“ஓ அத கேக்கறியா”, என்று பேசிக்கொண்டே அவர்கள் கிச்சனுக்கு அருகில் நிற்க.,  “அதுவா அன்னைக்கு எஸ்கேப் ஆகணும்னு முடிவோட வந்தேன்., சோ சுடிதார் போட்டேன், சாரி கட்டிட்டு வந்தா எஸ்கேப்பாக வாய்ப்பே இல்லை.,  ஒருவேளை நீங்க எல்லாம் ஹெல்ப் பண்ணலன்னு வைங்க., நான் தனியா தான் ஓடி இருக்கணும்.,  தனியா ஒன்னு எங்க ஓடியிருப்பேன், ஒன்னு ஏர்போர்ட் போயிருப்பேன், இல்ல ன்னா பஸ் ஸ்டாப் போய் இருப்பேன்.,  அதுக்கெல்லாம் ரெடியாகத்தான் வந்தீங்களா”, என்று கேட்டான்.

       “பின்ன., அமௌன்ட் அப்பாட்ட எக்ஸ்ட்ரா டிரஸ் எடுக்க போறேன், சாரி எடுக்க போறேன் அப்படின்னு சொன்ன உடனே நம்பி கையில பணம் கொடுத்துட்டாரு. பாஸ்போர்ட் முதற்கொண்டு எடுத்து பவுசில் வைத்துக்கொண்டு தான் வந்தேன்”, என்று சொன்னாள்.

   “பாஸ்போர்ட் உங்க கையில தான் இருக்கா”, என்றான்.

     ” பின்ன பாஸ்போர்ட் இல்லாம எப்படி தப்பிச்சு வர்றது., பாஸ்போர்ட் கைல கிடைச்சுச்சு,    இல்லாட்டிஎங்க அப்பா என்கிட்ட பாஸ்போர்ட் தரவே மாட்டாரு.,  எப்போ ன்னா லண்டன்ல கிளம்பு ம் போது என் கையில் இருந்து பாஸ்போர்ட்ட புடுங்கி வச்சவர்.,  பிளைட்ல வரும்போது இடையில கொஞ்ச நேரம் என் கையில் இருந்துச்சு திருப்பி வாங்கி வச்சுட்டார்.,  இந்தியா வந்து இறங்கவுமே பாஸ்போர்ட் அவர் கைக்கு போயிருச்சு., அதுக்கப்புறம் அவர் இதே தான் இருந்துச்சு , என்றாள்.,

“எப்படி எடுத்தீங்க”, என்றான்,

” சுட்டுட்டேன் “என்று சொன்னாள் .

       “அடிப்பாவி” என்றான்.

     “டேய் தப்பிக்கணும்னு பிளான் பண்ணிட்டோம்னு வைங்க.,  தப்பிச்சே ஆகணும் அப்படிங்கற எண்ணம் தான்.,

    “அவர் ஹிட்லர்னா”, நான் ஹிட்லர் ஓட பொண்ணு டா’, என்று சொன்னாள்.

“ஓஹோ அப்படியா விஷயங்க.,  அண்ணன்ட்ட சொல்றேன்”, என்று சொன்னவள்.

    “சொல்லி பாரு.,  உன்னை மிதிக்கிறேன்”, என்று சொன்னாள்.

கிச்சனில் பெரியவர்கள் சத்தம் கேட்கவும் அமைதியானவள்.,

    “வாய மூடிட்டு இருக்கணும், ஏதாவது வெளியே சொன்ன நடக்கிறதே வேற, என்றும் மிரட்டி விட்டு கிருஷ்ணாவின் தங்கை கையை பிடித்துக் கொண்டு ஹாலுக்கு சென்றாள்.

அப்போது வீட்டில் உள்ளவர்கள், அவர்கள் மூவரைத்  தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

  அனைவரும் கோயிலுக்கு சென்று பூஜைகளை முடிக்க எல்லோரின் வேண்டுதலும் எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதாக இருந்தது.

   நவீனும் ‘எப்படியும் இருவரும் பேசிவிட வேண்டும், நல்ல முடிவு கிடைக்க வேண்டும்’, என்று நினைத்துக் கொண்டிருந்தான்.

