எந்தன் காதல் நீதானே
அத்தியாயம் 3
கரன் பேசியது பற்றி வெண்ணிலா வீட்டில் ஒன்றும் சொல்லவில்லை. அவன் அவளிடமே விளக்கமாக ஒன்றும் சொல்லவில்லை. பிறகு அவள் என்னவென்று சொல்லுவாள்.
மூன்று நாட்களாகக் கரனை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அவனுக்கு எதோ ஆகி விட்டது என அவன் பெற்றோர் பதற… இந்தத் திருமணத்தை நிறுத்த அவன் எதோ முடிவு செய்து விட்டான் என வெண்ணிலாவுக்குப் புரிந்தது.
அவன் வீட்டில் சொன்ன போது எல்லாம் பேசாமல் இருந்துவிட்டு.. இப்போது திருமணம் நெருங்கும் வேளையில், அவன் பின்வாங்கியது எவ்வளவு பெரிய துரோகம்.
இவனின் அம்மாவின் ஆசைக்காகத் தானே… வெண்ணிலாவின் பெற்றோர் இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்தனர். ஆனால் யாரைப் பற்றியும் நினைக்காமல் கரன் சுயநலமாக முடிவெடுத்தது வெண்ணிலாவால் ஏற்கவே முடியவில்லை.
மகனுக்கு எதோ ஆகிவிட்டது என அன்பரசி பயந்து விட்டார். கரனை தேடிக்கொண்டு சென்னைக்குக் கிளம்பினர். கரனின் பெற்றோரோடு வெண்ணிலாவின் அண்ணன் யுவராஜும் சென்றான்.
சென்னையில் கரன் நண்பர்களோடு தான் தங்கி இருந்தான். அதனால் அவன் தனியிருந்த வீட்டிற்கே சென்றனர். முதலில் தெரியாது எனச் சொல்லி விடுவோம் என்றுதான் நண்பர்கள் நினைத்தனர். ஆனால் அவர்கள் போலீஸ்க்கு செல்லப் போவதாகச் சொல்ல… கரன் வெளிநாட்டில் வேலை கிடைத்து சென்று விட்டான். அவனே உங்களைத் தொடர்பு கொள்வான் என்றனர்.
மகனுக்கு எதோ நடந்து விட்டது எனப் பயந்திருந்த பெற்றோருக்கு அவன் நலமாகத் தான் இருக்கிறான் என்றதும், மற்றது பின்னுக்குச் சென்றுவிட்டது. ஆனால் யுவராஜ்க்கு தங்கையின் வாழ்க்கை முக்கியம் அல்லவா…
“விருப்பம் இல்லைனா முன்னாடியே சொல்றதுக்கு என்ன? இப்ப வெண்ணிலாவுக்கு என்ன பதில்?” என யுவராஜ் கொதிக்க…
“அவன் அதுக்குள்ள வந்திடுவானா இருக்கும். அதெல்லாம் கண்டிப்பா வந்திடுவான்.” என அன்பரசி சொல்ல.. யுவராஜுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் உண்மையில் அன்பரசி அப்படித்தான் நம்பிக் கொண்டு இருந்தார்.
ஐந்து நாட்கள் சென்றுதான் கரன் அழைத்தான். அவனின் நலம் விசாரித்த அன்பரசி, “ஏன் டா வெளிநாடு போறவன் சொல்லிட்டு போக மாட்டியா?” என…
“எனக்கு எவ்வளவு பெரிய கம்பெனியில வேலை கிடைச்சிருக்கு தெரியுமா? சொன்னா விடுவீங்களா?”Advertisements
“எப்ப வருவ… கல்யாணத்துக்கு நாலு நாள் முன்னாடி வந்திடுவியா?” எனக் கேட்க,
Advertisements