லண்டனில் எந்த பதிலும் தெரியாமல் சற்று பதட்டமாகவே இருந்தாள், “கொஞ்சம் அதிகமாகவே பேசி விட்டோம்., தப்பா நினைக்க கூடாதே”, என்று யோசித்துக் கொண்டு இருந்தாள்.
அதே நேரம் நவீனிடமிருந்து மெசேஜ் வர, என்னவென்று பார்த்தாள்.
“அண்ணா போனுக்கு கூப்பிடு”, என்று மட்டும் மெசேஜ் அனுப்பி இருந்தான்.
அவளுக்கு ‘உண்மையிலே கிருஷ்ணா தன்னை அழைக்க சொல்லி இருக்கிறானா’, என்று தோன்றியது.
இருந்தாலும் அழைப்போம் என்று அழைக்கவுமே நிதானமாக போனை எடுத்தவன் அமைதியாக இருந்தான்.
இவளோ “பாவா” என்றாள்.
“என்ன பண்ணி இருக்க ன்னு தெரிஞ்சு தான் பண்ணியா”, என்று கேட்டான்.,
“ஆமா பாவா தெரிஞ்சி தான் பண்ணுனேன்”, என்றவள், “ஏற்கனவே அத்தை ட்ட பேசுனதை கேட்டு இருப்பீங்க, திரும்பவும் சொல்லனுமா”, என்றாள்.
“யோசிக்கிறேன் பாவா”,என்றவள்., “நான் கொஞ்சம் டவுட் கேட்குறேன்” என்றவள்,
“நீங்க 19 வருஷம் சும்மா இருந்த மாதிரி என்னால சும்மா இருக்க முடியல., எப்படி பாவா 19 வருஷமா நினைப்பு மட்டும் போதும் நினைச்சிட்டீங்களா., இல்ல வேற பொண்ண கல்யாணம் பண்ணினாலும் மனசார இன்னொரு பொண்ணோட உங்களால வாழ முடியுமா.,
என்னால முடியாது பாவா., எனக்கு விஷயம் தெரியறதுக்கு முன்னாடி எப்படியோ., தெரிந்த அப்புறம் என்னால அப்படி எல்லாம் இருக்க முடியாது., அது மட்டும் இல்லாம இன்னொரு பெர்ஷனை நினைக்க கூட முடியாது,
உங்க கிட்ட ஏற்கனவே நான் சொல்லிட்டேன், அப்பவே எனக்கு யாரையும் பார்த்து அந்த மாதிரி ஒரு பீல் வந்ததில்லை., ஆனா தெரிஞ்சதுக்கு அப்புறம் இன்னொருத்தர் அப்படியெல்லாம் நினைச்சு கூட பாக்க முடியாது., இமஜின் கூட பண்ண முடியாது.,
அதனால தான் துணிஞ்சு முடிவெடுத்தேன்., உங்களுக்கு முடிவு எடுக்க பயம்., எனக்கு எந்த பயமும் கிடையாது அவ்வளவு தான், தெரிஞ்சுதான் பண்ணுனேன் பாவா, ஏன் உங்களுக்கு தெரியாதா”, என்றாள்.
இவனோ அமைதியாக இருந்தான். மீண்டும் துளசியே பேச தொடங்கினாள்.
