தென்றல் – 05

‘நாம நீலகிரி வந்தது இவளுக்கு எப்படி தெரியும்’  என சட்டென்று அவன் மனதிற்குள் நினைத்தான்.

“என்ன? நான் கேட்டுட்டே இருக்கேன். என்ன பதில் சொல்லலாம்னா அவசரமா யோசிக்கிறீங்களோ?”

‘எதுவும் பேசாம இருந்தா மேலும் மேலும் கேள்விகளை கேட்பா’ என நினைத்தவன், “நான் ஏன் யோசிக்க போறேன். நான் எதுக்காக முதல்ல யோசிக்கணும்” என சமாளிக்க முயற்சி செய்தான்.

“அப்ப பதில் சொல்ல வேண்டியது தானே.”

“உனக்கு என்ன பதில் வேணும்னு எதிர்பார்க்கிற டியர்.”

“ஹலோ! மிஸ்டர். நான் உங்ககிட்ட இருந்து கேள்விக்கான பதில் தான் எதிர்பார்க்கிறேன். சும்மா டைவர்ட் பண்ணனும்னு நினைக்காதீங்க.”

“நீ தேவை இல்லாத கேள்விகளை  கேட்டா அதுக்கெல்லாம் பதில் சொல்லணும்னா அவசியம் எனக்கு கிடையாது. நான் இப்போ ஜாலி மூடுல இருக்கேன். தேவையில்லாததை எல்லாம் எதுக்கு பேசிட்டு இருக்க. கொஞ்சம் பக்கத்துல வா” என அவள் கைகளைப் பிடிக்க.

அவன் படியிலிருந்து தனது கைகளை வெடுக்கென்று இழுத்தாள்.

“நான் கேட்ட கேள்விக்கு முதல்ல பதில். நீலகிரியில ஒரு பொண்ணோட உங்களுக்கு என்ன வேலை.”

“நான் நீலகிரி போகவே இல்ல.  உன்னோட பொய்யான கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை” என்றான்.

“நான் ஏன் உங்க கிட்ட பொய் சொல்ல போறேன். நீங்க ஒரு பொண்ணோட வந்தத நான் பார்த்தேன்.”

“ஓஹோ! அப்படியே கொஞ்சம் மாத்தி யோசிக்கலாமே ஷான்வி.”

“இதுல மாத்தி யோசிக்க என்ன இருக்கு?”

“நான் நீலகிரி வந்தேன். உன் பேச்சுப்படியே வச்சுக்கலாம். ஆனா உனக்கு அங்க என்ன வேலை? நீ யார் கூட வந்தேன்னு தெரிஞ்சுக்கலாமா?” என அவளது முகத்தை பார்த்தான்.

“நான் என் பாஸோட ஒரு மீட்டிங். அதனால அங்க வந்தேன்” என அவனது முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். அவனது முகத்தில் இருந்த மாற்றத்தை அவள் உணராமல் இல்லை.

“அதேபோல எனக்கும் வேலை இருக்கும். நானும் வந்து இருக்கலாம். இதெல்லாம் ஒரு கேள்வின்னு கேட்டு டைம் வேஸ்ட் பண்ணாத ஷான்வி.”

“அது உண்மைனா நான் கேட்ட உடனே நீங்க பதில் சொல்லி இருக்கலாம்.”

“இப்ப உனக்கு என்னடி பிரச்சினை. இன்னைக்கு நமக்கு லைஃப்ல எவ்வளவு முக்கியமான நாள். சும்மா தேவையில்லாம கேள்விகளை கேட்டுட்டு நிக்கிற” என கடுப்போடு கேட்டான்.

“நான் தேவையான கேள்வி தான் கேட்கிறேன். கேட்டவுடனே ஏன் பதில் சொல்லல.”

“அதான் இப்ப சொல்லிட்டேனே. ஆமா வேலை விஷயமா வந்தேன். என்ன இப்போ.”

“எனக்கு பார்த்தா அப்படி தோணல.”

“ஒருவேளை நானும் உன்னைய அன்னைக்கு உன் பாஸோட பார்த்திருந்தா அப்படித்தான் நினைத்திருப்பேனோ என்னமோ” என சொல்ல.

“என்ன பத்தி தப்பா பேசு எந்த ரைட்ஸும் உங்களுக்கு கிடையாது.”

