“உன்னுள் ரோஜாவாய் நான்” 

அத்தியாயம் -12

ஜெயராணி என் மேல் சத்தியம் பண்ணு என்று கேட்டவுடன் மோகனுக்கு வேறு வழி தெரியவில்லை மோகனும்  “ஆமா அம்மா” என்றான் “பிறகு நான் கல்யாணத்துக்கு முன்னாடியே வினோதினியை விரும்ப ஆரம்பிச்சுட்டேன்” என்றான் “அம்மா ரொம்ப முன்னாடி இல்ல ஆக்சுவலி எனக்கு விரும்புற விஷயமே பத்திரிக்கை அடிச்சதுக்கு அப்புறம் தான் தெரியும்” “நானும் அப்பாவும் அவங்க வீட்டுக்கு போயிருந்தோம் அப்பதான் அவள முதல் தடவை பெரிய பொண்ணா ஒரு இளவரசியா பார்த்தேன்  அப்பொழுதில் இருந்து தான்   எனக்கே தெரிஞ்சது சின்ன வயசுல இருந்தே அவளை மட்டுமே மனசுல நினைச்சுகிட்டு இருக்கிறேன் என்று தெரிந்தது” .

  அப்புறம்தான் எனக்கு அவளை மட்டுமே புடிச்சிருந்தது தெரிஞ்சுச்சு அதோட முகிலன்அண்ணனும்  நிஷாவ விரும்புறதா  சொன்னான்  அப்பதான் எனக்கு ஒரு ஐடியா தோணுச்சு எப்படியும் கல்யாணம் நின்றுச்சுன்னா நீங்க எப்படியும் திரும்ப வினோதினியை எனக்கு பொண்ணு கேட்டு போக மாட்டீங்கன்னு தெரியும் அதனால தான் அதுக்கு கல்யாணம் அன்னைக்கு அண்ணனை போ சொன்னேன் பெங்களூருக்கு  அனுப்பினேன். உடனே அப்பா குடும்பமான போயிரும் என்று பயந்து எல்லோருக்கும் முன்னாடியும் என்னை கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்க அப்பொழுதும் வேண்டாம் என்று தான் நினைத்தேன் ஆனால் இனிமேல் இப்படி ஒரு சான்ஸ் கிடைக்காது என்று நினைத்து உடனே ஒத்துக்கிட்டேன் நான் வினோதினி காலத்துல தாலி கட்டினேன் என்றான்.

     

           “ரொம்ப நல்லாவே பிளான் பண்ணி இருக்க மோகன்” என்றார் ஜெயராணி “அம்மா கிட்ட முதலில் ஒரு வார்த்தை சொல்லி இருந்தா என்ன மோகன்” என்று கேட்டார் “போயும் போயும் உனக்கு இவ தான் கிடைச்சாளா” மோகன்”இதோ இதுக்கு தான் உங்ககிட்ட சொல்லல”என்றான்.” அப்பா அண்ணனுக்கு பொண்ணு பார்க்கும்போதே இந்த பொண்ணு வேணாம்னு சொன்னிங்க இதுல நான் விரும்புறது தெரிஞ்சிருந்தா என்ன சொல்லியிருப்பீங்க வேணான்னு தானே சொல்லியிருப்பீங்க இல்ல கல்யாணம் பண்ணி வச்சிருக்கீங்களா” என்றான். ஜெயராணியோ  “நீனா பார்த்து பண்ணிக்கிட்டு  சரி  இதுவரைக்கும் அவளுக்கு ஏதாவது உண்டாயிருக்கா இதெல்லாம் தெரிஞ்சும் அவளும் அம்முக்குனி  மாதிரி தானே இருந்திருக்கா” 

மோகன் “அம்மா இதுவரைக்கும் நான் அவளை விரும்பினது கூட அவளுக்கு தெரியாது”. “பொய் சொல்லாதே” என்றார் ஜெயராணி அது எப்படி அவளுக்கு தெரியாம இருக்கும் என்றார்.

