இராஜ பவனி 3

“இதெல்லாம் சரிப்பட்டு வருமா அனு..? அப்பா என்ன சொல்வார் தெரியலையே..” மகள் யோசனைக்கு சுஜாதா  தயங்கினார்

ம்மா.. நான் அப்பாகிட்ட கேட்டுக்கிறேன், உனக்கு இது பத்தி தெரியும் தானே..?” மகள்  கேட்க

எனக்கும் இப்படின்னு உன் பெரியம்மா சொல்ல தான்  செஞ்சாங்க, நான் தான் இந்த சம்மந்தம் முடிஞ்சிடும் நினைச்சேன்..” அவர் வருத்தத்துடன் சொன்னார்

இப்போ கூட நாம செய்யலாம்மா, உன்னால முடியறப்போ நீ என்னோட வா, மீதி நாள் நானே போய் துர்க்கை அம்மனுக்கு விளக்கு ஏத்திட்டு வரேன்..” என்றாள் அனு

ம்ம்.. எப்படியோ உன் அக்காக்கு நல்லது நடந்தா சந்தோசம் தான், அவ இப்படி எனக்கென இருக்கிறது தான் கஷ்டமா இருக்கு..” என்றார் அன்னையாய்

ம்மா.. நாம நம்பிக்கை வச்சு செய்வோம்மா, அப்புறம்  அக்காக்கு தெரியாம நைட் அப்பாகிட்ட கேட்கலாம்அவளுக்கு தெரிஞ்சா செய்ய விட மாட்டா..” என்றாள் அனு.

சுஜாதாவிற்கும் அது சரியென பட, சித்ரா ரூம் செல்லும் வரை பொறுத்திருந்து விட்டு, அன்பழகனிடம் இப்படி என்று சொன்னார். அவர் உடனே மறுக்கவில்லை என்றாலும் சம்மதமும் சொல்லவில்லை

அனு எப்படி தனியா தினமும் போய்ட்டு வருவா, ஊரோட அந்த கோடிக்கு போகணும்..” இளைய மகளை யோசித்தார்

அப்பா நான் தனியா போகலை, அம்மா இல்லை பூமிகா கூட்டிட்டு தான் போறேன்..” அனு சொல்ல, அவர் அரைமனதாக சம்மதித்தார். அதன்படி அனு தினமும் இராகு கால நேரம் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்ற ஆரம்பித்தாள். சுஜாதா உடன் செல்லாத நாட்களில் பூமிகா சென்றாள்

ஒரு வாரம் சென்ற நிலையில், “என்னடா உன் இளங்காத்து நம்ம வீட்டு பக்கமா தினமும் வீசுது..”  குகன் கிண்டலாக தனாவிடம் கேட்க

என்னடா சொல்ற..? யாரு அவளா..? எப்போ வந்தா..? ஏண்டா என்கிட்ட சொல்லலை..” வேகமாக கேட்டான் தனா

இந்த ஒரு வாரமா அம்மன் கோவிலுக்கு வந்துட்டு போறா..” என்றான் அவன்

டேய் துரோகி, இத்தனை நாளா ஏண்டா சொல்லலை..?”

ஏன் சொன்னா உடனே போய் அங்க நிக்கவா..? அதோட அனு தினமும் வரான்னு எனக்கே சரியா தெரியல, இப்போ தான் தெரிஞ்சது துர்க்கை அம்மனுக்கு விளக்கு ஏத்த வறாளாம்..”

ஓஹ்.. என்ன அவசியமாம் அவளுக்கு..?”

அவங்க அக்காக்கு கல்யாணம் ஆக போல..”

சரி சரி.. ஏத்தட்டும், நல்லது..”

டேய்.. உடனே  அங்க போய் நின்னுடாத, யார் கண்ணிலவாவது பட்டுச்சு அவ்வளவு தான்..”

ச்சே.. என்னை பத்தி தெரியாதாடா, நம்ம வீட்ல இருந்தே பார்த்துகிறேன், சம்மர் லீவ், அவளை இப்படி பார்த்தா தான் உண்டு..” என்றான்

இராகு காலத்துல தான் வருவா.. நேரம் மாறும் பார்த்துக்கோ..” குகன் சொல்ல, தனா நண்பன் தோள் தட்டி சென்றான்.

