“அது மட்டும் இல்ல அதோட உறவு முறிக்கிற மாதிரி நிறைய விடக்கூடாத வார்த்தைகள் எல்லாம் விட்டு சண்டை போட்டான்.,

    நாங்க பேச்ச கூட விட்டுட்டு வந்துட்டோம், அப்பவும் அவனா தான் நான் பிசினஸ் பண்றதுக்கு கடன் வாங்கினேன்.,  ஏதோ சொந்தம் ன்ற நினைப்புல கொடுக்காம இருந்துட்டேன்., இப்ப வேணா, இத்தனை வருஷத்துக்கும் சேர்த்து வட்டி போட்டு உன் பணத்தை திருப்பித் தந்திடுவேன், அப்படின்னு சொல்லி சொன்னான்.

    ராகவன் தான் வேண்டாம், அது இருக்கட்டும் அப்படின்னு சொல்லிட்டு பேச்சை விட்டுட்டான்.,

    எங்களை பொறுத்த வரைக்கும் வாழ்க்கையில எங்க கிருஷ்ணாவோட மனச தான் நாங்க பெருசா நினைச்சோம்., கிருஷ்ணவோட மனச இந்த பணத்தை கொடுத்து மாத்த முடியுமா, அப்படிங்கறது தான் எங்க வலி.,  ஏன்னா நீ சின்னதுல இருந்தே கிருஷ்ணா கிட்ட அவ்வளவு ஓட்டுதலா இருப்ப,

    அப்போ உங்க அப்பா  வேலையை விடுறதுக்கு முன்னாடி நீங்க இருந்த இடம் அது., நீ கிருஷ்ணாவ வித்தியாசமா ஏதோ ஒரு வார்த்தையில் சொல்லிக் கூப்பிடுவே,  ஆனா உன்ன பாப்பு னு தான் கூப்பிடுவான்.,  அப்புறம் தான் உங்க அப்பா கூட வேலை பார்த்தவங்களோட வீட்டம்மா, சின்னதுல உனக்கு சொல்றதுக்கு ஈசியா இருக்கட்டும் என்பதற்காக.,  அவங்க முறைப்படி பாவா ன்னு சொல்லிக் கொடுத்தாங்க., பாவா னா அத்தான்னு அர்த்தம் போல., அப்படியே தான்  சொல்லி கொடுத்தாங்க.,  நீயும் ஒரு ரெண்டு தடவை சொல்லிக் கொடுத்ததிலேயே அந்த வார்த்தையை பிடித்து கொண்ட,  அதுக்கப்புறம் எப்பவுமே கிருஷ்ணவ பாவா ன்னு தான் கூப்பிடுவ.,

      உனக்கு விவரம் தெரியும்., உங்க அப்பா உன்னை கூட்டிட்டு போகும் போது கூட நீ அவன் கூட தான் இருந்த.,

நீ போகும் போது அழுத,  அப்புறமா அங்க போய் தேடி அழுவதா, உங்க அம்மா போன்ல ஒரு தடவ சொல்லி இருக்கா.,  அந்த அளவுக்கு எல்லார்ட்டையும் ரொம்ப ஒட்டுதலா இருந்த,

  நீ சின்ன குழந்தை உனக்கு எல்லாமே மறந்திருக்கும்., ஆனா உங்க அப்பா., உங்க அப்பா பேச்சுக்கு அப்படியே தலையாட்டுறவங்க அம்மா.,  என்ன சொல்றேன்னு தெரியல, சரி எதுவா இருந்தாலும் கடவுள் என்ன விதிச்சிருக்கானோ அது தானே நடக்கும்”, என்று சொன்னவர்.  பெருமூச்சோடு தன் பேச்சை நிறுத்திக்கொண்டார்.

     பின்பு அவள் தலையை தடவியபடி, “உனக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவும் நம் உறவுகள் எதற்கு பிரிந்தது என்று அறிய வேண்டும் என்பதற்காகவும் தான் இதை சொன்னேன்”, என்று சொன்னவர்.

       அதற்கு மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் எழுந்து சென்று விட்டார்.

         ஆனால் இவ்வளவு மனதிற்குள் தவித்துப் போனால்.

   இப்போதெல்லாம் அடிக்கடி கிருஷ்ணாவின் முகத்தை நினைவுபடுத்த நினைத்தாலும் அவளுக்கு தெரியவில்லை.,  அவளுக்கு முன்பே தெரிந்திருந்தால் நிச்சயமாக வரும் போதே அவன் முகத்தை யாவது பார்த்திருப்பாள்.

