அத்தியாயம்  – 19

“அவங்க எல்லாம் குடும்பமா போனா, நீயும் ஏன் போகனும் அர்ச்சு..?” என்று ரோஜா கேள்வி எழுப்ப,

“ம்மா இன்வைட் பண்ணது அக்காவும் மாமாவும். நீ இந்த கேள்விய அவங்கக்கிட்ட தான் கேட்கணும்..” என்றாள் அர்ச்சனாவும்.

“அவங்க இப்படி பசங்களா சேர்ந்து அடிக்கடி வெளிய போறது சகஜம் தான். ஆனா நீ…” என்று ரோஜா தயங்க,

“என்னம்மா? நான் என்ன? அங்க அச்சத்தான் வர்றதுனால நான் போறது உனக்கு இஷ்டமில்லை…” என்று கேட்க,

“தெரியுது தானே டி…” என்றார் ஒன்றும் செய்ய இயலாத கவலையில்.

“ம்மா. நான் போறது அக்காகாக..” என்று பேச்சை நிறுத்தியவள் “அன்னிக்கு அனிதா மாமியார் சொன்னதை அவக்கிட்ட பேசினியா?” என்று கேட்டாள்.

“அவங்க வந்துட்டு போன உடனே பேசினா, அவங்க சொல்லித்தான் பேசினோம்னு கண்டு பிடிச்சிடுவா. அதான் கொஞ்ச நாள் போகட்டும்னு…” என்று ரோஜா இழுக்க,

“ஆமா நல்ல நாள், நல்ல நேரமெல்லாம் பாரு…” என்றவள் “இந்த சின்ன ட்ரிப்பே அக்காக்கும் மாமாக்கும் நடுவில என்ன பிரச்சனை ஓடுதுன்னு கண்டுபிடிக்கத் தான்…” என்று சொல்ல,

“என்னென்னவோ சொல்ற நீ…” என்று சலித்தவர் “போனோமா வந்தோமான்னு இரு அர்ச்சு. அச்சுதன் கிட்ட தேவையில்லாம வாய் பேசாத..” என்றும் சொல்ல,

“ம்ம்.. அது அவர் நடந்துக்கிறது பொறுத்தும்மா..” என்றாள் லேசான புன்னகையோடு.

அர்ச்சனாவிற்கு அழைப்பு வைக்கவேண்டும், ஆனால் யார் அழைத்தால் அவள் வருவாள் என்று பிரசாந்த் யோசிக்க, அர்ஜூனோ “இதுக்கு ஏன் இத்தனை யோசிக்கிற. பிரகாஷ் அண்ணாவையும் அனிதா அண்ணியையும் கூப்பிடச் சொல்லு அண்ணா…” என,

“அதுதான்டா பிரச்சனையே. நான் சொன்னா அதை எப்படி எடுத்துப்பாங்க தெரியாது…” என்று அர்ஜூனைப் பார்க்க,

“அர்ஜூன் இருக்க பயமேன்…” என்று கையை உயர்த்தியவன் பிரகாஷிடம் “ஏன் அண்ணா ட்ரிப்க்கு லேடி அச்சுதனைக் கூப்பிட்டா என்ன?” என்று கேட்க,

“எதுக்குடா? அச்சண்ணாக்கிட்ட திட்டு வாங்கவா?” என்று கேட்க,

“ம்ம்ச் அண்ணா, அச்சண்ணாக்கு ஒரு நல்ல லைப் அமையுறதுக்கு நம்ம இந்த முயற்சி கூட பண்ணலன்னா எப்படி?” என்று அர்ஜூன் கேட்க,

“நீ சொல்றது சரிதான் டா…” என்றவன் அனிதாவிடம் பேச,

அனிதாவோ “உங்க அண்ணனுக்காக இல்லைன்னாலும், அர்ச்சுக்காக இன்வைட் பண்ணுவோம். நானும் இங்க வந்துட்டேன். அவளா இருக்கா தானே. யார் கூட்டிட்டு போவா. நம்மதான் கூட்டிட்டு போகனும்..” என்றவள் தங்கையிடம் பேச,

“நானாக்கா?” என்று யோசித்தாள்.

