சூரியன் 13
சிகிச்சை முடியவும் வெளியே வந்த ரக்சன் சர்ஜரி நன்றாக முடிந்தது அங்கிள்.
பிரியசகி ஒரு மாதம் முழுவதும் நன்றாக ஓய்வெடுக்கட்டும். பின் அவங்க வெளியே வரலாம். ஒரு வாரம் முழுவதும் மருத்துவமனையில் இருக்கட்டும்.. என்று சஞ்சயை பார்த்தாள் ரக்சனா..
அவன் இவர்கள் பேசுவதை கேட்டாலும் அவன் விழிகள் பிரியசகி இருக்கும் அறையில் தான் இருந்தது. விரக்தியுடன் ரக்சனா சஞ்சயை பார்த்தாள்.
மூச்சை இழுத்து விட்டு தன்னை ஆஷ்வாசப்படுத்தி அறைக்கு வெளியே வந்த ரதி,
“அண்ணா வருத்தப்படாதீங்க. பிரியசகி சீக்கிரம் சரியாகிடுவாங்க. கருப்பை இருந்தும் குழந்தையில்லாமல் எத்தனையோ பேர் தத்தெடுத்து வளர்க்கிறாங்க” என்று அவனுக்கு ஆறுதலாக பேசி நகர்ந்தாள்.
“இதெதுக்கு எங்கிட்ட சொல்றா?” சிந்தனையுடன் ரக்சனை பார்க்க வந்தான்.
“சஞ்சய், எனக்கு முக்கிய வேலை ஒன்று இருக்கு. நாம நாளை பேசலாம்” வெளியே ஓடினான் ரக்சன்.
“என்னாச்சு இவனுக்கு?” புருவம் உயர்த்தி ரக்சன் செல்வதை கண்டு கொண்டே ரக்சனாவை பார்க்க சென்றான் சஞ்சய். உள்ளே கமிஷ்னர் சந்திரசேகர் இருந்தார்.
“சார்…” சஞ்சய் தயங்க,
“உட்காருங்க சஞ்சய்” அவனை அமர வைத்து, “ரக்சனாவுக்கு மாப்பிள்ளை பார்க்க போறோம்” என்று அவன் முகம் பார்த்தார்.
“நல்லது சார்..” வராத புன்னகையை இழுத்தான்.
“பிரியசகி நிலை பற்றி பசங்க சொன்னாங்க” சந்திரசேகர் சஞ்சய் முகம் காண, அவன் எழுந்தான்.
அவன் கரம் பற்றி, சஞ்சய் எந்த நிலையிலும் மனம் தளரவே கூடாது. குழந்தையில்லாமல் அந்த பொண்ணு கஷ்டப்படும். நீங்க அனைவரும் ஆதாரவா இருங்க. கவனம்…சஞ்சயிடம் எச்சரிக்கை பார்வை செலுத்தினார். அவன் மனம் கலங்கினாலும் ஓ.கே சார் என்றான்.
ரக்சனாவை கண்டு லேசான புன்னகையுடன், “ஆல் தி பெஸ்ட்” கரம் நீட்டினான்.
மனம் தாளாது அவன் கரம் பற்றிய அவளால் அவனது கரத்தை விட மனமில்லை.
“ரக்சி…” தந்தையின் அழைப்பில் சஞ்சய் கரத்தை விடுத்து “சாரி சஞ்சய்” என்றாள்.
அவளை அறிந்த சஞ்சயும், “அப்பாகிட்ட பேசுங்க ரக்சனா” நழுவிக் கொண்டான்.
வீட்டிற்கு சென்று மகளை படுக்க வைத்து சந்திரசேகர் அவறைக்குள் நுழைந்து கொண்டார்.
தந்தை சென்றதும் இமைகளை பிரித்த ரக்சனாவிற்கு உறக்கம் வரவில்லை. சஞ்சயின் புகைப்படத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தங்கையை காண வந்த ரக்சன் உள்ளே செல்லலாம் என எண்ணும் போது, லைட்டரை கையில் எடுத்து சஞ்சயின் புகைப்படத்தை எறித்தாள். ரக்சன் அவனறைக்கே சென்று விட்டான்.
