அகிலாவின் கணவர் சிரித்துக்கொண்டே, “சரி நீ பாட்டி கிட்ட பேசி ஒரு முடிவுக்கு வா, நான் அதுக்குள்ள மறுபடியும் ஆபீஸ்க்கு போன் பண்ணி கேட்டுட்டு சொல்றேன்”, என்று சொன்னார்.
இவளும் சிரித்துக் கொண்டே “என்னை அநியாயத்துக்கு பேச வைக்கிறீங்க, பாட்டி நீங்களும், உங்க பேரனும்”, என்று சொல்லிக் கொண்டாள்.
அவரோ இவள் கன்னத்தைப் பிடித்து, “அநியாயத்துக்கு பேச வைக்கிறாங்களா, என்ன பேச்சு பேசுற, என் பேர பாடு திண்டாட்டம் தான்”, என்று சொன்னார்.
“பரவால்ல பரவால்ல 19 வருஷத்துக்கும் சேர்த்து பேசணும் இல்ல, பேசிக்கிறோம்”, என்று சொன்னாள்.
“உங்க அத்தை மாமாக்கெல்லாம், எதுவும் சொல்லலாமா”, என்று கேட்டார்.
“யாருக்கும் சொல்ல வேண்டாம், இப்போ நீங்க என்ன பண்றீங்க, எங்க பாட்டிக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்றீங்க, நீங்க தாத்தா கிட்ட ஃபுல் விஷயத்தைச் சொல்ல கூடாது, அதே மாதிரி எங்க பாட்டி அங்க தாத்தா கிட்டையும் ஃபுல் விஷயத்தை சொல்லக்கூடாது, நீங்க ரெண்டு பேரும் உங்க பேரன என்ன தள்ளிட்டு வந்து சேர்றீங்க., நான் எங்க பாட்டி தாத்தாவை தள்ளிகிட்டு அங்க வந்து சேர்றேன், இடையில இந்த அண்ணாவை அகிலா கட்ட எந்த விஷயத்தை சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டு., அண்ணாவை மட்டும் வர வைக்கிறேன்”, என்றாள்.
“அம்மாடியோ நீ என்னம்மா பிளான் பண்ற”, என்று சொன்னார்.
“நான் பிளான் பண்றது எல்லாம் சரிதான், ஆனால் சொதப்பாமல் இருக்கணும், அதனால தான் இப்போ உங்க எல்லாத்தையும் கூட்டு சேர்க்கிறேன்., போன தடவ பிளான் பண்ணி, நான் கஷ்டப்பட்டு கிணத்துல குதிச்சா, கடைசில நான் தான் காய்ச்சல்ல கிடந்தேன், உங்க பேரன் ஒரே வார்த்தையில் என்னை லூசுன்னு சொல்லிட்டு போயிட்டாரு”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
இவர்கள் பிளான் படி அனைத்தும் பேசி சரி செய்தனர்.
பாட்டி தான் இன்னும் இரண்டு நாளில் அவர்கள் பிளானை நிறைவேற்றப் போக வேண்டும் என்று முடிவில் இருக்கும் போது தான் கிருஷ்ணாவிற்கு அழைத்து, “கிருஷ்ணா நீ கொஞ்சம் வந்துட்டு போப்பா, இந்த வடக்கு பக்கம் தோட்டத்தோட குத்தக இருக்கு பாத்தியா, அத கேன்சல் பண்ணிட்டு, மறு குத்தக ஒருத்தவங்க கேக்குறாங்க., கொடுக்கவா வேண்டாமா யோசிச்சிட்டு இருக்கேன்., நீ கொஞ்சம் ரெஜிஸ்டர் ஆபீஸ் வரைக்கும் வந்துட்டு போறீயா”, என்று பாட்டி அழைத்தார்.
இவனும் “சரிப்பாட்டி வரேன்”, என்று சொல்லி அந்த தோட்டத்தின் பழைய குத்தகை காரரை பற்றி சொன்னான்.
