8
பாட்டி வீடு.,  விசேஷ வீட்டிற்கான அடையாளத்தோடு களைக்கட்ட தொடங்கி இருந்தது.

வீட்டினர் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே வர தொடங்கி இருந்தனர்.

    அனைவரும் வந்திருந்தாலும்.,  கிருஷ்ணாவும் நவீனும் மட்டும் இன்னும் வராமல் இருந்தனர்.

    இவளும் யாரிடமும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை., தனக்கு எல்லாம் தெரிந்தது போலவும் யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை.

     அவளுக்குத் தெரியும், என்பது அனைவருக்கும் தெரியும் என்பதால் அவளிடம் இருந்து ‘ஏதாவது முகம் மாறுதலோ,  பேச்சிலோ ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா’ என்று மட்டுமே அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

     அவ்ளோ மற்றவர்களுக்கு பாட்டி சொல்லி இருப்பார்கள் என்பது புரிந்தாலும்.,  யாரிடமும் முகம் காட்டவும் இல்லை,  அதிகமாக குழைந்து பேசவும் இல்லை.,

   ‘சரி தெரியும் போது பார்த்துக் கொள்ளலாம்’ என்ற எண்ணத்துடன் அமைதிக்காத்தாள்.

     ‘உரியவனிடம் இருந்து என்ன பதில் வருகிறது என்பதை பொறுத்து,  தன் மனநிலை பற்றி சொல்ல வேண்டும்’ என்ற எண்ணத்தில் மட்டும் உறுதியாக இருந்தாள்.

          அவள் இங்க வந்து கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேல் தாண்டி இருந்தது.

          வீட்டில் வேலை செய்பவர்களில் இருந்து., பாட்டி தாத்தா வரை அவளிடம் சில விஷயங்களை உரிமையாக கேட்கவும், அவளும் செய்யவுமாக இருக்க.,

    வேலை பார்ப்பவர்கள் கூட அவளிடம் கேட்டுக் கொண்டு செய்வதை பார்த்தவர்களுக்கு., அவள் இங்கு சுதந்திரமாக இருக்கிறாள் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது.

   அவள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறாள்., ஆனால் அதே அளவு மகிழ்ச்சி அவள் வீட்டில் இருக்குமா என்பதைப் போல அவளை அவ்வப்போது பார்த்துக் கொண்டனர்.

    சில நேரங்களில் சமையல் செய்பவர்கள் காய் எல்லாம் நறுக்கி கொடுக்க., அவளே அவள் செய்யும் முறையில் சமைத்து இறக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.,

     வேலை செய்வதற்கோ, மற்றவர்களுக்கு செய்து கொடுப்பதிலோ, சிறிது கூட முகம் சுளிக்காமல் எல்லாம் செய்து கொண்டிருப்பவளை பார்க்கும் போது,

    ‘அவளுக்கு கதை தெரியும் தானே, ஏற்றுக் கொண்டாளா, இல்லை வீட்டில் தங்கி இருக்கிறோமே பாரமாக இருக்கக் கூடாது என்று நினைக்கிறாளா, என்ன முடிவு செய்திருக்கிறாள்’, என்ற குழப்பம் மட்டுமே மிஞ்சியது.

      மறுநாள் காலையில் பாட்டி தாத்தாவின் எண்பதாவது கல்யாணம் நடக்க இருந்தது.

       அவர்களுடைய குலதெய்வ கோயிலில் வைத்தே விசேஷம் வைத்திருந்தனர்.

    அதில் பங்கு கொள்ளும் பொருட்டு அனைவரும் முதல் நாள் இரவு., யார் யார் எதை உடுத்துவது என்பது போல பேசிக் கொண்டிருந்தனர்.,

     பாட்டி தான் அவளுடைய சேலையை எடுத்து அவள் கையில் கொடுத்து., “நாளை இதை தான் அணிய வேண்டும்”, என்று சொன்னார்.

       அவளோ “வேண்டாம் பாட்டி”, என்று சொன்னதற்கு.,

     “நீ ஊருக்கு போகும் போது, நாங்க இப்படி புடவை எடுத்துக் கொடுக்கிறது சாஸ்திரம் தான்., அதனால நீ இதை கட்டிக்கிறது தப்பு இல்ல கட்டிக்கோ”, என்று சொன்னார்.

அமைதியாக பெற்றுக் கொண்டவள் வேறு ஒன்றும் சொல்லாமல் பாட்டியை பார்த்துக் கொண்டிருந்தவள். “தேங்க்ஸ் பாட்டி” என்று சொன்னதோடு அமைதியாகிவிட்டாள்.

