19

     லண்டனில் இருந்து கிளம்பு முன் துளசியின் தோழிகளை சந்தித்து அவளுடைய புடவைகள் மற்றும் அவளுடைய ஆடைகள் எல்லாம் எடுத்து பெரிய சுகேசில் வைத்து கொடுத்தவர்.

  “அவளிடமே கொடுத்து விடு, அவள் அப்பா மேல கோபத்தில் இருக்கிறா, போக போக எல்லாம் சரியா போகும்”, என்று சொன்னார்.

    தோழிகளோ “இல்ல ஆன்டி வாங்கிட்டு போன திட்டுவா”, என்று சொன்னார்கள்.

    “இது அவளோடது, அவங்க அம்மா கொடுத்து விட்டது ன்னு  சொல்லு.,  அம்மாக்காக வாங்கிக்க சொல்லு”,என்று சொன்னவுடன்  வேறு வழியின்றி தோழிகள் வாங்கிக் கொண்டு வந்து அவள் அம்மா சொன்னது போலவே அப்படியே சொல்லி அவள் கையில் கொடுத்து சென்றனர்.

      துளசியின் அம்மாவோ அவர் பாட்டியிடம் அப்படியே தெரிவித்தார்.

   தோழி வீட்டில் தங்கியிருந்தது, அங்கிருந்தே வேலையை முடித்துக் கொண்டது, துணியை வாங்கக்கூட அவர்கள் தோழிகள் பயந்தது, பின்பு அவர் சொல்லி அனுப்பியது என்று, அனைத்துமே துளசி அம்மா முத்துரசின் அம்மாவிடம் சொல்லி இருந்தார்.

     அது அப்படியே கிருஷ்ணாவின் வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒளிபரப்பப்பட்டது. இதை அறிந்த கிருஷ்ணா எதுவும் சொல்லாமல்,”அது அவ இஷ்டம்” என்று சொல்லி விட்டு போய் விட்டான்.

   ஒரு வழியாக அவள் இந்தியா கிளம்பும் நாளுக்கு முன் அங்கிருந்த கடையின் ஓனரிடம் தொழிலுக்கான அக்ரீமெண்ட் பேசி முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

    பிளைட்டில் வரும் போது கிருஷ்ணா திருமணத்திற்கு மறுத்ததை நினைத்தும், வீட்டில் பேசியதை நினைத்தும் சிரித்துக் கொண்டாள். ஏனெனில் பாட்டி அனைத்தையும் இவளிடம் சொல்லி இருந்தார்.

   இவன் 20  நாட்களாக லண்டனில் இருந்திருந்தாலும்., வீட்டில் உள்ள ஒவ்வொரு விஷயமும் இவளிடம் ஒளிபரப்பப்பட்டு இருந்தது.,

    அதனால் அனைத்தும் தெரிந்து இருந்தது. இப்போது கிருஷ்ணாவின் பாட்டி வீட்டை நோக்கி துளசி சென்று கொண்டிருக்கிறாள்.

    திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கியவளை வரவேற்க வந்தது என்னவோ.,

அகிலாவின் கணவரும் நவீனும் தான்., இருவரையும் பார்த்தவுடன் சிரித்தபடியே தன்னுடைய லக்கேஜ் எல்லாம் தள்ளிக் கொண்டு வந்தவள்.,  அதை அகிலாவின் கணவர் தள்ள தொடங்க., “அண்ணா எப்படி இருக்கீங்க” என்று முதலில் நலம் விசாரித்தாள்.

     பின்பே நவீனிடம், “எப்படி டா இருக்க”, என்று கேட்டாள்.

   அவனும் “வாங்க மேடம் வாங்க, பண்ற வேலையெல்லாம் பண்ணிட்டு எப்படி வரீங்க”, என்று கேட்டான்.

     இவளோ “பின்ன உங்க அண்ணன் 19 வருஷம் வெயிட் பண்ணாங்க, விட்டா  இன்னும் ஒரு பத்து வருஷம் வெயிட் பண்ணுவாரு., இது தேவையா, அதனால தான் நெனச்சா முடிச்சிடனும்., அதனால தான் சட்டுபுட்டு கல்யாணத்த பண்ணியாச்சு., உங்க அண்ணன நம்பினா இன்னும் லேட் ஆகும்., அதுக்குள்ள எங்க அப்பா மறுபடியும் பிரச்சினை கிளப்பிடுவார்., அது தான் தேவையா இதெல்லாம்”, என்று சொல்லி சிரித்தபடி அவனுடன் சேர்ந்து நடந்தாள்.

