பூஜை மணி சத்ததில் அனைவரும் சன்னிதி முன் சென்றனர்..,
பூசாரிக்கு, அருள் இறங்கியதிற்கு அறிகுறியாக உடம்பு லேசாக ஆடியது.. அவரின் ஆட்டத்திற்கு ஏற்ப உடுக்கையின் சத்தம் கேட்டது.
சில வினாடிகளில் உடுக்கை சத்தம் நின்றது..
“விஸ்வநாதா….” என்ற பூசாரியின் குரலுக்கு தோள் துண்டினை இடுப்பில் கட்டி அவரின் முன் நின்றார் விஸ்வநாதன்., கையில் எடுத்த விபூதியை அவர் கையில் கொடுத்தவர்.., “நீ”. கேட்டத கெடுத்துட்டேன் போதுமா?? என்றவர் வாங்கிக்க என்று திருநீரை அவரின் நெற்றியில் பூச..,
அதனை கேட்டவுடன் பூசாரியின் காலில் விழுந்தார் விஸ்வநாதன்.., “பூசாரி போ… போ… இனி உனக்கு நல்லகாலம் தான் என்று அருள் வழங்கினார்..”
“நேத்து சாமி குறின்னு ஏதோ சொன்னாங்க எனக்கு புரியலை அது என்ன பாட்டி??”
“சாமிகிட்ட குறி கேக்குறது எல்லா கோவில்கலையும் நடக்குற விசயம்தான் … வெளி போக வீட்டு ஆளுங்க கிட்ட அனுமதி வாங்குவோம் இல்லையா., அது மாதிரிதான் இது சாமிகிட்ட உத்தரவு வாங்கிட்டு திருவிழா ஆரம்பிப்பாங்க.., அந்த சமயத்துல சாமியே வந்து பேசுறத நம்பிக்கை.., அப்ப அவங்க, அவங்க மனக்குறைய சாமிகிட்டசொன்ன சாமி அத தீர்த்து வைக்கும்னு ஒரு நம்பிக்கை”..
“நேத்து அந்த கருப்பு சாமி முன்னாடி சாமி ஆடினார்ல.., அவர் தான் இந்த கோயிலோட பெரிய பூசாரி ரொம்ப வயசானவரு..”
“ம்ம் ..நம்ம… தாத்தாவ விடவா பாட்டி??”
“ஆமாம்.., அவரவிட அஞ்சாறு வருசம் பெரியவரு…”
‘அவரு மேல கருப்பசாமி இரங்கி எல்லாருக்கும் நல்ல வாக்கு சொல்லும்..”
“அது தான் தாத்தாகிட்டயும் அப்படி சொன்னாறா!!!’
ஆமா.., ஆனா “இந்த ஒரு வார்த்தைக்காக நாங்க இருபத்திநாலு வருசம்மா காத்துகிட்டிருந்தேம்..” என பெரு மூச்சு விட
“ஏன் பாட்டி??” என்றால் திவ்யா
அவளை வருதத்துடன் பார்த்த பார்வதியை நோக்கி, ‘சொல்லவேண்டான்னா விட்டுருங்க பாட்டி” என்றாள் திவ்யா.
“எனக்கு மூனு பசங்க மட்டுமில்ல ஒரு பொண்ணும் இருக்கா.., “பேரு கோதை… பேருக்கு தகுந்தபடி அப்படி ஒருஅழகு., அமைதி யாருகிட்டையும் சத்தமா கூட பேச மாட்டா.., “
அவசரமாக அவள் வாயை கையால் மூடி,”எதுவும் பேசாத” என்று தலையசைத்தவர்..,
“தீர்கசுமங்கலியா புருச, புள்ளங்களேட சந்தோசமா இருக்கா” என்றவரின் கண்ணில் இருந்து நீர் இறங்கியது
“ராஜேந்திரனுக்கும், வாசனுக்கும் இளையவ.., இரத்தினத்துக்கு அக்கா…. மருமகன் பேரு சிவராமன்.., எங்க ஊருல இருக்கற எல்லா வீட்டாளுங்களும் ஏதோ ஒரு வகையில சொந்தகாரவங்கதான்”
“மாப்பிள்ளையும் எங்க சொந்தம்தான் வசதி கம்மினாலும் நல்ல குணமானவரு..,” அவரோட குணத்துக்காகவே எங்க கோதைய அவருக்கு கொடுத்தோம்.., அவரும் அப்படிதான் பாத்துக்கிட்டாரு எம்பொண்ண.”
