சந்துரு, லேகாவிற்கு ஏழுமணிக்கே அழைத்தான்.. நேற்று நடந்தவைகளை சொல்லிவிட்டான். மாமாவிடம் திருமணம் வேண்டாம் என்று சொன்னதை இப்போது அக்காவிடம் சொன்னான்.
லேகா “அவர் என்ன சொன்னார்” என்றாள் உயிர்ப்பில்லா குரலில்.
லேகாவை தெரியும் சந்துருக்கு, ம்.. ஷிவா மேல் ஒருபிடித்தம்.. என புரியும் தம்பிக்கு. ஆனால், தாத்தா திவசத்திற்கு அப்பா சென்றிருக்க.. அப்போது ‘பெண் கொடுத்து பெண் எடுக்கலாமா.. எங்களுக்கு ஹம்சா வீட்டில் சம்பந்தம் செய்துக் கொள்ளனும்..’ என தந்தையிடம் சம்பந்தம் பேசியிருக்கிறார்கள்.
சந்துருவிற்கு, ஒப்பவில்லை. அம்மா, அக்காவிற்கு மாமா பையன் ஷிவா’வினை கேட்க்கும் போது.. கொடுக்கவில்லை.. ஜாதகம் சரியில்லை.. அது இதுவென.. காரணம் சொல்லிவிட்டனர். அப்பாக்கு, மனையாளின் பிறந்த வீடு என ஒரு சாப்ட்கார்னர். அதனால், சம்மதம்தான் சொல்லுவார்.. ஆனால், எனக்கு எப்படி சட்டென இந்த உறவை.. இவ்வளவு நெருக்கத்திற்கு எடுத்து செல்வது.. என இந்த இரண்டு வாரமாக யோசித்தும் விடை கிடைக்காமல் போக.. தந்தையிடம் பேசி.. ‘வேண்டாம்’ இந்த சம்பந்தம் என சொல்லிவிட்டான், நேற்று இரவு.
இப்போது லேகாவின் இந்த கேள்வி.. அவனுக்கு சங்கடத்தை கொடுக்கிறது.. அக்காவின் மனம் வாடுகிறது என. ஒன்றும் பெரிதாக பாதிக்காது என எண்ணிக் கொண்டு “ஒன்றும் சொல்லலை லேகா.. வைச்சிட்டாங்க” என்றான்.
லேகா “சரி, வைக்கிறேன்.. பைய்” என சொல்லி அழைப்பினை துண்டித்தாள்.
சந்துரு இப்போது வீடியோகாலில் அழைத்தான் லேகாவிற்கு. பெண்ணவள் எடுக்கவில்லை.
சந்துரு, ஒன்றும் செய்ய முடியாமல்.. தன் வேலையை கவனித்தான். சாதம் குக்கரில் வைத்துக் கொள்வான்.. லேகா ஏதாவது தொக்கு.. பொடி என கொடுத்து விடுவாள்.. இந்தமுறை.. அவள் பிசி அதனால், ஒன்றும் எடுத்துவரவில்லை. அதனால், தக்காளி வெங்காயம் வதக்கி.. பன்னீர் சேர்த்து தொக்கு போல செய்யத் தொடங்கினான்.
சமையல் முடித்து.. குளித்து அலுவலகம் செல்லும் நேரம்.. அக்காவிற்கு அழைத்தான்.
லேகா, அழைப்பினை ஏற்றாள்.. இந்தமுறை வீடியோகாலில்.
சந்துரு, அவளின் முகம் தெரியாமல் போக.. “என்ன லேகு.. அந்த முகத்தை காட்டு.. எவ்வளவு அழுதிருக்க பார்க்கிறேன்” என்றான்.
அக்கா “எதுக்கு பார்க்கணும்.. அதான் உனக்கு தெரியுமே. வை டா எருமை மாடு.. அம்மா இருந்திருந்தால் இந்நேரம் எனக்கு..” என சொல்ல முடியாமல் அழுதாள்.
