பளிச்சென்று மின் விளக்குகளின் ஒளி கண்ணாடி அறைகள் எங்கும் நிறைந்து இரவையும் பகலாக்கி இருந்தது.
பிரிண்டிங் லேப் சென்ற மனோ சரியாக ஒருமணி நேரத்தில் வேலையை முடித்து திரும்பி வந்திருந்தான். அனைத்து அறைகளிலும் மின் விளக்குகள் ஒளிர, ஷிவியைத் தேடிய விழிகளோடு அவளறைக்குள் நுழைத்தான்.
மெத்தென்ற பஞ்சு சோஃபாவில் களைத்துப் போய் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் ஷிவின்யா.
‘தன்னை மட்டும் உறங்கவிடாது எழுப்பிவிட்டு இவள் மட்டும் ஆனந்த சயனத்தில் இருப்பதைப் பார்!’ உள்ளே சடைத்துக்கொண்டு இமைக்காது பார்த்திருந்தான்.
ஏனோ உறக்கத்தில் இருப்பவளை எழுப்பிவிட மனம் வரவில்லை. அவளைப் போல இவன் ஒன்றும் இறுகிய இதயம் படைத்தவன் இல்லையே?
வாங்கி வந்த ஆல்பத்தை பேக் செய்துவிட்டு அதை மாதவியின் மேசையில் சென்று வைத்தான். மீதமுள்ள அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு, வர அப்போதும் ஷிவி துயில் களையவில்லை. என்ன செய்வது தனியாக விட்டுச் செல்லவும் மனமின்றி, யோசனையுடனே சில நொடிகள் அவளைப் பார்த்திருந்தான்.
மூடிய விழிகள் இவன் மடியில் மயக்கத்தில் கிடந்த அன்றைய நாளை நினைவுபடுத்தியது. இளகி மனதோடு தானாக எழுந்த மனோவின் கரங்கள் இவள் தலை கோதிக் கொடுத்தன. ஒருவேளை இவள் பார்வையின் தீட்சண்யம் காணாத தைரியமோ என்னவோ? இதுவரையிலும் எந்தவித வித்தியாசமும் உணர்ந்திடாத ஷிவி இன்னுமே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
அவள் முகம் பார்த்தே தலைக்கோதி கொடுத்தவன் தன்னிலை சுற்றம் மறந்து குனிந்து அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்.
உதடு உஷ்ணத்தில் உணர்வுபெற்று சட்டென கன்னிகை கண் விழித்துவிட, மனோவும் பட்டென விலகிக் கொண்டான்.
என்ன காரியம்செய்திருக்கிறேன்? அன்று போல் இது ஒன்றும் மருத்துவ முத்தம் இல்லையே? ஷிவியின் பதில்வினை எவ்வாறு இருக்குமோ என்ற உணர்வு இருந்த போதும் சிறிதும் அச்சமின்றி அமைதியாக இருந்தான் மனோகர்.
நிதானமாக எழுந்து அமர்ந்தவள், “வேலை முடிஞ்சதா?” என்க, திருதிருவென திருடனாக முழித்த மனோவிற்கு அவள் எதைக் குறிப்பிட்டுக் கேட்கிறாள் என்று அறியாத போதும் தலையாட்டி வைத்தான்.
கைப்பையை எடுத்துக்கொண்டு அவள் முன்னே நடக்க, ஸ்டுடியோவை மூடிவிட்டு அவள் பின்னே நடந்து வந்தான் மனோகர்.
அவள் காரை இயக்க, அனுமதியின்றி மறுபுறம் வந்தமர்ந்தவனின் உரிமை இவளுக்குள் உறுத்தலை தொற்றுவித்தது.
ஒரே செயலில் இவனை அந்நியப்படுத்தி விட்டாள். இதுவரையிலும் இவளோடு தனிமையில் இருந்த இனிமையில் அனல்மூட்டிவிட, சுளீரெனக் கோபம் வந்தது.
“நான்செய்ற எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்குன்னா அன்னைக்கு உனக்கு மூச்சுக் கொடுத்ததுக்கு என்ன விலை?” மனோவும் பதிலுக்குப் பதில் பேச,”எவ்வளவு வேணும்?” ஷிவியும் திடமாக நின்றாள்.