    கிருஷ்ணனும் ‘இந்த லூசு என்ன பேசப்போகுதுன்னு தெரியல, வீட்ல உள்ளவங்க என்ன நினைச்சிட்டு இருக்காங்கன்னு தெரியல, எதுவா இருந்தாலும் நீயே பொறுப்பு’, என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தான்.

    இவளோ கண்ணை மூடாமல் உள்ளே தெரிந்த சுவாமியின் சிலையை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

   மனதிற்குள் ‘லண்டனில் இருந்து கிளம்பும் போது பயந்து பயந்து கிளம்பி வந்தேன், இந்தியா வந்தது ஒரு வகைல நல்லதா போச்சு, இப்பவும் நான் கேட்கிறது ஒன்னே ஒன்னு தான்.,

    இதுதான் என் வாழ்க்கை ன்னு முடிவு பண்ண போய் தான், நீ என்ன இவங்க கைல ஒப்படைச்சிருக்க ன்னு நான் நம்புறேன்.,  நான் அவங்க கிட்ட இன்னைக்கு பேச போறேன்,  இப்போ இந்த நிமிஷம் வரைக்கும் என்ன பேசணும் அப்படின்னு தோணவே இல்ல.,

    ஆனா இது என் வாழ்க்கை,  நான் தான் முடிவு பண்ணனும்.,  அதுக்கு மட்டும் எப்படியாவது ஹெல்ப் பண்ணிரு, ப்ளீஸ் இப்பவே கை கால் எல்லாம் தந்தி அடிக்குது., அந்த மனுஷன் வேற என்னை முறைத்து பாக்குறாரு,  நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியல., கொஞ்சம் பதட்டமாகவும் இருக்கு,

     ப்ளீஸ் சே மீ., காப்பாத்திருவ தானே,  உன்ன தான் நம்பிட்டு இருக்கேன், பேசி ஒரு நல்ல முடிவு கிடைக்கணும்., முடிவு கிடைக்கலையோ அதுக்கு அப்புறம் தான் இருக்கு உனக்கு., நீ தான் இங்க எல்லாருக்கும் குல தெய்வம், எங்க அத்தைக்கும் நீ தான் குலதெய்வமா இருக்க, சோ எனக்கும் குலதெய்வமாகிரு,  ஆனால் நீ கொஞ்சம் கூட கருணை காட்ட மாட்டியே’, என்றவள்,

    ‘பேச போறேன் கொஞ்சம் ஹெல்ப் பண்ணு’ என்று கண்ணிமைக்காமல் கடவுள் சிலையை பார்த்து மனதிற்குள் பேசிக்கொண்டாள்.

    பூஜை முடிந்து கையில் பிரசாதம் கொடுத்தவுடன்.,

    அத்தை அங்கேயே அனைவருக்கும் பரிமாற எல்லோரும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் போது.,  துளசி மட்டும் கையில் கொடுத்த பிரசாதத்தை வைத்துக்கொண்டு அமைதியாக நின்றாள்.

    பின்பு அகிலாவின் அருகில் அமர்ந்து,  அவள் குழந்தைக்கு கொடுப்பதை பார்த்துக் கொண்டிருந்தவள்., அவளும் எடுத்து சாப்பிட தொடங்கும் போது யோசனையோடு இருக்க.,

        அகிலா தான்., “ஏன் இவ்வளவு யோசிக்கிறீங்க, அண்ணன் கிட்ட என்ன பேசுறதுனா”, என்று கேட்டாள் .

    “என்ன பேசினாலும் அவர் கேட்க மாட்டாரே, அதை யோசிக்கிறேன்”, என்றாள்.

    “ஏன் நேத்து பேசினீங்களே”, என்று சொல்லிப் கேட்டுக் கொண்டிருக்கும் போதே

   நவீனும் அகிலாவிற்க்கு அந்தப் பக்கமாக அமர்ந்து கொண்டு, “நேத்து என்ன பேசின”, என்று கேட்டான்.

