எல்லாவற்றையும் திறந்து பார்த்தவன், மனைவியை தேடினான். அவர்கள் அறையில் இருந்தாள். கையில் புத்தகம், படிக்கும் பாவனை, ஆனால் உண்மையில் அப்படி இல்லை. சிரிப்புடன் குளியல் அறைக்கு சென்று தன்னை சுத்த படுத்திக்கொண்டு வந்தவன். இளகுவான உடை அணிந்து மேலே குளிரிக்கான ஆடை அணிந்து இருந்தான். அறையில் ஹீட்டர் உதவியால் வெப்பமாக இருந்தது. புடவை அனிந்து இருந்தவள் பார்வை புத்தகத்தில் இருந்தாலும். கவனம் அருகில் அமர்ந்து இருப்பவன் மேல் தான். பாப்பா போய் இன்னும் ஒரு நாள் கூட முடியல அதுகுள்ள இப்படி இருந்தா, இன்னும் பத்து நாள் எப்படி சமாளிப்பே, அதான் கேட்டேன்…………. அவளிடம் மௌனம் மட்டுமே, அவள் கைபிடித்து புத்தகத்தை வாங்கி வைத்தவன், அவளை தன் அருகே இழுத்துக்கொண்டான். ஒரு மென்மையான அனைப்பு, அவளும் அவன் தோள் சாய்ந்தவள் ஏதும் பேசவில்லை………….. சிறிது நேரம் அப்படியே இருந்தவர்கள். 

பரிதி பசிக்குது என்று கூறவும் இருவரும் எழுந்து சாப்பிட சென்றார்கள். அப்போதும் அவளிடம் மௌனம் மட்டுமே. உணவை நிதானமாக ருசித்து உண்டான், அவனுக்கு பார்த்து எடுத்துவைத்தாள்,தானும் உண்டாள். பின் இருவரும் எல்லாவற்றையும் சுத்தம் செய்துவிட்டு அறைக்கு சென்றனர். வழக்கமாக அவர்களின் நடுவே மதிதான் இருப்பாள். இன்று இருவர் மட்டுமே. திருமணமான நாளில் இருந்து இது முதல் தனிமை. பரிதி கட்டில் சாய்ந்து ஊருக்கு அழைத்து பேசிக்கொண்டு இருக்க, அவளிடமும் கொடுத்து பேச சொன்னான். மகளிடம் பேசி முடித்த பின் இருவரும் உறங்க ஆயத்தமாக, மின் இனைப்பு துண்டிக்கபட்டுவிட்டது. இது எப்போது நடக்கும் நிகழ்வு தான். 

இங்கு அடிக்கடி மின் தடை ஏற்படும், திரும்ப எப்போது மின் இனைப்பு எப்போது வரும் என்று தெரியாது, அதனால் அதற்குண்டான ஏற்பாட்டுடன் தான் இருப்பார்கள் எப்போதும். இப்போது ஏதும் வேலையில்லை, அதனால் சிறிய எமர்ஜென்சி லைட் வெளிச்சம் வெளியில் மழை பெய்துக்கொண்டு இருக்க, இருவருக்கும் உறக்கம் இல்லை. வரவில்லை, இன்னும் கதிரழகி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மெல்ல அவள் அருகில் நெருங்கி படுத்தவன், அவனை தன் தோள் வளைவில் கொண்டு வந்தான். எப்போதும் அது மதிக்கான இடம், தினமும் இரவில் மதி அவள் தோள் வளைவில் படுத்தபடி கதை கேட்டு உறங்கி போவாள், இன்று அந்த இடத்தில் மனைவியை வைத்து இருந்தான்.

இவளிடம் இப்போதும் மௌனம் தான் ஆனால் அவள் தோளிலில் வாகாய் பெருந்தி இருந்தாள். இருவருக்கும் சேர்த்து போர்வையை போத்தி இருந்தான். அவள் இன்னும் நெருக்கம் கான்பிக்க………………… அவனுள் மத்தாப்புகள். ஆனாலும் அடுத்த அடி அவன் எடுத்து விடவில்லை. மீண்டும் அமைதி, குளுருதா, இன்னும் ஒரு போர்வை எடுக்கவா கதிர் என்றான். இல்லை என்று தலை அசைத்தவள், இன்னும் அவனை ஒன்றிக்கொண்டாள். அவன் கைகள் மெல்ல அவன் இடைவளைக்க, அவள் அவன் முதுகை வளைத்து பிடித்து இருந்தாள். மை இருட்டு ஒருவர் முகம் ஒருவர் பார்க்க முடியாது. எரிந்து கொண்டு இருந்த எமர்ஜென்சி விளக்கும் அனைந்து இருக்க. இருவரும் தங்களை உணர ஆரம்பித்து இருந்தனர். 

