உங்களுக்கு..? ஏன் இப்படி பண்றீங்க, எடையில ஏமாத்து, கலப்பட அரிசி, அதுல கல்லு வேற.. இது நியாயமா..?” மற்றவர் கேட்டார்

ண்ணா .. இது எப்படி நடந்ததுன்னு எனக்கு தெரியல, நான் விசாரிக்குறேன், ஆனா அதுக்கு முன்னாடி  நான் இதை நான் பண்ணியிருப்பேன்னு நீங்க நினைக்கிறீங்களா..?” அன்பழகன் அங்கிருந்த வயதில் மூத்தவரிடம் கேட்டார்

எனக்கும் அது தான் புரியல தம்பி, நீ இப்படி செய்யலாமா..?” பதில் கேள்வி  கேட்டர் அவர்

அப்போ இங்க இருக்கிற யாருமே  என்னை நம்பலை..”  அன்பழகன் நிதானமாக கேட்டார்