சஞ்சய், பிரசாத், இந்துஜா, நவீன் மட்டும் மருத்துவமனையில் இரவு முழுவதும் இருந்தனர்.
விடியலின் பின்னும் பிரியசகி எழவில்லை. இனியவன் கல்லூரிக்கு தயாராகி மருத்துவமனைக்கு பிரியசகியை பார்க்க வந்தான்.
பிரசாத்தை கண்டு அவனை நோக்கி செல்ல, சேரில் அமர்ந்து நவீன் தோளில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் இந்துஜா அவன் கண்ணிற்கு தெரியவும் அவன் இதழ்கள் மட்டுமல்ல விழிகளும் பிரகாசம் பெற்றது.
சஞ்சய் அவனிடம் வந்தான்.
“மாமா.. பிரியசகி” என கேட்க,
சஞ்சய் முகம் சரியில்லாமல் இருக்க பிரசாத்தை பார்த்தான். அவன் விசயத்தை சொல்ல, பெருமூச்சுடன் வெளியிலிருந்து அவளை பார்த்தான்.
“பார்த்துக்கோங்க மாமா. வாரேன்” இந்துஜாவை பார்த்துக் கொண்டே செல்வதை மூவரும் பார்த்தனர்.
“ஹாய் மாமா, இந்து தூங்கிட்டு இருக்காங்களா?” விஷ்ணு நேராக நவீன் தோளில் சாய்ந்து தூக்கத்தில் இருந்த இந்துஜாவை எழுப்ப, அவள் அவனை கண்டு அதிர்ந்து பின் சினமுடன் அவனை பார்த்தாள்.
“ஹாய்….நான் உங்களை காண தான் வந்தேன்” அவன் கூற, சஞ்சயிடம் குளிர்பானத்தை நீட்டினாள் ரதி.
ட்ரேயில் இருந்த குளிர்பானத்தை எடுத்த இந்துஜா விஷ்ணுவின் முகத்திலே ஊற்றி விட்டாள். அவன் அதனை வழித்து, “நர்ஸ் அக்கா குளிர்பானத்தில் சுகர் அதிகமா இருக்கு. குறைச்சுக்கோங்க. இல்ல இவங்க எல்லாரும் உங்க ஹாஸ்பிட்டல் பேசண்ட் ஆகிடுவாங்க” அவன் கூற, ரதி வியந்து அவனை பார்த்தாள்.
“விச்சு கெட் அவுட்” இந்துஜா சத்தமிட, அனைவரும் வேடிக்கை பார்த்தனர்.
“அண்ணீ, இது உங்க வீடில்லை. மருத்துவமனை. நான் இங்கே அமருவேன். இங்கே நிற்பேன் இல்லை என்னோட அண்ணா தோளில் இப்படி கை போட்டுப்பேன்” பிரசாத் தோளில் கையை போட்டான். அவன் இவனை முறைத்தான்.
ரதி சிரிப்புடன் அவனை பார்த்தாள்.
“நர்ஸ் அக்கா நீங்க கேக்கலாம். ஏன்னா நீங்க இங்க வொர்க் பண்றீங்க. உங்க ஓனர் கேட்கலாம்” அவன் பேசிக் கொண்டிருக்க, கையை கட்டிக் கொண்டு விஷ்ணுவை பார்த்துக் கொண்டிருந்தான் ரக்சன்.
அம்மருத்துவமனையின் செக்யூரிட்டி விஷ்ணுவை பிடித்து இழுக்க, ரதியின் முகம் மாறியது.
விஷ்ணு வராந்தாவின் சுவற்றை பிடித்துக் கொண்டு, “அம்மா பேசியதற்கு நான் என்ன செய்வேன் இந்து? என்னிடமும் கோபப்படுற. நீ பேசும் வரை கல்லூரிக்கு கூட செல்லமாட்டேன்” அவன் சொல்ல, செக்யூரிட்டி வேகமாக இழுத்ததில் கீழே விழுந்தான் விஷ்ணு.