      ”  உண்மையிலேயே எனக்கு தெரியாது அத்தை தெரிஞ்சிருந்தா இந்த கல்யாணத்துக்கே ஒத்து இருக்க மாட்டேன்” என்றாள் வினோதினி. “அம்மா நான் உன் கிட்ட பேசல என் பிள்ளை கிட்ட பேசுறேன்” என்றார் ஜெயராணி அப்புறம் மோகன் இன்னொன்னு சொன்னியே உனக்கு தான் குறைனு அதுவும் பொய் தானே என்றார். ஆமா அதுவும் பொய்தான் பின்ன என்ன ஒவ்வொரு வாட்டியும் அவளை குறை சொல்லிட்டு இருந்தா உண்மையிலேயே அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்ல எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சுகிட்டு வாழ ஆரம்பிச்சது லேட்டா தான் அதுக்குள்ளேயும் குழந்தை வேணும் குழந்தை வேணும்னா நாங்க என்ன பண்றது.

                

            இதுக்கு மேல அவ ஒரு நிமிஷம் கூட என் வீட்ல இருக்க கூடாது அவள போ சொல்லு என்றார் ஜெயராணி வினோதினியோ இதுக்கு மேல நானும் ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க மாட்டேன்  நீங்களா கூப்பிடற வரைக்கும்  வரமாட்டேன் ஜெயராணியோ ரொம்ப சந்தோசம் என்றார்  அவ்ளோதான் அடுத்த ஒரு நிமிஷம் கூட வினோதினி  அங்கே நிக்கல கிளம்பி போய்க்கிட்டே இருந்தா மோகன்தான் என்ன பண்ணுவது  என்று தெரியாமல் அவள் பின்னாடியே ஓடுனான். இப்ப உங்க அம்மா கிட்ட சொன்னியே அந்த உண்மை எல்லாம் என்கிட்ட கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லி இருக்கலாம் இல்ல நம்மளுக்கு இவ்ளோ பிரச்சனை வந்திருக்காது என் குடும்பமும் எல்லாரும் முன்னாடியும் அவமானப்பட்டு நின்று இருக்காது என்றாள் வினோதினி.

        

         நீ மட்டும் முன்னாடியே சொல்லிருந்தினா உங்க அம்மாகிட்ட நான் இவ்வளவு ஏச்சும் பேச்சு வாங்கியிருக்க மாட்டேன் இரு விட்டார் சம்மதத்தோட நம்ம  கல்யாணம் எப்ப நடக்குமோ அது வரைக்கும் காத்துகிட்டு இருந்திருக்கலாம்.

 வேணாம்  மோகன் இதுக்கு அப்புறம் என் பின்னாடி வராத உங்க அம்மாவ எப்ப என்னை கூப்பிடுகிறார்களோ அப்ப நான் இங்க வரேன்   அதுக்கு அப்புறம் என்கிட்ட பேசுற முயற்சியை விட்டுவிடு என்றாள் வினோதினி.

       

          வினோதினி மோகன் வீட்டிலிருந்து கிளம்பி நேராக தனது வீட்டிற்கு வந்தால் அங்கே அனைவரும் என்னம இப்ப வந்திருக்க ஸ்கூல் இல்லையா இன்னைக்கு என்றார்கள். ஸ்கூல் இருக்குப்பா நான் தான் லீவு போட்டுட்டேன் சரிமா ஏன் முகம் வாட்டமா இருக்கு நடந்து வந்தேன் பா அதான் கொஞ்சம் களைப்பா இருக்கு ஏன்டா நடந்து வந்த ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நானாவது சித்தப்பாவது கூப்பிட வந்திருப்போம்ல என்றார் வீரபாண்டிஆமாம் மாப்பிள்ளை ஏன்ஏன் உன்னை கொண்டாந்து விடலை என்றார் வீரபாண்டி.வினோதினியோ அவர் வேலைக்கு போயிட்டாருப்பாஎன்றாள் . 

