SM 14 2
Advertisements
“சொல்லு என் மேல இவ்வளவு குற்றசாட்டு வச்ச இல்லை…. அதுல ஒன்னையாவது உன்னால நிரூபிக்க முடியுமா?” எனக் கேட்டான்.
ரித்விகா பதில் சொல்லாமல் நிற்க, “இதை நீயா பேசலை.” என்றவன்,
“நீங்க எல்லாம் தனியா பிஸ்னஸ் ஆரம்பிக்கிறீங்கன்னு தெரிஞ்சும், நான் இன்னும் எல்லோருக்கும் சேர்ந்துதான் வேலைப் பார்த்திட்டு இருக்கேன்.”
“நான் நினைச்சிருந்தா அதை ஒரு பிரச்சனையாக்கி தடுத்திருக்கலாமே…. அப்படி எதாவது செஞ்சேனா நானு.”
“இப்ப சொல்றேன். இனி நான் உங்களோட இருக்கிறதா இல்லை. தாத்தா எனக்கு என் பங்கு குறைச்சுக் கொடுத்தாலும் பரவாயில்லை. நான் தனியா போறேன்.” என்றவன், “தயவு செய்து என்னை இனி பிடிச்சு வைக்க நினைக்காதீங்க.” எனச் சொல்லிவிட்டு,
“அம்மா, நான் போய்க் கீர்த்தியையும், அபியையும் அழைச்சிட்டு வரேன்.” என வெளியே சென்றுவிட்டான்.
எல்லோரும் சேர்ந்திருக்க வேண்டும் என எப்போதும் தர்மாதான் மெனக்கெடுவான். ஆனால் இன்று அவனே தனியாகப் போகிறேன் என்றது, எல்லோரையும் அதிர்ச்சியில் வாய்யடைக்கச் செய்திருந்தது.
தர்மா எப்போதும் விட்டுக் கொடுத்து போவதால் அவனை எளிதாக நினைத்தனர். ஆனால் இன்று அப்படியில்லை எனக் காட்டிவிட்டு சென்றுவிட்டான்.