ரதியும் சஞ்சயும் பதறி ஓடிச் சென்று பார்த்தனர். கண்கலங்க எழுந்து கொண்டிருந்தான் விஷ்ணு.
ரதியும் சஞ்சயும் ஒருவாறு அவனிடம் கையை நீட்டினார்கள். இனியவன் ரக்சனாவுடன் பேசியவாறு அங்கு வந்தான். இவர்களை சேர்த்து பார்க்கவும் இந்துஜா அதிர்ந்து பார்த்தாள்.
விஷ்ணு இருவர் கையையும் பிடித்து எழுந்து அவனது ஆடையில் பட்ட தூசியை தட்டிக் கொண்டிருந்தான். எல்லார் பார்வையையும் பார்த்து விஷ்ணுவை கண்டு இனியவன் அவனிடம் செல்ல, அவன் பின்னாலேயே சென்றாள் ரக்சனா.
“சாரி விச்சு, அவ கோபமா இருக்கா. தப்பா எடுத்துக்காத..” சஞ்சய் கூறிக் கொண்டே அவனது சட்டையிலிருந்த மணலை தட்டிக் கொண்டிருக்க,
“விச்சு, இங்க எதுக்கு வந்த? என்னாச்சு?” இனியவன் அனைவரையும் பார்த்து சீற்றமான பார்வையை இந்துஜா மீது திணிக்க, அவளுக்கு கண்கள் கலங்கியது. அவன் முறைப்பில் அல்ல. ரக்சனாவுடன் இவன் என்ன செய்கிறான் என்று?
ஒன்றுமில்லை அண்ணா. நீ கல்லூரி வரலையா?
“கிளம்பீட்டேன் வா” விஷ்ணுவின் கரம் பிடித்து இனியவன் அழைக்க,
“இனியவா கோபப்படாத. அவ சட்டுன்னு கோபத்தை இறக்க மாட்டாள். ஆன்ட்டி பேசியது அவளது தந்தை பற்றி…” சஞ்சய் எடுத்துரைக்க….
அம்மா பேசுனாங்க தான். விச்சு என்ன செய்தான்? அவனுக்கு எதுவும் தெரியாது. எங்களை விட விச்சுவுடன் தான நன்றாக பேசினாள். இப்ப அவனை…சினமுடன் திரும்பி இந்துஜாவை முறைத்து அவன் நகர….
அண்ணா, நில்லு. நீயும் கோபப்படாத. நான் பேசிட்டு வாரேன்.
“இதுக்கு மேல என்ன பேசணும்? அதான் பதிலுக்கு உன்னை அனைவர் முன்னும் அவமானப்படுத்தி விட்டாளே! போதாதா?” சத்தமிட்டு விஷ்ணுவை இழுத்து சென்றான் இனியவன்.
விஷ்ணு இந்துஜாவை பார்த்துக் கொண்டே தன் அண்ணனுடன் சென்றான்.
“பிரியா விழித்து விட்டாள்” நவீன் கூற, அனைவரும் உள்ளே செல்ல ரக்சனாவும் பிரியசகியை காணச் சென்றாள்.
விழித்த பிரியசகியால் கால்களை அசைக்க முடியாமல் கண்ணீருடன் எல்லாரையும் பார்த்தாள்.
“பெயின் அதிகமா தான் இருக்கும். கொடுக்கும் உணவை மட்டும் தவறாமல் சாப்பிடுங்கள்” ரக்சனா கூற, “டாக்டர்…” அவளது கரத்தை வயிற்றில் பதித்தாள்.
உங்களால குழந்தை பெத்துக்க முடியாது பிரியசகி. கருப்பையை அகற்றி விட்டோம். உங்களிடம் ஏற்கனவே கூறியது தான். உங்களுக்கு தெரியுமே! மனதை திடப்படுத்தி சாதாரணமாக பேசி சஞ்சயை பார்த்தாள். அவளின் ஒவ்வொரு முகச்சுருக்கம், மனம் மற்றும் உடல் வலியும் அவன் கண்ணில் தெரிந்தது ரக்சனாவிற்கு
அழ கூட முடியவில்லை. அவ்வளவு வலி வேதனையில் இருந்தாள் பிரியசகி.. கண்ணீர் மட்டும் நிற்காமல் வந்து கொண்டிருந்தது.