         “பேசிட்டாலும், பேசுனதுக்கு ரெஸ்பான்ஸ் இல்லையே, பார்ப்போம் இன்னைக்கு முயற்சி பண்ணுவோம், எங்க அம்மா அடிக்கடி ஊர்ல சொல்லும்”, என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே,

     “என்ன சொல்லும்”, என்றான் நவீன் குரலை ஒரு மாதிரி மாற்றிக் கொண்டு.,

     “அடிக்கடி அப்பாக்கும் அம்மாவுக்கும் ஆர்கியுமென்ட் வரும் போது, அம்மா சொல்லுவாங்க, “ஆசை இருக்காம் தாசில் பண்ண அதிர்ஷ்டம் இருக்காம் கழுதை மேய்க்கன்னு”, அது மாதிரி நிறைய பழமொழி அப்பப்போ சொல்லுவாங்க, இப்பதான் புரியுது அதற்கான அர்த்தங்கள் எல்லாம்”, என்று நிதானமாக சொன்னவள்.

    “ஆமா உங்க அண்ணனுக்கு லவ்னா முதல்ல என்னனு தெரியுமா”, என்று கேட்கவும் வாயிலிருந்த பொங்கலோடு சிரித்தவனுக்கு புரையேற தொடங்கியது,

     அருகில் இருந்த அகிலா  தான் அவன் தலையில் தட்டி, “ஏன்டா ஏன் இப்படி சிரிக்க”, என்று கேட்டாள்.

    “பின்ன அவ என்ன கேள்வி கேட்டா பாத்தியா., அண்ணனுக்கு லவ் பண்ண தெரியுமா ன்னு., இத நம்ம தான் அவ கிட்ட கேக்கணும், உனக்கு தெரியுமா”, என்று கேட்டான்.

      “நான் லவ் இனிமேல் தானடா பண்ணனும்., இப்பதானே வந்திருக்கேன், இப்பதானே இப்படி  ஒருத்தர் இருக்காருன்னு எனக்கு தெரியும்., இதுக்கு முன்னாடி அப்படி ஒரு பீலே வரல தெரியுமா”, என்று வருத்தமாக சொன்னாள் .

      அகிலா தான், “என்ன ரொம்ப வருத்தப்படுற மாதிரி இருக்கு”, என்று கேட்டாள்.

    “நெஜமா தான் சொல்றேன், லண்டன்ல இருக்கும் போது என் பிரெண்ட்ஸ் எல்லாம் என்னை கிண்டல் பண்ணுவாங்க, நீ சாமியாரா போக போற, உனக்கு கல்யாணம் செட் ஆகாது ன்னு , அப்புறம் என்னெல்லாமோ சொல்லுவாங்கன்னு வைங்களேன்., ஏன்னா அந்த டீனேஜ்ல பசங்கள பாத்து இவன் அழகா இருக்கான்ல, அவங்க அழகா இருக்கான்னு பாக்கும் போது கூட நான் என்னமோ கல்லையும் மண்ணையும் பார்க்கிற மாதிரி தான் பாத்துட்டு கடந்து போவேன்., எனக்கு என்னவோ அப்ப யாரையும் பார்த்து அப்படியெல்லாம் தோனவே இல்ல”, என்று சொன்னாள்.

     நவீன் “இப்ப எங்க அண்ணனை பார்த்தா, உனக்கு என்ன தோணுது”, என்று கேட்டான்.

      “எங்கடா இன்னும் முழுசாவே முகத்தை பாக்கல டா”, என்று சொன்னாள்.

       “என்னது பாக்கலையா”, என்றான் அதிர்வாக.,

    “பின்ன நேத்திக்கு போய் பயந்து பயந்து பேசிட்டு நிமிர்ந்து முகத்தை பார்க்க ட்ரை பண்ணா, அவர் முறைக்கிறது தான் தெரிஞ்சது,  டக்குனு குனிஞ்சுகிட்டேன்., அதுக்கப்புறம் தோட்டத்தில் வைத்து பேச ட்ரை பண்ணும் போதும், அவர் ஒரு மாதிரி கோவமா பேசினாரா., எங்க முகத்தை பார்த்தா டென்ஷன் ஆகும்னு  பயந்து போய் முகத்தையே பாக்கல “, என்றாள்.