சட்டென அவள் முகம் பற்றி தன்னை நோக்கி திருப்ப, காரின் இயக்கத்தை நிறுத்தியவள் முறைப்பாக அவனை நோக்கித் திரும்பினாள்.
“நீ… நீதான் வேணும்” என்ற மனோவின் தீவிரமான பார்வையும் குரலும் அவன் உறுதியான நிலைப்பாட்டை உரைத்தது. அவன் அடாவடியில் கொஞ்சம் அரண்டு போனாள்ஷிவி. இருந்தும் வெளிக்காட்டிக் கொள்ளாது,”யூ இடியட்…” சரமாரியாக திட்டித் தீர்த்தாள்.
“மனோநீ என்ன செய்ற? இதுக்கு பின்னால இருக்கிற உன் எண்ணம் என்னன்னு கண்டுபிடிக்கிற வரைக்கும்தான் உன்னால என் முன்னாடி உக்காந்து பேச முடியும், ஜாக்கிரதை” விரல் நீட்டி எச்சரித்தாள்.
விரல்களை மடக்கிப் பிடித்தவன், “கண்டுபிடிங்க, கண்டுபிடித்து எனக்கும் சொல்லுங்க இது என்ன உறவுன்னு” என்றான்.
பக்கத்துஇருக்கையில் இருப்பவனை கோப முகமாக வெறித்தவள் படாரென கரங்களை உருவிக்கொண்டாள்.
தன்கைப்பையில் இருந்து ஒரு சிறு பாட்டில் ஒன்றை எடுத்து நீட்டியபடி,”என்னதுன்னு தெரியுதா?” என்றாள் அழுத்தமாக. பார்ப்பதற்கு ஏதோ முகத்திற்குபூசும் சீரம் போன்றுகண்ணாடிப் புட்டியில் இருந்தது. இன்னுமே மனோ புரியாது பார்த்திருக்க, “ஆசிட்” என்றவள் பின் வார்த்தையின்றி விரல் நீட்டி எச்சரித்தாள்.
குழந்தைகளைகொஞ்சும் கையில் அமிலமா? நம்பவே முடியவில்லை.மனோவிற்கு உள்ளுக்குள் நொடியில் ஒரு மிரட்சி உண்டானது.
“என்னமிரட்டுறீங்களா?” வெளியில் திடமாகக் கேட்டான்.
மறுப்பாகதலையசைத்தவள், “இதுதான் உனக்கு கடைசி வாய்ப்பு, எச்சரிக்கிறேன்” அசராத குரல், அசால்ட்டாக வந்தது. முகமோ கல்லை விடவும் கடினமுற்று இருந்தது.
அத்துடன் மனோ மறுவார்த்தை பேசாது மௌனமாகிவிட, நேராக அவர்கள் குடியிருப்பிற்கு வந்த பின்புதான் காரை நிறுத்தினாள்.
இருள் சூழ்ந்த முன் மாலை நேரம் ஆன போதும் இருளுக்கு பஞ்சமாகிப் போனது, மின் விளக்குகளால் நிறைந்து ஒளிரும் அவ்விடம். பிரமாண்டமான ஹோட்டலில் பெரிய பார்ட்டிஹாலில்அதிதி மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட விழாநடந்தது.
பெரியநட்சத்திரங்கள் நிறைந்திருக்கும் இடம் என்றால் சொல்லவும்வேண்டுமா? தமிழ் திரைத்துறை பிரபலங்கள் மட்டுமின்றி இந்தியாவின் பெரும் பிரபலங்கள் எல்லாம் கூடியிருந்தனர்.
அதிதியின் அழைப்பை ஏற்று ஓ பேபியில் இருந்து அனைவருமே விழாவிற்கு வந்திருந்தனர். மனோகரும் சாஹருடன் வந்திருந்தான்.
ஷிவியின் வருகைக்காக காத்திருந்த ஜோடி விழிகள், மனோகர் மட்டுமின்றி ஆதித்யாவும் தான்.
ஸ்லீவ்லெஸ்ஓபன் ஷோல்டர் பார்ட்டி கவுன், நெஞ்சு பகுதியில் இருந்து கீழ் வரை முழுதுமாக, மூடியிருக்க, சிவப்பு நிறத்தில் மினுமினுப்போடு உடல்வாகுக்குஏற்றவாறுஇருக்க, தேவதையாக வந்து இறங்கினாள் ஷிவன்யா.
