மோகன் தன் வீட்டிற்கு வந்து கோபமாக உள்ளே சென்றான். தன் தாய் ஜெயராணி “சாப்பிடவா மோகன்” என்று அழைத்தும் திரும்பி பார்க்காமல் போனான்.” ஏன்டா இப்படி போற அங்கே சாப்பிட்டாயா? எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன் அங்கு சாப்பிடாதே” என்று கூறினார். மோகன் மாமியார் வீட்டிற்கு செல்லும்போது இங்கு அவன் அம்மா கையில் சாப்பிட்டு விட்டு செல்ல வேண்டும் .அங்கே இருந்து வரும்போதும் சாப்பிட்டு விட்டு வரக்கூடாது என்பது அவரது எழுதப்படாத சட்டம்.
மோகன் தப்பி தவறி சாப்பிட்டு விட்டு வந்துவிட்டால் அன்று மிகப்பெரிய களாபரமே நடக்கும் நான் எதற்காக யாருக்காக சமைத்து காத்துக் கிடக்கிறேன் என்று சண்டையிட்டுக் கொண்டு இரவு நேரம் என்றும் பாராமல் வீட்டிலிருந்து வெளியேறுவார். மோகன் வண்டி எடுத்துக்கொண்டு போய் தேடி சமாதானப்படுத்தி கூட்டிக் கொண்டு வரணும் இப்படி நாளும் ஒரு கூத்து நடக்கும்.
ஜெயராணி மோகனைப் பார்த்து கேட்டவுடன் அவன் சிறிது நேரம் பதில் சொல்லாமல் இருந்துவிட்டு பிறகு சொன்னான். இனிமே உங்க கையால சாப்பிட மாட்டேன் நீங்க எப்ப என் பொண்டாட்டியை கூப்பிட்டு வரிங்களோ அப்பதான் சாப்பிடுவேன் என்று சொல்லிவிட்டு மாடி ஏறி அவனது ரூமிற்கு சென்று விட்டான். ஜெயராணிக்கு மூஞ்சியில் அடித்தது போல் இருந்தாலும் இதற்கெல்லாம் அவர் அசைந்து கொடுத்தால் அவர் ஜெயராணி இல்லையே.
ஜெயராணி சின்ன வயதிலேயே நிறைய கஷ்டப்பட்டு இருந்தார். ஜெயராணி பிறந்த கொஞ்ச நாளிலேயே அதிக ரத்தப்போக்கு போய் அம்மா இறந்துவிட்டார். அவரைப் பார்த்துக் கொள்ள அவரது அப்பா இரண்டாவது கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்தார் வந்த இரண்டாவது சித்தி அவரை கொடுமைப்படுத்தினார்.
ஜெயராணியை தப்பு தப்பாக தனது கணவரிடம் சொல்லி அடி வாங்க வைத்தார். அவர் தலை குளித்த துணிகளை சின்ன பிள்ளை என்றும் பாராமல் அவரை எடுக்க வைத்து துவைக்க வைப்பார். அனைத்து வீட்டு வேலைகளையும் அவரே செய்ய வைப்பார் சின்ன வயதில் இருந்து அடிபட்டு அடிபட்டுமனது மரத்துப் போய்விட்டது. இதிலிருந்து விடுபட தனக்கு கல்யாணம் ஆகிவிட்டால் விடுதலை என்று மனதில் உறுபோட்டுக் கொண்டே வளர்ந்து வந்தார். அப்படி உருப்போட்டுக் கொண்டே மனதில் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டார். அவரது பிரார்த்தனை பலித்தது கடவுள் அவருக்கு செவி சாய்த்து ராஜன் மாப்பிள்ளையாக வந்தார். ராஜனை சும்மா சொல்லக்கூடாது தனது பொண்டாட்டியை அவரது பெயருக்கு ஏற்றது போல் ராணியாகவே வாழ வைத்தார் .
ராஜன் தனது மனைவி சின்ன பிள்ளையில் கஷ்டப்பட்டு வளர்ந்ததை சொல்லும்போது தனது மனைவிக்கு ஒரு கஷ்டமும் தெரியாமல் அவளை வாழ வைக்க வேண்டும் என்று நினைத்தார். அதன்படி இன்றளவும் வாழவைத்துக் கொண்டே இருக்கிறார். அதனால் தான் அவர் கூட குறைய பேசினாலும் பொறுத்துக் கொண்டு போய்விடுவார். வினோதினியை வீட்டை விட்டு வெளியே அனுப்புவது தான் அவருக்கு பிடிக்கவில்லை. ஜெயரணியை அடித்துவிட்டார். ஜெயராணிக்கு தன் கணவன் தன்னை இதனால் வரை அடித்ததில்லை இன்றோ நேற்று வந்த ஒருத்திக்காக தன்னை எல்லோரும் முன்னிலையும் அடித்துவிட்டார் என்று கோபம் அது மட்டும் இல்லாமல் அவரது சித்தியின் கைப்பிடிக்குள் வளர்ந்ததால் அவரை மாதிரியே இருக்கிற மனப்பான்மை வந்துவிட்டது. அதை என்ன சொல்லி மாற்றுவது என்பது யாருக்கும் தெரியவில்லை.