“ம்மா.. டிபன் வைங்க..” சாருலதா வர

ஏண்டி லீவ்ல தானே இருக்க, எனக்கு உதவி பண்ணலைன்னாலும் போகுது, உன் வயித்துக்கு கூட நீயே பார்த்துக்க மாட்டியா..”  வைதேகி கிச்சனில் இருந்து சத்தமிட்டார்

என்னம்மா பண்ண  உன் கையாலா சாப்பிட்டா தான் சாப்பிட்ட மாதிரி இருக்கு..” என்றாள் சாருலதா கிச்சன் சென்று

இந்த கதை எல்லாம் விடாத, ஒழுங்கா நீயே போட்டு சாப்பிட்டு ஓடு..” வைதேகி கண்டிப்பாக சொல்ல

என்ன இங்க சத்தம்..?” என்று வந்தார் குருமூர்த்தி. வைதேகி டிஃபனுடன் வெளியே வர, “வீட்டு பொம்பிளை இப்படி தான் நாலு தெருவுக்கு கேட்கிற மாதிரி கத்தி பேசுறதா..?” குருமூர்த்தி மனைவியை கடிய, வைதேகி சத்தமே இல்லாமல் அவருக்கு இட்லி எடுத்து வைத்தார்

இல்லைப்பா.. நான் தான்..” சாருலதா அம்மாவிற்காக வாய் திறக்க, வைதேகி மகளை பார்த்து மறுப்பாக தலையாட்டினார். வெளியே இருந்த குகனும், “இவளை யார் வாய் திறக்க சொன்னா..” நொந்து கொண்டான்

நான் தான் அம்மாவை டிபன் வைக்க சொல்லி கேட்டுட்டு இருந்தேன், அம்மா என்னையே சாப்பிட சொல்லி சொன்னாங்க, வேற எதுவும் இல்லை..” சாருலதா அம்மாவின் மறுப்பையும் மீறி சொல்லி முடித்தாள்

ஏன் உனக்கு சாப்பாடு வைக்கிறதை விட உங்க அம்மாக்கு என்ன கழட்டுற வேலை இருக்காம்..? இந்த வெந்து வேகாத இட்லி செய்றது அவ்வளவு கஷ்டமா இருக்கா உனக்கு..?”  மகளிடம் ஆரம்பித்து மனைவியிடம் பாய்ந்தார்

இனி நானே வச்சிடுறேன்ங்க.. நீங்க சாப்பிடுங்க..”  வைதேகி சொல்லி சட்னி, சாம்பார் வைத்தார்

சாரு நீயும் உட்காரு, அவளுக்கும் வை..” மகளை கூப்பிட

இல்லைப்பா.. நான் அப்பறம் சாப்பிட்டுகிறேன், நீங்க சாப்பிடுங்க..” மகள் மறுத்தாள்

அப்பா கூட உட்காரும்மா.. வாம்மா..” மகளை பக்கத்தில் அமரவைத்து சாப்பிட ஆரம்பித்தார்

என்ன இப்போ தான் சாப்பிடுறீங்களா..? எப்படிப்பா இருக்க தம்பி..”  என்று வந்தார் குருமூர்த்தியின் அக்கா பேச்சியம்மாள்

வாங்க.. வாங்க அண்ணி..” வைதேகி அவருக்கு தண்ணீர் கொடுத்தார்

வாக்கா.. உட்காரு, ஏண்டி சாப்பாடு போடுறதை விட்டு தண்ணீர் கொடுக்க, நீ வாக்கா..”   குருமூர்த்தி அக்காவை டேபிளுக்கு கூப்பிட்டார்

இப்போ தான் சாப்பிட்டு வந்தேன் தம்பி, நீ சாப்பிடு..” அவர் சொல்ல

அண்ணி.. வாங்க, ஒரு இரண்டு இட்லி சாப்பிடுங்க..” வைதேகி அவருக்கும் வைத்து கொடுத்தார்

அத்தை எப்படி இருக்கீங்க..?” சாரு எழுந்து நின்று  நலம் விசாரிக்க

சாரு கண்ணு நான் நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்க..? உட்கார்ந்து சாப்பிடும்மா..” என்றவர் தானும்  சாப்பிட ஆரம்பித்தார்

ம்மா.. சாம்பார்..” சாரு கேட்க

என்ன வைதேகி இது பொம்பிளை பிள்ளையை இப்படி உட்கார வச்சு சாப்பாடு போட்டுட்டு இருக்க..?” என்று ஆரம்பித்தார் பேச்சி

போச்சு பேச்சி ஆரம்பிச்சிடுச்சு..” சாரு நொந்து கொள்ள, வைதேகிக்கு இனி நடக்க போவது புரிய, மனதில் ஒரு சலிப்பு

கல்யாண வயசில நிக்கிறா, இன்னும் நாலு வேலை பழகாம  இப்படியே இருந்தா எப்படி, பாரு இன்னும் குளிக்க கூட இல்லை, நாளைக்கு கல்யாணம் பண்ற வீட்ல இப்படி நடந்துக்கிட்டா யாருக்கு கெட்ட பேரு, ஏண்டா தம்பி இது..? உன் பொண்ணுக்கு எதுவும் சொல்ல மாட்டியா..? அப்பறம்  என்ன படிமானம் கத்து கொடுத்திருக்காங்கன்னு உன்னை தான் பேசுவாங்க..” பேச்சி பேசி முடிக்க, தம்பிக்காரன் ஆரம்பித்தார்

