13

      விசேஷம் பூஜை என்று அனைவரும் வந்து சென்று இரண்டு மூன்று நாட்கள் ஆகி இருந்தது. இவளுக்கு தான் போர் அடித்தது, இத்தனை நாள் வீட்டில் ஆள்கள் கலகலவென்று இருந்தது அவளுக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது.

     பின்பு பாட்டி தாத்தாவோடு சுத்திக் கொண்டிருந்தவள், அவ்வப்போது அவர்களோடு சேர்ந்து தோட்டத்திற்கும் சென்று வந்தாள். அங்கு கிணற்றில் பாதி தூரம் தோட்டத்தில் வேலை பார்க்கும் நபரின் மனைவியோடு இறங்கி சென்று பார்த்துவிட்டு வருவாள்.

    அவர்கள் துணி துவைத்து குளிப்பதை அவர்களோடு சேர்ந்த அமர்ந்து வேடிக்கை பார்த்துவிட்டு.,

    ‘ஆழம் எவ்வளவு இருக்கும், எங்க கல் இருக்கும்’, என்றெல்லாம் கேட்டுக் கொண்டே இருந்தாள்.

     “ஏன் பாப்பா” என்று கேட்டார்.

    “சும்மா தான் நானும் ஸ்விம்மிங் கத்துக்கலாம்னு தான்”, என்று சொல்லி அவரிடம் சொல்லி விட்டு அவர்கள் ஏறுவதற்கு முன்பே இவள் ஏறி வந்துவிடுவாள்.

  உள்ளே இறங்கும் போதும் ஏறும் போதும் அவளுக்கு பயமாக இருந்தாலும்., தன் நினைத்ததை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவளிடம் வலுவாக இருந்தது.

     இப்போது அவளிடம் கிருஷ்ணன் போன் நம்பரை தவிர அத்தனை பேருடைய நம்பரும் கையில் தான் இருந்தது .

     அவர்கள் இங்கிருந்து வீட்டிற்கு கிளம்பும் போதே அவர்களிடம் எண்ணை வாங்கி வைத்துக் கொண்டாள்.

     ஏற்கனவே இவள் இங்கு இருப்பதற்கு அனுமதி கேட்டது அனைவருக்கும் தெரியும் என்பதால் அவள் இங்கு தான் இருப்பாள் என்று அனைவரும் நினைத்தனர்.

பாட்டி தாத்தாவிடம் அவர்கள் கிளம்பும் முன்  கேட்டாள். “நான் இங்கே இருப்பதில் உங்களுக்கு எதுவும் டிஸ்டர்பன்ஸ் இருக்கா”, என்று கேட்டாள்.

    “ச்சே அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா., நீ தாராளமா இரு”, என்று இருவரும் சொன்னார்கள்.

    அப்போது துளசியின் அப்பா பாட்டி தான். “நீ வேணும்னா வீட்டுக்கு வரியா., இப்பதான் அங்க யாரும் இல்ல தானே, அங்க வந்து எங்க கூட இரு”, என்று சொன்னார்.

இவளோ “நான் உங்க பையன நம்ப மாட்டேன்., அவரு சொல்லாம கொள்ளாம திடீர்னு வந்து நிற்கிறதுக்கும் வாய்ப்பு இருக்கு., அதனால நான் அவரை நம்ப தயாரா இல்லை., நான் இங்கேயே இருக்கேன்”, என்று சொன்னாள்.

    தாத்தா தான், “அதுவும் சரிதான், நீ சொன்ன மாதிரி அவன் திடீர்னு வந்து நின்னுற கூடாது”, என்று சொன்னதால் இவள் இங்கேயே பாட்டி வீட்டில் தங்கி இருந்தாள்.

   அவ்வப்போது நவீன் இடம் போன் செய்து., “என்ன உங்க அண்ணன் கிட்ட ஏதாவது சேஞ்ச் தெரியுதா”, என்று கேட்டாள்.

   “ஒன்னும் தெரியல, அப்படியே எப்பவும் போல இருக்கிறான், ஏதாவது உன்னை பற்றி பேச்சு எடுத்தால் என்னை பார்த்து ஒரு மொறப்பு முறைக்கிறான்., எனக்கு தேவையா, அதனால நான் பேசுவதே இல்லை., ஆமா நீ அப்படி என்ன பேசின அன்னைக்கு”,என்று கேட்டான்.

“போடா, நான் தான் அன்னைக்கே சொன்னேன்ல., உங்க அண்ணன்  எதுக்கும் செட் ஆக மாட்டார் ன்னு”, என்று சொல்லிவிட்டு.,

    “மறந்துவிடாமல் இந்த வீக் கூட்டிட்டு வந்துரு”., என்று சொன்னாள்.

