சத்தமே இல்லாமல் இருக்க.,  “நான் வரவா”, என்று மேலிருந்து சத்தம் கொடுத்தான்.

   “தண்ணிக்குள்ள இருந்து மெதுவாக இழுத்துட்டு வந்துட்டு இருக்கேன் டா., குண்டம்மா வெயிட்டா இருக்கா”, என்று சொன்னான்.

    “அது உன் தலையெழுத்து, லைப் லாங் பாரம் சுமக்கணும்னு உனக்கு இருந்துச்சுன்னா மத்தவா முடியும்”, என்று சொல்லிக் கொண்டே நகர்ந்து சென்றான்.

   அகிலாவோ குளித்துவிட்டு தலையில் துண்டை கட்டிக்கொண்டு அருகில் இருந்த மோட்டார் ரூமில் போய் உடையெல்லாம் மாற்றிக் கொண்டு வந்தவள்,  ஈரமான உடையை அலசி பிழிந்து கொண்டிருந்தாள்.

   “என்னடா உள்ள இருந்து ஒரு சத்தத்தையும் காணும்”,  என்றாள்.

    “ஹெல்ப் வேணும்னா அண்ணே கூப்பிடுவான்., உள்ளே போக வேண்டாம்”, என்று தள்ளி  நின்றனர் .

   அங்கே கிணற்றுக்குள்ளே அவளை இழுத்து அங்கே இருந்த படியில் அமர்த்தி விட்டு, அருகில் அமர்ந்தவன் அவளை தன்னோடு சேர்த்து பிடித்து முதுகை தட்டி விட்டான்.,

     அவள் மூச்சு வாங்க அமர்ந்திருப்பதை கண்டவன், “லூசா நீனு, ஸ்விம்மிங் தெரியாது இல்ல, அப்புறம் எதுக்கு குதிச்ச”, என்று கேட்டான்.

    அவளோ “காப்பாத்தினீங்க இல்ல, கல்யாணம் பண்ணிக்கோங்க”, என்றாள்.

   “எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுற”, என்றான்.

“எனக்கு தெரியாது”, என்று சொன்னாள்.

    “இப்படியே தண்ணிக்குள்ள தள்ளி விட்டுடுவேன் பாத்துக்கோ”, என்றான்.

   “சரி தள்ளுங்க தள்ளுங்க, உங்க கையால செத்துட்டு போறேன்”, என்று சொன்னாள்.

    ” பைத்தியம் மாதிரி பேசாத”, என்றான்.

   “அப்ப கல்யாணம் பண்ணிக்கிறேன் ன்னு சொல்லுங்க”,என்றாள்.

     “இங்க என்ன பிரச்சனை ன்னு தெரியுமா உனக்கு”, என்று கேட்டான்.

    “என்ன எங்க அப்பா ஓவரா பேசினாரு, அதுதானே., எங்க அப்பா பேசினதுக்கு எல்லாம் பழி வாங்க வேண்டாமா”, என்றாள்.,

மூச்சு வாங்க., முகத்தில்  வடிந்த தண்ணீரை துடைத்துக் கொண்டே இருந்தவள், மீண்டும் கிணத்தில் இருந்து தண்ணீரை அள்ளி மீண்டும் முகத்தை கழுவிக்கொண்டு அவனிடம் பேச தொடங்கினாள்.

அவனும் “தள்ளி உட்காரு”, என்று சொன்னான்.

    அவளோ அவன் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு அவன் தோளிலேயே சாய்ந்த படி அமர்ந்தவள்.,  “பாவா ப்ளீஸ், எனக்கு இப்போ வேற வழியே கிடையாது., இம்மீடியட்டா என்ன கல்யாணம் பண்ணிக்கோங்க., நான் வீசாவை எக்ஸ்டெண்ட் பண்ணனும்., அது மட்டும் இல்லாம நான் இங்க இருந்து லண்டன் போகும் போது மிசஸ் கிருஷ்ணாவா தான் போகணும்னு நினைக்கிறேன்.,  அப்படி போனா தான் லண்டன்ல  எம்பஸில போய்  சொல்ல முடியும்.,

    பதில் சொல்லுறது மட்டும் இல்லாம, திரும்பி வந்து இங்க எல்லாத்தையும் மாத்தணும்.,  ப்ளீஸ் பாவா”,என்றாள்.

     “அதெல்லாம் முடியாது, பேசாம இரு, லூசு மாதிரி பேசிட்டு இருக்காத”, என்றவன்.,

     “சரி வா வா”, என்றான்.