      இப்போதுவரை அவன் முகம் தனக்கு சரிவர தெரியவில்லை., ஏதோ நிழல் உருவமாக ஞாபகம் இருக்கிறது. மற்றபடி அவன் முகம் எப்படி இருக்கிறது என்று பார்க்கவில்லை.,  அது மட்டும் இல்லாமல்.,

அவனுக்கு இப்போதுதான் நீ துளசி என்பதே தெரியும் என்பதையும் சொல்லியிருந்தால் .,

     அதையும் பற்றி யோசித்துக் கொண்டே  மரத்தடியிலே அமர்ந்திருந்தாலும் ., ‘பாட்டி எப்போது வருவார்கள்’ என்று தெரியவில்லையே என்று யோசனையோடு வீட்டிற்கு வந்தாள்.

அப்போது தான் அலமேலு ஆன்ட்டி அவளிடம்.,

“பெரியம்மா யாரும் வந்தா  நீ வெளியே வரக்கூடாது ன்னு போன் பண்ணி சொன்னாங்க”, என்று சொன்னார் .

“ஏன் என்னாச்சு” என்று கேட்டாள்.

“உங்க அப்பா போலீஸோட அங்க வீட்டுக்கு போயிட்டாராம்”, என்று சொன்னார்.

  “யார் வந்தாலும் நான் இங்கே இல்லை என்று சொல்லிருங்க., அல்லது இந்த ஒழியிரத்துக்கு ஏதாவது ஐடியா சொல்லுங்க ஒளிஞ்சிக்கிறேன்”, என்று சொன்னாள்.

   “அவ்வளவு சீக்கிரத்தில் இங்கு யாரும் வர மாட்டாங்க., வந்தா சொல்றேன்”, என்று சொன்னார்.

   இவளும் அமைதியாக சென்று அறையில் கதவை அடைத்துவிட்டு கட்டிலில், சாய்ந்தவளுக்கு மீண்டும் நினைவுகள் துரத்த தொடங்கியது.

     அன்று அவர்கள் சொன்ன விஷயத்தை எல்லாம் கேட்டவள், அதையே நினைத்தபடி மனதிற்குள் அசைப்போட்டு கொண்டிருந்தாள்.

    அப்போது என்ன செய்வது என்று யோசனையோடு இருந்தவளுக்கு, ‘தன் நண்பர்களுடன் பேசினால் தீர்வு கிடைக்குமா’ என்று தோன்ற அவர்களின் நேரத்தை கணக்கிட்டு கொண்டு, இங்கு மதியம் தாண்டிய பிறகு பாட்டியும் தாத்தாவும் தூங்க போய் விட்டார்கள் என்று தெரிந்த பின்பே தன் நண்பர்களை அழைத்தாள்.

      அதில் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது விஷயத்தை சொல்ல.,

   அத்தனை பேருமே “ஏய் உங்க அப்பா இந்த விஷயத்தை எல்லாம் உன்கிட்ட சொல்லவே இல்லயே” என்று வருத்தப்பட்டார்களே தவிர யாரும் அதைக் குறையாக நினைக்கவில்லை.

   அது மட்டும் அல்லாமல் அவளுடைய நண்பர் பட்டாளம் தான், “அவர் எப்படி  இருந்தார்”, என்று கேட்டனர்.

    இவளோ “சரியா கவனிக்கல, ஆனா அவங்க தான் என்னை கூட்டிட்டு வந்து இங்க பாட்டி தாத்தா வீட்ல விட்டாங்க., பட் அவங்க தான்னு தெரியாது., எனக்கு யாரும் சொல்லவும் இல்லை, அவங்களுக்கும் இப்ப தான் தெரியுமாம்”, என்று சில விஷயங்களை சொன்னாள்.

     “சரி நீ என்ன முடிவு பண்ணி இருக்க”, என்று கேட்டனர்.

      “தெரியல எனக்கு என்ன பண்ணனே தெரியல”, என்று சொன்னாள்.

