ராகவனின் அம்மா தான்., “இங்க பாருடா, அவ என்கிட்ட சொன்னது சரியா இருந்துச்சு, அதனால நான் பண்ணி  வைச்சேன்.,   படிக்கிற மாதிரி  ஏதாவது காரணம் சொல்லி வரலாம்., இல்லாட்டி இங்க வேலை தேடிட்டு நான் இங்க வரலாம்.,  ஆனால் அதைவிட பெட்டரா உங்க பேரன  கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னா.,அங்க என்  கிட்ட கொஸ்டின் கேட்க மாட்டாங்க , இங்கயும் எதனால இங்க வரணும் ன்னு கேட்க மாட்டாங்க., அதனால அது தான் நல்லது ன்னு சொன்னா,

      உடனே நான் கூட அவனுக்கு உன்னைய  பிடித்த மாதிரி பேசலையே சொன்னதுக்கு., அதை நான் பார்த்துக்கிறேன்., நீங்க எதுக்கு யோசிக்கிறீங்க., அவங்க கோவத்துல இருப்பாங்க அப்படின்னு சொன்னா., எனக்கும் அது சரின்னு பட்டுச்சு,  அதனால தான் சம்மதிச்சேன். அதனால தான் அவன குத்தகை எழுதி கொடுக்க போகனும் வான்னு சொல்லி.,ரெஜிஸ்டர் ஆபீஸ் கூட்டிட்டு போனேன்”, என்று சொன்னார்.

    முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தான் கிருஷ்ணா.,

     அதே நேரம் கலையின் அம்மா அப்பாவும் வந்து சேர., அவர்களிடம் வேறு ஒரு பங்கு விசாரணை முடித்து.,

    ராகவனும் கேசவனும் “இப்போது என்ன செய்ய மெயில் வந்திருக்கு., இப்ப யாரும் நம்ம வேலையை பார்க்க போகாம இப்படியே  உட்கார்ந்துட்டு இருக்கோம்., என்ன பதில் சொல்ல”, என்று கிருஷ்ணாவை பார்த்தனர்.

     கிருஷ்ணாவோ, “நீங்க என்னப்பா சொல்றீங்க”, என்று கேட்டான்.

     “இது உன் வாழ்க்கை, நீ தான் முடிவு பண்ணனும்., இப்போ நீ அதுக்கு ஒரு லெட்டர் கொடுக்கணும்., அவங்க மெயிலுக்கு ஒரு பதில் கொடுக்கணும்., அதை தவிர அவ சொன்ன மாதிரி அதுல கேட்டிருக்க படி எதுவும் லெட்டர் அனுப்ப சொன்னா அத அனுப்பு”, என்று சொன்னார்.

     யோசனையோடு எழப் போகும் போது.,  மீண்டும் பாட்டி போன் அடிக்க., திரும்பி பாட்டியை பார்த்தான்.

    பாட்டியோ, “என் பேத்தி தான்” என்று சொன்னார்.

    நவீன் தான், “போனை தாங்க, நான் பேசுறேன்”, என்றான்.

     “இல்லடா, நான் பேசிட்டு தாரேன்”, என்று சொல்லி போனை எடுத்தவர். “நாம அப்புறம் பேசலாம், கொஞ்சம் இருமா நவீன் பேசணுமாம்” என்று சொன்னார்.

      போனை வாங்கியவன், “ஹலோ” என்று சொன்ன உடனே,
“சொல்லு தம்பி”, என்றாள்.

       அவனும், “நீ எப்ப இதெல்லாம் பண்ணுன, என்கிட்ட எதுவுமே சொல்லல”, என்றான்.

      “உன்கிட்ட எதுக்குடா சொல்லணும், சொன்னா நீ என்ன பண்ணுவ, உங்க அண்ணன் கிட்ட போய் அப்படியே ஒப்பிப்ப”, என்று அவள் சொல்லும் போதே அவன் ஸ்பீக்கரில் போட்டு விட,

    “பின்ன எங்க அண்ணனுக்கு தெரியாம நீ கல்யாணம் பண்ணுவியா”, என்று கேட்டான்.

    “அடேய், எனக்கு தெரியாம உங்க அண்ணன் மட்டும் என்னை லவ் பண்ணலா,ம் நான் மட்டும் உங்க அண்ணன கல்யாணம் பண்ண கூடாதா”, என்று கேட்டாள்.,

     பாட்டியும் தாத்தாவும் “என் பேத்தி சரியா தானடா கேட்குறா”, என்று பதில் சொன்னார்.

