ஆயிரத்தில் அவள் ஒருத்தி -2

அத்தியாயம் -2

நண்பன் தியாகுவின் வீட்டை கெளதம் வந்தடைந்த போது மதியமாகியிருந்தது. தோழனை அழைக்க விமான நிலையம் செல்வதற்கு முன்னரே சமையல் வேலையெல்லாம் முடித்து வைத்திருந்தான் தியாகு. 

இலகு ஆடைக்கு மாறி வந்த கெளதம் சாப்பாட்டை ருசித்து சாப்பிட்டான். 

“மச்சான் என் சாப்பாடே உனக்கு இவ்ளோ டேஸ்ட்டா தெரியுதுன்னா எவ்ளோ காஞ்சு போயிருக்கன்னு நல்லா புரியுதுடாஎன கிண்டல் செய்தான் தியாகு

சும்மா சொல்லக் கூடாது, மைதிலிக்கு சமையல்ல ஹெல்ப் பண்றேன்னு கூட நின்னு நின்னே எல்லாம் கத்துகிட்ட போல, நிஜமா நல்லாருக்குடாஎன்றான் கெளதம்

மைதிலி தியாகுவின் மனைவி, சென்ற மாதம்தான் குழந்தை பிறந்திருக்க, தாய் வீட்டில் இருக்கிறாள்

நீ என்ன செய்யறதா இருக்க?” எனக் கேட்டான் தியாகு

சாப்பிடுவதை நிறுத்திய கெளதம் நண்பனை பார்த்தான். “ஆறு மாசம் இவ்ளோ சீக்கிரம் ஓடிப் போகும்னு நினைக்கல, ரொம்ப குழப்பமா இருக்குஎன்றான்

ஆமாம், கெளதம் பணி நிமித்தமாக ஜெர்மனி சென்று ஆறு மாதங்கள் கழித்து இன்றுதான் இந்தியா திரும்பியிருக்கிறான். நேராக திருச்சி செல்லாமல் பெங்களூரு வந்து விட்டான்

கௌதமின் திடீர் திருமணம் பற்றி தியாகுவுக்கு தெரியும். இது பற்றி ஏற்கனவே நிறைய ஆலோசனை செய்து விட்டார்கள்.

இன்னுமா உன் குழப்பம் தெளியல? உன் அப்பா பண்ணினது கண்டிப்பா தப்புதான், அதுக்காக நீயும் தப்பு செய்யலாம்னு இருக்கியா?” எனக் கேட்டான் தியாகு

கௌதமுக்கும் யசோத்ராவுக்கும் திருமணம் ஆன கையோடு தண்டபாணி ஐயாவுக்கு மிகவும் முடியாமல் போய் விட்டது. மருத்துவ மனைக்கு அழைத்து சென்று விட்டனர். பிழைக்க மாட்டார் என தெரிந்தும் வீட்டுக்கு அழைத்து வரவில்லை கருணாகரன்

பேத்திக்கு திருமணம் ஆகி விட்டதால் பிழைக்க கூடுமோ என அவருள் ஏதோ நம்பிக்கை

யசோ தாத்தாவுடன் மருத்துவமனையிலேயே இருந்தாள். யோகிதா வீட்டில் நேரில் போய் சண்முகம் பேசியிருந்தார். அவர்களுக்கு வருத்தம்தான் என்ற போதும் சண்டையெல்லாம் போடாமல் வந்து சொன்னதற்கு நன்றி என சுமூகமாக பேசி முடித்துக் கொண்டனர்

ஒரு வார காலம் அப்பாவின் கண்களில் படாமல் எங்கேயோ சுற்றுலா சென்று விட்டான் குணாளன்

கௌதமுக்கு கண்களை கட்டி விட்டது போன்ற நிலை. நெருங்கிய நண்பனின் திருமணத்தில் பங்கேற்றவன் அன்றைய இரவே பெங்களூருவுக்கு புறப்பட்டு விட்டான்

அதெப்படி அப்படி சொல்லாமல் கொள்ளாமல் போவான் என மனைவியிடம்  சண்டை பிடித்தார் சண்முகம்

திடு திப்புனு கல்யாணம் பண்ணி வச்சிட்டு வேற என்ன செய்யணும் அவன்?” என அருணாவும் மகனுக்காக பேசினார்

சண்முகமும் மகனின் மனநிலை என்னவாக இருக்கும் என அவன் பக்கமாகவும் சிந்தித்தார். எடுத்து சொன்னால் புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையில் அவனை காண பெங்களூரு வந்தார்

நெருக்கடியான நிலையில் யசோ கழுத்தில் தாலி கட்டி விட்டானே தவிர, கௌதமால் அவளை மனைவியாக நினைக்க முடியவில்லை. அவளின் தோற்றம் அவனை கவரவில்லை, தொலைதூர கல்வி முறையில் தமிழ் இலக்கியம் முடித்திருப்பவளின் படிப்பு அவனுக்கு திருப்தி அளிக்கவில்லை.

