ஏற்கனவே வீட்டில் இருந்து கிளம்பும் போதே சற்று தாமதம் ஆகி இருந்ததால்., தாத்தாவும் சீக்கிரம் வரவேண்டும் என்று சொல்லித்தான் அனுப்பியிருந்தார்.,
அதனால் அனைவரும் அங்கு சென்று சேரும் போது வெயில் இறங்க தொடங்கி இருந்தது.
காரை விட்டு இவர்கள் இறங்கவும், அகிலா தான் “ஃபுல் அண்ட் ஃபுல் தோட்டத்தில் இருக்கிற மாதிரி வந்த நல்லா இருக்கும்., இப்ப ஜஸ்ட் ஒரு ரவுண்டு மாதிரி போயிட்டு அப்படியே வீட்டுக்கு போலாம், இன்னொரு முறை காலையில் இருந்து சாயந்திரம் வரைக்கும் நல்ல என்ஜாய் பண்ணுற மாதிரி வரலாம், பம்பு செட் இருக்கு குளிக்கலாம் கிணறு இருக்கு ஸ்விம்மிங் தெரிஞ்சவங்க கிணத்துக்குள்ளயே இறங்கலாம்”, என்று சொன்னாள்.
“தெரியலன்னா” என்று கேட்டாள்.
“ஸ்விம்மிங் தெரியலன்னா, வெளிய பம்பு செட் இருக்கு, அதுல தண்ணி நல்லா பால்ஸ் மாதிரி விழும் அதுல குளிக்கலாம்”, என்று சொன்னாள்.
‘ஓ’ என்று கேட்டாள்.
நவீன் தான், “ஸ்விம்மிங் தெரியுமா, தெரியாதா” என்று கேட்டான்.
“ஓகே எனக்கு தெரியாது நான் கத்துக்கலை” என்று சொன்னாள்.
“இப்ப கத்துக்க வேண்டியது தானே”, என்றான்.
“யார் கத்துக் கொடுப்பா” என்று கேட்டார்.
நவீன் சும்மா இல்லாமல், “கத்துக் கொடுக்க வேண்டியவங்க நினைச்சா, கத்துக் கொடுக்கலாம்., மத்தவங்க எல்லாம் கத்துக்கொடுக்க யோசிப்பாங்க இல்ல., ஆனா ஒரு ஆள் நினைச்சா கத்துக் கொடுக்கலாம்”, என்று சொன்னான்.
இவளும் அகிலாவோடு ஏதோ பேசிக் கொண்டிருந்த சுவாரசியத்தில்., “யாரு அது”, என்றாள்.
“நீங்களே கண்டுபிடிங்க”, என்று சொல்லிவிட்டு அவன் நகன்று சென்றான்.
‘இவன் என்ன இப்படி சொல்லிட்டு போறான்’, என்று யோசித்தவள், அவனை பார்த்துக்கொண்டு அகிலாவுடன் நடந்தாள்.
அவனும் வேகமாக திரும்பி இவள் அருகில் வந்தவன், “ஏதோ பேசணும் சொன்னீங்களே, எப்ப பேசலாம்”, என்று கேட்டான்.
அருகில் அகிலாவை பார்த்துக் கொண்டவள்.,
“அப்புறம் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு, “ஹெல்ப் பண்ணுவ இல்ல” என்று கேட்டாள்.
“எனக்கு சாதகமான விஷயமாக இருந்தா, ஹெல்ப் பண்ணுவேன், இல்லன்னா பண்ண மாட்டேன்”, என்று சொன்னான்.
“செல்ஃபிஷ்” என்று அவனை திட்டியவள், அகிலாவின் கையை பிடித்தபடி நடக்க தொடங்கினாள்.
ஆண்கள் மூவரும் முன்னால் நடக்க., இவர்கள் இருவரும் பின்னால் நடந்து கொண்டு இருந்தனர்.
அகிலாவோ, “நீங்க ஏதோ என்கிட்ட பேசணும்னு நினைக்கிறீங்க, சொல்லுங்க துளசி”, என்று கேட்டாள்.
சற்று நேரம் அமைதியாக இருந்தவள், “எனக்கு உங்க அண்ணா கிட்ட தனியா பேசணும்., அது எப்படி பேசுவது ன்னு தான் தெரியல”, என்று சொன்னாள்.
“மாடிக்கு போனீங்களே பேசி இருக்க வேண்டியது தானே” என்றாள்.
“அது பேசினேன், ஏதோ கோவத்துல சடசடன்னு நிறைய பேசிட்டு வந்துட்டேன்., ஆனா நான் நினைச்சதை பேசினேனா அப்படி ன்னு எனக்கு தெரியல”, என்று சொன்னாள்.