அவளின் முதல் முத்தம் அவனின் இதழில், அவனுக்கு அதிர்வு தான். ஆனந்த அதிர்வு மனைவி தன்னிடம் காண்பிக்கும் இந்த நெருக்கம். ஆனால் பாய்ந்துவிடவில்லை, நிதானித்தான். அவள் தலை கோதினான்………. என்ன டா……….. பாப்பா ஞாபகமா என்றான். அவள்ம்மம்மம்மம்மம என்று சன்னமாக முனக……….. வந்துடுவா டா……………… இன்னும் அவ வளந்து பெரிய பெண்ணாகிட்ட படிப்பு வேலை, கல்யாணம் எல்லாம் இருக்க,இப்பவே இப்படி இருந்த எப்படி என்றான்.

அவன் கைகளில் ஈரம்…… அழுகிறாள்…. பிறந்தில் இருந்து மகள் தான் அவள் உலகம், அவளை விட்டு ஒரு நாள் கூட இருந்தது இல்லை.  இன்று முழுதும் தனிமை அவளை மிகவும் அழுத்தி இருக்கிறது என்று புரிந்து. இன்னும் அவள் தலை கோதியவன், அவளிடம் ஏதோ பேச ஆரம்பித்து, எங்கேயோ அவர்கள் பேச்சு போய்க்கொண்டு இருந்தது. அவன் பேசிக்கொண்ட இருக்க அவள் எப்போது உறங்கி போனாள் என்று தெரியவில்லை. அந்த நெருக்கம் காலை வரை. முதலில் கண்விழித்தவள். இன்னும் அவன் நெஞ்சில் படுத்துக்கொள்ள, அவள் அசைவில் விழித்துக்கொண்டாலும். இன்னும் கண் திறக்கவில்லை. காதல் மனைவி இப்படி இருக்க, அவனுக்கு கசக்கவா செய்யும், நேற்று இரவு அவர்களுக்கு உறவு  ஏற்படாமல் போய் இருந்திருக்கலாம். ஆனால் மனதால் இன்னும் நெருங்கி இருந்தனர். அவள் மனதில் ஏதோ பயம் உள்ளது என்று அறிவான். அதை போக்கவே முயல்கிறான். அவன் நினைப்பது எப்படி அவளிடம் ஒரு பிடித்தம் வந்ததோ, எப்படி அது திருமணத்தில் முடிந்ததோ, அதே போல் வாழ்வும் அதன் போக்கில் எந்த திட்டமிடலும் இல்லாமல் அதுவாய் தொடங்க வேண்டும், இயல்பாய், ரசனையாய், ஆசையாய்……………….. எண்ணங்கள் அவனுள் பயனபட்டுக்கொண்டு இருக்க, அவன் அலைபேச அழைத்து இருந்தது. அவன் உடன் பணிபுரியும் மருத்துவன் தான் அழைத்து இரு்ந்தான். இன்று எந்த அவரச வேலையும் இல்லை என்றும், தான் பார்த்துக்கொள்வாதாகவும் கூறியிருந்தான். இது அடிக்கடி நடப்பது தான். மருத்துவ துறையில் இருக்கும் இவர்களுக்கு தனிபட்ட ஒய்வு நேரம் என்று அமைவது இல்லை. இப்படி வேலை பளு இல்லாத நாட்களில் அவர்களுக்குள், பணி நேரத்தை மாற்றிக்கொண்டு, தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும்மான நேரத்தை ஏற்படுத்திக்கொள்வார்கள். 

இவன் பேசும் வரை அவன் மார்மிலே படுத்து இருந்தவள், பேசியவற்றை கேட்டு இருந்தாள். இங்கு வந்த இத்தனை மாதங்களில், மொழி அவளுக்கு  இன்னும்  வசபடவில்லை என்றாலும், அவர்கள் பேசவது புரிந்துக்கொள்ளும் அளவுக்கு இருந்தாள். அவன் பேசியது புரிந்தாலும், ஏதும் வாய் திறந்து கேட்கவில்லை அவள். அழகி என்று அழைத்தான், அவள் இடம் ம்மம்மம்மம்மம்மம்ம மட்டுமே…….. இன்னிக்கு எனக்கு ஹாப் எங்கையாவது வெளியில் போகலாமா…………… இல்லை ரெஸ்ட் எடுக்கிறியா? என்றான் அவள் தலையை வருடிக்கொண்டே…………………….. ம்மம்மம்மம்மம்மம்மம்மம்ம போலாம் நான் இன்னும் இந்த ஊரை பார்க்கல என்றாள், தலை நிமர்த்தாமல்.

சரி எழுந்திரு கிளம்பலாம். வீட்டில் சாப்பிட என்ன இருக்கு என்று கேட்டான். மாவு ஏதும் இல்லை….. என்ன செய்யட்டும் என்று கேட்க சரி நீ போய் குளிச்சிட்டு வா என்றவன். மற்றோர் அறையில் இருந்த குளியல் அறையில் நூழைந்து கிளம்பி இருந்தான். அறையை எட்டி பார்க்க அவள் இன்னும் வரவில்லை,அறை சாற்றி இருந்தது. சமையல் அறைக்கு வந்தவன். பாலை அடுப்பில் வைத்து இருவருக்கும் காபி தயாரித்தான். அம்மா வரும் போது எடுத்துவந்த தீண்பண்டங்கள் இருந்தது, அதை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தவன், கதிரழகி வரவும் இருவரும் அமர்ந்து காபி அருந்தினர். 