“புருசனா ..,புள்ளையானு வரும் போது புருசன் பக்க தட்டுதான ஒசந்து நிக்கும்.., என்னதான் கோபம் இருந்தாலும் அவ மாசமா இருந்தப்பா அவள ஊரைவிட்டு கூட்டிட்டு போனது நடந்த பிரச்சனை எல்லாம சேந்து கோபத்த அதிகமாக்கிடுச்சு..,”
“இப்ப வரைக்கும் அது கொறஞ்சுதா, இல்லையா தெரியாது”.. என்றவரை புரியாமல் திவ்யா பார்க்க..,
“எம்பொண்ண பத்தின பேச்சு அன்னியோட நின்னுபோச்சு.., இன்னிக்கு வரைக்கும் யாரும் அவளைபத்தி பேசுனதில்லை..,”
“நா…. வோண்டிக்குறதெல்லாம் ஒன்னுதான்.., இந்த சாமிகிட்ட நா சாகுறதுக்குள்ள எம்பொண்ண ஒரு தடவை கண்ணுல காட்டிடுன்னு என்று கண்ணீர் விட்டவர் கண்களை திவ்யா துடைத்தாள்..,
“கண்டிப்பா பாட்டி.., உங்க பொண்ணு உங்கள பாக்க வருவாங்க!!!” என்று திவ்யா ஆறுதலாக அவர் கையை பிடித்தாள்
“எம்பேத்திக்கும் கூட உன்னேட வயசு தான் இருக்கும்” என்றவாரே அவளின் தலையை தடவ..,”
“அத்த பொங்கல் பொங்கிடிச்சு.,” என்று மங்கையின் குரல் கேட்டது.., “வாமா…… அங்க போவேம்…” என்று திவ்யாவின் கையை பிடித்த படி பொங்கல் வைக்கும் இடம் சென்றார் பார்வதி.
மங்களுர்.., அதிக மனித நடமாட்டம் உள்ள வீதி என்றாலும்.., அந்த வீடு வீதியின் முடிவில் இருந்ததால் சற்று அமைதியாக இருந்தது..,
கேரளாவின் எல்லை பகுதி என்பதால் அனேக வீடுகள், கோவில்கள் அனைத்தும் கேரள பாணி கட்டிடக் கலையே.., அதில் இந்த வீடு மட்டும் சற்றே மாறுபட்டு தமிழ் நாட்டு பாணி கட்டுமானத்தை கொண்டது..,’
நான்கடி காம்பவுண்ட் சுவரின் உள்ளே பெரிய தோட்டதுடன் கூடிய தொட்டி கட்டிய இரண்டடுக்கு வீடு..,
கீழே வாயிற் கதவை தாண்டியதும்… தொட்டியுடன் கூடிய ஹால் அதை சுற்றி தொட்டியை நோக்கியவாரு அமைந்த சமையல் அறை, டைனிங்க் ஹால், பூஜை அறை, விருந்தினர் தங்கும் அறை, என்றிருக்க சமையல் அறையின் பக்கவாட்டிலிருந்து மாடிக்கு செல்ல படி அமைத்திருந்தது
மாடியில் மெத்தம் நான்கு அறைகள்.. அதில் இரண்டு அறைகளின் பால்கணிகள் கடல் நோக்கியிருக்க, மீதமிரண்டு அறைகளின் பால்கணி அந்த வீட்டின் தோட்டத்தை பார்ப்பது போல் கட்டப்பட்டிருந்தது.
இங்கு ஊரில்.. கிடைக்கும் அத்தனை விதமான பூக்களும் சில வகையான பல மரங்களும் அந்த தோட்டத்தில் உண்டு. பூந்தோட்டத்தின் நடுவில் வீடு அதை பராமரிப்பது அந்த வீட்டின் நாயகி கோதை.
“கோதை…., ஒரு கப் டீ கொடும்மா..”, என்றபடி கிட்சனுள் நுழைந்தார் சிவராமன்..