“பாவா தப்பா நினைக்க கூடாது, ஐ நோ பாவா, நீங்க கையெழுத்து போடும் போதே உங்களுக்கு டவுட் வந்திருக்கும்., நிறுத்தி நிதானமா கையெழுத்து போட்டீங்க., ரெண்டு மூணு பேப்பர் இருந்துச்சு.,
பாட்டி கையெழுத்து வாங்கும் போது., அதில் ஒரு பேப்பர் இது நம்ம ரெஜிஸ்ட்ரேஷனுக்கான பேப்பர்.,
நீங்க பத்திரத்தில் வரிசையா கையெழுத்து போட்டுட்டு வரும் போது., அகிலா அக்கா வீட்ல அண்ணா உங்க கிட்ட பேசிட்டு இருந்தாங்க., நீங்க யோசிச்சிட்டு தான் கையெழுத்து போட்டீங்க.,
ஆனா அந்த பேப்பர் வரும் போது, அண்ணா உங்களை டைவர்ட் பண்ண ட்ரை பண்ணாங்க., ஆனா நீங்க ரொம்ப மெதுவா நிதானமா கையெழுத்து போட்டீங்க., அப்பவே எனக்கு தெரியும் நீங்க கண்டு பிடிச்சிட்டீங்கன்னு.,
ஆனாலும் உங்க பேஸ்ல ஏதாவது மாற்றம் வருதான்னு பார்த்தேன்., எந்த மாற்றமும்
இல்ல., இப்ப மத்தவங்க வேணா உங்களுக்கு தெரியாது ன்னு நம்பலாம்., நான் நம்ப மாட்டேன் பாவா.,
எத்தனை இடத்துல நீங்க பார்த்திருப்பீங்கன்னு எனக்கு தெரியும், பத்திர பேப்பருக்கும்., ரெஜிஸ்ட்ரேஷன் பேப்பருக்கும் வித்தியாசம் தெரியாம நீங்க இல்ல.,
ஏன்னா, நீங்க கையெழுத்து போட்டு, அடுத்த செகண்ட் அதே பேப்பரில் தாத்தாவும் பாட்டியும் கையெழுத்து போட்டாங்க., அதை நீங்க பார்த்தீங்க., ஆனா நான் யார்ட்டையும் சொல்ல மாட்டேன் சரியா”, என்று சொன்னாள்.
பின்பு மெதுவாக., “பாவா நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் சரியா., உங்களுக்கு தெரியும் அப்படி ன்னு நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்., இப்ப வரைக்கும் எப்படி தெரியாத மாதிரி இருந்திங்களோ., அப்படியே இருங்க”, என்றாள்.
இவள் தான், “அதுவா அன்னைக்கு உங்க முகத்தில் ஒரு பிரைட்னஸ் தெரிஞ்சுச்சு., நீங்க இன்னும் கொஞ்சம் அழகா இருந்தீங்க, அதுதான் ரீசன்”, என்று சொன்னாள் .
அவனுக்கு அங்கே சிரிப்பை கட்டுப்படுத்துவது பெரும்பாடாக இருந்தது.
‘இவ எவ்வளவு உன்னிப்பா கவனிக்கிறா’ என்று தோன்றினாலும்.,
மனசாட்சியோ “மவனே நான் தான் கண்டுபிடிச்சேன்னு நினைச்சேன்., ஆனா பாரேன் உன் ஆளு என்ன விட சூப்பரா கண்டுபிடிக்கிறா, ரைட்டு உனக்கு அவ தான் சரி”, என்று மனசாட்சி சந்தோஷ கூப்பாடு போட்டது.,
இவனும் அமைதியாக சிரித்துக் கொண்டாலும் அவளிடம் குரலில் கூட அவனது மகிழ்ச்சியை காட்டாமல்., “இப்ப என்ன பண்ணனும்” என்றான்.
இவள் அதற்கான லெட்டர் எழுதும் முறை., மற்றும் இவன் அவர்கள் அனுப்பிய மெயிலுக்கு அனுப்ப வேண்டிய பதில் எல்லாவற்றையும் சொன்னாள்.
“சரி வை” என்று சொன்னாள்.
“பாவா” என்றாள்.
“ம்ம் என்ன”, என்றான்.
“நீங்க சின்ன பிள்ளைல என்ன பாப்புனு கூப்பிடுவீங்களாமே, அது மாதிரி கூப்பிடுங்களேன்”, என்று கேட்டாள்.
“அதெல்லாம் கூப்பிட முடியாது” என்று சொன்னான்.
“பாவா கூப்பிடலாம் பாவா”, என்று சொன்னாள்.
“அந்த பேரு வேண்டாம், அந்த பாப்பு அப்படி ன்னு நினைத்தாலே, உங்க அப்பா பேசுனது எல்லாம் ஞாபகம் வருது என்ன செய்ய”, என்றான்.
“ஏன் ன்னு சொல்லுங்க”, என்றாள்.