இப்போதைக்கு இதை குடிச்சுகோ, இன்னிக்கு வெளியில் பார்த்துக்கலாம் என்றவர்கள் வீட்டை பூட்டி விட்டு கிளம்பினர். அங்கு அவன் பயன்பாட்டு இருந்த இரு சக்கர வாகனத்தை எடுத்தவன் கிளம்பி இருந்தான்.

அவர்கள் இருக்கும் பகுதி மலை மேல் முதலில் கீழே  வந்தவர்கள், அங்கு, இங்கு என்று இலக்கில்லாமல் சுற்றினர். பார்த்தவற்றை சுவை பார்த்தனர். அவன் இங்கு வந்த புதியதில் பார்த்த இடம் அதன் அனுபவம் என எல்லாவற்றையும் அவளிடம் சொல்லிக்கொண்டு வந்தான். மத்திய உணவு நேரத்தில், அங்கு இருந்த உணவங்ளி்ல் உணவு உண்டவர்கள். அங்கு இருக்கும் சந்தைக்கு சென்றார்கள். சில பெருட்கள், துணிகள், குளிர் கால ஆடைகள் என சிலவற்றை வாங்கியவர்கள். 

வீட்டுக்கு தேவையான காய்கறிகளையும் வாங்கிக்கொண்டு கிளம்பினர். இங்கு எப்போதும் மழை இருந்தாலும், சீக்கரம் இருட்டிவிடும் என்பதால் கிளம்பிவிட்டு இருந்தனர். இவர்கள் பாதி தூரம் வந்த போதே மழை வலுத்துவிட்டு இருக்க, இன்னும் 15 நிமட நேர பயனம் இருந்தது. பரிதி எங்காவது ஒதுங்கி போகலாம் என்று கூற, இல்லை போய்டலாம் எங்காவது நின்னா குளிர ஆரம்பித்துவிடும் என்றாவள் பேச்சு சரி என்றாவன், மழையில் நினைந்த படி வண்டியை மொதுவாக ஒட்டி அடுத்த அரை மணி நேரத்தில் வீடு வந்து இருந்தனர். 

அதற்குள் முழுதாய் நினைந்து இருக்க, வாங்கி வந்தவற்றை எல்லாம் முன் அறையில் வைத்தவள், தங்கள் அறைக்கு ஒடி இருந்தாள். இப்போது மின்சாரம் வந்து இருக்க, கீசரை ஆன் செய்தவள், குளிர் தாங்காமல் உடைகளை களை ஆரம்பித்து இருந்தாள். குழாய்யை திறந்தவள் அந்த வெது வெதுப்பான நீரில் உடலை நினைத்து சற்று நேரம் அப்படியே இருக்க. 

சிறிது நேரத்தில் கண் திறந்தவள், அப்போது தான் குளியல் அறைகதவை திறந்த படி நின்று இருந்த பரிதியை பார்த்தாள். இங்கு வந்து இது மாதிரி மழையில் நினைந்தது இல்லை அவள், வெளியிலும் அதிக அளவு சென்றது இல்லை. இந்த முதல் மழை அவளுக்கு அதிக குளிரைகொடுத்து இருக்க, எதைபற்றியும் யோசிக்கும் நிலையில் இல்லை அவள். ஆனால் இப்போது அவள் இருந்த கோலம், பரிதியின் பார்வையும், அவளுக்குள் வெட்கங்கள் பூக்க செய்தன.  அவளுக்கு என்ன நடந்தது என்று புரியும் முன்னோ அனைத்தும் நடந்து இருந்தது. அவன் நினைத்து போல் அவர்கள் வாழ்வு அந்த மழை நாளில் அழகாய் மலர்ந்து மணம் பரப்பி இருந்தது. அந்த அறை எங்கும் காதலின் வாசம் தான் அந்த இரு உயிரும், அதில் உயிர்த்து,ஒருவர் மற்றவரை உயிர்பித்து இருந்தனர். அவள் கூடலில் எதை நினைத்து பயந்து இருந்தாலோ, அப்படி ஏதும் அவ்வளவு ஏன் கடந்த கால நினைவுகள் கூட அவள் மனதில் அப்போது ஏற்படவில்லை. எல்லாம் அவன் வசம், எல்லாம் அவன் வாசம் மட்டுமே அவள் தேகம் எங்கும் நிறைந்து இருந்து அவளுள்…………….

இந்த இவர்களின் நேசம் காலம் எல்லாம் அவர்களின் வாழ்வை மகிழ்ந்து மனம் பரப்புவதாக இருக்கட்டும்…………………………………. 

முற்றும்…