அடுத்து பிரகாஷ் பேச  “யோசிச்சு சொல்றேன் மாமா…” என்றுவிட்டாள்.

ஆனால் அவளே எதிர்பாராத ஒன்று, அச்சுதனே அவளுக்கு அழைத்து “அனிதா பிரகாஷ் விஷயம் சொன்னதானே. அவங்களோட பேசணும்னு ஒரு ட்ரிப் ப்ளான் பண்ணிருக்கோம். நீயும் வந்தா நல்லாருக்கும்…” என்று சொல்ல,

“நானா?!” என்றாள் அவன் அழைத்த அதிர்ச்சி மாறாது.

“ம்ம் பிரகாஷ் கூட நாங்க எல்லாம் பேசிடுவோம். ஆனா அனிதா கிட்ட நீதானே பேசனும்…” என்று சொல்ல,

“ம்ம் வர்றேன்…” என்றுவிட்டாள்.

ஆனால் வீட்டில் சொல்லவும் ரோஜாவிற்கு தயக்கமே. கார்மேகத்திடம் சொல்ல “அவளுக்குத் தெரியும் எப்படி நடந்துக்கணும்னு. எல்லாருமே வளர்ந்த பசங்க தானே.. போயிட்டு வரட்டும்…” என்றிட, அனிதாவிடம் தானும் வருவதாய் சொல்லிவிட்டாள் அர்ச்சனா.

தங்களுடன் தங்கையும் வருகிறாள் என்றதுமே அனிதாவிற்கு அப்படியொரு சந்தோசம். எப்போதும் இல்லாத வகையில் சந்தோசமாகவே அவள் இதில் பங்குகொள்ள,

அர்ச்சனாவோ “லோகேசன் ஷேர் பண்ணுங்க.. நான் வந்துடுறேன்…” என,

“நீ இங்க வந்துடு  டி.  நம்ம எல்லாம் சேர்ந்தே போலாம்…” என்றாள் அனிதா.

அர்ச்சனாவிற்கோ அன்றைய தினத்திற்கு பிறகு அங்கே செல்வது கொஞ்சம் சங்கடமாய் இருந்தது. என்னதான் அவர்கள் எல்லாம் இவளை வந்து பார்த்து, பேசி போனாலும் என்னவோ அவளுக்கு ஒருமாதிரி தயக்கம் இருக்கவே செய்ய “இல்லக்கா நீ லோகேசன் ஷேர் பண்ணு. வந்துடுறேன்…” என்றுவிட்டாள்.

ஒருவழியாய் இங்கே இவர்கள் எல்லாம் இரு கார்களில் கிளம்பிச் செல்ல, அர்ச்சனா அவர்கள் சொன்ன இடத்திற்கு அருகினில் வந்தவள், அனிதாவிற்கு அழைக்க, அவர்களது தோட்டத்திற்குள் அலைபேசிக்கான சிக்னல் அத்தனை ஒன்றும் எடுக்காது.

திரும்பவும் அழைத்துப் பார்க்க ‘நாட் ரீச்சபிள்…’ என்று வரவே செய்ய, அடுத்து பிரகாஷிற்கு அழைக்க அவனது அலைபேசிக்கும் அதுவே தான் வந்தது.