சந்துரு “அதான் நானும் சொல்றேன் லகு.. அம்மா இருக்கும் போதே.. இதுக்கு சம்மதிச்சிருக்கனுமில்ல.. இப்போது வந்து என்னையும் அவங்க பெண்ணுக்கு கேட்க்கும் போது என்னமோ சந்தேகம் வருது எனக்கு.. எனக்கு புரியுது லகு.. மாமாக்களை சந்தேகப்படுறது தப்புதான். என்னமோ மனசு ஒத்துக்கலை..” என்றான் நீண்ட விளக்கமாக.. பொறுமையாக தமக்கைக்கு எடுத்துரைத்தான்.
லேகா “போடா.. பேசாத, கோவமா வருது.. நீ கிளம்பு” என சொல்லி அழைப்பினை கட் செய்ய போக..
“இரு லேகு.. அவங்க வெயிட் பார்ட்டி லகு.. நாளைக்கு ஏதாவதுன்னா கூட.. நம்மால் ஏதும் செய்ய முடியாது. அதைவிடு, ஷிவாக்கு.. உன்னை தெரியுமா முதலில்.. உன்னை அவன் ஞாபகம் வைச்சிருக்கானா..” என்றான்.
“டேய்.. இதொன்னும் அப்படி கிடையாது.. விடு..” என்றாள்.. இப்போது முகத்தை திரையில் காட்டி.
தம்பி லேகாவின் முகத்தை அப்படியே பார்த்திருந்தான்.. வருத்தம் வந்து சேர்ந்தது.. “உனக்கு, நல்ல மாப்பிள்ளையா நான் பார்க்கிறேன் லகு.. அவன் ஒரு முசுடு போல.. “ என சொல்ல.
லேகா “டேய்.. வேலையை பாருடா” என சொல்லி மீண்டும் அழைப்பினை துண்டிக்க எண்ண..
சந்துரு “சரி, உனக்காக நான்.. திரும்ப பேசுகிறேன்.. நீ சந்தோஷமா இருப்பியா” என்றான்.
லேகா “இல்ல இல்ல.. நீ ஏதும் செய்ய வேண்டாம்.. அமைதியா இரு” என்றவள் கண்ணீரினை உள்ளிழுத்துக் கொண்டு “நீ செய்தால் சரியாதான் இருக்கும்.. அத்தோடு, நீ சொல்றது சரிதான்.. ஷிவா என்னை கண்டுக் கொண்டது கிடையாது. விடு.. சரியாகிடுவேன்” என்றாள்.
வடிவேல் மாமா விடாமல் சந்துருவிற்கு அழைத்துக் கொண்டிருந்தார்.. ரெண்டுநாட்களுக்கு ஒருமுறை அழைத்து நலம் விசார்த்தார். திருமணம் சம்பந்தமாக ஏதும் பேசவில்லை.
சந்துரு சில நேரங்களில் அழைப்பினை ஏற்காமல் விட்டிடுவான். ஆனாலும் மறுநாள் தொடந்து அழைத்து பேசித்தான் அமைதியாகுவார்.
அப்போதெல்லாம் சந்துருவிற்கு ஒரு பயம் வரும்.. மாமா பெரிய பிஸினெஸ் மேன். எதற்காக என்னிடம் இப்படி அமைதியாக இருக்கிறார்.. பேசுகிறார். ஏதேனும் பிரச்சனையோ என யோசனை வரும்.
ஹம்சா டெக்ஸ்டைல்ஸ்.. வேலவன் பினான்ஸ்.. எத்தனை தொழில் ஸ்தாபனங்கள்.. முதலீடுகள். அவர்கள் வீடும் அவர்கள் அலுவலகமும் எவ்வளவு பெரிது.. இதில் எதற்கு எங்களிடம் இவ்வளவு அன்பு மரியாதை. உணமையாகவே, எங்களை அவர்கள் காக்க வேண்டும் என எண்ணுகிறார்களோ.. எனவும் தோன்ற தொடங்கிவிட்டது. குழப்பம்தான் மிஞ்சியது.