அவரிடம் டீயை கொடுத்தவரோ.., “என்னங்க எங்க வினய்..??” என்று கேட்க
“ம்…… இத இப்ப செல்லுங்க.., இந்த பூ செடி தான் வேணும்ன்னு அந்த நர்சரிகாரன்கிட்ட செல்லுறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கனும்..,”
“எதுக்குடா இவ்வளவுன்னு கேக்க வோண்டியது தான..??”
கேட்டா ……… “அண்ணா நீங்க மட்டும் தான் இந்த மாதிரி செடியெல்லாம் கேக்குறீங்க.., இங்க கிடைக்குறதில்ல ஊர் பக்கம் இருந்துதான் வரவைக்கனும்.., டிரான்ஸ்போர்ட் அது இதுன்னு சொல்லி ஐநூரூ ரூபாய வாங்கிட்டான்”
“நீ…, அம்மாட்டா வாங்கிக்கனு சொல்ல வேண்டியது தானடா..??”
“எங்கிட்டயாவது ஐநூரூ தான்.., உங்ககிட்டனா அவன்வீட்டு கதைய சொல்லி ஆயிரம் ரூபா வாங்கியிருப்பான் இல்லையாப்பா., “ என்று சிவராமனை துணைக்கழைக்க..
“டேய்……… இது உனக்கு உங்க அம்மாக்கு அந்த நர்சரிகாரணுக்கு இருக்குற பிரச்சனை., இதுல என்னைய ஏண்டா இழுக்குற என்றவர்.., கோதை நைட்டுக்கு எனக்கு சப்பாத்தி குருமா பண்ணுமா போதும்…” என்றவரை வினய் பார்க்க,
“எது எப்படி இருந்தாலும்.., சப்பாதியும் குருமாவும் முக்கியம்டா மகனே” என்ற படி தன் வழக்கமான நடைபயிற்சிக்கு சென்றார்.
வினய், வாங்கி வந்த அந்த ஜாதி மல்லி செடியை தோட்டத்தில் பதியம் செய்ய கோதை நிலத்தில் குழி பறிக்க.,” குடும்மா நா செய்றேன்..,” என்றபடி குழி பறிக்கும் வேலையை அவன் ஆரம்பித்தான்
‘வினய்…. துளசி போன் பண்ணுணாலாப்பா ..??”
வினய் சிரித்தபடி……… ம்மா…….”காலைல தான பேசுனீங்க., இப்ப மணி ஐஞ்சுதான் ஆகுது என்னமே மாசகணக்கானது போல பொலம்புறீங்க..,”
“அம்மா… அவ சின்ன பொண்ணு இல்ல.., இந்த ஊர்ல இருக்குற பாதி கம்பனிகளுக்கு இன்வெஸ்ட்மென்ட் அட்வைஸ் பண்ற அட்வைசர்., விட்டா இந்த ஊரையே வித்துட்டுவந்துடுவா .., அவள என்னமோ காக்க தூக்கிட்டு போயுடுறமாதிரி கவலைபடுறீங்க..” என பேசும் போதே
துளசி காலிங்…….. என்ற எழுத்துடன் மொபைல் ஒளிர ‘வினய் துளசிடா!!!” என்றவர்
போனை ஆன் செய்து “துளசிமா நல்லாயிருக்கியாடா???” என கேட்டார்
“நல்லாயிருக்கேன்மா”
“எப்படா வருவ..?? நாளைக்கு வந்துடுவியா..??”
“அம்மா….. நா வீட்டவிட்டு வந்து ரெண்டு நாள்தான ஆச்சு.., இன்னும் இங்க விஷேசம் முடியலை முடிஞ்சதும் வந்துடுவேன்..,” என்றவள் சிரிக்க என்னடி சிரிப்பு.., என்றவர் அவளுடன் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தர்
‘என்ன சிரிப்பு..??’ என்றபடி போனை கோதையிடம் இருந்து வினய் வாங்கினான்..,
“அம்மா., டீ என்றவன்.. என்னனு சொன்னா நானும் சிரிப்பேன்..,” என தங்கையிடம் பேசியவாறே சற்று தள்ளி தோட்டத்தின் உள்ளே போக..,
வினய் கேட்ட டீயை எடுக்க கோதை வீட்டினுள் சென்றார்..,
துளசி.. “போன வேலை ஓகேவா..??”