      மறுநாள் “காலை வீட்டில் உள்ள பெண்களுக்கு,  அலங்காரம் செய்வதற்கு ஆட்கள் வருவார்கள்” என்று அவள் அத்தை பாட்டியிடம் பேசிக்கொண்டிருந்தார்.

    அதே நேரம் பாட்டியும் “துளசி நீயும் அப்படி செய்துக்கோ”, என்று சொன்னார்.

     துளசியோ,  “இல்ல பாட்டி வேண்டாம்.,  நான் எப்பவும் போல கட்டிக்கிறேன்”, என்று சொன்னாள்.

“உனக்கு கட்ட தெரியுமா”, என்று கேட்டார்.

   “அதெல்லாம் நல்லாவே கட்ட தெரியும்”, என்று சொன்னாள்.

      விசேஷத்திற்கான நாளும் விடிந்து விட., காலையில் அனைவரும் கிளம்பி கொண்டிருந்தனர்,

     கோயிலுக்கு சென்று தான் மற்ற சடங்கு சம்பிரதாயங்கள்.,  பாட்டிக்கும் தாத்தாவிற்குமான விசேஷங்கள் என்று பேசிக் கொண்டிருந்தனர்.

   காலை உணவை வீட்டில் உண்ணும் படியே ஏற்பாடு இருந்தது.,

       ஹோட்டலில் இருந்து ஆர்டர் செய்த உணவு வந்து இருக்க., அனைவரும் உண்டு முடித்திருந்தனர்.

     ஆனால் நவீனும் கிருஷ்ணாவும் மட்டும் அங்கு வரவில்லை., போன் செய்து கேட்டதற்கு கல்யாணத்துக்கு வந்து விடுவதாக சொன்னார்கள்.

     மிச்சம் இருந்த உணவுகளை எடுத்துக் கொண்டு செல்லும்படி வேலை செய்பவர்களிடம் சொல்லிவிட்டு அனைத்தையும் சுத்தம் செய்து கொண்டிருந்தார் அலமேலு.,

         அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கும் போது தான் ,அலமேலு தன் வீட்டிற்கு சென்று கிளம்பி வருவதாக கூறி சென்றார்.

     சற்று நேரத்தில் கிருஷ்ணாவும் நவீனும் வந்து வீட்டில் இறங்கினர்.

    “என்னடா நேரா கோயிலுக்கு வரேன்  ன்னு சொன்னீங்க., இப்ப இங்க வந்து நிக்கிறீங்க”, என்று கேட்டார்.

    அவனும் “கோயிலுக்கு தாமா வரலாம் ன்னு நினைத்தோம்., அப்புறம் நேரம் இருந்துச்சு சரி நாங்களும் சாப்பிடலையா அதான் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு அப்படியே கோவிலுக்கு போகலாம் ன்னு நினைச்சோம்”, என்று சொன்னான்.

     அலமேலு அக்கா என்று கடைசி சத்தம் கொடுத்தப் படியே கிச்சனுக்குள் போக, உள்ளிருந்த அவரின் சின்ன மாமியாரோ.,

    “இப்பதான் வெளியே போனா., மற்ற எல்லாரும் கிளம்பிட்டு இருக்காங்க, என்ன விஷயம்”, என்று கேட்டார்.

    “இல்ல சின்னத்த, கிருஷ்ணாவும் நவீனும் சாப்பிடல அப்படின்னு சொன்னாங்க., அதான் அலமேலு அக்காவ கூப்பிட்டேன்”, என்று சொன்னார்.

       “அலமேலு இல்ல, யாராவது தோசை ஊத்துங்க., சட்னி இருந்துச்சு, சாம்பார் இருந்துச்சு”, என்று சின்ன பாட்டி சொல்லிக் கொண்டிருந்தார்.

    “ஐயோ எல்லாரும் பட்டுப் புடவை மாத்திட்டோமே”,என்று சொன்னவுடன், “உங்களுக்கு வேற வேலையே இல்லையடா.,  கொஞ்சம் சீக்கிரம் வருவேன்னு சொல்ல கூடாதா”, என்று பேசிக்கொண்டே உள்ளே வர அனைவரும் உடைமாற்றி, மேக்கப் செய்து கொண்டிருப்பதை பார்த்தவுடன் யாரிடம் சொல்வது என்று யோசனையோடு நின்றார்.

        சுடிதாரோடு உடை மாற்றாமல் சுத்திக் கொண்டிருந்தாள் துளசி.