நாட்கள் எப்போதும் போல் சென்றது.
லேகா, ‘ஷிவா பற்றி அதிகம் நான் எண்ணவில்லை.. மறந்துவிட்டேன்’ என அவளே சொல்லிக் கொண்டாள்.
ரமேஷ், இப்போது பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்க எண்ணி தன் சொந்தத்தில் தெரிந்தவர்களுக்கு சொல்லி வைத்தார்.
ஒருநாள்..
மதியநேரம்.. லேகா, மதிய உணவினை உண்டுக் கொண்டிருந்தாள்.. மதிய உணவு நேரம் கடந்திருந்தது. தாமரை இன்று வரவில்லை. அதனால், தன்னுடைய உணவினை தாமதமாகவே உண்டாள். கடையில் டிவி உண்டு, மதிய நேரத்தில் ஏதாவது சீரியல் பார்த்துக் கொண்டே.. உண்பது வழக்கம்.
இப்போது.. அவளின் போனிற்கு அழைப்பு வந்தது. எதோ புது எண்.. ஏதாவது கஸ்டமர் எண்ணாக இருக்கும் என எண்ணி.. அழைப்பினை ஏற்றாள் “ஹலோ யாருங்க” என்றாள் தெலுங்கில்.
மறுமுணையில் “ஹலோ” என்றது கரகரப்பான ஆண் குரல்.
லேகா சுதாரிப்பாகி “யாருங்க” என்றாள்.
“நான் ஷிவா..” என்றது அழுத்தமாக.
லேகா கனவில் கூட அவன் குரலை கேட்டதில்லை.. சட்டென நினைவும் வரவில்லை அதனால் “யாரு..” என்றாள்.
ஷிவா “ம்.. போனில் பேசக்கூடிய விஷயம் இல்லைதான். ஆனால், என்னால் நேரில் வர முடியலை. உன்னையும் அப்படி தனியா வரசொல்ல முடியாதில்ல. அதான் போனில் கூப்பிடுறேன்..” என சொல்லி நிறுத்தினான்.
பெண்ணவள் அமைதியானாள்.
ஷிவா “அது என்னான்னா” என தடுமாறினான்.. அவனால் சட்டென பேச முடியவில்லை. “என்னான்னா.. தாத்தாவின் ஆசை என்னானா, க்கும்.. அத்தை பசங்க.. கஷ்ட்டப்பட கூடாதுன்னு. அதாவது, அவங்க பொண்ணு குடும்பம்.. கஷ்ட்டபடுறாங்கன்னு நினைச்சிட்டார். க்கும்.. அது, தப்பில்லையே.” என்றான் கொஞ்சம் தயங்கி தயங்கி.
பெண்ணவள் இன்னமும் ஏதும் பேசாமல் இருக்க.
அவனே தொடர்ந்தான் இந்த முறை அழுத்தமான குரலில் “உறவுன்னா, இப்படிதானே இருக்கணும். ஒருத்தரோட ஒருத்தர் விட்டுக் கொடுக்காமல்.. ஆதரவா இருக்கனுமில்ல. இப்போ அத்தையும் இல்ல. எங்களுக்கும் கஷ்ட்டமாதானே இருக்கும். நமக்குள் கல்யாணம் செய்துகிட்டால் என்ன. ஏன் மேரேஜ் வேண்டாம்ன்னு சொல்றீங்க.. உனக்கு என்னை பிடிக்கலையா என்ன” என்றான் கடைசி வார்த்தை அவளை தாக்கும் என புரியாமலே.. அப்படி கேட்டுவிட்டான்.