“ஆனா நீ என்ன பத்தி பேசுறதுக்கு முழு ரைட்ஸ் இருக்கு ஆங்கிரி பேர்ட். நான் உனக்கு ரைட்ஸ் கொடுக்கிறேன் டியர்.”

“உங்க ரைட்ஸ் எனக்கு தேவையில்ல.  உண்மை மட்டும் தான் எனக்கு தேவை” என கொந்தளித்தாள்.

“என்னடீ உண்மை.”

“அந்தப் பொண்ணோட அந்த இடத்துல உங்களுக்கு என்ன வேலை?”

“இப்ப தானடி அதுக்கு பதில் சொன்னேன். மறுபடியும் பஸ்ட்ல இருந்தா” என எரிச்சலோடு அக்னிவ் கேட்க .

“அந்த பதில்ல எனக்கு திருப்தி இல்ல.”

“அதுக்காக நீ எதிர்பார்க்கிற பதில் எல்லாம் என்னால சொல்ல முடியாது டியர். நானும் கேள்வி கேட்க ஆரம்பிச்சா ரொம்ப தப்பா இருக்கும். என டென்ஷன் பண்ணாத. நான் சந்தோஷமான மூட்ல இருக்கேன்.”

“தப்பா வேற கேள்வி கேப்பீங்களா? கேளுங்க… கேளுங்க.”

“கல்யாண ஆகாத ஒரு பொண்ணுக்கு அப்படி ஒரு ரிசார்ட்ல ஒரு ஆளோட தனியா என்ன வேலை.”

“அதான் சொன்னேன்ல” என்றாள்.

“நான் சொன்னா நீ நம்ப மாட்ட. ஆனா நீ சொன்னா மட்டும் நான் நம்பணுமா?”

“நான் அவருக்கு பி ஏ. அவர் கூட  போய் தான் ஆகணும்.”

“இந்த கம்பி சுத்துற கதையெல்லாம் என்கிட்ட வேணாம். நான் போனது தப்புன்னா நீ போனதும் தப்புதான்.”

“அப்போ என்ன தப்பா பேசுறீங்களா?”

“நீதாண்டி பேச வைக்கிற. இத்தோட இந்த பிரச்சனை விடு. நம்மளுடைய வாழ்க்கையை எப்படி தொடங்கலாம்னு மட்டும் யோசிக்கலாம் ஷான்வி.”

‘என்ன சொன்னாலும் இவன் அங்கயே வந்து நிற்கிறானே. என்ன செய்வது’ என மனதிற்குள் யோசித்தவள்,  “நீ என்ன சொன்னாலும் நான் ஏத்துக்க முடியாது. நீ தப்பானவன்  தான். அந்த ஒரு பொண்ணு மட்டும் தானா? அதுக்கு மேல இன்னும் எத்தனை பொண்ணுங்களோ தெரியல. அப்போ நீ தப்பானவன் தான” என அவனது சட்டையைப்  பிடித்தவள்,  “உன்னை மாதிரி ஒரு ஆளுக்கு என்னோட வாழ்க்கையை நான் தொலைக்க முடியாது. இப்படி ஒரு அசிங்கமானவன்  கூட என்னால வாழ முடியாது” என ஆவேசமாக பேச.

கோபத்தின் எல்லைக்கு சென்றவன் ஷான்வியின் கைகளை உதறிவிட்டு ‘பளாரென’ கன்னத்தில் அறைந்தான்.

“நானும் சண்டை போடக்கூடாது. நம்ம லைப்ல முக்கியமான நாலுனு ரொம்ப பொறுமையா பேசிட்டு இருக்கேன். நீ என்னனா சும்மா அதையே புடிச்சு தொங்கிட்டு நிக்கிறவ. நான்தான் வேலை விஷயமாக போனேன்னு சொல்றேன். திரும்ப அசிங்கமா பேசிட்டு நிக்குற.”

“அப்படிதாண்டா பேசுவேன். எனக்கு உன்னோட வாழ பிடிக்கல. தயவுசெய்து என்னை விட்டு விலகி போயிடு”  என சத்தமாக சொல்ல.

கோபத்தில் மீண்டும் இரண்டு அரை விட. ஷான்வி அப்படியே மயங்கி சரிந்தாள். இவர்கள் போட்ட சத்தம் வெளியில் கேட்க.