“அர்ச்சனா அண்ணி இன்னும் வரலை…” என்று பவஸ்ரீ அங்கே கேட்டுக்கொண்டு இருக்க,

“அதுதான் நானும் யோசிக்கிறேன் ஸ்ரீ. அப்போவே கிளம்பிட்டேன் சொன்னா. அவ கிளம்பின நேரத்துக்கு இப்போ வந்திருக்கணும்…” என்றவள் அலைபேசியை எடுத்துப் பார்த்து “சுத்தமா சிக்னல் இல்லை…” என்று சொல்ல,

அச்சுதன் இவர்கள் பேச்சினை கவனித்தவன் “எனக்கு தெரிஞ்சு அர்ச்சனா வந்திருக்கணும். கால் பண்ணி பார்த்து சிக்னல் இல்லைன்னு வெளிய எங்கயாவது வெய்ட் பண்ணிட்டு இருப்பா..” என்று கணித்தவன்,

“டேய் அர்ஜூன் போய் கூட்டிட்டு வா..” என்று இளையவனை அனுப்ப,

பவஸ்ரீயோ “நானும் வர்றேன்…” என்று அர்ஜூனோடு இணைந்து கொள்ள,  அடுத்த சில நிமடங்களில் அர்ச்சனா இவர்களோடு பேசிச் சிரித்தபடி நடந்துவந்தாள்.

“அர்ச்சனா அண்ணி, இப்போ உங்களை நாங்க எப்படி கூப்பிடுறது? அன்னிக்கு சின்ன அண்ணின்னு கூப்பிட்டேன். ஆனா இப்போ பார்த்தா நீங்க பெரிய அண்ணியா வருவீங்க போல இருக்கே..?” என்று பவஸ்ரீ பேச,

“நீ சொல்றது நடக்குமா என்ன?” என்றாள் அர்ச்சனா அவளுள் இருக்கும் வேதனை மறைத்து.

எதுவும் தவறாய் கேட்டுவிட்டோமோ என்று பவஸ்ரீ திகைக்க “அட ஸ்ரீ.. பீ கூல். நீ கேசுவலா கேட்டது போலத்தான் நானும் கேசுவலா பதில் கேட்டேன்…” என்றவள்,

“சொல்லு அர்ஜூன்.. நடக்குமா என்ன?” என்று கேட்க,

“நம்பிக்கை அதானே எல்லாம்…” என்றான் அர்ஜூன்.

“அதுசரி.. எல்லாரும் நம்புங்கடா.. ஆனா உங்கண்ணன் நம்பணுமே…” என்று பாவமாய் சொன்னவளின் பார்வை சற்று தொலைவினில் சமையலுக்கு ஏற்பாடு செய்துகொண்டு இருந்த அச்சுதன் மீது படிய,

“மாற்றம் ஒன்றே மாறாதது பெரியண்ணி…” என்று பவஸ்ரீ இப்போது சொல்ல,

“அண்ணனும் தங்கச்சியும் நல்லா பேசுறீங்க…” என்று புன்னகைத்தவளைக் கண்டு      

“ஹாய் லேடி அச்சுதன்…” என்று சத்தமாய் சொல்ல வந்த பிரசாந்த்,  அச்சுதனின் முறைப்பை கண்டு “ஹாய்…” என்று மட்டும் சொல்ல,

அர்ச்சனா “ஹாய்…” என்று அவனுக்கு இன்முகமாகவே பதில் சொல்ல,

அனிதாவோ “ஏன் டி இவ்வளோ நேரம்..?” என்றாள்.

“அச்சண்ணா சொன்னது போலத்தான்…” என்று அர்ஜூன் சொல்ல,

அச்சுதனோ “வா அர்ச்சனா…” என்று சொல்ல,

“ம்ம்..” என்றவள் “என்ன கெட்டப் எல்லாம் பயங்கரமா இருக்கு…” என்றாள் அவனைப் பார்த்து.

பனியன்  மற்றும் ஷார்ட்ஸ் உடன் தோளில் துண்டுடன் அவன் நின்றிருக்க, அர்ச்சனா இப்படி கேட்கவும் “ஹலோ நாங்களும் தான் சமைக்கிறோம்…” என்றான் பிரசாந்த் வேகமாய்.