அவர் சின்ன வயதிலேயே சித்தி கொடுமையை அனுபவித்ததால் அவர் மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் தனக்கு மருமகள்கள் வந்தால் அவர்களை தனக்கு பிடித்த மாதிரி அதாவது தனக்கு கீழ் அடங்கி இருக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும் அப்போதுதான் தன் மகன்களை கடைசி வரைக்கும் தன் பேச்சை கேட்டு தன் கூடவே இருப்பார்கள் தனக்கும் ஒரு கஷ்டம் வராது என்று நினைத்தார். அதற்கு நேர் மாறாக தன்னுடைய மகன்கள் தனக்கு பிடித்த பொண்ணுங்களை கல்யாணம் பண்ணிக்கொண்டு வந்தனர் ஜெயராணி மருமகளை எதிர்ப்பதற்கு இது முதல் காரணம் இரண்டாவது இருவரும் பொண்டாட்டி முக்கியம் என்று கல்யாணம் ஆகும் முன்பே அனைத்தையும் மறைத்து கல்யாணம் பண்ணியது அடுத்து அவர்களின் சொல் பேச்சு கேட்டு நடந்தது என்று மருமகள்களை பிடிக்காமல் போனதற்கு பல காரணம் சொல்லிக் கொண்டே போகலாம்.
மோகனும் அவன் அம்மா ஜெயராணியிடம் சண்டை போட்டு ஒரு வாரம் பறந்து விட்டது ஒரு வாரமாக மோகனின் அம்மா கையால் சாப்பிடவும் இல்லை பேசவும் இல்லை வெளியே போவதும் வருவதுமாக இருந்தான்.
இரண்டு வாரங்கள் கழித்து அவனுக்கு பாஸ்போர்ட் விசா டிக்கெட் என்று அனைத்தும் வீட்டிற்கு வந்தது லத்திகா தான் அதனை கையெழுத்து போட்டு வாங்கினால் அதனைப் பார்த்து ஜெயராணி பயந்து போய்விட்டார்.ராஜனிடம் சொல்லி விசாரிக்கும் போது தான் தெரிந்தது மோகன் வெளிநாட்டுக்கு செல்ல இருப்பதும் தேவைப்பட்டால் அங்கே இருக்கப் போவதாகவும் சொன்னான்.
இதனைக் கேட்டவுடன் ராஜனும் ஜெயராணியும் பயந்தாலும் தன்னை மிரட்டுவதற்காக மகன் இவ்வாறு செய்கிறான் என்பது அந்த தாய்க்கு தெரியாமல் இல்லை.
ஜெயராணி யோசித்துப் பார்த்தார் மகன் இருந்து வினோதினின் பேச்சு கேட்டு ஆடுவதற்கு அவன் பேசாமல் வெளிநாட்டுக்கு செல்வதை மேல் சிறிது காலம் சென்றவுடன் அவனுக்கு வேறொரு கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று எண்ணத்தில் இருந்தார்.அதற்குப் பிறகு ஜெயராணியும் தடுக்கவில்லை. இவ்வாறாக இங்கு இருக்க வினோதினியோ அங்கு மோகன் வெளிநாட்டுக்கு செல்வதை நரேன் மூலம் தெரிந்து கொண்டாள். மோகனிடம் போன் பண்ணி “வேணாங்க நீங்க எங்களுடைய இருங்க, அத்தை என்னை ஏத்துக்கலைன்னாலும் பரவால்ல உங்களை பார்த்துக்கிட்டே காலத்தை கழிச்சிடுவேன் ப்ளீஸ் என்னை விட்டு போயிடாதீங்க “என்று கெஞ்சினாள்.