ஷிவாவின் நோக்கும் அவர்களை.. தங்கள் பேச்சினை கேட்ட வைப்பது. ம்.. இப்போது தொடங்கி.. தங்களின் காரியம் நிறைவேறும் வரை.. அவர்களை தங்கள் பேச்சினை கேட்ட வைக்க வேண்டும். இவர்களை பற்றி ஒன்றும் தெரியாது ஷிவாவிற்கு. ஆனால், பேசி திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டும்.. சமாதானம் செய்ய வேண்டும். எனவே லேகாவின் எண்ணினை தன் அன்னை கொடுக்க வாங்கி பேசுகிறான் இப்போது. அன்னைதான் பேசுவதும் எப்படி எனவும் சொல்லிக் கொடுத்தார் எனலாம்.
அதிலும், சந்த்ரசேகர் திக்ஷிதாவின் திருமணம் அவர்களுக்கு முக்கியம். அதனால், தங்களின் திருமணம் முக்கியமாகிற்றே, எனவே, லேகா முடிவெடுத்தால்.. கண்டிப்பாக சந்துரு ஒத்துக் கொள்வான் என எண்ணம், ஷிவா குடும்பத்தில் எல்லோருக்கும்.
ஷிவாவிற்கு, இந்த திருமணம்.. பெண்கள்.. என்பதில் எல்லாம் நாட்டமில்லை. ஆனால், குடும்பத்திற்கு ஒரு தேவை எனும் போது.. எதையும் செய்வான். அந்த வகையில் சேர்ந்தது இந்த திருமணம்.
ஷிவா, அவளின் அமைதி கண்டு “என்ன சந்த்ரலேகா.. பதில் சொல்லுங்க” என்றான்.
லேகா “நான் என்ன சொல்றது..” என்றாள்.
ஷிவா “யெஸ் மட்டும் சொல்லுங்க போதும்.. மத்ததை நான் பார்த்துக்கிறேன்” என்றான், எதோ காண்ட்ராக்ட் பேசுவது போல.
லேகாவிற்கு வெட்கம்தான் வந்தது.. இத்தனை நாட்கள் அவன் தன்னை கண்டுகொள்ளவில்லை பேசவில்லை என எண்ணியிருந்தவளுக்கு.. இந்த பேச்சுகள் இதமாகவும் வெட்கமாவும் இருந்தது.. ஆனாலும் “திடீர்ன்னு கேட்க்குறீங்க.. எனக்கு இதெல்லாம் தெரியாதே.. அப்பா சந்த்ரு என்ன சொல்றாங்கோ.. அதுதான் நான் சொல்ல முடியும்.” என்றாள், திணறித்தான் என்றாலும்.. தன்னுடைய தரப்பினை எடுத்துரைத்தாள் பெண்.
ஷிவா, புன்னகைத்துக் கொண்டான்.. நினைத்ததை செய்யாமல் விடுபவன் அல்ல.. அதனால் இன்னமும் அழுத்தமான குரலில் “சரி, நான் கேட்பது.. உன் விருப்பத்தைதானே.. அதற்குகூட பதில் அவர்கள்தான் சொல்ல வேண்டுமா” என்றான்.
லேகாவிற்கு, ஒன்றும் புரியவில்லை.. என்ன சொல்வதென்றும் தெரியவில்லை.. “நீங்க வடிவேல் மாமா பையன் ஷிவா தானே..” என்றாள்.
ஷிவா அமர்த்தலான குரலில் “ம். என கேட்க்கிற” என்றான்.
ஷிவா “வேற யாரெல்லாம் இப்படி உன்கிட்ட பேசியிருக்காங்க” என்றான்.
லேகாவின் இதுவரை கனிந்து இருக்க.. இந்த வார்த்தையை கேட்டதும் இறுகியது “சாரி.. நீங்க தப்பா பேசுறீங்க. எதுவாக இருந்தாலும் சந்துருகிட்ட பேசிக்கோங்க” என்றவள் அழைப்பினை துண்டித்தாள்.