   “ஏன் ஜம்பிங் ரெடியாயிட்டியா”,என்று கேட்டான்.

   “ஆமாடா ஜம்பிங் ரெடியா இருக்கேன், அது டைவிங் இல்லாம இருந்தா சரிதான்”, என்று சொல்லி அவனிடம் கலாய்த்து கொண்டிருந்தாள்.

     அவர்கள் வரும் நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

    இவர்கள் மட்டும் வருவார்கள் என்று அவள் நினைத்துக் கொண்டிருக்க., பார்த்தால் மொத்த குடும்பமும் வந்து இறங்கியது.

     “அய்யய்யோ ப்ளான் சொதப்பிருமா” என்று நினைத்தாலும்., ‘பரவாயில்லை பார்த்துக்கொள்ளலாம்’ என்று நினைத்தவள்,

    அவனிடம் “என்னடா எல்லாரும் வந்திருக்காங்க”, என்று கேட்டாள்.

   “நான் சும்மா தான் போவோமான்னு கேட்டேன்., பஸ்ட் அண்ணன் வரலைன்னு சொன்னான்., அப்புறம் தான் பெரியம்மா எல்லாரும் போவோம் அப்படின்னு சொல்லிட்டாங்க., எல்லாரும் போவோம் என்று சொன்னதால் தான் அண்ணனும் கிளம்புனான்”, என்று சொன்னான்.

    “டேய்  தோட்டத்திற்கு உங்க அண்ணன் வருவார் தானே”, என்று கேட்டாள்.

    “வா வா ஜம்பிங், டைவிங் இல்லன்னா,  நான் உன்னை தள்ளி விடுறேன் வா”, என்று சொல்லிக் கொண்டே அன்றைய நாள் பொழுதை ஓட்டினார்கள்.

    “தோட்டத்திற்கு” என்று அகிலா தொடங்கி வைத்தாள்.

   அனைவரும் கிளம்ப, “பாட்டி நாங்க அங்க போய் குளிக்கிறோம்”, என்று சொல்லி எல்லோரும் மாற்றுவதற்கு துணியோடு அங்கிருந்து கிளம்பினர்.

       தலையில் எண்ணெய் வைத்து தூக்கி கொண்டை போட்டிருந்தவளை, வித்தியாசமாக பார்த்தான்.

    நவீன் தான், “ஆமா நீ என்ன இந்த கோலத்தில் வர்ற”, என்றான்.

      “குளிக்க தானே போறீங்க எல்லாரும், நானும் அதுக்கு தான் வரேன் வா”, என்றாள்.

    “உனக்கு இங்க எல்லாம் குளிக்க தெரியுமா”, என்று கேட்டான்.

     “பழகிக்கொள்கிறேன் வா”, என்று சொல்லிவிட்டு அகிலாவிடம், “அப்படி என்ன பெரிய விஷயமா, நீங்க இருக்கீங்க இல்ல, என் கூட இருப்பீங்க இல்ல”, என்று கேட்டாள்.

     அவளும் “கண்டிப்பா பாருங்க, பாப்பாவை கூட நான் வீட்ல விட்டுட்டு தான் கிளம்புறேன்”, என்று சொல்லி அவர்கள் கிளம்ப.,

    “பெரியவர்கள் சரி போயிட்டு, சீக்கிரமாக வாங்க லேட் ஆக்காதீங்க”, என்று சொன்னார்கள்.

         இவர்கள் கிளம்பி செல்லவும்., பாட்டியிடம் “ஃபர்ஸ்ட் பிள்ளைங்க மட்டும்தான் கிளம்புறதா இருந்தாங்க அத்தை, திடீர்னு பார்த்தா இவன் வரமாட்டேன் ன்னு  சொல்லுறான், அகிலா தான் அம்மா எப்படியாவது அண்ணனை கிளப்பி அனுப்பு ன்னு சொன்னா.,  டேய் அவங்க ரெண்டு பேரும் போறாங்களே நீ கூட போயேன்னு சொன்னதுக்கு., வேண்டாம் நான் போகலைன்னுட்டான்.

     அப்புறம் தான் சரி, எல்லாருமா போவோம் வா ன்னு சொல்லி இழுத்துட்டு வந்தாச்சு”, என்று சொன்னார்.

       பாட்டியும் “நானும் நெனச்சேன், இப்படித்தான் ஏதாவது இருக்கும்னு”, என்று சொன்னவர்., “சரி எப்படியோ இந்த பிள்ளை எல்லாம் சேர்ந்து ஏதோ பிளான் பண்ணுது., அந்த பிள்ளையும் பேச தான் முயற்சி பண்ணுது., இவன் முகத்தை திருப்பிட்டு போனா என்ன செய்ய., பார்ப்போம்”, என்று சொல்லும் போதே.,

     கலை “எல்லாம் நல்லபடியா நடக்கும்னு நம்புறேன் அக்கா”, என்று கிருஷ்ணாவின் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.