அவளும் “இன்னிக்கு., இப்ப பேசுறீங்களா” என்று கேட்டாள்.
“டைம் ஆயிடுச்சில்ல” என்று கேட்டாள்.
“நாளைக்கு ஏற்கனவே கோயில் பூஜை நிறைய ஒர்க் இருக்கு., நவீன் தான் பூஜைக்கு கொடுக்கணும்னு சொன்னான், பாட்டியும் உடனே போன் பண்ணி சொல்லிட்டாங்க., நீங்க இன்னைக்கு பேசினா பேசுங்க., இல்ல னா நாளைக்கு மத்தியானம் நானே அண்ணன் கிட்ட சொல்லி., அவங்க பேசணுமாம் ன்னு அனுப்பி வைக்கிறேன்”, என்று சொன்னாள்.
“அய்யய்யோ உங்க அண்ணன் சொன்னத கேட்டுட்டு தான், மறுவேலை பார்ப்பாரு, அதெல்லாம் நம்பாதீங்க”, என்று சொன்னவள்.
“இன்னைக்கு எனக்கு பேச சந்தர்ப்பம் கிடைச்சா., நாளைக்கு பேசுறதுக்கு நானே டைம் கேட்கிறேன், இல்லன்னா நாளைக்கு உங்ககிட்ட சொல்றேன்., நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க”, என்று சொன்னாள்.
“நிச்சயமா” என்று அவள் சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே போக,
“சரி நீங்க உங்க வீட்ல அண்ணாவுடன் நடங்க, நான் பின்னாடி வரேன்”, என்று சொன்னாள்.
இவளும் முன்னாடி செல்ல, அவர்கள் நால்வரும் நடக்க., இவளோ சற்று பின் தங்கினாள், அகிலா வந்து அவர்களோடு சேர்ந்து கொள்வதை பார்த்தவன்., துளசி வருவாளா என்று எதிர்பார்ப்போடு தான் நடந்தான்.
ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்., “சரி ஆகிய நீங்க அப்படியே நடந்துட்டு வாங்க., நான் இங்க கொஞ்சம் ஒர்க் இருக்கு முடிச்சிட்டு வாரேன்” என்று தோட்டத்தில் வேலைக்காக அங்கேயே தங்கி இருப்பவர்கள் வீட்டை நோக்கி நடக்க தொடங்கினான் கிருஷ்ணா.,
அவன் அந்த பக்கமாக நடக்க தொடங்கவும்., வேக வேகமாக வந்து அகிலாவிடம் பேசிய நவீன்., பின்பு மீண்டும் வேகமாக துளசி நின்ற பக்கமாக வந்தான்.
அவன் வந்ததை பார்த்தவுடன் “என்ன உங்க அக்கா கிட்ட கேட்டியா., நான் என்ன பேசணும்னு தெரிஞ்சிருச்சா”, என்று கேட்டாள்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள், “என்னை பார்த்தா பொய் சொல்ற மாதிரி இருக்கா உனக்கு”, என்று கேட்டாள்.
“நிச்சயமா இல்ல, ஆனா எதுவா இருந்தாலும் சாதகமான முடிவா இருந்தா., நான் கண்டிப்பா ஹெல்ப் பண்றேன், நான் வேணும்னா இப்போ போய் பேசி டைம் கேட்கட்டுமா, உன்கிட்ட பேசுறதுக்கு” என்று கேட்டான்.
“எனக்கு நீங்க யாரும் ரெக்கமென்ட் பண்ணி, அதனால உங்க அண்ணா வந்து பேசக்கூடாது., நான் கேட்கணும்”, என்று சொன்னாள்.
“சரி என்ன பண்ணலாம் நினைக்கிற”, என்று கேட்டான்.
அவளோ “ஜஸ்ட் இப்போ நான் பெர்மிஷன் கேட்கிறேன்., உங்க அக்கா கிட்ட சொன்னதே தான், அவங்க நாளைக்கு மத்தியானம் எனக்கு டைம் ஒதுக்க சம்மதித்தா மீதியை நானே பேசுகிறேன்., இல்ல அப்படின்னு சொன்னா கண்டிப்பா நீயும், உங்க அக்காவும் தான் ஹெல்ப் பண்ணனும்”, என்று சொன்னவள்,
மறுபடியும் நவீனிடம் “எனக்கு ஹெல்ப் பண்ணுவ தானே” என்று கேட்டாள்.
அவனும் “பாசிட்டிவா பேசுறதா இருந்தா கண்டிப்பா நான் ஹெல்ப் பண்ணுவேன்”, என்று சந்தோஷமாக சொன்னான்., “ஒருவேளை இது நெகட்டிவா பேசுறதுனா சாரி”, என்று சொன்னான்.