மோகனும் வெளிநாட்டுக்கு செல்வதை நிறுத்தி பாஸ்போர்ட் விசாவை கிழித்து எறிந்து விடுவோமா என்ற ஆத்திரம் வந்தது என் வினியை கெஞ்ச விட்டுக் கொண்டிருக்கிறேனே நானெல்லாம் நல்ல புருஷனா என்று கோபம் எழுந்தது ஆனால் என்ன செய்ய அம்மாவின் மேல் கோபம் ஒரு பக்கம் உள்ளூரிலிருந்து வினியை பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்ளாமல் இருப்பதற்கு வெளிநாட்டிற்கே சென்றுவிடலாம் என்று கோபத்தில் முடிவெடுத்து கம்பெனியில் காண்ட்ராக்டில் சைன் பண்ணி விட்டான் தன் கையாளக தனத்தை நினைத்து ஒவ்வொரு நாளும் நொந்து கொண்டு இருந்தான்.
அப்படி இப்படி என்று மோகன் ஊருக்கு போகக்கூடிய நாளும் வந்தது. வினோதினி பார்த்து விட்டு சென்று விடுவோம் என்று ஒரு பக்கம் ஆசை இருந்தாலும் எங்கே அவளைப் பார்த்து கண்களால் அவள் கெஞ்சினால் போதும் பாஸ்போர்ட்டை கிழித்து விடுவோம் என்று ஒரு பக்கம் பயந்து பார்க்காமலே வெளிநாட்டிற்கு கிளம்பி விட்டான்.
வினோதினியோ எப்படியாவது அவர் ஊருக்கு போவதை தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்கூட வாழ்ல நாளும் பரவால்ல அவர் வீட்டிலேயே இருக்கட்டும் என்று நினைத்தாள். நரேனிடம் அதனை சொல்லி எப்படியாவது ஏர்போர்ட்டுக்கு அழைத்துச் செல்லும்படி கெஞ்சினாள். தன் செல்ல அக்கா கெஞ்சுவது கண்டு பொறுக்க முடியாமல் ஏர்போர்ட்டுக்கு கூட்டி சென்றான் ஆனால் அங்கே ஜெயராணி ராஜன் லத்திகா என் பெங்களூரில் இருந்து அண்ணன் முரளி முரளியின் குடும்பம் அனைத்தும் நின்று கொண்டு இருந்தது அதனைப் பார்த்ததும் நரேன் இப்போது அக்காவை கூட்டிக்கொண்டு வந்தால் இவர்களின் முன் அக்கா மாமாவிடம் கெஞ்சுவாள் அது அவனுக்கும் பிடிக்காது மோகனுக்கும் பிடிக்காது என்பதால் அது மட்டும் இல்லை இப்போது மோகன் இங்கே இருந்தால் அவர்கள் தன் அக்காவை எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதனை எல்லாம் மோகன்தெளிவாக சொல்லி இருந்தான். அதனால் தான் “தன் அக்காவிடம் பிளைட் போயிடுச்சு அக்கா நாம லேட்டா வந்துட்டோம்”. என்று போய் கூறி வீட்டிற்கு கூட்டி சென்றான். ஆனால் ,அவன் வீட்டிற்கு கூட்டி சென்றதே வினோதினிக்கு வினையாகி விட்டது.
வினோதினிக்கோ அழுகை முட்டிக்கொண்டு வந்தது நரேஷன் நிற்கிறானே என்று பொறுத்துக் கொண்டு வந்தாள். வீட்டிற்கு வந்து தன் ரூமில் அழுது தீர்த்தாள். ப்ளீஸ் மோகன் என்கிட்ட வந்துவிடு ப்ளீஸ் ப்ளீஸ் என்று மனதில் கெஞ்சிக் கொண்டு இருந்தாள். அழுது அழுது அவளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுவிட்டது. நரேன் லட்சுமியிடம் நடந்த விஷயத்தை சொல்லி அவளுக்கு எது பிடிக்குமோ அதை செஞ்சு அவள் மனசை மாத்தணும் என்று சொல்லி வினோ விற்கு பிடிச்சதை செய்ய சொல்லி எடுத்துக்கொண்டு வந்தான். அப்போது வினோ மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு கொண்டிருந்தாள்.
அவளுக்கு சின்ன வயசுல இருந்தே வீசிங் இருக்கு ரொம்ப அழுகை வந்தால் வீசிங் வந்துவிடும் என்று யாரும் அவளை அளவிட மாட்டார்கள். அப்படி இருக்கும்போது இன்று மோகன் வெளிநாட்டிற்குச் சென்றவுடன் இனிமே என் மோகனை எப்போது பார்ப்பேனோ என்று நினைத்து நினைத்து அழுது மூச்சு திணறல் ஏற்பட்டுவிட்டது இதனைக் கண்ட அனைத்து குடும்பமும் ஹாஸ்பிடலுக்கு வினோதினியை அழைத்துச் சென்றார்கள்.
இனி வினோதினிக்கு என்ன ஆகும் மோகன் ஊருக்கு சென்று விடுவானா என்று அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் பிரண்ட்ஸ்.