 யோகிதாவோடு யசோவை ஒப்பீடு செய்து பார்த்து தான் ஏமாந்து விட்டதாக கருதினான். அப்பா தன்னை ஏமாற்றி விட்டதாகவும் நினைத்தான்

எதற்கும் அப்பாவின் வார்த்தையை மீறி இருக்காதவன் எதிர்த்து பேசியிராதவன் அன்று தன் வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு தைரியமாக பேசினான்

அந்த பொண்ணுக்கும் எனக்கும் எந்த வகையிலேயும் செட் ஆகாது, எனக்கு பிடிக்கல. நீங்க கல்யாணம்ங்கிற பேர்ல நடத்தின அந்த ட்ராமாப்ச்அது  இன்னும் ரெஜிஸ்டர் கூட ஆகல, வெளில வேற யாருக்கும் தெரியாதுதானே, என்னை விட்ருங்க ப்பாஎன சொல்லி விட்டான்

முதலில் கோவப்பட்டு திட்டிய சண்முகம் உடனே நிதானித்து எடுத்து சொன்னார்தான். தான் எடுத்த முடிவுதான் என அமைதியாக அழுத்தமாக நின்றான் கெளதம்

மகனின் பிடிவாதத்தில் பெற்றவருக்கு கோவம்தான், ஆனாலும் யசோவின் வாழ்க்கையும் அடங்கியிருக்கிறதே

உன்னை பத்தி உன் மனச பத்தி எனக்கு நல்லா தெரியும், ஆறு மாசம் வெளிநாடு போக போறதானே? போய்ட்டு வா, அப்புறம் வந்து சொல்லு, எதா இருந்தாலும் அப்ப பார்த்துக்கலாம்என சொல்லி சென்று விட்டார்

மகன் எப்படியும் யசோவை ஏற்றுக்கொள்வான் என்ற எண்ணம்தான் அவருள் ஆணித் தரமாக இருந்தது

இந்த ஆறு மாத காலத்தில் நிறைய நடந்து விட்டது. கெளதம் ஜெர்மனி சென்ற நான்காவது நாள் தண்டபாணி இறந்து போனார்

தாத்தா இறக்கும் வரை யசோவிடத்தில் வேறு சிந்தனையே இல்லை. துக்கத்திலிருந்து மீள முடியாமல் இருப்பதை விட தம்பிக்கு துணையாக இருக்க வேண்டும் என புரிந்து மெல்ல மெல்ல அவளேதான் தேறிக் கொண்டாள். 

முன்பின் பழக்கமே இல்லாத கெளதம் தன் கழுத்தில் தாலி கட்டி விட்ட ஒரே காரணத்தால் கணவனாக யசோவின் மனதில் ஆழமாக பதிந்து போனான். 

மகனின் முடிவு பற்றி ஏதும் சொல்லாமல், “ஆறு மாசம் கழிச்சு கெளதம் வருவான், அப்ப வந்து யசோவை அவனோட கூட்டிட்டு போவான்” என கருணாகரனிடம் சொல்லியிருந்தார் சண்முகம். அவர் மூலமாக யசோவுக்கும் அவ்விஷயம் சொல்லப் பட்டது

நவீனும் அக்காவிடம், “நமக்குத்தான் மாமா இருக்காரே க்கா, இனியும் அழக் கூடாது” என்றான். அதன் பின் கெளதம் வந்து அவளது சிந்தையை நிறைக்க ஆரம்பித்து விட்டான்.

தன் கணவன் தன்னிடம் ஏன் பேசுவதே இல்லை என்ற கேள்வியும் அவ்வப்போது அவளை கலவர படுத்திக் கொண்டேதான் இருந்தது

தண்டபாணி இறந்த அடுத்த மூன்று மாதங்களில் குணாவும் கருணாகரனின் மூத்த மகள் ஹேமாவும் வீட்டுக்கு தெரியாத பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள்

சண்முகம் தன் கடைக்குட்டி மகனின் செயலில் கோவம் கொள்ள, ஹேமாவின் தாய் அவர்களை ஏற்றுக்கொண்டு விட்டார். மாமனார் வீட்டோடு மாப்பிள்ளையாக சென்று விட்டான் குணா.