         லட்சுமி சரிமா வந்து சாப்பிடு என்றார் இப்பொழுது சாப்பாடு வேண்டாம் என்றால் அதற்கும் ஏதாவது நினைத்துக் கொள்வார்கள் என்று விட்டு சரி எடுத்து வைங்க வரேன் என்றாள். சாப்பாடு இரண்டு வாய் தான் உள்ளே வைத்திருப்பாள் குமட்டிக் கொண்டு வந்தது. வாஷ்பேஷனில் போய் வாந்தி எடுத்துவிட்டு அங்கேயே மயங்கி விழுந்து விட்டாள். ஒட்டுமொத்த குடும்பம் பதறிப் போய் அம்மாவினோ என்ன ஆச்சு என்ன ஆச்சு என்று கேட்டார்கள். கண்ண தொறந்து பாருமா வினோதினி சித்தப்பாவும் அண்ணே அங்கே என்னமோ வீட்ல பிரச்சனை நடந்திருக்குஅண்ணே இல்லைன்னா நம்ம பாப்பா இப்படி வராது அண்ணே என்றார். உடனே ராஜனுக்கு போன் செய்தார்கள் ராஜனும் வீட்டில்  என்ன நடந்தது எதுவும் எனக்குத் தெரியாது என்றார். என அவர் காலையில் கடைக்கு கிளம்பி போனவரு அவருக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. 

                 வீரபாண்டியோ எப்பா இப்ப அதுவா முக்கியம் நம்ம பாப்பா இப்படி விழுந்து கிடக்கிறா பாரு தண்ணி தெளிச்சாலும் எந்திரிமாட்டேங்கிறா முதல்ல ஹாஸ்பிடலுக்கு கொண்டு போவோம் வாஎன்றார். அவரது குடும்ப மருத்துவர் பரிசோதித்து விட்டு வினோதினியை நான்தான் அப்பவே சொன்னேன்ல அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்ல அப்படின்னு இந்த பாருங்க இப்போ உங்க பொண்ணு கன்சீவா இருக்கா 38 நாள் தான் ஆகுது ரொம்ப கேர் ஃபுல்லா பாத்துக்கணும் என்றார். வீரபாண்டி குடும்பத்தார் அனைவருக்கும் மகிழ்ச்சி இது மாப்பிள்ளைக்கு தெரியுமான்னு தெரியலையே என்றார் வீரபாண்டியோ வினோதனின் சித்தப்பாவோ அண்ணே இது தெரிந்திருக்க வாய்ப்பு இருக்காது நம்ம பாப்பாக்கு என்னமோ நடந்து இருக்கு அதனால தான் நம்ம பாப்பா இப்படி வந்திருக்கு என்றார். வினோதனின் பாட்டி தாத்தாவோ ஆமாடா உங்களுக்கு  அவை எப்பவுமே உங்களுக்கு பாப்பா தான் அவளுக்கே ஒரு குழந்தை பிறக்கப் போகுது. இன்னும் அவள பாப்பா பாப்பான்னு சொல்லிக்கிட்டே இருங்கடாஎன்றனர். வினோதனின் அப்பாவும்  சித்தப்பாவும்  ஆமாம்   வினோ பாப்பாதான் அவளுக்கு பொறக்க போற குழந்தையும் எங்களுக்கு பாப்பாதான் ஒரு சின்ன பாப்பாவுக்கே ஒரு குழந்தை பிறக்க போகுது என்றனர் மகிழ்ச்சியுடன்.

     வினோதினி கண் திறந்து பார்த்தால் குடும்பம் அனைவரும் முகத்திலும் சந்தோசம் எல்லோரும் பாப்பா உனக்கு ஒரு குட்டி பாப்பா பொறக்க போது நான் நம்பவே முடியல டா என்றனர். அப்பொழுதுதான் அவளுக்கு நினைவு வந்தது காலையில் தான் ஆசையாக மோகனிடம் சொல்ல வரும் பொழுது தான் அவரது மாமியார் வந்துவிட்டார். அதற்குப் பிறகு நடந்தது அனைத்தும் நினைவில் வந்து கசந்தது உடனே தன் குடும்பத்தாரிடம் எக்காரணம் கொண்டும் இந்த தகவல் அவங்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என்றாள். வீட்டில் நடந்த அனைத்தையும் கூறினாள். அவங்களா எப்ப எனக்கான்டி என்ன ஏத்துக்குறாங்களோ அப்ப அவங்க வீட்டுக்கு போய்க்கிறேன் என்றாள்.

