இரண்டு ஆண்களுக்கும் நடுவில் அமர்ந்து இருந்த கலையும் கிருஷ்ணாவின் அம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

கிருஷ்ணாவின் அம்மா தான் “நெனச்சேன் கலை, இவன் கிட்ட இருந்து இப்படித்தான் பதில் வரும் ன்னு நினைத்தேன்”, என்று மெதுவாக சொன்னார்.

“என்னக்கா சொல்லுறீங்க”, என்று கேட்டார்.,

      “அவ போகும் போதே சொல்லிட்டு தான் போனா, அத்தை உங்க பையனுக்கு காவி வேட்டி கட்ட தான் இஷ்டமாம், அதனால கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாரு, அப்படின்னு சொன்னா., அவ சொன்ன மாதிரி உண்மையிலேயே உனக்கு காவி வேஷ்டியை தான் வாங்கி கொடுக்கணும்., அய்யய்யோ அந்த பிள்ளை வாழ்க்கை வீணா போச்சே”, என்று கிருஷ்ணாவின் அம்மா கவலைப்பட்டார்.

    கலையோ “அக்கா சும்மா இருங்க, என்ன இப்படி பேசுறீங்க., அதெல்லாம் அவன் எதோ கோவத்துல பேசி இருப்பான், நம்ம பேசி பார்க்கலாம்”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆண்கள் இருவருக்கும் அவர் புலம்புவது கேட்டது.

அவனை திரும்பி பார்த்தனர். “என்னடா இது”, என்று கேட்டனர்.

     “என்னது” என்றான்.

   நவீன் தான் “அண்ணே உனக்கு காவி வேஷ்டி வாங்கி கொடுப்பத பத்தி பேசிட்டு இருக்காங்கன்னு”, சொன்னான்.

    “எனக்கு எதுக்கு காவி வேஷ்டி”, என்றான்.

   “அது வேற ஒன்னும் இல்ல, உன் வீட்டம்மா தான் சொல்லிட்டு போயிருக்கா, காவி வேஷ்டி வாங்கி கொடுங்க, உங்க பையனுக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லைன்னு., சொல்லிட்டு போயிருக்கா”, என்று சொன்னான்.

     “அவளுக்கு திமிரு அவ அப்படித்தான் பேசுவா”, என்று கிருஷ்ணா சொன்னான்.

    மனசாட்சியோ “டேய் எனக்கு மட்டும் தான் தெரியும், நீ பேசாம இஷ்டத்துக்கு வார்த்தையே உடாத,  நீ சொந்த செலவுல சூனியம் வச்ச மாதிரி., நீ பேசிப்பேசியே உன் கல்யாணத்தை  கெடுக்க போறேன்னு நினைக்கிறேன்.,

    கடைசில உண்மையிலேயே காவி வேஷ்டியை வாங்கி கொடுத்து போ ன்னு விரட்டிவிடப் போறாங்க., ஞாபகம் வச்சுக்கோ அவசரப்பட்டு ரொம்ப கெத்து காமிக்கிறேன்னு,  நீயே சொந்த செலவுல சூனியம் வைக்காதடா”, என்று மனசாட்சி கடிந்து கொண்டிருந்தது.

     இவனும் குனிந்த படி தலையை கையில் தாங்கியவன்., “ம்மா ப்ளீஸ் கொஞ்சம் விடுங்க” என்று சொல்லிவிட்டு., அவ சொல்லுவா, அவளுக்கு என்ன.,  வாய்க்கு வந்தபடி பேசுவா., வாய் திறந்தா வாய் மூடவே மூடாது., இஷ்டத்துக்கு பேசிக்கொண்டே இருக்கும் அதனால இப்ப பேசாதீங்க விடுங்க பார்க்கலாம்., உடனே அவசரப்படாதீங்க கல்யாணத்துக்கு”., என்று மட்டும் சொன்னவன் வேக வேகமாக எழுந்து மாடிக்கு சென்று விட்டான்.

அவனுக்கோ ஒரு பக்கம் சிரிப்பை அடக்க முடியாமல் இருந்தது., ‘இந்த லூசு என்னெல்லாம் சொல்லி வச்சிட்டு போயிருக்கு’, என்று சொல்லி நினைத்துக் கொண்டான்.