“ஆமா அந்த குத்தகை தான்”, என்று சொல்லவும்.
இவனும் ‘சரி போயிட்டு வருவோம்’, என்று சொல்லிவிட்டு நவீனை அழைக்க.,
அவனும் “நான் எதுக்குனே நீங்க போயிட்டு வாங்க” என்று சொன்னவன்., பின்பு “சரி நானும் வாரேன்” என்று சொல்லிக்கொண்டு கிளம்பினான்.
இவர்கள் அங்கு போகும் போது, அந்த பாட்டி தாத்தாவோடு துளசியும் வந்திருப்பதை பார்த்தவன்.,
“இவ எதுக்கு இங்க வந்து இருக்கா” என்று நவீன் தான் கேட்டான்.
துளசியின் அப்பா பாட்டியும் தாத்தாவும், “அது எங்க பேத்திக்கு ஒரு இடத்தை எழுதிக் கொடுப்பதற்காக வந்திருக்கோம்” என்று சொன்னார்கள்.
நவீனோ “இங்க பாருங்க சொத்து பிரிக்கிறது இப்ப எல்லாம் பிரிக்க கூடாது., அது என்ன மகன் பிள்ளைக்கு தனியாக கொடுக்கிறது., எனக்கும் பங்கு உண்டு., அவளுக்கு எல்லாத்தையும் கொடுத்துறாதீங்க”, என்று சொன்னான்.
“ஏண்டா ஒரு இடத்தை தானே எழுத வந்திருக்கோம், பிரிச்சி தரும் போது சரிபாதியா பிரிச்சு தாரோம்”, என்று சொன்னார்.
“ஓய் லண்டன்காரி லண்டன் போறதுக்கு, முன்னாடி மொத்ததையும் அமிக்கிட்டு போலாம்னு நினைக்காத”, என்று சொன்னான்.
“என்னோட முக்கியமான சொத்தை எனக்கு சொந்தமாக்க தான் வந்தேன், மீதியை முழுவதும் கூட நீ வைச்சிக்கோ எனக்கு வேண்டாம்”, என்றாள்.
“பேச்சை மாற்றி பேச மாட்டீயே” என்றான்.
“ம்ஹூம்”, என்றாள்.
அவர்கள் தங்களுடைய நேரம் வருவதற்காக காத்திருந்தனர்.
அதற்கிடையில் அகிலாவின் கணவர் அங்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, ரெஜிஸ்டரிடம் தனியே சென்று பேசி விட்டு வந்தார்.
அங்கு பாட்டி தாத்தாவும் அவரை தனியே சந்தித்து பேசி விட்டு வந்திருந்தார் .
துளசியும் அவரிடம் கேட்டுக் கொண்டாள். “ப்ளீஸ் சார் எப்படியாவது ஹெல்ப் பண்ணுங்க”, என்று சொன்னார்.
“நான் பெரிய ரிஸ்க் எடுத்து தாமா இதை செய்றேன் பிரச்சினையாகிறாதே”, என்று கேட்டார்.
“பிரச்சனையே ஆகாது சார், அது நான் பார்த்துக்கிறேன். அப்படி பிரச்சனை வந்தா நீங்க என்ன கைகாட்டி விட்ருங்க, நான் பேசுகிறேன்”, என்று சொன்னாள்.
“சரிமா எல்லாம் ரெடி பண்ணிட்டு சொல்றேன், அதுக்கப்புறம் வாங்க”, என்று சொல்லி அனுப்பினார்.
இவர்கள் ரெஜிஸ்டரிடம் பேசும் போதே அகிலாவின் கணவர் கிருஷ்ணாவையும் நவீனையும் தற்செயலாக வெளியே அழைத்து செல்வது போல அழைத்து சென்றுவிட்டார்.
அதற்கு இடையில் இவர்கள் பேசி சரிகட்டி வைக்க.