    ‘அவளிடம் சொன்னால் தவறாக நினைப்பாளோ’ என்று யோசனையோடு அருகில் சென்றவர்.,

    “இரண்டு பேர் சாப்பிடல, தோசை ஊத்தணும், நான் வேற இப்பதான் பட்டு சாரி கட்டிட்டு  வந்தேன்னா”, என்று தயக்கத்துடன் சொல்ல.,

      “ஏன் தயங்குறீங்க., நான் தோசை ஊத்தணுமா”, என்று கேட்டார்.

     “தப்பா எடுத்துக்கலையே” என்று கேட்டார்.

      “அதெல்லாம் ஒன்னும் தப்பா எடுத்துக்கல, நீங்க நான் சுட்டுக்கொடுக்கிற தோசையை எல்லாரும் சாப்பிடுவாங்களான்னு மட்டும் கேட்டுக்கோங்க”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

     “நீ சுடு நான் எடுத்து கொடுத்துக்கிறேன்”, என்று சொன்னார்.

     அவர் ஒரு பார்வை பார்த்த படி பதில் சொல்லாமல் கிச்சனுக்குள் சென்று தோசை சுட ஆரம்பித்தாள்.

    சற்று நேரத்தில் நவீனும் கிருஷ்ணாவும் வந்து டைனிங் டேபிளில் அமர.,

   குழம்பு சட்னி வகைகளை எடுத்து வைத்த நவீனின் அம்மா.,

    இரண்டு தட்டு வைத்து உள்ளே சுட சுட சுட்டுக் கொண்டிருந்த தோசையை கொண்டு வந்து வைக்கத் தொடங்கினார்.

   நல்ல மொறுமொறுப்பாக, சற்று பெரிதாகவும் இருந்த தோசை பார்த்தவுடன்., “வாவ் அம்மா அலமேலு ஆன்ட்டிக்கு இப்படி எல்லாம் தோசை சுட தெரியும் ன்னு இன்னைக்கு தான் தெரியும்,  இருங்க நான் பேசுகிறேன்., எப்பவும் மொத்து ன்னு தோசை சுட்டு கொடுப்பாங்க.,  இன்னைக்கு என்ன நல்ல நைசா  சூப்பரா இருக்கு,  ண்ணா அப்படித்தானே”, என்று அவனிடம் கேட்டான்.

அவனும் சிரித்தபடி வேற எதுவும் பதில் சொல்லாமல் உணவை உண்ண தொடங்கினான்.

    பதில் சொல்லாத கலையோ, “சரிடா முதல்ல இதை சாப்பிடு” என்று சொல்லிவிட்டு மற்றவற்றைப் பற்றி பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தார்.

இவர்கள் உணவு உண்ண உண்ண,  உள்ளே இருந்து சுடாக தோசை வரவும் நன்றாகவே உண்டு முடித்தனர் இருவரும்,

       அவர்கள் உண்ட தட்டை எடுத்துக் கொண்டு உள்ளே சென்ற கலை.,  “போதுமா” என்று சொன்னார்.

      “நீங்க அங்க சொல்லும் போதே, நா இங்க ஆப் பண்ணிட்டேன்”, என்று சொன்னவள்,

    அடுப்பை சுத்தம் செய்து விட்டு., மாவை எடுத்து உள்ளே வைத்தாள்.

   அவர்கள் இருவரும் ஹாலில் அமரவும்., அவள் அவர்களை தாண்டி அவளது அறைக்குள் செல்லவும்  சரியாக இருந்தது.

யோசனையோடு அவளை பார்த்துவிட்டு ,கிருஷ்ணவை பார்க்க அவனும் போனில் ஏதோ மும்மரமாக செய்து கொண்டிருந்தான்.

    நிச்சயமாக அவளை பார்க்க வில்லை என்பது தெரியும்., எனவே வேண்டும் என்றே,

      “அம்மா எல்லாரும் கிளம்பியாச்சா.,போலாமா”, என்று கேட்டான்.

   “பொருடா இப்பதான் எல்லாரும் மேக்கப் பண்ணிட்டு இருக்காங்க”, என்று சொன்னார்.

       “ஓ இப்பதான் எல்லாரும் மேக்கப் பண்ணிட்டு இருக்காங்களா, இன்னும் ரெண்டு மூணு பேர் கிளம்பாத மாதிரி இருக்கு.,  அவங்க எல்லாம் மேக்கப் பண்ணி எப்ப கிளம்ப”, என்று கேட்டான்.