அக்னிவின் தாய் வசுந்தரா  வந்து கதவைத் தட்ட.
வேறு வழியின்று அக்னிவ் கதவை திறந்தான்.

ஷான்வி தரையில் துவண்டு போய் மயங்கி கிடந்ததை பார்த்து பதறிப் போனார்.  “என்னடா செஞ்ச?” என பதட்டத்தோடு ஷான்வியை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு கன்னத்தை தட்டினாள்.

“கொஞ்சம் தண்ணி எடுடா” என சொல்ல. அக்னிவ் தண்ணீரை கொண்டு வந்து அவள் முகத்தில் தெளித்தான்.

வசுந்தரா முகத்தை பார்த்தவுடன் அவளது விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.

“என்னம்மா ஆச்சு?” என கேட்க.

வசுந்தராவிற்க்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கண்ணீரை மட்டுமே பதிலாக கொடுத்தாள்.

அக்னிவை வசுந்தரா முறைத்து பார்த்தார்.

“இதுதான் நீ வாழ்க்கைய வாழ்ற லட்சணமா? ஷான்வியோட கன்னத்தை பார்க்கும் போதே தெரியுது. இங்க என்ன நடந்தது,  எதுக்காக நீ அவளை அடிச்சேன்னு எனக்கு தெரியாது. ஆனா நீ இவள  அடிச்சது தப்பு டா.  ஒரு பொண்ண கை நீட்டி அடிக்கிறவன் ஆம்பளையே கிடையாது. உங்கிட்ட இருந்து இப்படி ஒரு மூர்க்கமான குணத்தை நான் எதிர்பார்க்கவே இல்ல அக்னிவ்.”

“அம்மா நான் வேணும்னு பண்ணலாம்மா. ஸாரிம்மா.”

“உன்னோட மன்னிப்பு எனக்கு தேவையில்லை. என் மேல நம்பிக்கை வச்சு தான் அந்த பொண்ணு இங்க வந்து இருக்கா. அத அவங்க வீட்ல இருந்து கிளம்பும்போது அவளோட கண்ண பாத்து என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது. அந்த நம்பிக்கையை நான் கடைசி மூச்சிருக்கிற வரைக்கும்  காப்பாத்தணும். இனிமே எந்த சூழ்நிலையிலும் அடிக்க மாட்டேன்னு  சத்தியம் பண்ணுடா.”

“வேண்டாம்மா. அது மட்டும் என்னால முடியாது. கோவம் வர மாதிரி பேசினா கண்டிப்பா நான் அடிப்பேன்” என சொல்லிக்கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டு நின்றான்.

ஷான்வி மெதுவாக எழுந்தாள். ” தப்பு என் மேல தான். ஸாரி. அவருக்கு கோபம் வர மாதிரி நான் தான் பேசிட்டேன்” என தலை குணிந்து நின்றாள்.

“எதுவா இருந்தாலும் அவன் அடிச்சது தப்புதான். நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்” என்று  வசுந்தரா சொல்ல.

“அச்சோ! இனி எப்படி நடக்காம பார்த்துக்கிறேன் அத்தை”  என்று சொல்ல.

“சரிவா.  என்னுடைய ரூமுக்கு போலாம்” என்று சொல்ல.

“என்னது உங்களோட ரூமுக்கா?.  அப்புறம் எதுக்கு இவளை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க. இதெல்லாம் சரியில்லம்மா. புருஷன் பொண்டாட்டிக்கு ஆயிரம் பிரச்சனை வரத்தான் செய்யும்.  அதுக்குன்னு என்ன தனியா விட்டுட்டு நீங்க கூட்டிட்டு போறதெல்லாம் நியாயமே இல்ல.  என் பாவம் சும்மா விடாது” என்றான்.

“என்னடா பண்ணுவ. என்னடா சாபமா? விடு பார்க்கலாம். இப்படி அழகான பொண்ணு கன்னமே கண்ணி போயிடுச்சு. உன்ன நம்பி திரும்பி அவளை எப்படி நான் இந்த அறையில விட்டுட்டு போறது.”

“அம்மா இனிமே இப்படி பண்ண மாட்டேன்.”

“முடியாது. உன் மேல எனக்கு எப்ப நம்பிக்கை வருதோ அப்ப நான் அனுப்பி வைக்கிறேன்.”