       லண்டனிலிருந்து கிளம்பும் போதே அவளிடம் ‘எல்லாம் நன்மைக்கே என்று நினை’ என்று சொன்ன அவளது தோழி.,

“பார்த்தியா நான் சொன்னேன் இல்ல, உனக்கு எல்லாமே நல்லதுக்கு தான், இந்தியா கிளம்பி போனது கூட உனக்கு ஒரு வகையில் நல்லது தான்,உனக்கு நல்லதோ,  இல்லையோ அந்த ஃபேமிலிக்கு ரொம்ப நல்லதுன்னு தான் தோணுது.,  அவங்க அட்லீஸ்ட் உன்ன இப்பவாவது பார்த்தார்களே., பாவம் இல்ல, உன்ன பாக்கவே இல்ல அது எவ்வளவு பாவம் யோசிச்சு பாரு”, என்று சொன்னாள்.,

     மற்றொரு தோழியோ, “உனக்கு விஷயம் தெரியாது, அதனால உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல, ஆனா உன் பேரு மட்டும் தான் தெரியும்.,  அவங்களுக்கும் உன்னை குழந்தையா இருக்கும் போது பார்த்தது மத்தபடி நீ மட்டும் தான்,  அப்படின்னு யோசிச்சிட்டு இருந்தவர்களுக்கு உன்னை நேர்ல பார்த்தப்போ எப்படி இருந்திருக்கும்”, என்றாள்.

அவங்களுக்கே  “என்னை விட்டுட்டு போனதுக்கு அப்புறம் தான் தெரியுமாம்”, என்று சொன்னாள்.

   “அப்போ அவங்க  திரும்பி உன்னை பார்க்க வந்தாங்களா”, என்று ஆர்வமாக மற்றொரு தோழி கேட்டாள்.

“இல்ல இல்ல ஏன் வந்துச்சுன்னு கூட யோசிச்சாங்களோ, என்னவோ”, என்று சொன்னாள்.

    “அப்படி எல்லாம் இல்ல, அவங்களுக்கும் வருத்தம் இருக்கும், இப்ப ஏன் அவங்க தான் கிருஷ்ணா ன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் நீ போய் பார்த்தியா”, என்று மற்றொரு தோழி கேட்டாள்.

   இவளோ, “இல்ல” என்றாள்.

    தோழியோ, “உனக்கு பாக்கணும் தோணிச்சா, வேற ஏதாவது போட்டோ இருக்கான்னு பார்த்துட்டு வீட்டில்  யாரிடமும் கேட்டியா”, என்று கேட்டாள்.

     “இல்ல எதுவுமே கேட்கல, பாட்டி கிட்ட எதுவுமே பேசல” என்றாள்.

     “நீ மட்டும் பேசாம இருப்பியாம், நீ மட்டும் எதுவுமே சொல்லாம இருப்பியாம், ஆனா உன்ன பார்க்க அவர் மட்டும் ஓடி வரணுமா., என்ன  நியாயம்,

அவங்களை பற்றி யோசி, எத்தனை வருஷம் ஆச்சு, கிட்டத்தட்ட 19 வருஷமா உன்ன பார்த்ததும் கிடையாது., உன்கிட்ட பேசுனதும் கிடையாது.,  உன் பேர் மட்டும் தான் தெரியும், அவங்களுக்கு நீ எப்படி இருப்பேன்னு கூட தெரியாம, நீ தான் அப்படிங்கிற முடிவுல இருக்காங்க, அவங்களுக்கு நீயா அவங்கள தேடி போகணும்னு கூட எதிர்பார்த்து இருக்கலாம் இல்ல”, என்று சொன்னாள்.

    இவளும் “அப்படி இருக்குமோ”, என்று கேட்டாள்.

    “சரியான லூசு நீ”, என்று மற்றொரு தோழியும் நண்பர்களும் கலாய்க்கவும்.

    இவ்வளவு நண்பர்களிடம் “சரி இப்ப நான் உங்ககிட்ட கேட்கிறேன் டா., இந்த இடத்தில் ஒரு மேல்  மெண்டாலிட்டி எப்படி இருக்கும்”, என்றாள்.

   “நீ தான் போகணும்,  உனக்கு எந்த கதையும் தெரியாதுன்னு சொன்னதே அவங்களுக்கு பெரிய ஷாக்., நம்மள பத்தி தெரியாத ஒருத்தியை தான் இத்தனை நாள் நினைச்சுகிட்டு இருந்தோமா,  என்பதே பயங்கர ஷாக்கா இருந்திருக்கும்.,  இப்போ நீயா போய் பேசினா., இன்னும் பெட்டரா இருக்கும்.,  மே பி அவங்களுக்கு சந்தோஷமா கூட இருக்கும்.,

      நீ சின்னதுல கூப்பிடுற மாதிரி கூப்பிட்டேனா.,  இன்னும் ஹாப்பியா பீல் பண்ணுவாங்களோ என்னவோ., அதை  நீ அவங்க கிட்ட கேட்டுட்டு கூப்பிடு”, என்று அறிவுரை வழங்கினர்.