“அழாதீங்க பிரியசகி. ஹெல்த்தை பார்த்துக்கோங்க” அவள் கரம் பிடித்து ஆறுதலாக தடவி விட்டு, “பேசாம அமைதியா இவங்கள பார்த்துட்டு போங்க” இந்துஜா கரம் பற்றி தனியே அழைத்து சென்றாள் ரக்சனா.
இந்து நீங்க பிரியசகிக்கு அருகே இருந்தால் தான் அவங்களுக்கு கம்பர்ட்டா இருக்கும். அதனால பக்கத்திலிருந்து அவங்க அழாமல் நல்ல நினைவுகள் இருந்தால் அவங்களை தேற்ற முயலுங்கள்.
என்னோட நேம் இந்துஜா என்றாள் பட்டென.
ஓ.கே இந்துஜா. அப்புறம் இனியவன் அம்மாவுக்கும் உங்களுக்கும் ஏதும் பிரச்சனைன்னா அவனிடமும் அவன் சகோதரனிடமும் கோபப்படணும்னு அவசியமில்லை.
“டாக்டர் அது எங்களோட பர்சனல்” முறைத்தாள் இந்துஜா.
பர்சனலா? அப்புறம் எதுக்கு அடுத்தவங்க முன் உங்க பர்சனல் ஆட்களை அவமானப்படுத்துறீங்க?
“விச்சுவே கோபப்படலை. நீங்க உங்க வேலைய பாருங்க. அப்புறம் என்னோட பிரியாவை பார்த்துக்க எனக்கு தெரியும்” முகத்தை திருப்பி அவள் செல்ல,
மனதில் புன்னகைத்த ரக்சனா, “இனியவா சரியான ஆள தான் புடிச்சிருக்க? என்ன திமிறா பண்றா?” என்று எண்ணியவாறு அங்கிருந்து அகன்றாள்.
ரதி ரக்சனாவை அமர வைத்து, நமக்கு வேலை இருக்கு. போகலாமா?
ரக்சனா தலைகவிழ, அவளது தாடையை பிடித்து நிமிர்த்தி புருவம் உயர்த்தி, “என்ன?” கேட்டாள்.
சுற்றும் முற்றும் பார்த்த ரக்சனா ரதியை கட்டிக் கொண்டு கண்ணீருடன், நேற்று நீ சொன்னது போல சஞ்சயை மனதிலிருந்து எடுத்தேன். இன்று அவரை பார்க்கவும் மறக்க முடியல ரதி…அழுதாள்.
“ஷ்ஷ்…யாரும் வந்துறாம ரக்சி” அவளது கண்ணை துடைத்து, நீ ஒரே ஒரு நிமிடம் உன்னோட தந்தையை மட்டும் நினைத்து பாறேன். அவர் தாயில்லாமல் உங்கள் இருவரையும் வளர்த்து அவர் கரியரையும் போகஸ் செய்து எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பார்? அவருக்கு உங்களது சந்தோசத்தை விட்டால் ஏதுமில்லை ரக்சி.
நீ எப்பொழுதெல்லாம் சஞ்சயை பார்க்கிறாயோ அப்பொழுதெல்லாம் உன் தந்தையின் போதாத அந்நிலையை எண்ணிப் பார். காதலெல்லாம் சாதாரணமாக தெரியும்…
வாழ்க்கைப் போராட்டத்தில் காதலை விட பெரிய விசயமெல்லாம் இருக்கு ரக்சி. உனக்கு அண்ணா இருக்கார். அவரால் பாதுகாப்பாக இவ்விடத்தில் இருக்கிறாய்…
எல்லாரும் உன் போல வசதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்க மாட்டாங்க ரக்சி.
ஓ.கே செல்லலாமா?
ம்ம்!
இருவரும் ரக்சனா அறைக்கு சென்றனர்.
*******