எப்போவும் போல தான்.. எனக்கு  இந்த வலி எல்லாம் பழகிடுச்சு..” சின்னு சொல்ல, விஷ்ணு உள்ளே குத்தியது

என்னடா இப்படி பேசுற..? நீ சீக்கிரம் நல்லாகிடுவ..” ஈஷ்வர் அவன் மற்றொரு பக்கம் சென்று தலை தடவி சொன்னான்

எனக்கு நல்லாகவே வேண்டாம் மாமா.. இப்படியே போயிட்டா..”

சின்னு..” மூவரும் ஒரே நேரத்தில் அதட்டினர்

மகா நான் சொன்னதை சொல்லிட்டான்னு தெரியுதுண்ணா..” விஷ்ணு கண்கள் ஈரம் பார்த்து சின்னு சொன்னவன்

அதுல எந்த தப்பும் இல்லைண்ணா, எனக்கு இப்படி இருக்க பிடிக்கல, இன்னும் எத்தனை வருஷத்துக்கு இந்த ஹாஸ்பிடல், ட்ரீட்மெண்ட், மெடிசன், இந்த ஊசின்னு காலம் தள்ளுறது, சுத்தமா பிடிக்கல, என்னை விட்டுட சொல்லி சொல்லுங்க மாமா.. நான் போறேன்..” அவன் பேசி கொண்டே போக, விஷ்ணு அவனை அப்படியே அணைத்து கொண்டான்

விஷ்ணு.. அவனை விடு..”  ஈஷ்வர் அவனை பிரித்து தனித்து உட்கார வைத்தான்

ண்ணா.. ப்ளீஸ்ண்ணா.. உன்னை இப்படி பார்க்க எனக்கு பிடிக்கல.. எப்போவும் யாருக்கும் அடங்காத என் அண்ணா தான் எனக்கு வேணும்..”  சின்னு சொல்ல, விஷ்ணு அவனை பார்த்தவன்

உனக்கு நான் வேண்டாமாடா..?” கேட்டான்

ண்ணா.. நீ எனக்கு எப்போவும் வேணும், அதனால தான் இப்போகூட  மகாகிட்ட..”

சின்னு..”  மகா இடை புகுந்து அதட்டினாள்

நீ அவகிட்ட என்ன சொன்ன எனக்கு தெரிய வேண்டாம்டா, உன் தப்பு இதுல எங்கேயும் இல்லை, உன்னோட இந்த நிலைக்கு நான் தான் காரணம், அப்படி போறதுன்னா நான் தான் போகணும், நீ இல்லை..”

“இந்த உலகத்துல உன்னை விட வாழ தகுதியான ஆள் யாரும் இல்லைடா.. நீ இருடா..”   விஷ்ணு சொன்னவன், எழுந்து வெளியே சென்றுவிட, ஈஷ்வர் அவன் பின்னால் ஓடினான்

மகாவிற்கு தாங்க முடியவில்லை. சின்னுவை பார்த்து பொங்கிவிட்டாள்.

இதுக்கு தான் நீ ஆசைப்பட்டியா சின்னு..   உன்மேல உன் அண்ணாக்கு எவ்வளவு பாசம்ன்னு உனக்கு தெரியாதா..?  நீ பேசுற ஒவ்வொரு வார்த்தையும் அவரை எவ்வளவு கொல்லும்ன்னு உனக்கு புரியாதா..? எப்போ இருந்து நீ இப்படி ஆன சின்னு..?”

நமக்கு பிடிச்சவங்களுக்காக போராடி மீண்டு வரணும்ன்னு உனக்கு தோணல இல்லை.. நீ ஒரு செல்பிஷ்டா, உனக்கு உன் கஷ்டம் பெருசு, அது உண்மையும் கூட தான், அனுபவிக்கிற உன் வேதனை ரொம்ப பெருசு தான்  இல்லைங்கல, ஆனா அதுக்காக உன் மேல உயிரை வச்சுக்கிற எங்களை இப்படி கொல்லாதடா..”