“அதுதான் பயமா இருக்கு. இவர் சமைக்கிறார்னு தெரிஞ்சிருந்தா வரவே யோசிச்சிருப்பேன். கூட நீங்களும் சமைக்கிறீங்க அப்படின்னா வந்தே இருக்க மாட்டேன்…” என்று இருவரையும் கேலி பேச,

“வாவ் பெரியண்ணி. எப்பவும் பிரசாந்த் அண்ணா தான் எங்களை ஓட்டுவான். இப்போ நீங்க செம் பார்ம்ல வந்திருக்கீங்க…” என்று பவஸ்ரீ அவளுக்கு கை கொடுக்க,

அவள் பெரியண்ணி   என்றதுமே அச்சுதன் அவளையும் அர்ச்சனாவையும் முறைக்க “அடக்கி வாசி…” என்று முனுமுனுத்தவள்,

“ஆமா எங்க பிரகாஷ் மாமா அத்தனை பெரிய ஹோட்டல் ரன் பண்றார். அவருக்கு எப்படியு சமையல் தெரியும் தானே. அதைவிட்டு நீங்க ரெண்டு பெரும் ஏன் நிக்கிறீங்க?” என்று கேட்க,

“வழக்கமா இப்படி ட்ரிப் எல்லாம் வந்தா நானும் அச்சண்ணாவும் தான் சமைப்போம். இவங்கெல்லாம் ஹெல்பர்ஸ்…” என்றான் கெத்தாக பிரசாந்த்.

“ஓ!” என்று உதடு வளைத்தவள், 

“பிரகாஷ் மாமா அனிதாக்கா நீங்க ரெண்டு பேரும் சமைச்சு குடுங்க. இந்த ரீல் ஜோடியை விட, நீங்க ரியல் ஜோடி சமையல் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்.. ” என்று என்றவள் அச்சுதனை அர்த்தமாய் பார்க்க, அவளின் பார்வை புரிந்தவன்,  பிரசாந்தை பார்க்க,  

“அதானே.. நாங்களே எப்பவும் சமைக்கணுமா? டேய் ஹோட்டல் நீ வந்து சமையல் செய்…” என்று இருவரும் நகர்ந்துவிட்டனர்.

“அச்சோ எனக்கு விரகடுப்புல செஞ்சு எல்லாம் பழக்கமில்லை…” என்று அனிதா சொல்ல,

“இதென்னாக்கா. மாமா செய்றதை பாரு. இவங்கெல்லாம் பழகிட்டா வந்து பண்றாங்க. என்ஜாய் பண்றதுன்னு நினைச்சு கலத்துல குதி. பிரகாஷ் மாமாக்கு ஹெல்பா இரு…” என்றிட, அனிதாவோ பாவமாய் கணவன் முகம்  பார்க்க, பிரகாஷோ வேலையில் இறங்கி இருந்தான்.

அனிதாவோ அப்போதும் “எப்பவும் வந்தா நீங்க ரெண்டு பேரும் தானே சமைப்பீங்க.. இப்போ என்னவாம்…” என்று அச்சுதன் மற்றும் பிரசாந்த் பார்த்து கேட்க,

“ஏன் இப்போ நீங்க சமைச்சா என்னவாம்?!” என்றான் பிரசாந்த்.

“ம்ம்ச்…” என்று சலிப்புடனே கணவனுக்கு அருகே சென்று நிற்க, பிரகாஷோ “நீ இப்படி உம்முன்னு எல்லாம் வந்து நின்னு ஒன்னும் பண்ண வேண்டாம். சமையல் எல்லாம் ரசிச்சு செய்யணும் அப்போதான் சாப்பிட முடியும்…” என்றிட, அனிதாவிற்கு முகம் வாடிப் போனது.