   எல்லோரிடமும் “சரி சரி” என்று கேட்டுக் கொண்டாலும் அதற்கான எந்த நடவடிக்கையும் இவள் எடுக்கவே இல்லை.

     ஒவ்வொரு முறை  அவர்கள் பேசும் போது கேட்டுக் கொண்டாலும்.,

இவளோ “யோசிச்சு சொல்றேன்., யோசிக்கிறேன்”, என்று மட்டுமே சொன்னாள்.

   அதன்பிறகு அதைப்பற்றி பேசிக்கொள்ளவில்லை.,

      அவளுக்கு பேசுவதற்கு சற்று தயக்கமாகவும் இருந்தது.  இதோ நாட்கள் நெருங்கிக் கொண்டே செல்வது போல தோன்றியது.

    இன்னும் எத்தனை நாளைக்கு தான் இங்கே இருக்க முடியும், என்ற எண்ணமும் மனதிற்குள் வந்தது.

    இதை எப்படி கையாள்வது என்றும் அவளுக்கு புரியாது தான் யோசனையோடு இருந்தவள், ஒரு பெருமூச்சோடு அமைதியாக படுத்து கொண்டாள்,

    மாலை நேரம் எழுந்து வெளியே சென்றவள்.டீ எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்தாள்.

  அப்போது தான் வந்த பாட்டி,  “என்னம்மா லேட்டா டீ குடிக்கிற”, என்று கேட்டார்.

   ” இல்லை தூங்கிட்டேன்” என்று அவள் அறியாமல் சொல்லவும்,

தாத்தாவும் பாட்டியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

  “அப்படி என்ன தான் யோசனை, உனக்கு எங்க கிட்ட சொல்லலாம் னா சொல்லு., இல்லாட்டி எப்ப சொல்லணும் தோணுதோ சொல்லு, இல்ல ஏதாவது சந்தேகம் இருக்குன்னு தோணுச்சுன்னா சொல்லு.,  எங்க அனுபவத்துல எங்களுக்கு தெரிஞ்ச பதிலை நாங்க உனக்கு சொல்லுவோம்”, என்று சொன்னார்.

   சிரித்தபடி அவர்களிடம் தலையாட்டியவள். “நிச்சயமா உங்ககிட்ட தான் இதைப் பற்றி கேட்பேன்”, என்று சொல்லி விட்டு.,

     “ஏன் பாட்டி அப்பா வந்தாரா”, என்று சொல்லி அங்கு நடந்த விஷயங்களை பற்றி கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவர் அமர்ந்து கதை சொல்லிக் கொண்டிருக்க, இவளோ பதில் சொல்லிய படி அனைத்தையும் கேட்டு கொண்டு இருந்தாள்.

அவள் முகம் வாடி இருப்பதை கண்டவர், ‘ஒருவேளை நாம் சொன்ன விஷயத்தை எல்லாம் இன்று தான் யோசித்து இருப்பாளோ’, என்று நினைத்தவர்.,

    பாவம் மனதிற்குள் குழப்பிக் கொண்டிருக்கிறாள் என்ற எண்ணத்தோடு அவளுக்கு தலை கோதியப்படி  அமர்ந்திருந்தார்.

தாத்தாவும் பார்வையாலே பாட்டியிடம் ‘என்ன செய்ய’ என்று கேட்டார்.

    பாட்டியும் ‘எதுவும் செய்ய வேண்டாம்’ என்னும் முறையில் தலையசைத்து அமைதி காத்தார்.

   “பாட்டி நான் கொஞ்ச நாள் இங்கே இருக்கட்டுமா”, என்று கேட்டாள்.

“தாரளமா இரு மா”, என்றனர் இருவரும் சேர்ந்தார் போல.,

இரவு குடும்பத்தினருடன் பேசும் போதே, அவள் கேட்டதை தெரியப்படுத்தினர்.

ஏதாவது மாற்றம் வருமா என்று எதிர் பார்த்து இருந்தனர்.