   காரில் ஏறிய பிறகும் அவள் ஏதாவது பேசிக் கொண்டே வர.,அகிலாவின் கணவர் தான் “என்னம்மா இருபது நாள்ல ஆள் டல்லானா மாதிரி இருக்க”, என்றார்.

    “அலைச்சல் அண்ணா, செம அலைச்சல், சரியான தூக்கம் கிடையாது அது தான்”, என்றாள்.

    “அதுக்கு என்ன, இப்ப போய் நல்லா தூங்கு”, என்று நவீன் சொன்னான்.

   அவளோ “முதல்ல உங்க அண்ணன பாக்கணும், அவரைப் பார்த்து நாலு வார்த்தை கேட்டுட்டு தான் தூங்க போகணும்”, என்று சொன்னாள்.,

   அவனும் சிரித்துக்கொண்டு “போ போ, முதல்ல போய் அவனை பாரு”, என்று சொல்லி சிரித்துக் கொண்டே வந்து சேர்ந்தனர்.

    நேராக பாட்டி வீட்டிற்கு தான் வந்தனர்.

    பாட்டி தான், “இருமா” என்று சொல்லி, அந்த இரவு நேரத்திலும் அவளுக்கு ஆரத்தி சுற்றியே வீட்டிற்குள் அழைத்தார்.

    அவளோசிரித்துக் கொண்டே பாட்டியின் கழுத்தை கட்டிக்கொண்டாள்.

   அவளுடைய அப்பா பாட்டியும் அருகில் வர, அவர்களை சேர்த்து பிடித்துக் கொண்டாள்.

      அவள்  அப்பா பாட்டி தான்., “என்ன வரும் போது உங்க அம்மா கிட்ட சண்டை போட்டுட்டு வந்தியா”, என்று கேட்டார்.

   “சண்டை எல்லாம் போடலையே”  என்று சொன்னாள்.

    “ஏதோ டிரஸ் எல்லாம் வாங்க மாட்டேன்னு சொன்னியா”, என்று கேட்டார்.

    “அதுக்குள்ள சொல்லிட்டாங்களா, உங்க மருமக இதுக்கு மட்டும் உங்களுக்கு போன் பண்றாங்க., ஏன் இதுக்கு முன்னாடி நான் அங்க இருக்கும் போது, ஏன் போன் பண்றது இல்ல., ஏன் அப்ப  மத்த விஷயங்கள் எல்லாம் சொல்றது இல்ல., இப்ப மட்டும் எதுக்கு சொல்லணும்”, என்று கேட்டாள்.

      துளசியின் பாட்டியோ, “அம்மாடியோ, வந்தவுடனே உங்க அம்மா மேல உள்ள கோவத்தில் என்கிட்ட  சண்டை போடாதம்மா, உங்க அப்பனை பெத்த பாவத்துக்கு அப்புறமா திட்டு வாங்கிக்கிறேன், உள்ள வா”, என்று சொன்னார்.

    இவளோ, “பின்ன என்ன அவங்கள பத்தி எதுக்கு பேசுறீங்க”, என்றார்.

   அதே நேரம் கிருஷ்ணாவின் பாட்டி தான், “உள்ளே வந்து பேசலாம்” என்று சொன்னார்.

    உள்ளே செல்லவும், கலை, கிருஷ்ணாவின் அம்மா, ராகவன், கேசவன், என அனைவரும் இருந்தனர்.

      எல்லோரிடமும் நலம் விசாரித்து விட்டு ஓரிரு வார்த்தைகள் பேசியதோடு ஹாலில் கிருஷ்ணாவை தேடினாள்.,

   “அகிலா குழந்தையை தூங்க வைத்துக் கொண்டிருக்கிறாள்” என்று சொன்னார்.,

      துளசியும் அகிலா அறைக்கேச் சென்று குழந்தையை பார்த்து விட்டு அகிலாவிடமும் பேசி விட்டு அதன் பிறகு ஹாலுக்கு வந்தாள்.

     “போய் தூங்குங்க, எல்லாரும் ஏன் வெயிட் பண்றீங்க” என்று சொல்லி விட்டு, “எங்க உங்க பிள்ளை” என்று கலையிடம் கேட்டாள்.