இப்படியே இவர்களை சமையல் செய்யட்டும் என்று தனியே விட்டுச் சென்றால், கண்டிப்பாக ஏதேனும் பேசி முட்டிக்கொண்டு தான் நிற்பார்கள் என்று    அச்சுதன் முகம் யோசனைக்கு போக, அர்ச்சனாவும் அவர்களை பார்த்தவள் ‘என்ன செய்வது..’ என்று அச்சுதனைப் பார்க்க,

அவனோ “பவஸ்ரீ நீயும் அர்ஜூனும் போய் சிக்கன் மட்டன் எல்லாம் கழுவிட்டு வாங்க…” என்றவன்

“அனிதா நீ அர்ச்சனாவை கூட்டிட்டு பண்ணை எல்லாம் சுத்தி காட்டு. நாங்க மூணு பேரும் சமைக்கிறோம்…” என்று பிரசாந்தைப் பார்க்க, தப்பித்தோம் பிழைத்தோம் என்று அனிதா அர்ச்சனாவை கிளம்பிக்கொண்டு வந்துவிட்டாள்.

“அட என்னக்கா நீ, கிடைச்ச நல்ல சான்ஸ மிஸ் பண்ணிட்டியே…” என்றாள் அர்ச்சனா.

“எது நல்ல சான்ஸ் உன் மாமாகூட நின்னு சமைக்கிறதா? அட போடி.. பார்த்த தானே எத்தனை கடுப்பா பேசினார்னு..” என,

“பேசினா என்ன? சொல்லி குடுங்க நான் செய்றேன்னு சொல்லேன் இந்த வாய்பெல்லாம் உனக்கு வீட்ல கிடைக்குமா? நீங்க ரெண்டு பேரும் சமைக்க ஆரம்பிச்சு இருந்தா, நாங்க எல்லாரும் சுத்தி பாக்கலாம்னு வந்திருப்போம். உனக்கும் மாமாக்கும் கொஞ்சம் தனிமை கிடைச்சு இருக்கும்..” என்று அர்ச்சனா விளக்க,

“தனிமை கிடைச்சு..” என்று நோடித்தவள் “போ டி..” என்று சலிக்க, அக்காவின் பேச்சில் சுற்றி இருந்த இயற்கை எதுவும் அர்ச்சனாவின் கண்ணிலோ, கருத்திலோ பதியவில்லை.

இவர்கள் சமையலுக்கு ஏற்பாடு செய்திருந்தது பம்ப் செட்டில் இருந்து நீர் விழும் சிறு தொட்டியின் அருகே. சுற்றிலும் தென்னை, கொஞ்சம் மா மரங்கள் என்று இருக்க, அங்கிருக்கும் சிறு பண்ணை வீட்டை சுற்றிலும் வாழை மரங்களும் வேறு இருந்தனர்.

இயற்கையான சூழல் தான்.

வரும்போதே அர்ச்சனா அனைத்தையும் ஆசையாய் பார்த்துக்கொண்டு தான் வந்தாள். ஆனால் இப்போது அனிதாவின் பேச்சில் எதுவும் ரசிக்கவில்லை. 

“என்னக்கா இப்படி பேசுற நீ? லவ் பண்ணி கல்யாணம் பண்ணவங்க போலவா இருக்கீங்க…?” என்று மெல்ல நூல் விட்டு பேச,

“கல்யாணம் என்னவோ லவ் பண்ணித்தான் நடந்தது. ஆனா அதுக்கு அப்புறம் அந்த காதல் எங்க போச்சோ தெரியலை…” என,

“அனி…” என்றாள் அதிர்ந்து பார்த்து அர்ச்சனா.

அனிதாவிற்கோ கண்கள் கலங்கி இருந்தது. யாரிடமாவது மனம் விட்டு பேசவேண்டும் என்று எண்ணினால், கணவனை விட்டுக்கொடுத்து யாரிடமும் பேசவும் முடியவில்லை. இன்றோ அந்த வாய்ப்பு அதுவாகவே அமைந்து இருக்க, சுற்றிலும் பார்த்தவள் ”எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை அர்ச்சு…” என்றாள் தேம்பியபடி.