“இன்னும் ஆரம்பிக்கவே இல்லண்ணா.., இப்பவே எப்படி சொல்றது..??”
“அம்மா வர்றாங்க.., பத்திரம்” எனச் சொல்லி போனை கட் செய்தான்..,
“ஏண்டா…. போன வச்சுட்ட நா பேசலாம்னு வந்தேன்..,”
“அம்மா……… “அவ ஊர் சுத்த போயிருக்கா…, சும்மா பேசி பேசி அவள டிஸ்டர்ப் பண்ணாதீங்க…, நம்ம வீட்டுல இருக்குற வரைக்கும் தான் அவ சுதந்திரமா இருக்க முடியும் விடுமா” என்றவன்…
இவ்வளவு பூச்செடி இருக்குல எதுக்கு இப்ப இந்த புது செடி..??வினய் கேட்க இது வெள்ள ஜாதிடா., இங்க இருக்குறது கலர் ஜாதிட., என விளக்கினார் கோதை.
“பூவுலக்கூட என்ன ஜாதியோ என்னமோ” என்றவன் குளிக்க தன் அறைக்குள் சென்றான்
“ம்மா….. சப்பாத்தி ரெடியா..??”
“ரெடிடா.., இப்ப எதுக்குடா இவ்வளவு சத்தம்போடுற…???
“நீங்க தான” வீடு அமைதியா இருக்குதுனு அப்பாகிட்ட சொன்னீங்க.., அதுக்குதான் சத்தமா பேசினேன்..,
அரட்டை சாப்டு என்று சிவராமனுக்கும்.. வினைக்கும் தட்டில் சப்பாத்தியை வைக்க
சிவராமன்….. டநீயும் வாம்மா சாப்பிடு வேலை முடிஞ்சுடும்…,ட என்றிட
“இல்லங்க எனக்கு பசியில்ல..,”கோதை சொல்ல
“ஏன்.. உடம்புக்கு முடியலையா..?? வா கிளம்பு ஹாஸ்பிட்டல் போலாம்.., வினை வண்டிய எடுட” என்றவாரே எழும்பினார் சிவராமன்
“ஐயோ கடவுளே!, போதும் உங்க அலப்பறை டேய் …, நீ ஒக்காந்து சாப்புடு”வினயை அதட்டினார் கோதை
“பசியில்லன்னு சொல்ற முகம் வேற வாடிப்போயிருக்கு.., ஹாஸ்பிட்டல் போலான்னா வேணா சொல்ற என மூச்சு விடாமல் பேசியவர்…, முன் தண்ணீர் கிளாஸை நீட்டி குடிங்க முதல்ல..,” என்றார் கோதை
அவரை பார்த்து சிவராமன் முறைக்க.., “பக்கத்து வீட்டுல ஏதோ பூஜைன்னு அந்த பொண்ணு பிரசாதம் தந்துட்டு போச்சு அதுல எனக்கு பிடிச்ச கெழுகட்டை இருந்துச்சா அத ரெண்டு சாப்டேன் அது ஒருமாதிரியிருக்கு அவ்வளவுதான்”
சிவராமன்……… “அவ்வளவு தான..?”
“ஆமா….. அவ்வளவுதான்…, சொல்லுறத முழுசா கேக்குறதில்ல” என்று முனகினார் கோதை..,
“சரி..,இந்த பால குடிச்சிட்டு படுங்க என்று பால் கிளாஸை கோதையின் கைகளில் திணித்தான் வினய்..,
நல்ல உறக்கத்தில் இருந்த சிவராமனின் கைகளில் ஏதோ ஒரு அழுத்தத்தை உணர பட்டென கண் விழித்தார்..,
“பக்கத்தில் உறக்கத்தில் இருந்த கோதையிடம் இருந்து வித்யாசமான சத்தம் வர..”, அவரை எழுப்ப முயற்சித்தார் சிவராமன்
மீண்டும் கோதை முனங்க புரியாமல் தண்ணீரை கோதையின் மீது தெளிக்க அவரை கண்திறந்து பார்த்தவர் அப்பா.. என்றபடி சிவராமன் மீது மயக்கம் ஆனார் கோதை……….