    அவரோ வேண்டுமென்றே நவீனை காட்டி “இந்தா இருக்கான்” கையைக் காட்டி சொன்னார்.

“நான் இந்த எருமையை கேட்கல”, என்று சொன்னாள்.

    நவீன் வாயை பொத்திக் கொண்டு சிரிக்க.,  “நீ ஏன்டா சிரிக்கிற”, என்றாள்.

    “நீ இந்த எருமையை கேட்கலனா, அப்ப எந்த எருமையை கேட்ட ன்னு  கேட்க வந்தேன்”, என்றான்.

      “இதுதான் சாக்குனு, அவ கூட சேர்ந்து நீ அவனை அப்படியே சொல்ற”, என்று கலை முதுகில் அடியை போட்டார்.

    நவீனோ, அவளோ, “எப்பவும் போல தலைவர் அவர் அறையில் தான் தவம் இருக்காரு”, என்று சொன்னான்.

     “நான் போய் பாத்துட்டு வரேன்”, என்று சொன்னாள்.

    கலை தான், “ஏமா அவனை வேணா கீழ வர சொல்லட்டா”, என்று கேட்டார்.

   “அத்தை உங்க பையன் கற்புக்கு நான் கேரண்டி, இப்ப நான் போயிட்டு வரேன்”, என்று சொல்லிச் சென்றாள்.

     “திமிர பாரு, அவளுக்கு”, என்றார்.

     ராகவனும் கேசவனும் சிரித்துக் கொண்டே., அவரவர் அறைகளுக்கு சென்றனர்.

   கிருஷ்ணாவின் அம்மா தான், இவனும் கீழ வந்து தான் இருந்தா என்ன., திமிரு புடிச்சவன்”.,  என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

   “அது ஒன்னும் இல்லக்கா., அவனுக்கு எங்க அண்ணன் மேல கோபம், எங்க அண்ணன் பேசுனதும் தப்பு தானே., அந்த கோபத்தை அவனுக்கு போக்க முடியல., அதனால  கோவப்பட்டு சில நேரம் ஒதுங்கி ஒதுங்கி போறான்., சரி பரவாயில்ல இவ ஒதுங்காமல் அவன் கிட்ட ஃப்ரீயா இருக்கான்னு நினைச்சுக்க வேண்டியது தான்., இவளும் இப்படி மூஞ்ச துக்கிட்டு இருந்தா எப்படி ன்னு நாம தான் யோசிக்கனும்.,

  அட்லீஸ்ட் அவன் ஒதுங்கி போனாலும், இவ இப்ப இழுத்து பிடித்து கல்யாணம் பண்ண போய் தானே ரிஜிஸ்டர் மேரேஜ் வரைக்கும் வந்திருக்கு ., ஆனா இவ பாருங்க இப்ப பேசியே அவனை கல்யாணத்துக்கு வச்சிருவா, நல்லதா போயிரும் சீக்கரத்துல கல்யாணம் வைக்க வேண்டியது இருக்கும் அக்கா.,

   நம்ம அதற்கான வேலையை தான் அடுத்தடுத்து பாக்க ஆரம்பிக்கணும் என்று சொன்னார்.

     “இப்ப சொன்னீங்களே மா இதுதான் கரெக்ட்,   அண்ணனை பேசி பேசியே ஓகே பண்ண வச்சிருவா, நீங்க வேணா பாருங்க ஒரு பத்து நாளைக்குள்ள அண்ணன் கிட்ட பெர்மிஷன் வரும் பாருங்க, கல்யாணத்துக்கு பாருங்கன்னு”, என்று சொன்னான்.

     “எங்களுக்கும் அப்படித்தான் தோணுது”, என்று பாட்டிகளும் சொன்னார்கள்.,

  அனைவரும் கீழே இருந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
கலை தான், “அவளை சாப்பிட்டுட்டு போ ன்னு சொல்லனும் ன்னு நினைச்சேன், அதுக்குள்ள போயிட்டா”, என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

      “நான் வரும் போது கேட்டேன் மா, அவங்க தான், இல்லடா எனக்கு தூங்கணும், நல்ல தூங்கி எந்திரிக்கணும், அப்படின்னு மட்டும் தான் சொன்னாங்க., பாவம் செம டயட் போல”, என்று சொல்லிக் கொண்டிருந்தான்.