முதலில் கிருஷ்ணாவின் பாட்டி தாத்தா ஏதோ குத்தகைக்காரர் என்று சொல்லி விட்டு பேப்பரில் கையெழுத்து போடுவது போல போட்டு, “நீயும் கையெழுத்து போடுடா’, என்று சொல்லி அவனிடம் மொத்தமாக பேப்பரை தந்து கையெழுத்து வாங்கினர்.
அவர்கள் முடித்து வெளியே அனுப்பிவிட்டு, இங்கு பாட்டி தாத்தாவோடு இவளும் சேர்ந்து கையெழுத்து போட.,
இனிதாக கிருஷ்ணாவிற்கு தெரியாமலேயே, ரெஜிஸ்டர் மற்றும் அகிலாவின் கணவரின் துணையோடு அங்கு பதிவு திருமணத்தை கள்ளத்தனமாக பதிவு செய்தனர். துளசியும் அகிலாவின் கணவரும் சேர்ந்து., அதற்கு இரண்டு பாட்டி தாத்தாக்களும் உடந்தையாக இருந்தனர்.
கிருஷ்ணாவிற்கு பக்கத்தில் இருந்து அகிலாவின் கணவர் பேசிக் கொண்டே இருந்ததால்., சரியாக கவனிக்க முடியவில்லை.,
அது மட்டும் அல்லாமல் பாட்டி பழைய கதையெல்லாம் பேசி அவனை டைவர்ட் செய்து கொண்டே இருக்க., அவனும் அதில் கவனத்தை வைத்தவன் இங்கு சரியாக கவனிக்க தவறினான்.
“இன்னும் ஒரு வாரத்துக்குள்ள உங்களுக்கு ரிஜிஸ்ட்ரேஷன் ஆன சர்டிபிகேட் கைக்கு கிடைச்சிடுமா”, என்று சொன்னார்.
சந்தோஷத்தில் அங்கேயே குதித்தவள் தன் பாட்டியை இறுக்கமாக கட்டிக்கொண்டாள்.
அதுபோலவே வெளியே வந்தவள் பாட்டியும் தாத்தாவும் நிற்பதை பார்த்து., “உங்க பேரன் எங்க”, என்று கேட்டாள்.
வேகமாக பாட்டியை கட்டிக் கொண்டவள், “தேங்க்ஸ் பாட்டி தேங்க்யூ” என்று சொல்லி இரண்டு பாட்டிகளுக்கும் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு விட்டு.,
அகிலாவின் கணவரிடம் “ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அண்ணா, தேங்க்யூ சோ மச், இது அவருக்கு தெரியிற அன்னைக்கு கண்டிப்பா சண்டை போடுவாரு., அன்னைக்கு என்னை கை காட்டிருங்க, நான் பார்த்துக்கிறேன்., மிஞ்சி போனா என்ன லூசு லூசு திட்டுவாரு., திட்டிட்டு போகட்டும் நான் பார்த்துக்கிறேன்”, என்று சொல்லி விட்டு “தேங்க்ஸ் அண்ணா,இது உங்க வீட்ல அகிலா அக்கா கிட்ட கூட சொல்லாதீங்க”, என்று சொன்னாள்.
அக்கா என்று அகிலாவை அழைக்க பாட்டி தான்.
“அது என்ன அவளை அக்கான்னு சொல்ற, அவ அண்ணி”, என்று உறவு முறையை சொல்லிக் கொடுத்தார்.
“சரி ஓகே அண்ணி கிட்ட சொல்லாதீங்க அண்ணா”, என்று சொன்னவள்.
சந்தோஷத்தில் இரண்டு பாட்டியின் கையையும் இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
“ஓகே இனிமேல் நான் என் விசா பிராசஸ ஈஸியா முடிச்சு விட்டுருவேன்”, என்று சொல்லி சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருந்தாள்.
மற்றவர்களின் உதவியோடு கிருஷ்ணாவிற்கு தெரியாமல் கிருஷ்ணாவையே பதிவு திருமணம் செய்து மிஸஸ் கிருஷ்ணா ஆகிவிட்டாள் கேடி துளசி.