“உங்க அப்பா ட்ட நான் கடைசியா கேட்கும் போது, பாப்பு எப்ப வருவா மாமா ன்னு தான் கேட்டேன், அதுக்கு தான் உங்க அப்பா அந்த பேச்சு பேசினாரு”, என்றான்.
“வேண்டாம் அந்த பேரே வேண்டாம்”, என்றவள், “அப்போ என்னைய எப்படி கூப்பிடுவீங்க”, என்று கேட்டாள்.
“இப்ப என்ன அவசரம், மெதுவா சொல்லுறேன்,
ரிஜிஸ்டர் தானே ஆகி இருக்கு”, என்று சொன்னான்.
“ரெஜிஸ்டர் பண்ணியாச்சு ன்னு சொல்லுங்க பாவா, நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் பாவா, நீங்க சந்தோஷமா தான் இருந்தீங்க ன்னு தெரியும், இன்னும் ஒரே வாரம் தான் ஓடியே வந்துடுவேன்”, என்று சொன்னாள்.
அவனும் இங்கு சிரித்தபடி, சாதாரண குரலில் “உங்க அப்பா என்ன சொன்னாரு” என்று கேட்டான்.
“சொன்னாரு, அவருக்கென்ன நிறைய பேசினாரு, நானும் பதில் பேசினேன்”, என்று சொன்னாள்.
“இங்க பாட்டி வந்து இருந்தாங்க, நீ என்ன வார்த்தை நிறைய விட்டியா., உங்க அப்பா ஏதோ கம்பளைண்ட் மாதிரி சொல்லி இருக்காரு”, என்று சொன்னான்.
“சில இடங்களில் பேசணும் பாவா, பேசாம இருந்துட்டோம்னு வைங்களேன்., அப்புறம் ஒவ்வொரு நேரமும் அவங்ககிட்ட பயந்துகிட்டே இருக்கிற மாதிரி ஆயிரும்., எனக்கு அது வேண்டாம்., இது என்னோட லைஃப் நான் தான் முடிவு பண்ணனும்”, என்று சொன்னாள்.
அவனும் “மேடம் அது என்னோட லைஃப்பும்”, என்றான்.
“உங்க லைஃப்க்கும் சேர்த்து தான் பாவா நான் முடிவு பண்ணிட்டு இருக்கேன்., 19 வருஷம் காத்திருந்தாராமா., என்ன காத்திருந்தீங்களோ., இது எனக்கு தெரிஞ்சி இருந்துச்சுன்னா., நான் எப்பவோ உங்கள மேரேஜ் பண்ணி இருப்பேன் தெரியுமா., நீங்க வேஸ்ட் பாவா”, என்று சொல்லி விட்டு
“பாவா காவி வேஷ்டியே தான் வேணுமா”, என்று கேட்டாள்.
“அவனோ நீ நேரில் வந்த பிறகு சொல்லுறேன், இப்ப போனை வை”, என்றான். சிரிப்பை அடக்கிய படி,
இவளோ “பாவா ரெண்டு பேர்ல நம்ம லைஃப்க்காக முடிவு எடுக்கும் போது, நீங்க நல்லது சொன்னீங்க ன்னா அதை நான் அக்செப்ட் பண்ணிக்கணும்., நான் சொன்னேனா நீங்கள் சில விஷயங்களை அக்சப்ட் பண்ணி தான் ஆகணும்., அப்படி ஒரு விஷயம் தான் இதுவும் ஓகேவா பாவா., முக்கியமான விஷயம்
மறந்துடாம மெயில் அனுப்பிடுங்க., வெயிட் பண்றேன், மெயில் அனுப்பிட்டு ஜஸ்ட் ஒரு மெசேஜ் மட்டும் இந்த நம்பருக்கு போடுங்க”, என்று சொல்லி விட்டு போனை கட் செய்தாள்.
போனை வைத்த பிறகு இவனுக்கோ சிரிப்பை அடக்குவது சிரமமாக இருந்தது., ‘எத்தனை கூர்மையாக கவனித்திருக்கிறாள்’, என்று யோசித்தவன் அவளது ஒவ்வொரு செய்கைகளையும் நினைத்துக் கொண்டான்.