ஒரு வாரம் சென்றிருக்க, அவர்கள் சொன்னது போலவே அவள் கைக்கு சர்டிபிகேட் கிடைத்தது.
அதில் அழகாக போட்டோ ஒட்டி கையெழுத்தும் இடப்பட்டு இருந்தது.
அவனிடம் கையெழுத்து வாங்கும் போதே, போட்டோ ஒட்டிய பேப்பரை சேர்த்து தான் நீட்டி இருந்தனர்.
அவன் தான் அகிலாவின் கணவனோடு பேசிக் கொண்டிருக்கும் போதே கையெழுத்தையும் போட்டிருந்தான்.
பின்பு இவள் தெரிந்தே தான் கையெழுத்து போட்டாள்.
அது கைக்கு கிடைத்தவுடன் பாட்டியிடம் சொல்லி பாட்டியோடு கடைக்கு செல்வது போல சென்றவள்.
ஜெராக்ஸ் எடுத்து விசா பிராசஸ்க்கு தேவையான பைல் எல்லாம் தயார் செய்ய தொடங்கியிருந்தாள்.
பின்பு பாட்டியிடம் கேட்டாள், “பாட்டி பேமிலியோட கோயிலுக்கு போற மாதிரி கோவிலுக்கு எல்லாம் போயிட்டு வரலாம் பாட்டி”,கேட்டவள்.
“ஏன்மா திடீர்னு”, என்றார்.
“அது வந்து பாட்டி ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டோம் இல்ல, உங்க பேரனை கோவிலுக்கு கூப்பிட்டா சண்டை வரும், அது தான் பேமிலியா போகலாம்”, என்றாள்.
பாட்டியோ அவள் கன்னத்தை தொட்டு திருஷ்டி கழித்தவர், “எங்களுக்கு கூட இப்படி எல்லாம் ஐடியா வரல, நீ என்ன எல்லாம் யோசிக்கிற”, என்று சொன்னார்.
“நீங்க நான் சம்மதிக்க மாட்டேன் ன்னு யோசிச்சிருப்பீங்க., ஆனா நீங்க கதையை என்கிட்ட சொன்னதுல இருந்து நான் என்ன பண்ணலாம்னு தான் யோசிச்சேன்., கண்டிப்பா உங்க பேரனுக்கு கோபம் நிறைய இருக்கும்., 19 வருஷம் காத்திருப்பு., எங்க அப்பா பேசிய பேச்சு எல்லாம் சேர்ந்து அவங்களை கோபப்படுத்தி இருக்காங்க, ஆனா என்னை பொருத்தவரைக்கும் எதுவா இருந்தாலும் முடிவா செய்யணும்., அதுதான் என்னுடைய எண்ணம்.,
சோ அதனால தான்., நான் ஸ்ட்ராங்கா நின்னேன்., இப்போவே கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்துக்கு மேல ஓடிடுச்சு., இன்னும் நான் இங்கே இருக்க போறது நாற்பது நாளோ என்னமோ தான்., அதுக்குள்ள இந்த கோயிலுக்கு போறது அந்த வேலையெல்லாம் முடிச்சுருவோம்.,
அதுக்கப்புறம் நான் இங்க இருந்து ஊருக்கு கிளம்புவதற்கு ரெடி ஆகுற மாதிரியே பிளான் பண்ணுவோம்., அப்படின்னா தான் உங்க பேரன் நம்புவாங்க., அதுக்கப்புறம் நான் மற்றதை பார்த்துக்கிறேன்”,என்று சொன்னாள்.
“சரிடி, பேத்தி பொண்ணே”, என்று பாட்டி கன்னம் பிடித்துக் கொஞ்சி கொண்டார்.
ஆனால் இது எதுவும் தெரியாத வீட்டினரிடம்., அவள் குடும்பத்தோடு கோவிலுக்கு செல்ல விரும்புகிறாள் என்று மட்டுமே பாட்டி சொல்லி இருந்தார்.
அருகில் உள்ள ஸ்ரீரங்கம் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள சிறு சிறு கோயில் சுற்றுலா தளங்கள் என அவளை அழைத்துக்கொண்டு செல்வதாக முடிவு செய்து இருந்தனர்.
அப்படி தான் ஒரு முறை கோயிலுக்கு சென்று விட்டு காரில் திரும்பும் போது, நவீன் வேண்டு மென்றே “மேடம் கோயில் எல்லாம் சுத்துறீங்க., இன்னும் கொஞ்சம் நாளில் நீங்க லண்டன் கிளம்பிடுவீங்கன்னு சொன்னாங்க, அப்படியா”, என்று கேட்டான்.
இவ்ளோ அவனை ஒரு பார்வை பார்த்தவள்., “லண்டன் போயிட்டு நான் என்னடா பண்ணப் போறேன்., அதனால போயிட்டு அங்க எழுதி கொடுத்துட்டு இங்க வந்து படிக்க ஜாயின் பண்ண போறேன்”, என்றாள்.
“என்ன படிப்பு”, என்று நவீன் கேட்டான்.