   அதே நேரம் இவர்கள் தோட்டத்திற்கு சென்று சேர்ந்து விட, முதலில் அகிலாவின் கணவரும் நவீனும் குளித்துவிட்டு வந்தனர்.

    கிருஷ்ணாவோ வேலையாக தோட்டத்திற்கு உள்ளே சென்றவன்., அங்குள்ள வேலைகளை பார்த்துவிட்டு, அங்கு வேலை செய்பவர்களிடம் சொல்லி விட்டு வருவதற்குள் இவர்கள் இருவரும் குளித்து விட்டு வெளியே வந்தனர்.

    அகிலா பம்பு செட்டில் குளித்துக் கொண்டிருக்க., இவளோ  குளிக்காமல் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

அகிலா தான், “குளிக்கலையா”, என்று கேட்டாள்.

    “குளிக்கணும், யோசனையா இருக்கு”, என்று பம்பு செட்டை பார்க்கவும், கிணற்றை பார்க்கவுமாக அமர்ந்திருந்தாள்.

       கிருஷ்ணா சற்று தள்ளி வருவது தெரிந்த உடனேயே, நவீன் “வந்தாச்சு, வந்தாச்சு” என்று சொன்னான்.

     இவளோ “அவருக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் பாரு., போடா எனக்கு குளிக்கிற மூட் எல்லாம் இல்ல., நான் வீட்ல போய் குளிச்சுகிறேன்”, என்று சொன்னாள்.

“ஏன்” என்று கேட்டான்.

       “அது ஒன்னும் இல்ல, சும்மா தான்”, என்று சொன்னாள்.

   “தினம் குளிக்கனுமாம், அதான் உனக்கும் நல்லது, சுத்தி இருக்க எல்லாருக்கும் நல்லது, தெரியும் இல்ல”, என்றான் .

            “ஹலோ நாங்க எல்லாம் தினம் குளிப்பமாக்கும், உன்ன மாதிரி வருஷத்துக்கு ஒரு தடவை வந்து கிணத்துல முங்குற ஆட்கள் இல்லை.,  என்று சொல்லி அவனை கிண்டல் செய்து கொண்டிருந்தாள்.

     பின்பு “டேய், ரெடியா,     நான் இருந்தா உங்க அண்ணனுக்கு,  இல்லைனா சாமிக்கு, என்று சொல்லியவள்., மெதுவாக உள்ளே இறங்கியவள்., அவனிடம் கையை காண்பித்து விட்டு சென்றாள்.

அவனும் வேண்டுமென்றே சத்தம் போட்டு., கிருஷ்ணா அருகில் வரவும் , “உனக்கு நீச்சல் தெரியாது, கிணத்துக்குள்ள இறங்காதே” என்று சொல்லி அவளை சத்தம் போடுவது போல சொன்னான்.

     அவளோ வேகமாக உள்ளே இறங்கி சென்றாள். கிருஷ்ணா வரவும்,  “அவளுக்கு நீச்சல் தெரியாது, உள்ளே இறங்கிட்டா”, என்று சொன்னான்.

     அவள் உள்ளே குதிக்கும் சத்தம் கேட்டது.

   “அடுத்த நிமிடம் அய்யய்யோ குதிச்சிட்டா, குதிச்சுட்டா”, என்று கத்தினான்.

கிருஷ்ணனும் மெதுவாக எட்டிப் பார்த்தான். அதன் பிறகு தான் அவளுக்கு நீச்சல் தெரியவில்லை என்பதே அவன் உணர்ந்தான்.

   வேகமாக மேலிருந்து அப்படியே குதித்தவன். அவளை தலை முடி இழுத்து அருகில்  கொண்டு வந்தவன், தன்னோடு சேர்த்து பிடித்துக் கொண்டவன்.,

  கிணற்றின் சுவர் பக்கமாக தூக்கிவர., வெளியே நவீன் ஒரு குதித்து விட்டு.,

    அகிலாவிற்கும், அகிலா கணவற்கும் ஹைபை அடித்துக் கொண்டான்.

   “சக்சஸ் எல்லாம் சக்ஸஸ் ஆயிடும், இனிமேல் நம்ம நகர்ந்துருவோம்”, என்று சொல்லி விட்டு.,

    கிணற்றை பார்த்து, “அண்ணா அவளை காப்பாத்திட்டியா”, என்று கேட்டான்.