ஷிவாவிற்கு என்னமோ போலானது. என்னதிது பேசும்போது கட் செய்வது என ஆதங்கம். கொஞ்சம் எரிச்சல்கூட வந்தது. கோவம் வரவில்லை.. என்னமோ கோவம் அக்கரை பாசம் எல்லாம் உரிமையானவர்கள் மேல்தானே வரும்.. அதனாலோ என்னமோ கோவம் வரவில்லை.
இரண்டுநாட்கள் கடந்து மீண்டும்.. அழைத்தான் லேகாவிற்கு ஷிவா.
லேகா முதல் அழைப்பிலையே ஏற்று “ஹலோ” என்றாள்.
ஷிவா “எப்படி இருக்கீங்க” என்றான் ஆவலாக.
“ம்.. இன்னிக்காவது சரியாக பேசுவீங்களா” என்றாள்.
ஷிவா இந்த பேச்சினை எதிர்பார்க்கவில்லை.. அன்றைய பேச்சினை அப்படியே விட்டிடுவாள் என எண்ணினான்.. இப்போது இவள் அதை கொண்டு கேட்டகவும் “நான் எப்போதும் சரியாகத்தான் பேசுவேன். நீங்கதான் என்னை சந்தேகப்பட்டீங்க” என தன் ஞாயத்தினை சொன்னான்.
“நான் சந்தேகப்பட்டேனா.. இல்லங்க, நீங்க திடீர்ன்னு கல்யாணம் விருப்பம் என பேசவும்.. ஒரு டௌட் வருமில்ல.. நீங்க இதுவரை என்கிட்டே பேசினது கூட கிடையாது. அதான் கேட்டேன்.. ஏதாவது நம்பர் மாறி வந்துவிட்டதோ என” என்றாள், தானும் உண்மையை சொல்ல வேண்டுமே என கேட்டாள்.
ஷிவா “ஸ்மார்ட்தான்.” என்றான் வாய்விட்டு. மனதுள்.. ‘ஆனால், என்கிட்டே நடக்காது’ என எண்ணிக் கொண்டு. “என்கிட்டே நீ உண்மையை சொல்லலாமே.. என்னை பிடிக்குமா பிடிக்காதா” என்றான்.
லேகாவிற்கு மீண்டும் வெட்கம் “இதென்ன கேள்வி. எனக்கு இதற்கெல்லாம் பதில் தெரியலை.” என்றாள்.
ஷிவா “என்னை கல்யாணம் செய்துக்கன்னு ப்ரபோஸ் பண்றேன்.. நீ அப்பாவை கேளுங்கன்னு சொல்ற.. இதெல்லாம் சரியில்லை. சரியாக சொல்லு.. பிடிக்கும் பிடிக்காது.. வேண்டும் வேண்டாம்.. சொல்லிடு” என்றான்.
லேகா “சரி அப்படியே வைச்சிக்கோங்க.. என்னுடைய பதில் எப்போதும் அப்பா தம்பி அம்மா முடிவெடுப்பதாகதான் இருக்கும்.” என்றாள்.
ஷிவாவிற்கு சிரிப்பாகவும் அதேநேரம் பாவமாகவும் இருந்தது “நீ ரொம்ப சின்சியரா இருக்க.. சரி, எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.. கல்யாணம் செய்துக்க இஷ்ப்படுறேன் ஓகே.. அம்மா அப்பா வந்து பெண் கேட்ப்பாங்க.. அப்போது.. இதையும் மனதில் வைத்துக் கொண்டு.. உன் பதிலை சொல்லு.. ஓகே” என்றான்.
பெண்ணவள், தனக்குண்டான ரகசியங்களில் ஒன்றாக இந்த அழைப்புகளை சேர்த்துக் கொண்டாள்.
அடிக்கடி இல்லை என்றாலும்.. ஷிவா இந்த மூன்று மாதத்தில் நான்குமுறை அழைத்து பேசியிருந்தான். இப்போது பிடித்திருக்கா என கேட்டுதான். காலையில் எப்போதாவது ஹாய் என செய்தி அனுப்பிடுவான்.. இதெல்லாம் யாரின் கருத்தினையும் கவராமல் நடந்துக் கொண்டிருந்தது.