“ஏதாவது ஒரு படிப்பு கிடைக்காதா, உங்க ஊர்ல எவ்வளவு காலேஜ் இருக்கு., நீ தானே சொன்ன, எனக்கு லண்டன் ஹிஸ்டரி தான் தெரியும்., இந்தியன் ஹிஸ்டரி தெரியாதுன்னு சொன்ன இல்ல., அதனால இந்தியன் ஹிஸ்டரி படிக்கலாம்னு இருக்கேன்”, என்று சொன்னாள்.
“ஏய் நெஜமாவா சொல்ற., ஆமா நீ என்ன படிச்ச”, என்று கேட்டான்.
“சும்மா எம் பி ஏ தாண்டா முடிச்சிருக்கேன்”, என்று சொன்னாள்.
“எம் பி ஏ எங்க படிச்ச ” என்றான்.
“லண்டன் யுனிவர்சிட்டில” என்று இவள் பதில் சொல்லவும்.
“மேடம் நீங்க லண்டன் யுனிவர்சிட்டில எம்பிஏ முடிச்சிட்டு, இங்க வந்து எதுக்கு இந்தியன் ஹிஸ்டரி படிக்க போறீங்க”, என்று கேட்டான்.
“இந்தியன் ஹிஸ்டரி படிக்க முயற்சி பண்ணனும், இல்லனா, ஃபேமிலி ஹிஸ்டரி படிக்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன் டா, பாப்போம்”, என்று சொன்னாள்.
“முதல்ல உனக்கு இங்க எப்படி அலோ பண்ணுவாங்க”, என்றான்.
“நான் அதெல்லாம் விசாரிச்சிட்டேன் சரியா, போறேன் போயிட்டு நான் படிக்க போறேன்னு சொல்லி விசாவை அங்கே எக்ஸ்டெண்ட் பண்ணிட்டு இங்க வந்துருவேன்., அதுக்குன்னு சில பேப்பர் தேவைப்படுது.,
சோ அதுக்கு தான் நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணனும், நீ என்ன பண்ற நெக்ஸ்ட் வீக் என் கூட வா, இங்க உள்ள ரெண்டு மூணு காலேஜ் விசாரிப்போம் சரியா”, என்றாள்.
“ஏய் நீ சீரியஸ்சா வா சொல்ற”, என்று அவன் கேட்டான்.
“பின்ன நான் என்ன விளையாட்டுக்கா சொல்றேன்”, என்று இவள் அவனை கிண்டல் செய்து கொண்டிருந்தாள்.
இதை கிருஷ்ணா பார்த்துக் கொண்டிருந்தாலும் எதுவும் சொல்லவில்லை., ஏனெனில் அந்த கிணற்றில் விழுந்து எழுந்து வந்த பிறகு கிருஷ்ணாவிடம் இவள் எந்த பேச்சும் அதிகமாக வைத்துக் கொள்ளவில்லை., அவ்வப்போது பாவா என்று அழைக்க,
அவனோ அவளை முறைத்துக் கொண்டே செல்வான். இவளும் “நீங்க எவ்வளவு நாளைக்கு முறைச்சிட்டு இருக்கீங்க ன்னு நானும் பாக்குறேன், போங்க போங்க”, என்று சொல்லிவிட்டு செல்வாள்.
அவனும் அதற்குப் பிறகு இங்கு வந்து தங்குவது போலவோ, இல்லை இங்கே வந்து இருப்பது போலவோ வரவில்லை.
அன்று தஞ்சை பெரிய கோயிலுக்கு போய்விட்டு அனைவரும் நந்திக்கு அருகில் அமர்ந்திருக்கும் போது.,
இவள் தான் “நான் கோயில்ல ஒரு சுத்து சுத்திட்டு வரட்டுமா”, என்று பெரிய நந்தியின் அருகில் இருந்து படியில் இறங்கத் தொடங்கினாள்.
ஏனென்றால் சற்று தள்ளி நின்று யாரிடமோ அலைபேசியில் பேசிக் கொண்டு நின்றான் கிருஷ்ணா.
அதை பார்த்துவிட்டு தான் இறங்குகிறாள் என்று கண்டு கொண்ட நவீன், “போ போ போய் நல்ல சுத்திட்டு வா, நீ சுத்த போற சாமி எப்படி வரம் தரும் ன்னு பாரேன்”, என்று சொன்னான்.
இவளோ அவனை பார்த்து, “தெரியுது இல்ல டா, அப்ப வாய மூடிட்டு இரு, சாமி ட்ட வரம் எப்படி வாங்கனும் ன்னு எனக்கு தெரியும்”,என்று சொல்லிவிட்டு போனாள்.
பின்பு இறங்கி சென்றவள் சற்று தள்ளி நின்ற கிருஷ்ணாவின் அருகில் போனவள், “பாவா” என்று அழைக்க அப்போது தான் அலைபேசியின் அழைப்பை துண்டித்திருந்தவன்., அவளை பார்த்து திரும்பினான்.