    ‘வரட்டும் அவளுக்கு இருக்கு’ என்று மனதிற்குள் அவள் வருகைக்கான நாளை எதிர்பார்ப்பது அவனுக்கே தெரிந்தது.

   அவன் மாடிக்கு சென்றவுடன். கீழே உள்ளவர்கள், “இவன் என்ன இப்படி இருக்கான்”, என்று ஆளாளுக்கு பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது பாட்டி தான், “டேய் அவளுக்கு முதல்ல சொல்லிரு, மறந்து போய் அவனுக்கு கூப்பிட  போறா., இவன்  திட்டி விட்ற கூடாது., நாம கல்யாணத்துக்கு கேட்க போய், அவ கேக்க சொன்னா ன்னு நினைச்சு இவன் பேசிவிடக்கூடாது”, என்று சொன்னாள்.

     நவீன் அவசரமாக மெசேஜ் தட்டி விட்டான். “தயவுசெய்து இப்ப மட்டும் அண்ணா கிட்ட பேசிடாத, பேசின வீட்ல பேசின விஷயத்துக்கு உன்கிட்ட தான் இப்ப சண்டைக்கு வருவான்., பேசிடாத”, என்று மெசேஜ் அனுப்பி விட்டு போனை வைத்தான்.

தற்செயலாக நண்பர்களுடன் வெளியே சென்றிருந்தவள்., அங்கிருந்த ஒரு இந்தியன் ஷாப்பை பார்த்து விட்டு அங்கு சென்றாள்.

அங்கு இந்திய பொருள்கள் அனைத்தும் கிடைக்கும் வண்ணமாக பெரிய கடையாக இருந்தது., அதில் ஒவ்வொரு பகுதியாக சுற்றி வரும் போது அங்கு துணிகளும் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் குறைவான எண்ணிக்கையில் வைக்கப்பட்டிருந்தது.

அப்போதுதான் அவர்களிடம் பேச்சு கொடுத்த படி எந்த ஊர் என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

    அவர்கள் மத்திய இந்தியாவின் ஒரு பகுதியை சொல்ல.,  “ஏன் டிரஸ் மெட்டீரியல்ஸ் மட்டும் கம்மியா வச்சிருக்கீங்க” என்று ஆங்கிலத்தில் கேட்டாள்.

   அவர்களோ  “நம்ம போற நேரம் தான் வாங்கிட்டு வர்ற மாதிரி இருக்கு., இல்ல போற நேரம் மொத்தமா பர்சேஸ் பண்ணி அனுப்புற மாதிரி இருக்கு, வந்த உடனே கண்டிப்பா ஃபங்ஷன் ஏதும் வருதுனா இந்தியன் கிளாத் செல்லம் சேல் ஆகுது., இங்க உள்ளவங்க கூட சில சமயம் நம்ம இதுல காட்டன் மெட்டீரியல்ஸ் எல்லாம் விரும்பி வாங்குறாங்க”,  என்றவர்.,

“நானும் வருடத்திற்கு ஒருமுறை தான் போய் வருகிறேன், அந்த நேரத்தில் மட்டும் தான் வாங்கி வர முடியும். அது மொத்தமாக வாங்க முடியாது”, என்று பேசிக் கொண்டிருந்தார்.

    இவளோ அவர்களிடம் “எது போல துணி, எந்த மாதிரி  உடை விக்கிறீர்கள்.,  டிசைனர் உடை விற்கிறீர்களா”, என்பது போல நிறைய கேட்டுக் கொண்டவள் அவரிடம் அமர்ந்து பேச துவங்கியிருந்தாள்.

    புதிதாக அவர்களோடு வியாபாரத்தை தொடங்கலாம் என்ற எண்ணத்தோடு இதைப் பற்றி வீட்டில் யாரிடமும் கேட்டுக் கொள்ளவில்லை.,

   அவளிடம் கையிருப்பும் இல்லை என்பது தெரியும்., இருந்தாலும் வீட்டில் யாரிடமாவது சொல்லி கேட்டு வாங்கி செய்யலாம், பின்பு கொடுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு தான் பேசத் தொடங்கினாள்.