        வினோதினியின் குடும்பத்திற்கோ அவள் சொன்னது தானே வேதவாக்கு அதுவும் இந்த நிலைமையில் அதனால் யாரும் எந்த தகவலும் மோகன் வீட்டிற்கு செல்லவில்லை. நம்ம பாப்பா சொல்றது கரெக்ட் தானே அந்த அம்மாவா எப்ப மருமக வேணும் நினைக்குதோ அப்ப வந்து கூட்டிட்டு போகட்டும் என்றனர்.

           மோகன் வீட்டில் ராஜனும் தாம் தூம் என்று குதித்துக் கொண்டு இருந்தார். “மோகன் முன்னாடியே நீ அப்பா கிட்ட சொல்லி இருக்க வேண்டியதுதானே அதுக்கு உன் கல்யாணம் அன்னைக்கு தான் எல்லாரும் முன்னாடி என் மானத்தை வாங்குவீங்களா நீயும் உங்க அண்ணனும்” என்றார். ஜெயராணி பார்த்து” சரிஅதுக்கு எதற்கு வினோவை வீட்டை விட்டு அனுப்புன” என்றார் ராஜன்.” உங்க மகனும் அவளும் சேர்ந்துகிட்டு இல்லாத நாடகம் எல்லாம் போடுவாங்க நான் அத நம்பிகிட்டு இந்த வீட்ல  அவளவாழ வச்சிக்கிட்டு இருக்கணுமா” என்றார் ஜெயராணி மோகனோ அப்பா அவளுக்கு எதுவும் தெரியாது என்றான். தப்பெல்லாம் என் மேல தான் அவளுக்கு எதுவுமே தெரியாது என்றான். ராஜனோஇருந்தாலும் மோகன் உன்னை நான் மன்னிக்க மாட்டேன் அன்னைக்கு எல்லாரும் முன்னாடியும் நான் அவமானப்பட்டு நின்னது உனக்கு சந்தோசமா இருந்துச்சா என்றார். அப்பா அப்படி இல்லப்பா நீங்க ஒத்துக்க மாட்டீங்க ன்னு நினைச்சதப்பா நான் அப்படி பண்ணிட்டேன் மன்னிச்சிடுங்க பா என்றான்.

       இங்கு வினோதினியோ தன் கணவருடன் இருந்த நாட்களை நினைத்துப் பார்த்தாள். முதன் முதலில் அவர்கள் இருவரும்    ஒன்றாக இருந்த பொழுது வினி வினி ப்ளீஸ் டா நீ இப்படி சினுங்கும் போதும் நீ என் மேல கை கால போடும் போதும் உன்னை கட்டி பிடிச்சு முத்தம் கொடுக்கணும் போல இருக்கு டா  ப்ளீஸ் இப்ப நான் கொடுத்துக்கவா  என்பான்  வினி நான் உன்னோட ஹஸ்பண்ட் தானே நான் என்ன கேட்டாலும் செய்வியா என்பான் வினியும் என்னங்க சின்ன பிள்ளை மாதிரி என்ன என்பாள். அவன் சொல்ல சொல்ல வெட்கத்தில் கன்னங்கள் சிவந்தாலும் கொடுக்க தவற மாட்டாள். இதனை எல்லாம் நினைத்துப் பார்க்கும் பொழுது அழுகை முட்டிக்கொண்டு வந்தது வினோதினிக்கு

கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லி இருந்தா எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் அத்தைக்கு எப்படியாவது புரியவைச்சு இந்த கல்யாணத்தை நல்லபடியா நடத்திருக்கலாம் நாமளும் அங்க  நல்லா வாழ்ந்திருப்போம்  என்று நினைத்து மறுகலானாள்.

    இங்கு மோகனுக்கும் அதை நினைவுகள் தான் அப்பா ராஜனும் மோகன் உன்னோட வாழ்க்கை உன் கையில நீ ஒழுங்கா இருந்து இருந்தா நல்லா இருந்திருப்ப என்கிட்ட முன்னாடியே சொல்லி இருந்த நான் எப்படியாவது நடத்தி வைச்சிருப்பேன் இப்ப நீனே சிக்கல் ஆக்கி வைத்திருக்கிறாய் என்றார்.

இனி…