அன்று, ரமேஷ்க்கு அழைப்பு வந்தது.. வடிவேலிடமிருந்து.
ரமேஷ் “சொல்லுங்க வேலு” என்றவாறே அழைப்பினை ஏற்று பேசினார்.
வடிவேல் “ரமேஷ் மாப்பிள்ளை.. நாங்க எல்லோரும், சித்தூர் வீட்டுக்கு வந்துகொண்டு இருக்கோம்.. நீங்க ஊரில் இருக்கீங்களா” என்றார்.
ரமேஷ்க்கு ஒன்றும் புரியவில்லை.. “இருக்கேன்.. வாங்க.. டிபன் ரெடி செய்யச் சொல்லட்டுங்களா” என்றார்.
வடிவேல் “இல்ல இல்ல.. நாங்க நாலுபேர் வரோம்.. சாப்பிட்டோம் இப்போதுதான். காபி மட்டும் போதும் மாப்பிள்ளை” என்றார்.
ரமேஷ் சரியென சொல்லி அழைப்பினை துண்டித்தார்.
ரமேஷ், தன் மகள் சமையலறையில் இருக்க.. மகளோடு வந்து நின்றார்.. லேகா திரும்பி “ப்பா, பசிக்குதா.. என்ன வேணும்.. இன்னிக்கு லேட் ஆகும் போல.. கொஞ்சம் ஹெல்த் மிக்ஸ் போட்டு தரட்டுமா” என்றாள்.
ரமேஷ், மகளை வாஞ்சையாய் பார்த்தார்.. சரி என்பதாக தலையசைத்தார். லேகா, மிக்சியில் எதோ அரைத்துக் கொண்டிருந்தாள் போல.. அதைவிட்டு வந்து.. தந்தைக்கு தேவையானதை செய்யத் தொடங்கினாள்.
இப்போது தந்தை அவள் அரைத்துக் கொண்டிருந்ததை.. தான் அரைக்கு தொடங்கினார்.
தந்தை “இல்ல, டென்ஷனா இருக்கேன் லேகு.. உன் மாமாக்கள் ரெண்டு பேரும் வரேன்னு போன் செய்தாங்க ம்மா.. என்னமோ ஏதோன்னு இருக்கு ம்மா.. நீ ப்ரீயான்னுக் கேக்கிற” என்றார், புன்னகையோடு.
லேகா அதிர்ந்து “என்ன பா சொல்றீங்க” என்றாள்.
தந்தை “ஆமாம் ம்மா.. என்னமோ நாலுபேர் வராங்களாம்.. என்ன ஏதுன்னு தெரியலை, ம்.. சந்துரு வேறு சம்பந்தம், வேண்டாம்ன்னு சொன்னதில் ஏதும் குழப்பமோ.. என்னமோ. ம்.. நானும் அத்தையை வர சொல்லியிருக்கேன்.. பார்ப்போம்..” என்றார்.. அரவை வேலையை முடித்து மிக்ஸி ஜாரினை மகள் அருகில் வைத்து.
லேகாவிற்கு தந்தையின் பேச்சு ஒரு ஆறுதலை தந்ததோ என்னமோ முகம் கொஞ்சம் வசீகரமானது.
தந்தை பெண்ணின் மாற்றத்தை கவனித்துக் கொண்டிருந்தார்.. “பால் இருக்காம்மா.. வாங்கனுமா” என்றார்.
லேகா பதில் சொன்னாள்.
“நான் போய் ஸ்வீட் காரம் வாங்கிட்டு வந்திடுறேன்” என்றார்.
மகளோ “இருங்கப்பா கஞ்சி குடிச்சிட்டு போங்க” என சொல்லி, அவர் கையில் பெரிய குவளையை கொடுத்தாள் பெண்.
பெண்ணின்.. கனவுகளை மீண்டும் தூசி தட்டியது இந்த சந்திப்பு.