   “அப்ப நீங்க போங்க” என்று அவன் கையை விட போக.,

   அவனும் அவள் கையை அழுத்தமாக பிடித்துக் கொண்டு, “என்ன செய்யப் போற ., மறுபடியும் தண்ணிக்குள்ள குதிக்க போறியா, என்னால எல்லாம் காப்பாத்த முடியாது., அப்படியே விட்டுட்டு போயிடுவேன்”, என்று சொன்னான்.

      அவள் வழுக்கி கொண்டு இறங்க முயற்சி செய்ய, அவனும் சேர்ந்து அவளோடு தண்ணீருக்குள் இறங்கினான்.

   அவளை தன்னோடு சேர்த்து பிடித்துக் கொண்டவன், “சொல்லு இப்ப என்ன செய்யணும்”, என்று கேட்டான்.,

   அவனை மேலும் இறுக்கமாக அணைத்துக் கொண்டவள், “ஒன்று என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்லுங்க., இல்லாட்டி இந்த தண்ணிக்குள்ள இப்படியே முக்கி எனக்கு கொன்னுட்டு போயிருங்க”, என்று சொன்னாள்.

   “நான் இரண்டாவது தான் செய்வேன் பரவாயில்லையா”, என்றவன் மெதுவாக மேலே எட்டிப் பார்க்க யாரையும் காணாமல் போக., அவளோ அவனை அணைத்த படி அவன் நெஞ்சிலே சாய்ந்திருந்தவள்.

அவன் டீ சர்ட்டை கழுத்து பகுதியை அழுத்தமாக பிடித்திருந்தாள்.,

    அப்போது தான் லேசாக அவனுடைய வெற்று மார்பு அவள் கண்ணில் பட்டது.,  அதில்  இடது பக்கம் ஏதோ டட்டூ குத்திருப்பது போல தோன்ற., அவன் அவளை பார்த்துக் கொண்டிருக்கும் போதே.,

    இவள் டி-ஷர்ட்டை இன்னும் சற்று அதிகமாக இழுத்து பார்க்க., அதில் துளசி என பெயர் தெரியவும்.,

    அழுத்தமாக டி-ஷர்ட்டை இழுத்து பிடித்துக் கொண்டாள்., மீண்டும் அது போலவே சாய்ந்து கொண்டவள்., “பாவா” என்றாள்.

     அவன் எதுவுமே சொல்லாமல், மீண்டும் குனிந்து அவளை பார்த்தவன்,

   “உனக்கு எப்படி தெரியுது, என்னை பாத்தா., வா,  மேல ஏறு”, என்று சொல்லி அவளை மீண்டும் படியில் அமர்த்தி வைக்க முயற்சி செய்யும் போதே., அவள் திமிறி கொண்டு தண்ணீரில் இறங்க அவனுடைய பேலன்ஸ் ல் நின்றனர்.

    ” பாவா, ஏன் பாவா பொய் பொய்யா சொல்றீங்க”, என்று சொன்னவள்.

    அவள் பிடித்திருந்த அவனது இடது பக்க டீ சர்ட் காலரை அழுத்தமாக பிடித்துக் கொண்டே.,  அவன் மார்பை தட்டி காட்டி “இங்க நான் மட்டும் தான் இருக்கேன்”, என்று சொன்னாள்.

அவனும் அதிர்ச்சியாக அவளை திரும்பிப் பார்க்க இவளோ முகம் முழுவதும் தண்ணீரோடு அதில் லேசாக கண் கலங்கி கண்ணீரும் தேங்கி நிற்க.,

     அவனை பார்த்தவள்., “பொய் சொல்லாம சொல்லுங்க பாவா., இங்கே நான் தானே இருக்கேன்”, என்றாள்.

     எதுவும் சொல்லாதவனை, பிடித்த  படி அவன் அருகே முத்தம் வைக்க செல்ல, அவளை அழுத்தமாக பிடித்து தண்ணீரில்  முழ்கி இருந்து சில வினாடிகள் கழித்து மேலேத் தூக்கி வந்தவன், அவளை தன்னில் இருந்து பிரித்து படியில்  உட்கார வைத்தவன்.,

“முதலில் எந்திரி., மேலே பார்த்து நடக்க ஆரம்பி”, என்று சொன்னான்.

சற்று நேரம் அமைதியாக இருந்தவள், ‘நான் கிஸ் பண்ண பக்கத்தில் போனேன், இவங்க தண்ணீரில் முழ்க வைச்சாங்க, ஆனால் தண்ணிக்குள் என்ன நடந்தது’ என்று யோசித்து கொண்டு இருந்தாள்.