“என்ன விஷயம் “, என்றான்.
“என் கூட இந்த கோயில்ல ஒரு சுத்து சுத்தி வர வாங்களேன்”, என்று கேட்டாள்.
அவனோ திரும்பி பார்த்து “ஏன் நவீன் வரல”, என்று கேட்டாள்.
அவன் முகத்தை பார்த்து கேட்டு கொண்டிருக்க, அவனும் அவள் கண்ணை மட்டுமே பார்த்து இருந்தான்.,
“இப்ப நான் என்ன செய்யனும் ன்னு எதிர்ப்பார்க்குற”, என்றான்.
“என்கூட வாங்க பாவா, நான் தான் இன்னும் இருபது நாள்ல லண்டன் கிளம்பிடுவேனே, வாங்க என் கூட., நான் ஒன்னும் உங்களை கடித்து எல்லாம் திங்க மாட்டேன் வாங்க”, என்று அழைத்தாள்.
இருவருக்கும் இடையே சற்று இடைவெளி இருக்க நடந்து செல்லும் போது.,
இங்கு அகிலாவின் கணவனோ., “உண்மையிலேயே உங்க அண்ணனுக்கு காவி வேஷ்டியும்., ருத்ராட்சமும் தான் வாங்கி கொடுக்கணும்”, என்று சொன்னான்.
“அது இன்னும் அவளுக்கு முழு மனசா விருப்பம் இருக்கான்னு அண்ணன் யோசிச்சிருப்பான்”, என்று சொன்னாள்.
“நான் பார்க்க தான போறேன் போ”, என்று பதில் சொன்னான்.
“என்னது, என்ன மாம்ஸ் சொல்றீங்க”, என்று விட்டு நவீன் வந்தான்.
“எப்பா ஒன்னும் சொல்லலப்பா., உங்க அண்ணன சொன்னா உனக்கு கோபம் வரும் அது எதுக்கு., மச்சான் தயவு இருந்தால் மலையும் ஏறலாமாம், போ போ நாளைக்கு எனக்கு உங்க தயவு தேவை தானே”, என்று சொல்லி கொண்டு இருந்தான்.
அங்கோ, “பாவா நான் லண்டன் போயிட்டு., மினிமம் 10 டேஸ், மேக்சிமம் 20 டேஸ்ல, வந்துருவேன்., நான் அந்த பக்கமா போன உடனே இந்த பக்கம் துளசி ன்ற பேர்ல வேற யாரையும் தேட மாட்டீங்களே”, என்று கேட்டாள்.
அவன் அவளை திரும்பிப் பார்க்க, “சீரியஸா நான் வரமாட்டேன் நினைக்காதீங்க., நிச்சயமா வந்துருவேன்”, என்று சொன்னாள்.
அவளையே பார்த்துக் கொண்டு நடந்தான், அவளும் அவனைபார்க்க., “விளையாடாதே”, என்று சொன்னான்.
அதே நேரம் அவள் மீது வந்து ஒரு குழந்தை மோதி விட குனிந்து அக்குழந்தை விழும் முன் பிடித்திருந்தவள்.
அக்குழந்தையிடம், “எதுவும் அடிபட்டுச்சா”, என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.
திரும்பிப் பார்த்தவன் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
இடுப்பிற்கும் கீழாக முடி அடர்த்தியான பின்னலில் தெரிந்தது, இவன் அவளை அதிகமாக பார்த்தது புடவையில் தான்., இன்றும் மாந்தளிர் நிற புடவையில் பாந்தமாக கோயிலுக்கு வந்திருந்தாள்.
இங்கு வந்த இடத்தில் தான் அவனுடைய அம்மா அவளுக்கு தலை நிறைய பூ வைத்து விட்டிருந்தார்.
அவள் குனிந்து அக்குழந்தையிடம் பேசி குழந்தையை அனுப்பிவிட்டு எழும் போது பார்வையை இவன் திருப்பிக் கொண்டான்.
எங்கோ பார்த்துக் கொண்டு நடந்தவனை பார்த்தபடி நடந்தவள்.
“பாவா” என்று அழைத்தாள்.
அவனோ “வெளியே வச்சு இப்படி கூப்பிடாத”, என்று சொன்னான்.
“அப்போ வீட்டுக்குள்ள கூப்பிட்டா ஓகே வா, பாவா”, என்று சொல்லிவிட்டு சிரித்தபடி,
“இப்பவும் சொல்றேன்” என்று அவனைப் பார்க்க,
அவனும் ‘என்ன சொல்ல போறா’ என்ற எண்ணத்தோடு திரும்பிப் பார்க்க.,
இவளோ அவனைப் பார்த்து “அழகா இருக்கீங்க பாவா”, என்று சொல்லிவிட்டு திரும்பிக்கொண்டாள்.
கோயிலை சுற்றி விட்டு வரும்போது அவள் சிரித்த முகமாக இருந்தாலும், அவ்வப்போது பார்க்காமல் அவளைப் பார்த்துக் கொண்டவன்.