10

   உடைமாற்றி கொண்டு வெளியே வர நினைத்தவள்,
மெதுவாக எட்டிப் பார்க்க பெரியவர்கள் எல்லாம் ஒரு பக்கமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

      நவீன் வீட்டிற்குள் நடை போட்டுக் கொண்டிருந்தான்.

     நவீனின் அக்கா கணவன் தான், ஏதோ சொல்லிக் கொண்டிருப்பது தெரிந்தது.,

    சுற்றும் முற்றும் பார்க்க கிருஷ்ணா கீழே இல்லை என்பதை அறிந்து கொண்டவள், ‘கிஸ் பண்ணிட்டு வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்’ என்று நினைத்தவள்.,

      ‘ஐயோ கன்னம் பழுத்திருக்கும்.,  தப்பிச்சிட்ட  ன்னு நினைச்சுக்கோ’, என்று நினைத்து கொண்டாள்.

     சாதாரண முகத்துடன்   அவள் வருவதை பார்த்தவுடன்., அனைவரும் அவளை திரும்பிப் பார்க்க அவளும் எதுவுமே சொல்லாமல்.,  “அலமேலு ஆன்ட்டி காப்பி” என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

   கிச்சனிலிருந்து அலமேலு ஆன்ட்டி, “பாப்பா பாயாசம் ரெடியா இருக்கு” என்று சொன்னார்.

     “பாயாசமா” என்று கிச்சனை எட்டி பார்த்து கேட்டாள்.

    நவீன் அவள் கேட்பதை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

    “ஆமாமா, நவீன் தான் பாயாசம் வைக்க சொன்னான், அதனால தான் வச்சிருக்கேன்”, என்று சொன்னார்.

     அவளும் நவீனை திரும்பிப் பார்த்து, “என்னடா விசேஷம்” என்று கேட்டாள்.

    அவனும் “நீ சீக்கிரம் லண்டன் கிளம்புறியாமே, அதுதான் விசேஷம்”, என்று சொன்னான்.

     “நான் எப்படா கிளம்புறேன்னு சொன்னேன்.,  நீயா முடிவு பண்ணிட்டா அதுக்கு நானா பொறுப்பு”, என்று கேட்டாள்.

     “ஏன் நீ முடிவு பண்ணினாலும், பண்ணாட்டிலும், மூன்று மாதத்தில் லண்டன் போணுமாமே., இப்ப தான் பாட்டி சொல்லிக்கிட்டு இருந்தாங்க, அதுக்கு தான் பாயாசம் வைக்க சொன்னேன்”, என்று சொன்னான்.

      அவனும் அவளும் சேர்ந்தாற்  பாட்டியை திரும்பி பார்க்க,  “என்ன பாட்டி” என்று கேட்டாள்.

    அவரும் “இல்லம்மா, உங்க அப்பா சொன்னாங்களா., அதைத்தான் நான் சொல்லிட்டு இருந்தேன்”, என்றார்.

      “அதெல்லாம் நான் பாத்துக்கிறேன், ஆமா உனக்கு என்னடா அவ்ளோ சந்தோஷம்., நான் போக மாட்டேன்னு சொன்னா என்னடா பண்ணுவ”, என்று கேட்டாள்.

        “போக மாட்டீங்களா? வீசா முடிஞ்சிருச்சுன்னா,  கழுத்தை பிடித்து தள்ளிடுவாங்கலாமே”,  என்று கேட்டான்.

    “அந்த வீசாவை கண்டினியூ பண்ணுறது  எப்படின்னு எனக்கு தெரியும்.,  நான் பாத்துக்குறேன், நீ பேசாம இரு”, என்று சொன்னாள்.

      அவனோ “இல்ல இல்ல, உனக்கு வீசா கன்ஃபார்மா,  3 மந்த்ஸ்ல முடிஞ்சிறும், நீ கிளம்பிடுவ”, என்று சொன்னான்.

    “போக மாட்டேன், என்னடா பண்ணுவ”, என்று அவனிடம் வம்பு வளர்க்க,

     அதே நேரம் அலமேலு ஆன்ட்டி அனைவருக்கும் கிண்ணத்தில்  பாயாசம் விட்டு ஸ்பூன் போட்டு கொண்டு வந்து கொடுத்தார்.

     எல்லாரும் எடுத்துக் கொண்டிருக்கும் போதே இவளும் முதல் ஆளாக எடுத்துக் கொண்டாள்.

  “நான்  தான் பாயாசம் வைக்க சொன்னேன், நீ எதுக்கு இப்ப பாயாசத்தை சாப்பிடுற”, என்று கேட்டான்.

     “நானும் செலிப்ரேட் பண்றதுக்காக தான் எடுத்தேன்”, என்று சொன்னவள்.

    “என்ன செலிப்ரேஷன்” என்று அவன் அவளை ஆர்வத்தோடு பார்த்து கேட்டான்.