“அம்மா கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம இப்படி பேசாதம்மா. நான் தான் சொல்றேன் இல்ல. ஒரு தாயே மகனோட வாழ்க்கையை கெடுக்கலாமா? அந்த பாவம் உனக்கு வந்துற கூடாதும்மா.”

“வந்துட்டு போகுதுடா. அதுக்கு நான் பரிகாரம் செஞ்சுகிறேன்.  நீ வாம்மா” என அவளது  வலது கைகளை பிடிக்க.

“அம்மா! ப்ளீஸ்.  ஷான் இனிமே அடிக்க மாட்டேன். அம்மா கூட எல்லாம் போகாதே. நீ இங்கேயே இரு. எதுவா இருந்தாலும் நாமளே பேசி தீர்த்துக்கலாம்”  என்ற பரிதாபத்துடன் முகத்தை வைத்துக்கொண்டு  அவளிடம் கெஞ்ச.

ஒரு கணம் யோசித்தவள், “நீங்க போங்க அத்தை. நான் பார்த்துக்கிறேன்” என்றாள்.

“இந்த முரட்டு பையனை நம்பி எப்படிம்மா விட்டுட்டு போறது.”

“நான் பாத்துக்குறேன் அத்தை. நீங்க போங்க.”

“அப்ப உனக்கு ஒரு ஆப்ஷன் கொடுத்துட்டு போறேன்.”

என்ன என்பதை போல் வசுந்தராவைப் பார்த்தாள்.

அக்னிவ் உன்னைய ஒரு அடி அடிச்சா இனிமே நீ நாலு அரை விடு.  நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்ல.

“எப்படிப்பட்ட தாய் எனக்கு. இறைவா! யாருக்கு கிடைக்கும் இப்படி ஒரு அம்மா. பாருங்க மக்களே! இதெல்லாம் அடுக்குமா?” என்றான்.

“நீ செஞ்சது மட்டும் அடுக்குமா?  திரும்ப வரும்போது சத்தம் வந்துச்சு முதுகு தோல உரிச்சிடுவேன்.”

“அம்மா! அப்படி எல்லாம் எதுவும் நடக்காது. நீங்க முதல்ல கிளம்புங்க” என்றான்.

“உன்னை நம்பி விட்டுட்டு போகவே எனக்கு மனசு வரல டா. பேசாம நானும் இங்கேயே படுத்துக்குறேன். நீ வெளில போய் சோபால படுத்துக்கோ. இல்ல என்னோட ரூம்ல படுத்துக்கோ.”

“அம்மா இதெல்லாம் உலகத்திலேயே எங்கேயும் நடக்காத அநியாயம். அதுவும் ஒரு பெத்த தாயே மகனுக்கு பண்ற அநியாயம். இதெல்லாம் கேட்க ஆளே இல்லையா? இன்னைக்கு எனக்கும் அவளுக்கும் ஃபர்ஸ்ட் நைட் மா. இதைப்போய் நான் எப்படி உங்களுக்கு சொல்லி புரிய வைக்க.”

“ஆமாடா. அதுக்கு என்ன இப்போ?”

“நீங்க இந்த ரூம்ல இருந்தா நல்லாவா இருக்கும்.”

“அதெல்லாம் நல்லாத்தான் இருக்கும். உன்னை நான் வெளியே போக தான சொல்லிட்டு இருந்தேன்.”

“தெய்வத்தாயே! தயவு செய்து நீங்க உங்க அறைக்கு போங்க. நான் இனிமே நிச்சயமா அவளை அடிக்க மாட்டேன். கொஞ்சம் கருணை காட்டுங்க” என வசுந்தராவின் காலில் தரையோடு தரையாக விழுந்தான்.

“ச்ச்சீ எழுந்து தொலடா. நானே போறேன். என்ன அசிங்கப்படுத்தாத.  ஷான்வி எதுனாலும் ஒரு குரல் கொடும்மா. நான் பாத்துக்குறேன். பயப்படாத தைரியமா இரு. அவன் ஒரு புள்ள பூச்சு தான். கால்ல போட்டு மிதிச்சிடலாம். பயப்படாதே” என்று கூறிவிட்டு அவனைப் பார்த்து முறைத்து ஒற்றை விரலை காட்டி  மிரட்டி விட்டு அந்த அறையை விட்டு சென்றார்.

ஷான்வி அவனை முறைக்க.