“ஏய் எதுக்கு இப்போ நீ அழற?” என்ற அர்ச்சனா, ஆதரவாய் அக்காவை லேசாய் அணைக்க,

“இல்ல டி.. இவர் லவ் பண்றப்போ அத்தனை ஜாலியா என்னோட பேசுவார். சொல்லபோனா என்னோட பேசாம இருந்த நாட்களே இல்லை. அங்க போலாம் இங்க போலாம்னு ஏதாவது சொல்லிட்டே இருப்பார். ஆனா இப்போ, இதோ இதுவே அச்சுதன் மாமா ப்ளான் பண்ண ட்ரிப் தான். நாங்க தனியா டைம் ஸ்பென்ட் பண்றதே பெரிய விஷயமா இருக்கு..” என்று வருந்த,

“அவருக்கு வொர்க் டென்சனா இருக்கும் க்கா.. நீ பேசி பார்த்து வெளிய கூட்டிட்டு போக வேண்டியது தானே..” என,

“அதுதான் மிச்சம். லாஸ்ட் சிக்ஸ் மன்த்ஸா அவருக்கு ஹோட்டல்ல லாஸ் தான். ரிசார்ட் பரவாயில்லை ஓரளவு கை பிடிக்காம போகுது. சோ அதுல வர்ற கொஞ்ச லாபத்தையும் ஹோட்டல்ல போட்டு ரன் பண்றார்..” என்று சொல்ல,

“அக்கா இதெல்லாம் பிஸ்னஸ்ல சகஜம் க்கா..” என்றாள் அர்ச்சனா.

“எஸ்.. ஆனா இவர் குணம் அப்படியில்லை. எங்க கல்யாணத்துக்கே இவர் முயற்சி பண்ணி பேசல அவங்கப்பாக்கிட்ட.. அச்சுதன் மாமா பேசி கல்யாணம் நடந்தது. அடுத்து பிஸ்னஸ்ல லாஸ் ஆக ஸ்டார்ட் பண்ணவும், என்னோட கட்டாயத்தின் பேர்ல எங்க மாமா கிட்ட பேசினார். அவரோ உனக்கு பிஸ்னஸ் வைக்கவே பெரிய அமௌன்ட் குடுத்தாச்சு. இனி பிரசாந்துக்கு பார்க்கணும் இல்லையா.. முயற்சி செஞ்சு இன்னும் முன்னேற வழி பாருன்னு சொல்லிட்டார்…” என,

“ம்ம்.. சொல்றேன்னு தப்பா நினைக்காத.. உங்களுக்கு பேபின்னு ஒன்னு வந்துட்டா உங்களுக்குள்ள இருக்க பிரச்சனை எல்லாம் பெருசாவே தெரியாது..”  என்றதுமே, அனிதாவின் முகம் அப்படியே மாறிப்போனது.

“என்னக்கா?!” என்று அவள் முகம் பார்த்து கேட்க,

“பிஸ்னஸ் எப்போ ஸ்டெடியாகி, நமக்குன்னு ஒரு பொசிசன் வருதோ அப்போதான் குழந்தைன்னு சொல்லிட்டார்..” என்று சொல்லவும், அர்ச்சனாவிற்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

இது பிரகாஷின் முடிவு எனில், யார் பேசி என்ன செய்ய முடியும். அவள் இந்த சிந்தனையில் நிற்க, அனிதாவே மேற்கொண்டு “அப்பாக்கிட்ட ஹெல்ப் கேட்கலாம்னு கூட சொன்னேன்.. அப்படியில்லைன்னா அப்பாவோட ஹோட்டல் நல்லாதானே போகுது.. அதுல பார்ட்னரா கூட ஜாயின் பண்ணிக்கலாம்னு சொன்னேன். எதுக்குமே சரிபட்டு வராமா, அவரும் ஸ்ட்ரெஸ் ஆகி என்னையும் ஸ்ட்ரெஸ் ஆகா வச்சிடுறார்…” என்று வருந்த, அர்ச்சனாவிற்கு இதை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை.