என்னக்கா நீ இது தான் என் வேலையா..? இவங்களுக்கு சம்பாதிச்சு கொட்ட தான் நான் நாய் மாதிரி ஓடுறேன், வீட்ல இருக்க பொம்பிளை இவதான் மகளுக்கு நல்லது, கெட்டது எல்லாம் கத்து கொடுக்கணும், எங்க இவளுக்கே நாம இன்னும் கத்து கொடுத்திட்டு இருக்க வேண்டியதா இருக்கு, என்ன பண்றது எல்லாம் என் தலையெழுத்து..” அநியாயத்திற்கு சலித்து கொண்ட குருமூர்த்தி

எங்கக்காக்கு இன்னும் ரெண்டு பூரி வை, எல்லாம் சொல்லணும்..” என்றார் அதிகாரமாக

இல்லை தம்பி எனக்கு போதும், வைதேகி உன் மக நல்லதுக்கு தான் சொல்றேன், நீ அண்ணி மேல கஷ்டபட்டுக்காத..”  என்றார் நைச்சியமாக

அவ என்ன உங்க மேல கஷ்டப்படுறது, வேலையை பாருங்கக்கா..” குருமூர்த்தி எள்ளலாக சொன்னார்

இல்லடா தம்பி என்னைக்கு இருந்தாலும் தம்பி பொண்டாட்டி அவ தான் எங்களுக்கு முன்ன செய்யணும், அதான்..”

என்னக்கா நீ இவளுக்கு எல்லாம் பயப்படுற, உனக்கு செய்ய மாட்டேன்னு சொல்லிடுவாளா இவ..”  குருமூர்த்தி எகிறி பேசினார்

வைதேகி அப்படி சொல்லாது, அவ நல்லதுக்கு தான் நான் எதுவும் சொல்வேன்னு அவளுக்கு தெரியுமே..” பேச்சி சொல்ல

ஆமா அத்தை.. அனுபவப்பட்ட உங்க பேச்சை அம்மா கண்டிப்பா கேட்க தான் வேணும், அம்மா கேட்டுக்கவும் செய்வாங்க..”  என்று வந்தான் தனா. 

“வாப்பா தனா எப்படி இருக்க, ஆள் மெலிஞ்சு போயிட்டியே..” மிகவும் பாசமாக நலம் விசாரித்தார் அத்தை. 

“உங்களை பார்க்காத ஏக்கம் தான் அத்தை..” என்றான் தனா கிண்டலாக. 

“தனாக்கு எல்லாம் விளையாட்டு..”  பேச்சி  அசட்டு சிரிப்பை சிந்தினார். 

“விளையாண்டிட்டு இருந்தா நம்மளை கேனையாக்கிடுவாங்க அத்தை, அப்புறம் நீங்க சொல்லுங்க..” என்று அமர்ந்தான். 

“சும்மா உங்களை எல்லாம் பார்த்திட்டு போக தான் வந்தேன், எனக்கும் உங்களை விட்டா யார் இருக்கா..?” மூக்கை சிந்தினார். 

“என்னத்தை  போன வாரம்  உன்னை பெங்களூர் பஸ்ல பார்த்தேன், மக வீட்டுக்கு போன போல, ஆள் கருத்து போயிட்டியே அத்தை..”  என்றான்.  

“ஆமாஅந்த குறைய ஏன் கேட்கிற தனா, பேத்தியை  சமாளிக்க முடியலன்னு மக போன் பண்ணி ஒரே அழுகை, அதான் போய் கொஞ்ச நாள் மகளுக்கு எல்லாம் செஞ்சுட்டு வந்தேன்..” என்றார். 

“என்னத்தை ஒரு பொண்ணை சமாளிக்க முடியலையா..?” தனா ஆச்சரியமாக கேட்டான். 

“என்ன பண்றது தனா பொண்ணை பூ மாதிரி வளர்த்துட்டேன், என் பேத்தியும் கொஞ்ச நேரம் சும்மா இருக்கிறதில்லை..”

“வீட்டு வேலைக்கு ஆள் வச்சுக்க வேண்டியது தானேத்தை..”

“அதெல்லாம் முதல்லே வச்சாச்சு, மாப்பிள்ளை என் பொண்ணை கை மேல வச்சு தாங்குறார்.. போன வாரம் கூட பேத்தியை என்கிட்ட விட்டுட்டு ரெண்டு பேரும் டெல்லி போய்ட்டு வந்தாங்க..”  என்றார் பெருமையாக.