விழாக்கூடம் என்ற நினைவில்லை, யாரைப்பற்றியும் கவலை இல்லை. மனோவின் விழிகள் உரிமையோடு சுதந்திரமாக ஷிவியை சுற்றிவர, ஆதித்யாவின் விழிகள் யாரும் அறியாது அவ்வப்போது அவளை சுற்றியது.
சற்று தூரத்தில் அப்போது தான் உள்ளே நுழைந்து கொண்டிருந்த பிரபலமான இயக்குனர் ஒருவரை கண்டுவிட்ட சாஹர், “மனோ ப்ரோ, நான் இங்க வந்ததுக்கு அதிதி மேம் மட்டும் காரணமில்லை” என ஆரம்பிக்க, அசுவரஸ்யமாக செவி கொடுத்துவிட்டு பார்வையை ஷிவியை நோக்கி அலைபாய விட்டிருந்தான் மனோகர்.
“நம்ம ஆதித்யா சார் தான் இந்த டரைக்டர்கிட்ட இன்ட்ரோ கொடுக்கிறதாவும் அப்புறம் பேசி அசிஸ்டெண்ட் டரைக்டரா சேர்த்து விடுறதாவும் சொன்னார்” என்றும் உரைக்க, யார் அந்தப் பிரபலமென ஒருமுறை பார்வையைச் சுழற்றி பார்த்துக் கொண்டான் மனோகர்.
உண்மையிலே பெரிய இயக்குநர் தான். மனோகருக்கு அவரின் சில படங்களும் அதன் வழியாக அவர் கூறும் கருத்துகளும் பிடித்திருந்தது.
விழா தொடங்கியிருக்க, மிகப் பெரிய மின்திரையில் அதிதி பிரேமின் சமீபத்திய ஃபோட்டோ சூட் புகைப்படங்கள் தொடங்கி, கருவுற்ற போது எடுத்ததில் தொடங்கி குழந்தை வளர்ச்சியின் ஒவ்வொரு காலநிலையிலும் அடக்கிய புகைப்படங்கள் வரிசையாக ஒளிபரப்பட்டது. இறுதியாக குடும்பப்புகைப்படங்கள் அனைத்து காட்சியானது.
அனைத்தும் ஷிவன்யா எடுத்த புகைப்படங்களாக இருக்க, இறுதியில் மனோகர் எடுத்த சிலதும் இருக்க, பெரிதும் பெருமையுடன் மகிழ்ச்சியுற்றான்.
முதல் முறையாக அதிதி, பிரேமின் குழந்தையை வெளி உலகிற்கு காட்டப்பட, உடனுக்குடன் சமூக வலைத்தளங்கள் செய்தி ஊடங்ககளின் வழியாக புகைப்படங்கள் உலகெங்கும் வைரலாக பகிரப்பட்டது.
குழந்தையை தூக்கி வைத்து பெற்றவர்கள் கேக் வெட்டி முடிக்க, விருந்தும் கொண்டாட்டமும் தொடங்கியது. அதிதி, பிரேமின் குரலில் இணைத்து சில சினிமா பாடல்களை பாடி ஆரம்பித்து வைக்க, கச்சேரி களைகட்டியது.
ஷிவி வந்ததிலிருந்து மனோகர் கவனித்துக் கொண்டுதான் இருந்தான். அறிமுகமான அனைவரோடும் சின்ன சிரிப்பு, சில வார்த்தைகள் என கடந்து வந்திருந்தாள். ஆதித்யாவுடன் மட்டும் கூடுதலாக ஐந்து நிமிடம் பேசியிருப்பாள்.
ஏனோ தனியாக தள்ளியிருப்பதாகத் தோன்றியது மனோகருக்கு. உண்மையில் ஷிவன்யாவிற்கு இந்த மாதிரி பார்டி கொண்டாட்டங்கள் எதுவும் பிடிக்காது. ஆனால் அவள் தொழில்காரணமாக இந்த மாதிரி அழைப்புகளை முற்றிலும் தவிர்க்கவும் இயலாது.
ஷிவியைநோக்கிச் சென்று கொண்டிருந்த மனோவைஇடையில் அழைத்த அதிதி, அவள் சகோதரனை அழைத்து வருமாறு வேண்டினாள்.
தோளில்குழந்தையைத் தாங்கியபடி, அருகில் விருந்தினராக வந்த இளம் நடிகை ஒருவரும் இருந்தார்.