அங்கே பிரகாஷோ இதையே வேறு விதமாய் சொல்லிக்கொண்டு இருந்தான்.

“அண்ணா, எனக்கு பிஸ்னஸ் பண்ணா அப்பா எவ்வளோ பெரிய அமௌன்ட் குடுத்தார். சும்மா சும்மா நான் அவர்கிட்ட கேட்க முடியுமா? இதுல குழந்தைன்னு வந்துட்டா எத்தனை பொறுப்புகள், செலவுகள் இருக்கு. ஏதாவது சொல்லிட்டா, உடனே அவங்கப்பாக்கிட்ட ஹெல்ப் கேட்கலாம்னு சொல்றா. இல்லையா வரோட ஹோட்டல்ல பர்ட்னரா ஜாயின் பண்ணிக்கலாம்னு சொல்றா…” என்று பேச,

“சரிடா.. அதுக்காக நம்ம ஒண்ணுமே இல்லாம இருக்கோமா என்ன? இதுக்கும் குழந்தை வர்றதுக்கும் நீ ஏன் ரிலேட் பண்ணிக்கிற?” என்று பிரசாந்த் பேச,

“அப்படியில்லைடா.. எனக்கு இதுவே மண்டைல போட்டு உருளும்போது, பேபி எல்லாம் வந்துட்டா, நான் நல்ல மைன்ட் செட்ல இருக்கணும் தானே…” என்று பிரகாஷ் பேச,

“டேய்…” என்ற அச்சுதன் “நீ தொழில் விஷயத்தை ஏன்  வீட்டுக்குள்ள கொண்டு வர. காதலிச்சு கல்யாணம் பண்ணீங்க.. எத்தனை பேருக்கு அவங்க காதல் கை கூடுதுன்னு தெரியுமா? அப்படி பார்த்தா நீங்க லக்கி கப்பிள்ஸ்டா. உனக்கு ஹோட்டல் மட்டும் தான் லாஸ்ல போகுது.. அதுவும் நிரந்தரமா இல்லை தானே.. ரிசார்ட் நல்லா போகுது தானே.. பேலன்ஸ் பண்ணிடுற இல்லையா. அப்போ ஏன் பெர்சனல் வாழ்க்கைல சறுக்குற நீ..?” என்று பேச,

“சொல்ல நல்லாத்தான் அண்ணா இருக்கு.. அப்பா கேட்கிற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது…” என,

“பிரச்சனைகள் வந்தா சந்திக்க பாருடா.. தப்பிக்க பார்க்காத…” என்ற அச்சுதன் “இதுதானே இல்ல இன்னும் எதுவும் இருக்கா?” என்று கேட்க,

“இப்போவரைக்கும் இதுதான். ஆனா, இப்போ அர்ச்சு வந்தப்புறம் உங்களோட பிரச்சனையும் சேர்ந்து நிக்குது…” என்றான் அச்சுதன் முகத்தையே பார்த்து.

அவன் சொல்வதின் அர்த்தம் புரிந்தவன் “அது இப்போதைக்கு முடிவுக்கு வராதுடா…” என்று சொல்ல,

“ஏன் அண்ணா.. அர்ச்சனா நல்ல டைப்பா இருக்காங்க. பார்த்தீங்க தானே எங்க எல்லாரோடவும் எப்படி செட்டாகுறாங்கன்னு…” என்று கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இப்போது பிபி சகோதரர்கள் பேச,

“நான் அவளுக்கு செட் ஆகணுமே டா…” என்று சொல்லி நிறுத்தான் அச்சுதன்.