   இங்கிருந்து இவளோ, “ஸ்பீக்கர் லையா போட்டு இருக்க, அப்ப நல்லா சொல்றேன், நல்லா கேட்டுக்கோ, 19 வருஷம் எனக்கு தெரியாம என்னை லவ் பண்ணல, அப்போ  2 மாசத்துல அவருக்கு தெரியாம அவரை நான் கல்யாணம் பண்ணிக்க கூடாதா, இது என்னடா வம்பா இருக்கு., அவர் செஞ்சா சரி., நான் செஞ்சா தப்பா”, என்று அவனிடம் வாதம் செய்து கொண்டிருந்தாள்.,

கலை இடையில் புகுந்து, “நீ என்ன பண்ணி இருக்க ன்னு தெரியுதா துளசி”, என்று கேட்டார்.

     “வாங்க  நீங்க யாராவது பேசினா பதில் சொல்ல தான் வெயிட் பண்ணினேன்., அத்த நீங்க எல்லாரும் வேஸ்ட் ஓகேவா, உங்க மகனும் வேஸ்ட் சரியா., உங்க அண்ணன் குணம் தெரியும் தானே, லட்டு மாதிரி உங்க கையிலேயே வந்து ஹெல்ப் கேட்டு நின்று இருக்கேன்.,

    அப்ப நீங்க என்ன பண்ணி இருக்கணும், அப்படியே  என்னை அன்னைக்கே தூக்கிட்டு போயி., உங்க பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கனுமா இல்லையா, அதை விட்டுட்டீங்க சரி.,

    அட்லீஸ்ட் அதுக்கப்புறம், நான் சம்மதிச்சதுக்கு அப்புறமாவது எனக்கு சம்மதம் ன்னு தெரியும்ல., அதுக்கு அப்புறமாவது கல்யாணத்த பண்ணி வச்சிருந்திருக்கணும்., அதுக்கும் நீங்க யாரும் ஸ்டெப் எடுக்கல.,  பார்த்தேன் நீங்க யாரும் ஸ்டெப் எடுக்கிற மாதிரி தெரியல., அதனால தான் நானே பண்ணிக்கிட்டேன்.,  நான் வந்த அன்னைக்கே பண்ணி வச்சு இருந்தீங்கன்னா.,  இன்னும் அஞ்சு ஆறு மாசத்துல வளைகாப்புக்கே ரெடி பண்ணி இருக்கலாம்., இப்ப என்ன பண்ண உங்க பையன தாஜா பண்ணி கல்யாண டேட்டா பிக்ஸ் பண்ணுங்க., வந்து சேர்றேன்”, என்று சொன்னாள்.

இங்கு கிருஷ்ணாவோ கையால் முகத்தை மூடிக் கொண்டு உட்கார்ந்து இருந்தான்.

   கலையோ, “அடியே என்ன வாய் அடிக்கிற”, என்றார்.

     “அத்தை இதெல்லாம் வருத்தப்படறதுக்கு ஒண்ணுமே இல்ல., டைரக்டா என் விஷயத்தை நான் தான் பேசியாகணும். நீங்க யாரும் பேசுற மாதிரி தெரியல., கல்யாணம் பண்ணி வைக்கிற மாதிரியும் தெரியல., அதனால தான் உங்க பையன அப்படியே கோழியை அமுகிற மாதிரி அமிக்கி கல்யாணத்தை பண்ணிக்கிட்டேன் சரியா., 19 வருஷமா ஒருத்தன் வெயிட் பண்றானே., அவனுக்கு சட்டுபுட்டுன்னு கல்யாணத்த பண்ணுவோம்னு யாருக்காவது தோணிச்சா.,  உங்களுக்கு தோணல, அதுதான் நான் வந்தேன், மேரேஜ் பண்ணிக்கிட்டேன் சரியா., உங்க அண்ணன பத்தி தெரிஞ்சும் என்ன லண்டனுக்கு  பேக் பண்ண ட்ரை பண்ணீங்க பாத்தீங்களா.,  அப்பவே தெரிஞ்சு போச்சு நீங்க யாரும் இதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டீங்கன்னு”, என்று சொன்னாள்.

     “அடியே என்ன பேச்சு பேசுத”, என்று மீண்டும் சொன்னார்.

   “எல்லாம் உங்க பையனுக்காக தான் பேசுறேன், அதுவரைக்கும் சந்தோஷப்படுங்க”, என்று சொன்னாள்.

   நவீனோ, “யம்மாடி மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருக்கு”, என்றான்.,

அந்த பக்கம் சிரித்துக் கொண்டே, “உங்க அண்ணாட்ட போன குடு, ஸ்பீக்கர் ஆப் பண்ணி குடுடா”,என்றாள்.