“முறைக்கிறதுக்கு எல்லாம் இப்போ நேரம் இல்ல. முடிஞ்சு போனது பத்தி பேசி சண்டை இழுக்கிற. நீ வேணும்னே சண்டை போடறேன்னு எனக்கு நல்லாவே தெரியுது. நான் சண்டைக்கு வரல. வரவும் மாட்டேன். அதாவது இப்ப என்ன சொல்ல வரேன்னா.”

“நீ ஒண்ணுமே சொல்ல வேணாம். ஒழுங்கா போய் ஓரமா படுத்துக்கோ” என்றாள் .

“என் செல்ல ஆங்கிரி பேர்ட் தானே. சமத்தா மாமா சொல்றத கேட்கணும். சண்டை போடாம இப்ப பக்கத்துல வந்து உட்காரு பார்க்கலாம்.”

“டேய்!  அவ்வளவு தான் உனக்கு மரியாதை. நானும் பொறுமையா தான் சொல்லிட்டு இருக்கேன். நீ என்ன கேவலமா திட்ட வைக்காத.”

“என்ன நீ டேய்  சொல்ற. மாமான்னு சொல்லு பாக்கலாம்.”

‘இவன் என்ன சொன்னாலும் விடமாட்டான் போல இருக்கே. இவனை என்னதான் செய்யறது என்னை யோசித்து படி நிற்க.’

“ரொம்ப எல்லாம் யோசிக்க வேண்டாம். எவ்வளவு யோசிச்சாலும் நீ தான் மை டியர் பொண்டாட்டி. என் செல்ல ஆங்கிரி பேர்ட். நீ என்ன சொன்னாலும் நான் மாற மாட்டேன். உன்னை விட்டு தர மாட்டேன். நீ யோசிக்கிறதே வேஸ்ட் டியர்” என அவளைப் பார்த்து கண் சிமிட்ட.

“நீ பைத்தியக்காரன் போல என்ன வேணா சொல்லிட்டு இரு” என வேகமாக அவன் அருகில் செல்ல.

“இவ்வளவு சீக்கிரம் மனசு மாதிரி மாறுவேன்னு நினைக்கலையே. வா. வந்து  உட்காரு. உட்காரு”  என அக்னிவ் நகர்ந்து அமர.

“அடச்சீ” என்றவள் தலையணையும் போர்வையும் எடுத்துக் கொண்டு போர்வையை தரையில் வரித்து  தலையணை போட்டு திரும்பி படுத்து கொண்டாள்.

“அடிப்பாவி! வந்த வேகத்தை பார்த்தா நான் கூட சமாதானம் ஆயிட்ட போல நினைச்சேன். பொசுக்குன்னு இப்படி கீழ போய் படுத்துட்ட. இதுக்கெல்லாம் கடவுள் நிச்சயமா உனக்கு தண்டனை கொடுப்பார். மன்னிக்கவே மாட்டார். என் பாவமும் வைத்தெரிச்சலும் நான் சும்மாவே விடாது. ஆண்பாவம் பொல்லாததுடீ. தெரிஞ்சுக்கோ.”

“ஆங். பாவம் வந்தா  நானே  பாத்துக்கிறேன். இப்ப வாய மூடிட்டு படுங்க” என்றாள்.

“ஆங்கிரி பேர்ட் கண்டிப்பா இதுக்கெல்லாம் ஒரு நாள் சேர்த்து வச்சு வருத்தப்படுவ பாத்துக்கோ. இப்ப கூட ஒண்ணும் இல்ல. நான் உன்னை மன்னிச்சிட்டேன். நீ ஓகே சொன்னா போதும்” என சொல்ல .

ஷான்வி அந்த அறையை சுற்றி கண்களை சுழல விட்டாள்.

‘என்னது அடிக்க ஏதாவது தேடுறாளா?’ என்ன நினைத்தவன்,  வேகமாக எழுந்து சென்று  லைட் சுவிட்ச்சை ஆஃப் பண்ணினான்.

இருட்டில் தட்டு தடுமாறுவதை போல் அவள் மேல் வந்து விழுந்தான்.

அப்போது ஷான்வியியின் சத்தம்  தான் கேட்கும் என்று நினைத்தால் அதற்கு மாறாக அக்னிவின்  சத்தம் தான் அங்கு பலமாகக் கேட்டது.

தீயாய் தொடரும்…