ஒன்னு மட்டும் சொல்றேன் கேட்டுக்கோ அப்படி உனக்கு ஏதாவது ஆகிருச்சு நாங்க கடைசி வரை இப்படித்தான் இருப்போம், உன் ஆசை நிறைவேறாது, எப்போவும் நிறைவேறாது.. புரிஞ்சுதா..”  மகா படபடவென பொரிந்து தள்ள, சின்னுவிற்கு ஏதோ போலானது

என்னை மட்டும் நினைக்கிறேனோ..?” அவனிடம்  மாற்றம் வர ஆரம்பித்தது. அவன் எண்ணங்கள் மாற ஆரம்பித்தது

ஈஷ்வர்.. நீ கிளம்பு, வந்து மூணு நாள் ஆச்சு, ட்ரைனிங் பீரியட் ரொம்ப அவசியமானது.. இங்க நாங்க பார்த்திக்கிறோம்..”  சக்ரவர்த்தி சொல்ல, ஈஷ்வர் விஷ்ணுவை தான் பார்த்தான்

நான் ஓகே தாண்டா, நீ கிளம்பு..”  அவனும் சொல்ல, ஈஷ்வருக்கும் அதிக நாள் லீவ் எடுக்க முடியாது என்பதால் கிளம்ப ஆயத்தமானான். அன்றிரவே நரசிம்மன் பிளைட் டிக்கெட் எடுத்து கொடுத்துவிட்டார்

என்னை துரத்த அவ்வளவு அவசரம், வரேன் இருங்க..” உள்ளுக்குள் கருவி கொண்டவன் சின்னுவை பார்க்க சென்றான்

சின்னு.. நான் ஐபிஸ் முடிச்சு  வரும் போது நீ என்னை வெல்கம் பண்ண ஏர்போர்ட் வரணும் பார்த்துக்கோ.. உனக்கு நாங்க எப்படி தெரியல, ஆனா எங்களுக்கு நீ வேணும்.. முக்கியமா உன் அண்ணனுக்கு.. புரியுது தானே சின்னு..”  அவன் கை பிடித்து அழுத்தம் கொடுத்தவன், வெளியே வர, நரசிம்மன் காருக்கருகில் நின்றிருந்தார்

ஈஷ்வர் சில நொடிகள் அவர் முன் நின்றான். மனதில்  ஆசை பொங்கியது. இப்போவாவது அப்பா என்கிட்ட சொல்லமாட்டாரா லவி எங்கன்னு.. அவரை எதிர்பார்ப்போடு பார்த்தான். அவரோ அழுத்தமாக நிற்க, மகனுக்கு ஏமாற்றம். அதுவே அவனை இன்னும் உறுதியாக்கியது

உடம்பு பார்த்துக்கோ ஈஷ்வர்..” கங்கா  மகன் கை பிடித்து சொல்ல, தன்னை மீட்டவன், எல்லோருக்கும் சொல்லி கொண்டு விஷ்ணுவுடன் ஏர்போர்ட் சென்றான்.

………………..

சின்னு ஹாஸ்பிடல் சேர்ந்து ஒரு வாரம் முடிந்திருந்தது. அவனின் இரண்டு கிட்னியும் மிகவும் பாதிக்கபட்டிருக்க, முதலில் உடனடியாக கிட்னி டிரான்ஸபிளான்டேஷன் செய்ய வேண்டும் என்று முதல்லே சொல்லியிருந்தார் பிரதாப்.

அவனுக்கான டோனரை நரசிம்மன் ஒரு வாரத்தில்   தேடியும்   பிடித்துவிட்டார். ஆக்சிடென்ட் மூலம் இறந்தவரின்  கிட்னி இவனுக்கு சரியாக இருக்கபணம் மட்டும் அதிகம். அதுவும் அவர்கள் தேவைக்காக நரசிம்மனே கொடுத்தார்.  

ஆப்ரேஷனிற்கு சின்னு தயாராக இருக்க, எல்லாம் அங்கு தான் இருந்தனர்சின்னு ஸ்ட்ரெச்சரில் உள்ளே கொண்டு போக, எல்லோரும் அவனிடம் பேசினர். இறுதியாக மகா, விஷ்ணு மட்டும் இருந்தனர். சின்னு இருவரையும் பார்க்க, விஷ்ணு அருகில் வந்து, அவன் கை பிடித்து கொண்டவன்

சின்னு உனக்கு ஒரு உண்மையை சொல்லட்டா..?”  கேட்டான். என்ன என்று சின்னு பார்க்க

நான் என்னதான் வெளியே இப்படி இருந்தாலும் உன்னளவுக்கு எனக்கு மனதைரியம் இல்லைடா, தாங்க மாட்டேன், சீக்கிரம் உடைஞ்சிடுவேன்என்னை அப்படி விட மாட்ட தானே.. எனக்காக வருவ தானே..?” அவன் கையில் அவன் கண்ணீர் துளி விழ சட்டென்று தள்ளி சென்றுவிட்டான்

இறுதியாக மகா அவனுக்கு அருகில் சென்றவள், “உன்னை ரொம்ப எதிர்பார்த்து காத்திருப்பேன் சின்னு, நீ சொன்ன எந்த ஆசையும் பலிக்காது, எனக்கு நீ என் அத்தை பையன் சின்னுவா மட்டும்  தான் வேணும், புரியுது தானே..”   சொல்ல, சின்னு தலை தானே ஆடியது சம்மதமாக. மகாவிற்கு அவ்வளவு மகிழ்ச்சி

உண்மையாவா..?”