    அந்தக் கடையின் ஓனரிடம் பேசும் போது, “நான் இப்போது இந்தியா தான் போகிறேன்., இங்கிருந்து சிட்டிசன்ஷிப் கேன்சல் செய்து கொண்டு இந்தியா செல்லலாம் என்று இருக்கிறேன்., எனக்கு அங்குள்ள என் மாமா பையனோடு தான் திருமணம்., நான் வேண்டுமானால் உங்களோடு பிசினஸ் தொடர்பு வைத்துக் கொள்ளலாமா”, என்று கேட்டாள்.

    அவரோ “எப்படி இது சாத்தியம் ஆகும்”, என்று கேட்டார்.

     “உங்களுக்கு துணி தேவைப்படும் பொழுதுகளில்., அதாவது இப்போது  துணி இல்லாமல் இருக்கும் இந்த சமயத்தில் நீங்கள் எது போன்ற துணி வேண்டும் என்று சொன்னால்.,  இப்போது தான் நமக்கு வீடியோ கால் வசதி இருக்கிறதே ,உங்களுக்கு பார்த்து எடுத்து நான் அனுப்பி வைப்பேன், ரெடிமேட் உடை, பெண்கள் அணியும் உடைகள், ஆண்கள் அணி உடைகள், இது எல்லாமே அங்கிருந்து நான் அனுப்புவதற்கு பேசி ஏற்பாடு செய்துவிட்டு உங்களிடம் சொல்லட்டுமா”, என்று கேட்டாள்.

   அவரோ “ரொம்ப சந்தோஷம், உங்களோடு வியாபாரம் செய்வதில் எனக்கும் சம்மதம், நான் இந்த துணிக்காகவும் சில பொருட்களுக்காகவும் மட்டும் தான் இந்தியா போய் வருகிறேன்., இப்போது  நீங்கள் வாங்கி தருவதால் எனக்கு அலைச்சல் மிச்சம்., செலவும் மிச்சம், அப்படி இருக்கும் போது உங்களுக்கு அனுப்பும் செலவு தொகையும்,  வாங்கும் தொகையும், நான் அனுப்பி விடுவேன். அதை தவிர உங்களுக்கான தொகையும் நான் தந்து விடுவேன்”, என்று சொன்னார்.

   இவளோ “அங்கிருக்கும் விலையை பொறுத்து தான், நான் உங்களிடம் சொல்ல முடியும், நீங்கள் விலையை குறைத்து கேட்கக்கூடாது., அங்கிருக்கும் விலையை விட நான் சிறிது அளவு கூட்டி வைத்து தான் கொடுக்க முடியும்., அப்போது தான் எனக்கும் லாபம்”.,  என்று பேசி அவரிடம் புது வியாபார ஒப்பந்தத்தை தயார் செய்து கொண்டு, பின்பு தான் இங்கிருந்து இந்தியா கிளம்புவதாக முடிவுக்கே வந்தாள்.

  பிசினஸ் விஷயம் பேசிவிட்டு வந்தது மிகவும் சந்தோஷமாக உணர்ந்தாள்.

   நண்பர்களுடனும், தோழிகளுடனும், சந்தோஷமாக பேசிவிட்டு வீட்டிற்கு வந்த பிறகு தான் போனை எடுத்து பார்த்தவளுக்கு., ‘அவனுக்கு அழைக்க வேண்டாம்’ என்று மெஸேஜ் வந்திருந்தது.

‘நல்லவேளை சொன்னான்., நாம் யோசிக்காமல் மிட்நைட் ன்னு கூட பாக்காம கூப்பிட்டு, திட்டு வாங்கி இருப்பேன்’, என்று நினைத்துக் கொண்டவள்.

    அவனுக்கு சரி என்று மெசேஜ் செய்து விட்டு அனைவரின் நலத்தையும் மெசேஜ்லயே விசாரித்து விட்டு காலை பேசுவதாக சொல்லிவிட்டு படுத்து விட்டாள்.

   ஏற்கனவே இவள் லேட்டாக மெசேஜ் பார்த்ததால், அங்கு யாருக்கும் இவள் பதில் மெசேஜ் அனுப்பியது அறியவில்லை.

விடியும் பொழுதுகள் ஒவ்வொருவருக்கும் என்ன வைத்திருக்கும் காத்திருந்து தான் பார்க்கவேண்டும்.