     அவளும் “அதெல்லாம் எனக்கு மட்டுமான செலிப்ரேஷன், உனக்கு எதுக்குடா சொல்லணும்”, என்று சொல்லி சாப்பிட தொடங்கினாள்.

    மாடியில் இருந்து இறங்கி வரும்  சத்தம் கேட்டது.,

    “அம்மாடியோ வந்துட்டாண்டா” என்று மனதிற்குள் நினைத்தவள், வேக வேகமாக சென்று தனியாக ஒரு சோபாவில் அமர்ந்து கொண்டாள்.

    அவள் செய்கையை அத்தனை பேரும் பார்த்தாலும் பார்க்காதது போல இருந்து கொண்டனர்.

   நவீனோ ‘இவ மேல போனாலே பேசினாலே பேசலையா’, என்று யோசனையோடு பாயாசம் கிண்ணத்தை கையில் வைத்து ஸ்பூனை வைத்து கிண்டி கொண்டே இருக்க.,

     அங்கு வந்த கிருஷ்ணாவோ அந்த பாயாச கிண்ணத்தை வாங்கி கொண்டு.,  “ஏன்டா சாப்பிடாம வச்சிருக்க, உனக்கு வேண்டாமா, கொண்டா”, என்று சொல்லி வாங்கிக்கொண்டு இன்னொரு ஒற்றை சோபாவில் அமர்ந்தான்.

     ‘ஆஹா ரெண்டும் ஆளுக்கு ஒரு திசைல உட்கார்ந்து இருக்கு, இவ போய் பேசினாளா, பேசினா அதுக்கான ரியாக்சன் இங்க வந்து இருக்கனுமே., அச்சச்சோ இப்போ பேசினாளா, இல்ல பேசலையாங்கறது எப்படி தெரிஞ்சிக்கிறது., அவகிட்ட கேட்க முடியாதே.,

      அவளிடம் பெருசா நீ விசா எடுத்துட்டு போ ன்னு சொல்லியாச்சு, உனக்கு வீசா முடிஞ்சிடும் போ போ ன்னு சொல்லியாச்சு., அண்ணன்கிட்ட கேட்கணும்னா’, என்று யோசனையோடு அக்கா கணவனை பார்க்க.,

    அவரோ, ‘நான் மாட்டேன் என்னை கோர்த்து விடாதே’ என்று சைகையில் சொன்னார்.

    அவனும் அக்காவை பார்க்க ,அவளும் வேகமாக இல்லை என தலையசைத்தாள்.

    இதைக் கண்டும் காணாதது போல அமைதியாக இருந்து, கிருஷ்ணா பாயாசத்தை ருசிக்க, இவளும் குனிந்த தலை நிமிராமல் பாயசத்தில் உலகத்தில் தேடுபவள் போல தேடிக் கொண்டிருந்தாள்.

      மெதுவாக கண்ணை உயர்த்தி இவர்களது செய்கைகளை பார்த்துக் கொண்டிருந்தவள்.,  லேசாக திரும்பி கிருஷ்ணாவை பார்த்தாள்.

    அவன் முகம் வெகு சாதாரணமாக இருந்தது.,

    ‘பாவா உனக்கு கோவம் சந்தோஷம் எதுவுமே முகத்தில் எக்ஸ்பிரஷன் வராத டா., இப்ப நீ கோவமா இருக்கியா இல்ல, சந்தோஷமா இருக்கியா ன்னு  நான் எப்படிடா கண்டுபிடிக்கிறது”, என்று தனக்குத்தானே புலம்பி கொண்டாள்.

   “பாப்போம் எந்த ரியாக்ஷனும் வரல., ஒரு ரியாக்ஷன் தெரியல அப்படின்னா.,  அத்தனை பேரும் முன்னாடியுமே பாவானு கூப்பிட வேண்டியது தான்., இந்த மலையை நகர்த்த முடியுமா.,  நகர்த்தியே ஆகணும்., என்ன பண்ணலாம்,

     முதல்ல இந்த எலியை பிடிப்போமா”, என்று நவீனை பார்த்தாள்.

     நவீனும் கிருஷ்ணாவை பார்த்துக் கொண்டிருந்தவன்., சட்டென்று இவள் பக்கம் திரும்பவும், இவளும் அவனையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

‘என்ன’ என்று புருவத்தை உயர்த்தி கேட்டான்.

    இவளோ ‘பக்கத்துல வா’ என்று செய்கையால் அழைத்தாள்.

    “இது இப்படி மெதுவா பேசுற டைப் கிடையாதே., எதுக்கு பக்கத்துல வான்னு தெரியல கூப்பிடுது” என்று யோசித்தவன்.,

     ‘இல்லையே பூனை பதுங்குதே, எதுக்கா இருக்கும்’, என்று யோசித்தவன்.