    “அவங்களுக்கு எல்லாம் மேக்கப் தேவைப்படல.,  அவங்களுக்கு வேண்டாம் ன்னு சொன்னாங்களாக்கும்”, என்று சொன்னார்.

   சின்ன மாமியார் மகளைப் பார்த்து., “பாரு உன்னை தான் சொல்றான்” என்று சொன்னார்.

    அவளும் “உனக்கு வேற வேலையே இல்லையா டா., வயசான காலத்துல என்ன போய் மேக்கப் பண்ண சொல்ற”, என்று சொன்னார்.

    “ஐயோ அத்தை, நான் அதுக்கு சொல்லல, நீங்க இன்னும் மேக்கப் பண்ணலையே, நீங்க மேக்கப் பண்ண லேட் ஆகும்னு சொன்னேன்” என்று சொன்னான்.

      “உனக்கு வரவர வாய் கூடிப்போச்சுடா, இரு என் புள்ளைகள் வரட்டும் என் மருமகளுக்கு வரட்டும் சொல்லிக் கொடுக்கேன்”, என்று சொன்னார்.

    “உங்க மருமகள் தானே., ரெண்டு பேரும் போங்க அத்தை”, என்று சொன்னவன் “சீக்கிரம் கிளம்பச் சொல்லுங்க கிளம்பாதவங்கள., நம்ம போலாம்”, என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

      “அப்படியே அலமேலு ஆன்ட்டிய கூப்பிடுங்க., அவங்களுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிடுவோம்”, என்று சொன்னான்.

     சின்ன மாமியார் என்று அழைக்கப்படும், கிருஷ்ணா நவீனின் சின்ன பாட்டி தான்., “அலமேலு எங்கடா வீட்ல இருக்கா, அவ கிளம்பி வரேன்னு இப்பதான் வீட்டுக்கு போனா”, என்று சொன்னார்.

  “அப்புறம் தோசை” என்று நவீன் வேண்டுமென்றே கிருஷ்ணாவை பார்த்துக் கொண்டே கேட்டான்.

     “கலை நீ தோசை சுடல தானே, வேற யார் சுட்டா”, என்று பாட்டி கேட்டார்.

     “துளசி சுட்டுக்கொடுத்தா அத்தை” என்று கலையும் பதில் சொல்ல.,

  மும்மரமாக ஏதோ டைப் செய்து கொண்டிருந்தவன்  கை சற்று நேரம் நின்று பின்பு மீண்டும் தொடங்கியது.

     நவீனோ மனதிற்குள் ‘ரைட் ஏதோ சின்ன பாதிப்பு வருது, என்னன்னு முழுசா கேட்காம அவகிட்டையும் சண்டை போட முடியாது, அண்ணன் கிட்டயும் பேச முடியாது, வெயிட் பண்ணிதான் பாக்கணும்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தான்.

   அனைவரும் மேக்கப் முடிந்து வெளியே வர., அத்தனை பேரையும் நவீன் கிண்டல் செய்து கொண்டிருக்கும் போது தான் உள்ளே துளசி கிளம்ப தொடங்கி இருந்தாள்.

    தன்னுடைய நீள முடியை எப்போதும் பின்னுவது போல கொஞ்சமாக முடியெடுத்து சிறிதாக கிளிக் செய்து விட்டு காலையில் தலை குளித்து இருந்ததால் இறுக்கமாக பின்னாமல் சற்று தளர்வாக பின்னலிட்டவள் பாட்டி தனக்கென கொடுத்திருந்த பூவை எடுத்து எப்படி வைப்பது என்று யோசனையோடு பார்த்தாள்,

   தளர வைத்து பார்க்கவும் அழகாக இருக்க அப்படியே விட்டுவிட்டாள். பின்பு தன் உடைய மாற்றும் போது எப்போதும் போல சேலையை கட்டிக் கொண்டவளுக்கு அது அழகாக இருப்பது போல தோன்றியது.

    முகத்திற்கும் லேசான ஒப்பனையோடு கிளம்பி கண்ணாடி முன்னாடி நின்றவள் தான் இன்று அழகாக இருப்பதாக மனதிற்குள் ஒரு சந்தோஷம் தோன்றியது.

  அந்த சந்தோஷமே அவளின் முகத்தை இன்னும் பொலிவாக காட்டியது.,

    அதே நேரம் பாட்டி தான் எல்லாரும் கிளம்பியாச்சா என்று துளசி அறையை பார்த்தவர். அவள் அறையை வந்து தட்டி “துளசி கிளம்பிட்டியா” என்று கேட்டார்.