இப்போதும் மகனின் காதல் மீது சண்முகத்துக்கு ஆட்சேபம் இல்லை, தன்னிடம் சொல்லி தன் சம்மதத்தோடு மகன் நடத்திக் கொள்ளவில்லை என்ற கோவம்தான்

அம்மாவிடம் சொன்ன குணாவுக்கு அப்பாவிடம் சொல்லும் தைரியமில்லை. அதீத செல்லத்தோடு வளர்ந்து பிடிவாத குணம் நிறைந்தவளாக இருந்த ஹேமாவும் அவளது வீட்டில் சொல்லலாம் என நினைக்கவில்லை

சமயம் பார்த்து கணவரிடம் சொல்லலாம் என நினைத்திருந்த அருணாவுக்கு மகன் இத்தனை அவசரம் கொள்வான் என தெரியவில்லை

வசதியை காரணமாக வைத்து தன் அம்மா மறுக்க கூடும் என நினைத்தாள் ஹேமா. போராடவெல்லாம் அவளிடம் பொறுமை கிடையாது. ஆகவே அவசரம் அவசரமாக நண்பர்களின் துணையோடு திருமணத்தை நடத்திக் கொண்டாள்

அம்மாவுடன் மட்டும் வாரம் ஒரு முறை கைப்பேசியில் பேசும் கெளதம் அப்பாவுடன் பேசுவதே இல்லை. சகோதர்களும் அவரவர் வாழ்க்கையில் பிஸியாக இருக்க, கௌதமுடன் பேச முயலவில்லை, அவனும் அப்படியே விட்டு விட்டான்

மகனின் விருப்பமில்லாமல் ஏன் அவனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என முதலில் கணவரிடம் வருத்தப்பட்ட அருணாவுக்கு திருமணம் முடிந்து விட்ட பிறகு யசோவை விலக்கி வைக்கும் எண்ணமில்லை

பெற்றோர் இல்லாத பெண், நல்ல பெண்ணாகத்தான் தெரிகிறாள், உனக்கு இவள்தான் என இருக்கும் போது யாரால் மாற்ற முடியும், உனக்கு ஏற்ற படி மாற்றிக் கொள் என்றெல்லாம் மகனுக்கு அறிவுரை சொன்னார் அருணா. தன் அம்மா அப்படி ஏதாவது பேசினால் அழைப்பை துண்டித்து விடுவான் கெளதம், மீண்டும் அவனாகவும் அழைக்க மாட்டான்

பயந்து போன அருணா, யசோ பற்றிய பேச்சையே மகனிடம் எடுப்பதில்லை

என்னடா பதிலையே காணோம்?” என தியாகு கேட்க, சாப்பிட முடியாமல் எழுந்து சென்று விட்டான் கெளதம்

தியாகு போய் நண்பனை சமாதானம் செய்து வற்புறுத்தி சாப்பிட வைத்தான். மேலும் கேள்விகள் கேட்காமல் ஓய்வு எடுத்துக் கொள் என சொல்லி அவனுக்கு தனிமை கொடுத்து அகன்று விட்டான்

மாலையில் கெளதம் எழுந்த போதும் அவனது குழப்பம் அப்படியேதான் இருந்தது. தேநீர் பருக வெளியே சென்றார்கள்

மெல்ல யசோ பற்றிய பேச்சை ஆரம்பித்தான் தியாகு. வேறு பேச சொல்லி கடுப்படித்தான் கெளதம்

ஆறு மாசம் உன்னை விட்டாச்சு கெளதம்என்றான் தியாகு

நீ என்னோட ஃப்ரெண்ட், முகம் பார்க்காத ஒருத்தி மேல ஏன் இவ்ளோ அக்கறை?” 

ஒரு அக்காக்கும் தங்கச்சிக்கும் இடைல பொறந்தவனாச்சே, நீ எவனாவோ இருந்தா எனக்கென்ன கவலை? என் ஃப்ரெண்ட்டால ஒரு பொண்ணு பாதிக்க படறத சும்மா வேடிக்கை பார்க்க முடியாது” 

என்னடா செய்ய சொல்ற? லைஃப் முழுக்க என்னோட வாழ போற பொண்ணை பாவம் பார்த்து சேர்த்துக்க முடியுமா? மனசுக்கு பிடிக்காதவ கூட பொய்யா நான் வாழ்ந்தா உனக்கு ஓகேவா?” 

அந்த பொண்ணுக்கும் அது கொடுமைதான்” 

அப்புறம் என்ன என்னையவே குறை சொல்லி பேசுற?”

அமைதியா இருக்காதேன்னு சொல்றேன், பொறுமையா யோசிச்சு நல்ல முடிவா எடுன்னு சொல்றேன். உன் நிலை என்னன்னு தெரிஞ்சாதான் யசோ வாழ்க்கைக்கு என்ன பண்ணலாம்னு அவங்க வீட்லேயும் யோசிச்சு எதாவது செய்வாங்க. நீ வருவேன்னு ஏன் அவங்களுக்கு பொய்யான நம்பிக்கை கொடுத்து வச்சிருக்க?”

நான் அப்பவே என் அப்பாட்ட சொல்லிட்டேன்” 

அவர்தான் சொல்லலைன்னு சொன்னியேஎனக் கேட்டான் தியாகு

வாரம் ஒரு முறை அம்மாவுடன் பேசுகிறானே, அப்போது அவர் மூலமாக தெரியும்