     “ஸ்பீக்கர் ஓட தான் கொடுப்பேன்”, என்று சொன்னான்.

    “அடேய் இது உன்கிட்ட பேசுற விஷயம் கிடையாது., எல்லாரும் கேட்கிறது கிடையாது, இது எனக்கும் என் ஹஸ்பண்டுக்கும் உள்ள ஒரு விஷயம்., ஸ்பீக்கர ஆப் பண்ணுடா”, என்று சொன்னாள்.

      “அடிப்பாவி ஹஸ்பன்ட் ஆஆ”, என்றான்.

      “ஆமா டா ஆமா, அடிப்பாவி இடிப்பாவி எல்லாம் சொல்லக்கூடாது., இனிமே ஒழுங்கா மரியாதையா அக்கா என்று கூப்பிடு”, என்றாள்.

   “முறையே மாத்தாத”, என்றான்.

    “இருடா நான் வந்துக்கிறேன்., வந்து சேர்ந்திடுவேன், முதல்ல உங்க அண்ணன லெட்டர் அனுப்ப சொல்லு.,  நான் அப்புறமா அவர் ட்ட பேசுகிறேன்”, என்று சொன்னாள்.

  “அண்ணன் நம்பர் எப்படி வந்துச்சு”, என்றான்.

   “அதெல்லாம் வந்துச்சு, உங்க பாட்டி கிட்ட இருந்து வாங்கிட்டேன், நீ என்ன பண்ற, இப்ப போன வச்சிட்டு, உங்க அண்ணாவை மெயில் அனுப்ப சொல்லு., மெயில் அனுப்பல வந்து நடக்கிறத வேற,  முதல்ல மெயில் அனுப்ப சொல்லு”, என்று அவனை மிரட்டி விட்டு போனை வைத்தாள்.

     “செய்றதையும், செஞ்சிட்டு அவ எவ்ளோ அசால்ட்டா பேசுறா”, என்று கலை சொன்னார்.

     கேசவனா, “இப்ப அவ செஞ்சது சரின்னு சொல்றியா., தப்புன்னு சொல்றியா”., என்றார்.

      “சரி தப்பு சொல்றதுக்கு இல்ல, அவ பண்ணது சரியா தப்பான யோசிக்கிறதில்லை., நம்ம கிட்ட சொல்லி இருந்தாலும்., நம்ம சரின்னு தான் சொல்லி இருப்போம்., அப்படியே கிருஷ்ணா கிட்ட பெர்மிஷன் கேட்டிருந்தாலும் அவன் உடனே சரின்னு சொல்லி இருப்பானா”, என்றார்.

     பாட்டி தான், “சரி சரி நடந்ததே பேசாதீங்க”, அவ வரும் போது நல்ல நாள் பாருங்க, முறைப்படி கல்யாணம் கோவிலில் வைத்து பண்ணனுமா.,  மண்டபத்தில் வைத்து பண்ணனுமா.,  வேற எப்படி பண்ணனும்னு முடிவு பண்ணுங்க”, என்றார்.

      அப்போது தான் ராகவன் கலையின் அம்மா அப்பாவை பார்த்து., “அத்தை மாமா இந்த விஷயம் முத்தரசுக்கு தெரியுமா”, என்று கேட்டார்.

       “தெரியும் தம்பி, நேத்து நைட்டே எங்களுக்கு அவன் போன் பண்ணான், அவ கல்யாணம் முடிஞ்சிருக்கு நீங்க என்கிட்ட சொல்லலன்னு கேட்டான்.,

   நாங்க தான் சொன்னோம், எதுக்குடா சொல்லணும், அவ விரும்பினா அவ கல்யாணம் பண்ணிக்கிட்டா., கையெழுத்து மட்டும் தான் நானும் உங்க அப்பாவும் போய் போட்டோம் அப்படின்னு சொன்னேன்., அவனுக்கு கொஞ்சம் கோவம் தான்., இவளும் அங்க கொஞ்சம் அதிகமா பேசிட்டா போல”, என்றார்.

   வேறு யாரும் எதுவும் பேசாமல் கிருஷ்ணாவை பார்க்க, அவனோ தலையில் கை வைத்த படி அமர்ந்திருந்தான்.

     பின்பு  நவீன் “அவள கொஞ்சம் எனக்கு போன் பண்ண சொல்லு” என்று சொல்லிவிட்டு வேகமாக தன்னறைக்கு சென்றான்.