     அவளையே பார்த்துக் கொண்டிருக்க,

    அவளோ, ‘இந்த எலி மட்டும் இன்னைக்கு மாட்டட்டும், இவனை வச்சு அந்த மலையை குடைந்து விடுவோம்’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

    இருவரும் ஒருவரை ஒருவர் பூனை எலி என்று நினைத்துக் கொண்டது தெரியாமல்.

     அவளோ, சாதாரணமாக முகத்தை வைத்துக்கொண்டு நவீனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

    நவீனோ, யோசனையோடு, ‘புலி மாதிரி பாயுற ஆளு, பதிலுக்கு பதில் கத்துற ஆளு, இன்னைக்கு அமைதியா பூனைக்குட்டி மாதிரி உட்கார்ந்து, மியாவ் மியாவ் ன்னு அமைதியா கத்துதே, ஏதாவது ரீசன் இருக்குமோ’, என்று நினைத்துக் கொண்டே அவளைப் பார்த்தவன்.,

     அங்கு இருந்த சோபாவில் அமர்ந்தபடி இவளிடம், ‘இப்போது வர முடியாது அப்புறம் பாப்போம்’ என்று செய்கையில் பேசிக் கொண்டிருந்தான்.

      பாயாச கிண்ணத்தை ஒரு கையில் மாற்றிக் கொண்டு நகத்தை  கடித்த படி யோசிக்க தொடங்கினாள்.,

          இவர்கள் இருவரையும் அவ்வப்போது லேசாக பார்த்துக் கொண்டாலும், வீட்டினர் அனைவரும் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்ததால், எதுவும் நடக்காதது போல அமைதியாக இருந்து கொண்டான்.

     ஏனென்றால் வீட்டினர் எல்லோரும் எதுவும் தெரியாமல் முழித்துக் கொண்டிருப்பது கிருஷ்ணா க்கு நன்றாகவே தெரிந்தது.

    நிச்சயமாக இவள் வந்து கீழே எதுவும் உளரவில்லை, அப்படி இருக்கும் போது அமைதியாகவே இருந்து கொள்வோம் என்று இருந்து கொண்டான்.

இவளோ இவனே எதுவும் காட்டிக்கல, நாம எதுக்கு காட்டணும் என்று யோசித்தாலும்., யாரையாவது ஹெல்ப்புக்கு கூப்பிட்டே ஆகணும் என்று மனதிற்குள் திடமாக எண்ணிக் கொண்டாள்.,

   பாயாசத்தை சாப்பிட்டு முடித்தவன், எதுவும் நடக்காதது போல அருகில் இருந்த பேப்பரை எடுத்து வைத்துக்கொண்டு காலை மடக்கி சோபாவில் வைத்தவன்., நிதானமாக பேப்பரை புரட்ட தொடங்கினான்.

       வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவன் பேப்பர் படிப்பது போல தெரிந்தாலும்., அவன் இவர்களை தான் கண்காணிக்கிறான் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டனர்.

     யோசனையோடு இருக்க அனைவரும் பாயாசத்தை சாப்பிட்டு முடித்து  இருந்தனர்.

   இவள் மெதுவாக ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

     அலமேலு ஆன்ட்டி வந்தவர்.,  “உனக்கு இன்னும் கொஞ்சம் கொண்டு வரவா மா”, என்று கேட்டார்.

     அவளோ நவீனை பார்த்து விட்டு.,  கிருஷ்ணாவை பார்த்த படி “ரொம்ப புடிச்சிருக்கு ஆன்ட்டி”, என்று சொன்னாள்.

    நவீன் தான் ‘இவ எத சொல்லுதா., அண்ணனை சொல்றாளா, பாயாசத்தை சொல்றாளா, பார்வை எல்லாம் அண்ணன் மேல இருக்கு, இது சரி இல்லையே, அப்போ இவளை பிடிச்சா விஷயத்தை கரந்திடலாம்”, என்று அவன் நினைத்துக் கொண்டிருக்க.,

    அவளோ வேண்டுமென்றே, நவீன் பேசுவதற்கு வர வேண்டும் என்பதற்காகவே, இப்படி சொன்னாள்.

    பேப்பரில் தலைக் கவிழ்த்து இருந்தாலும், அதை உணர்ந்து கொண்டவனுக்கு, ‘திமிரு உடம்பெல்லாம் திமிரு இவளுக்கு.,  திமிரு புடிச்ச முத்தரசு பொண்ணு ன்னு நிருபிக்குறா., இனி பக்கத்துல வரட்டும் பல்ல உடச்சு அனுப்பி விடுறேன்., எதாவது பேச முயற்சி பண்ணட்டும்., அதுக்கப்புறம் தான் இந்த கிருஷ்ணா யாருன்னு தெரியும்’, என்று மனதிற்கு நினைத்துக் கொண்டான்.