உண்மை மகா, அண்ணனுக்காக வருவேன்..”   அவன் மெல்லிய குரலில் உறுதியாக சொல்ல, மகாவிற்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.

தேங்க்ஸ் சின்னு.. உன்னை நான் நம்புறேன்..”  என்று சந்தோஷத்துடன் அவனை உள்ளே அனுப்பி வைத்தாள். ஆப்பரேஷன் வெற்றி கரமாக முடிய, சின்னுவும் வந்தான். ஆனால் உயிர் இருந்தும் இல்லாதவனாக வந்தான்

ஆம்கோமா’  சென்றுவிட்டான். அவ்வளவு தான் விஷ்ணு மொத்தமாக உடைந்து போனான். மாறி போனான். டாக்டராகவும் அவனால் இருக்க முடியவில்லை

சின்னுவை வீட்டிற்கே கொண்டு வந்துவிட்டனர். விஷ்ணு தம்பிய நேரில் பார்க்க முடியாமல் ஓடி ஒளிந்தான். துர்கா ஹாஸ்ப்பிடல்லே சக்கரவர்த்தி விஷ்ணுவை வற்புறுத்தி உட்கார வைத்தார். அவனால முழுமனதோடு வைத்தியம் பார்க்க முடியவில்லை. பிரச்சனையை இழுத்து விட்டு கொண்டான். அதோடு முற்று புள்ளியும் வைத்து விட்டான்

ஹாஸ்பிடல் செல்வதில்லை. வைத்தியம் பார்ப்பது இல்லை. சக்ரவர்த்தி அவனுக்கு புரிய வைக்க முயல, விஷ்ணு இடம் கொடுக்காமல் சுற்றினான்குற்ற உணர்ச்சி அவனை கொன்று தின்றது

இப்படியே மாதங்கள் செல்ல, சக்கரவர்த்தி சென்னை கமிஷனராக பதவியேற்றார். ஈஷ்வரும் ஐபிஸ் முடித்து வந்தான். சென்னையிலே முதல் போஸ்டிங் கிடைத்தது

நரசிம்மன் மகனை கொண்டாடி தீர்த்துவிட்டார். வீட்டிற்கு வரும் வழி நெடுக கட்சி தொண்டர்கள் குவிந்திருந்தனர். அன்றிரவு விருந்து அமர்களப்பட்டது. ஈஷ்வர் எல்லாவற்றையும் சிரிப்புடன் பார்த்திருந்தான். மறுநாள் சக்ரவர்த்தி முன் ஜார்ஜ் எடுக்க சென்றான்

நரசிம்மன் உடன் வந்தார். மகன் பெருமையை பார்க்க, அவர் வெளியே இருக்க, ஈஷ்வர் உள்ளே சென்றான். சக்ரவர்த்தி இவனை பார்க்கவும் வாழ்த்தி கையில் போஸ்டிங் லெட்டரை கொடுக்க, வாங்கி வைத்து  கொண்டவன், அடுத்த நொடி அவனின் ராஜினாமா கடிதத்தை எடுத்து கொடுத்தான்

ஈஷ்வர்.. என்ன இது..?” சக்கரவர்த்தி கோபத்துடன் கேட்க

ராஜினாமா.. எனக்கு இந்த வேலை வேண்டாம், ஐபிஸ் வேண்டாம்..”  என்றவன்வெளியே வரும் போதே அவன் தோளில் பெருமிதமாக அமர்ந்திருந்த நட்சத்திரத்தை கையில் எடுத்தான்

நரசிம்மன் அவனை புரியாமல் பார்க்க, அவர் கையில் வைத்தான். “ஈஷ்வர்.. என்னப்பா இது..” நரசிம்மன் கலக்கத்துடன் கேட்க

நான் என் வேலையை ராஜினாமா செஞ்சுட்டேன்.. இனி லிங்கேஷ்வரன் நரசிம்மன் ஐபிஸ் இல்லை..”  அத்தனை கோபத்தையும் இறக்கினான்

என்ன பேசுறீங்க நீங்க..?”    நரசிம்மன் மகனின் அவதாரத்தில் அதிர்ந்து போனார்

இதுக்கு தானே இவ்வளவு பண்ணீங்க, எல்லாம் போச்சு..”