அவளோ அவனை பார்த்தபடி இருந்தவள்.,
“எனக்கு இங்கு உள்ள எந்த விஷயமும் தெரியாது நவி., இங்க வந்து ரெண்டு நாள்ல பாட்டி என்கிட்டே எல்லா விஷயமும் சொன்னாங்க., அப்ப எப்படி இருந்துச்சு தெரியுமா, உள்ள எல்லாம் வலிச்சது, அந்த வலியை சொல்லி யாருக்கும் புரிய வைக்க முடியாது., சத்தியமா சொல்றேன் எனக்கு லண்டன்ல இருந்த வரைக்கும் லவ் அப்படிங்கிற ஒரு ஃபீல் சத்தியமா தோன கூட இல்ல., ஏன் யாரையும் பார்க்கணும்னு கூட தோனுனது இல்ல, என் பிரெண்ட்ஸ் என்னை எப்படி எல்லாமோ கிண்டல் அடிச்சிருக்காங்க., பட் பாட்டி சொல்லும் போது நெஜமா உள்ளுக்குள்ள ஒரு வலி.,
என் பிரண்டு சொல்வா, நீ இந்தியா போறது கூட நல்லது ன்னு நினைத்துக்கோ அப்படின்னு, இதை சொல்லி தான் என்னை தைரியப்படுத்தி எங்க அப்பாவோட இங்க அனுப்பி வச்சாங்க., நடந்தது பாஸ்ட் இஸ் பாஸ்ட்., இப்போ எனக்கு நான் எடுக்குற முடிவு கரெக்ட்டா இருக்கனும், அது மட்டும் சரியா இருக்கனும் “, என்று சொன்னாள்.
அவனும் சுற்றி பார்த்துக் கொண்டே, “ஆல் தி பெஸ்ட்., ஆனா நான் இப்போ உன்கிட்ட பேசுனதையோ, சந்தோஷமா முகத்தை காட்டியதோ தெரியக்கூடாது., நான் போய் அகிலாவோட ஜாயின் பண்ணிக்கிறேன், அகிலா ட்ட இதை சொல்லி வைக்கிறேன், மீதிய நீ தான் டீல் பண்ணனும்.,
முடிஞ்சா இப்ப அண்ணன் வருவான் பேச முடியுமா பேசு”, என்று சொல்லிவிட்டு வேகமாக அகிலாவோடு சென்று சேர்ந்து கொண்டான்.
அகிலாவும் நவீனும் சேர்ந்து திரும்பிப் பார்க்க., இவள் அவர்களை பார்த்தபடி மெதுவாக நடக்க தொடங்கினாள்.
அதே நேரம் வேலை செய்பவர்களிடம் பேசிவிட்டு மெதுவாக நடந்து வந்தவன், அவள் தனியே வருவதை பார்த்தவுடன், அவர்களை பார்க்க அவர்கள் மூவரும் முன்னால் செல்வதை பார்த்திருந்தான்.
அவர்களுக்கும் இவளுக்கும் நடுவில் நடக்க தொடங்கினான்.
சற்று நேரம் அமைதியாக வந்தவள்., வேகமாக அவனோடு சேர்ந்து கொண்டு, “பாவா உங்க கிட்ட எனக்கு பேசணும்”, என்றாள்.
அவன் எதுவும் சொல்லாமல் நடக்க தொடங்க., “நீங்க பதில் சொல்றீங்களா, சொல்லலையா, என்பது முக்கியமில்லை., நான் சொல்றத சொல்லிடுறேன் பாவா”, என்று சொல்லி விட்டு
“எனக்கு உங்க கூட கொஞ்சம் தனியா பேசணும்., ப்ளீஸ் எனக்காக கொஞ்சம் டைம் ஒதுக்கி கொடுங்க”, என்றாள்.
அவன் திரும்பி ஒரு பார்வை பார்க்க., அவன் கண்ணை பார்த்தவள்., “நாளைக்கு கோயில் பூஜை எல்லாம் முடிந்து ப்ரி ஆன பிறகு., வீட்டு மொட்டை மாடியில் பேசலாமா பாவா., இல்ல உங்க ரூம்ல னா கூட எனக்கு ஓகே தான்”,., என்று சொன்னவள்.,
அதன் பிறகு நிதானமாக நடக்க தொடங்கினாள்.,
அவளது பட பட பேச்சும்., பார்வைக்கு பதில் சொன்ன விதமும் யோசித்துக் கொண்டே நடந்தவனுக்கு.,
‘மொட்டை மாடிக்கு தான் ஓகே சொல்லனும்., ரூம்ல னா நெஞ்சில் தலை சாய்த்தே டென்ஷன் ஏத்துவா’., என்று நினைத்து கொண்டான்.