அவன் அவளுக்கு மேற்படியில் நின்று கொண்டு., அவள் கையைப் பிடித்து “மேலே எழுந்து வா, நட “, என்று அதட்ட.,

“மேல எல்லாரும் இருப்பாங்க, போக சொல்லுங்க, நான் அதுக்கப்புறம் மேல வரேன்”, என்று சொன்னாள்.

    “ஏன்” என்று கேட்டான்.

   “டிரஸ் ஈரமா இருக்கு”, என்று சொன்னாள்.

    “ஏன் இப்ப நான்  இருக்கேன் தானே”,என்றான்.

      “நீங்க வேற பாவா”, என்று சத்தமாக சொன்னாள் .

அவனே தன் தலையில் தட்டிக் கொண்டு, “வா லூசே உன்னை வச்சு என்னால் எல்லாம் சமாளிக்க முடியாது,  ஒழுங்கு மரியாதையா கிளம்பி லண்டன பாத்து ஓடிப் போயிரு, இனிமேல் இங்க இருந்து உயிரை வாங்காதே., இப்ப போய் நான் சொல்லிக் கொடுக்கிறேன், சூசைட் அட்டம்ட் ன்னு “, என்று சொன்னான்.

  “பாவா நீங்க சமாளிக்க வேண்டாம், நானே சமாளித்து கொள்வேன்”,என்றவள்

     ‘பாவா நீங்க மட்டும் சரின்னு சொல்லுங்களேன், கல்யாணத்துக்கு பிறகு  நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன்”, என்று சொன்னாள்.

   ‘ஒழுங்கு மரியாதையே வாயை மூடிட்டு ஊர பார்த்து போய் சேரு”, என்று சொன்னவன்,

   கிணற்றின் மேல் மட்டத்திற்கு வரவும் அங்கிருந்து எட்டிப் பார்க்க, நவீனும் அகிலாவின் கணவரும் சற்று தள்ளி நிற்க, அகிலா பம்பு செட் அருகிலேயே நின்று கொண்டிருந்தாள்.

அவளை அழைத்தவன்,  “இந்த லூசு கூட்டிட்டு போய் தண்ணிக்குள்ள முக்கி எடுத்து டிரஸ் மாத்தி வீட்டுக்கு கூட்டிட்டு போ”, என்று சொல்லிவிட்டு அவன் மீண்டும் கிணற்றுக்குள் இறங்க போக,

   அகிலாவை பார்த்து, “நீங்க போங்க, உங்க பின்னாடி வர்றேன்”, என்று சொல்லி விட்டு, “பாவா ஒரு நிமிஷம்” என்றவள், அவன் அருகே சென்று திரும்பி பார்க்க அகிலா அங்கில்லை,

அவன் டீசார்ட்டை இழுத்தவள், “நான் இங்கிருந்து போறதா இருந்தா, மிசஸ் கிருஷ்ணாவா தான் போவேன்”, என்று சொல்லி விட்டு அகிலா இருந்த இடம் நோக்கி சென்றாள்.

கிணற்றுக்குள் இறங்கியவனுக்கோ, வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான், மனதோ பாரமாக இருந்தது, உள்ளே இறங்கியவன் தன் தவிப்பை எல்லாம் நீச்சல் அடித்து விரட்டினான்.

இவளோ  மீண்டும் பம்பு செட்டிற்குள் இறங்கி தன் தலையை அலச தொடங்கினாள்.

நவீன் தான், “என்ன ஆச்சு” என்று தூரத்திலிருந்து கேட்க., “ஊத்திக்கிச்சு போடா லூசு”, என்றாள்.

    அகிலா தான்,  “நீ சீக்கிரம் தலையை தேச்சு குளிச்சு முடி., ரொம்ப நேரம் தண்ணீரில் நிக்காத, என்ன ஆச்சு, எங்க அண்ணன் என்ன சொன்னாரு”, என்று கேட்டாள்.

   “உங்க அண்ணன் சாமியாரா போக வேண்டிய ஆளு, அவரு இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல, சீக்கிரம் சன்னியாசியா போறதுக்கு, காவி வேஷ்டியும் ருத்ராட்சமும் வாங்கி கொடுங்க”, என்று சொன்னவள் தலையை அலசிக் கொண்டிருந்தாள்.

    அகிலா “சரி குளிச்சு முடி, டிரஸ் மாத்துறது அந்த ரூம்ல மாத்து, நான் இதுங்க ரெண்டையும் அந்த பக்கமா பத்தி விட்டுட்டு வரேன்”, என்று  சொல்லிவிட்டு சென்றாள்.

    இவளும் குளித்து உடைமாற்றிக் கொண்டு வரும்போது தான்., அகிலா அவர்களோடு போய் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.