அப்போ மருமக..” நரசிம்மன் பல்லவியை நினைவு படுத்தினார். ஈஷ்வருக்கு கொதித்தது

அவளை எப்படி கண்டுபிடிக்கணும்ன்னு எனக்கு தெரியும்..”  சொன்னவன், விஷ்ணுவுடன் தங்கினான். அன்றிரவு சக்கரவர்த்தி அவனை சந்திக்க OMR  வரச்சொன்னார் தனியாக

ஈஷ்வர் யோசனையுடன் சென்றான். “சின்னு இப்படி ஆனது யாராலன்னு எனக்கு கண்டுபிடிச்சு கொடு..” என்று  கேட்டார்.

“நான் எப்படி மாமா..?” ஈஷ்வர் புரியாமல் கேட்டான்.

நான் மாமாவா கேட்கல, கமிஷ்னரா தான் ஆர்டர் போடுறேன்..”  என்றார் அவர்

அதெப்படி நான் தான் ரிசைன் பண்ணிட்டேனே..”

இதுவா..?”  சக்ரவர்த்தி அவன் கண் முன்னே அதை கிழித்து போட்டார். ஈஷ்வருக்கு பிடிக்கவில்லை அவர் செயல்

ஈஷ்வர் உன்னை சென்னை வர வச்சதே நான் தான்..”   என, ஈஷ்வர் கண் சுருக்கினான்

உண்மையை சொல்லணும்ன்னா என்னால முடியல, டிபார்ட்மென்ட் உள்ளே எனக்கு எதிரிங்க இருக்காங்க..” என்றார்

எனக்கு புரியல மாமா..” என, சக்கரவர்த்தி எல்லாம் சொன்னார்

இவ்வளவு கண்டுபிடிக்க முடிஞ்ச என்னால அந்த மாபியா கேங்க் தலைவனை கண்டுபிடுக்க முடியல, அதுக்கு தான் உன் ஹெல்ப் கேட்கிறேன்..”

இன்னும் சொல்ல போனால் நீ இன்னைக்கு என்கிட்ட ராஜினாமா கொடுத்ததும் நல்லதா போச்சு, இப்போ எல்லோருக்கும் நீ ஐபிஸ் இல்லை தெரிஞ்சிடுச்சு, இனி உன்னால இதை செய்ய முடியும்..”

நான் நம்ம CMகிட்ட பர்சனலா இதை பேசிட்டேன், அவர் தான் நம்ம டிபார்ட்மென்ட்டுக்கும் பொறுப்பு எடுத்திருக்கார், சோ நமக்குள்ள ரொம்ப சீக்ரெட்டானா  ஆப்பரேஷனா தான் இது இருக்கும்.. உன் சப்போர்டுக்கு ஒரு டீம் இருக்கு, அவங்க உனக்கு ஹெல்ப் பண்ணுவாங்க.. இது அவங்களோட டீடெயில்ஸ், அண்ட் இது அந்த மாபியா கேங் பத்தின பைல்..” என்று கொடுக்க, ஈஷ்வர் தயங்கினான்

ஈஷ்வர்.. உன் அப்பா, இந்த வெளி உலகத்தை பொறுத்த வரை நீ டிஸ்பி இல்லை, சாதாரண ஈஷ்வர் தான்..”  என்றவர், இறுதியாக,  

உன் விஷ்ணுக்காக இதை செய் ஈஷ்வர், அவனை என்னால சரி பண்ண முடியல, சின்னு நிலைக்கு அவன் தான் காரணம்ன்னு அவனை அவனே சிதைச்சிட்டு இருக்கான், அவனை உன்னால தான் மீட்க முடியும்.. என் ரெண்டு மகன்களுக்கு உன் உதவு தேவைசெய்வ தானே..?” கேட்க, ஈஷ்வர் கைகள் அந்த பைலை வாங்கி கொண்டது.

அப்பாவுக்காக ஐபிஸ் தூக்கி போட்டவன், விஷ்ணுவிற்காக அதை ஏற்று கொண்டான்.