அதிதியின்குரலில் இருந்த அவரசம் உரிமையும் மனோவை மறுக்க விடாது செய்ய, ஆதித்யாவை நோக்கிச் சென்றான்.
அவனோஅப்போது சாஹர் கைக்காட்டிய பிரபலமான இயக்குநர் ஒருவருடன் பேசியபடி நின்றிருந்தான்.
அவர்பார்வை ஷிவன்யா மீது பாய்ந்து மீள, “தளதளன்னு தக்காளி மாதிரி இருக்காயார்அந்த சிட்டு?” என்றார் ஆவலாக.
“ஹோ…அந்தப் பொண்ணுக்கு நடிக்க இன்ரஸ்ட் இருந்தா என் ஆஃபிஸ் வந்து பார்க்கச் சொல்லு” என்றார் உள் அர்தத்தோடு. போதை வழியும் விழியும் உதடுகளில் உதித்த விரகச் சிரிப்பின் அர்த்தம் என்ன என்பது ஆதித்யாவிற்கு மட்டுமில்லாது மனோவிற்கு நன்குபுரிந்தது.
மனோவிற்குஇரத்தம் சூடேறிஆவியாகக் கொதித்தது. அப்படியே நான்கு அறைவிட்டு அவன் கழுத்தை நெரிக்கும் வேகம் வந்தது.
“அப்படிப்பட்டபொண்ணு இல்லை சார். அது மட்டுமில்லாம இவளுக்கு அந்த அவசியமும் இல்லை” என்றவன்அவள் யார் என்பதையும் சற்று பெருமையாகக் கூறிக் கொண்டிருந்தான்.
ஷிவன்யாவைஅந்த இயக்குநரின் பார்வை ஆசையாக தழுவ, ஆதித்யாவின் பார்வை அன்போடு தழுவ, இருவரின் பார்வையும்மனோவிற்கு பிடிக்கவில்லை.
தீயாய்பற்றிக் கொண்டு எரிந்தது. இருவரின் பார்வைக்கு முன் ஷிவன்யா இருப்பதே பிடிக்கவில்லை.
இதில்ஆதித்யா வேறு ஷிவியை நெருங்கி, “இன்னும் சாப்பிடலையா?இரு டின்னர் எடுத்துட்டு வாரேன்” உபசரித்தபடிநின்றிருந்தான்.
ஷிவன்யாபதில் சொல்லும் முன்பாக, இடையில் வந்த மனோ, “ஒரு முக்கியமான விஷயம். ஷிவி நீ வா” என ஷிவியின் கரத்தை அழுத்தமுடன் பற்றியவன் சரசரவென இழுத்து வந்துவிட்டான்.
பாரர்க்கிங்பகுதிக்கு வந்தவன், ஷிவியின் காரில் அவளை தள்ளிவிட்டு மறுபுறம் வந்து இவனே காரை இயக்கினான்.
இவன் இழுத்து வந்த வேகத்திற்கு ஷிவன்யாவால் தடுக்க முடியவில்லை. திடீர் செயலின் காரணம் புரியாத போதும், பிறர் பார்வைக்கு முன் காட்சியாகாது உடன் வந்தாள்.
“மனோநீ என்ன செய்திட்டு இருக்கே?” அழுத்தமாக அதட்டிக் கேட்டாள்.
“எல்லாம்தெரியும். நீ பேசாம வா” ஒருமையில் விளிப்பதும் காரின் ஸ்டேரிங்கில் அவன் காட்டும்அழுத்தமும் வண்டி செல்லும் வேகமும் வழக்கத்திற்கு மாறானது என நன்கு புரிந்தது.
மேலும் உற்று உன்னிப்பாக அவனை பார்த்தாள். முகமும் உடலும்கல்லாக இறுகியிருக்க, கழுத்திலிருந்து கைகள் வரைக்கும் நரம்புகள் புடைத்துதுடித்துக் கொண்டிருந்தது.
சட்டென அமைதியாகிப் போன ஷிவி கண்மூடிதன்னை சுற்றி நிகழ்ந்த அனைத்தையும் மனதில் படமாக ஓட்டிப் பார்த்து ஆராய்ந்தாள்.மனோவின் செயலுக்கான காரணம் என்னவாக இருக்குமென ஓரளவிற்கு யூகிக்க முடிய, மேலும் மௌனமாகிப் போனாள்.