ஏன்னா சில நேரம் வீட்டை சுத்தி நடக்க ஆரம்பிச்சானா., எத்தனை தடவை சுத்தி நடக்குறானு பாக்குற நமக்கு தான் தெரியும்., அவளுக்கு தானா கால் வலிச்சா தான் வந்து உட்காரவே செய்வா, சாயங்கால நேரம் அப்படித்தான் நடந்துகிட்டே இருக்கிறா., காலையில கொஞ்சம் ஓரளவுக்கு நடப்பா., ஆனா சில நேரம் அதுவும் ஒழுங்கா பண்ண மாட்டா., ரூம்ம விட்டு வெளியே வர மாட்டா.,
ஒரு தடவை பாட்டி கூட கேட்டா., ஏம்மா இப்படி இருக்க அப்படின்னு., கேட்டதுக்கு ஒன்னும் இல்ல பாட்டி., அது எல்லாம் ஒன்னுமே இல்ல அப்படின்னு சொல்லிட்டா., உங்க பாட்டி வந்து அவ வந்த மூனாவது நாளில் சொல்லிட்டா.,
இப்போ ஒரு ரெண்டு நாளா அந்த பொண்ணு இப்படித்தான் இருக்குது”, என்று சொன்னார்.
வீட்டில் உள்ளவர்கள் ‘இதை எப்படி எடுத்துக் கொள்வது’ என்று யோசனையோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“சரி அவளுக்கு தெரியும்கிறது, நம்மள தவிர யாருக்கும் தெரிய வேண்டாம்” என்று சொன்னார்.
நவீனும் “பெரியப்பா ஏன் சுத்தி வளைக்கீங்க, அண்ணனுக்கு தெரிய கூடாதுன்னு சொல்லுங்க, ஏன்னா இங்க அண்ணன் மட்டும்தான் இல்ல., மத்த எல்லாரும் தான் இருக்கோமே எல்லாருக்கும் தான் தெரிஞ்சிருச்சு தானே”, என்று சொன்னான்.
“சரி பார்த்துக்கலாம், இப்போதைக்கு அவன் கிட்ட எதுவுமே சொல்லிடாதீங்க”, என்று சொன்னவர் தனது தாய் தந்தையின் எண்பதாவது திருமணத்திற்கான ஏற்பாடுகளை பற்றி பேசத் தொடங்கினார்.
அதற்காகத்தான் பாட்டியும் தாத்தாவும் அன்று வந்திருந்தனர். துணி எடுக்க செல்வதாக இருந்ததால் காலையில வந்து துணி எடுத்துவிட்டு, வீட்டிற்கு சாப்பிட வந்தவர்களுக்கு தான், போலீஸ் ஓடு வந்து நின்ற முத்தரசை பார்த்தனர்.
பாட்டி தாத்தாவின் என்பதாவது திருமணத்திற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது.
துணி எடுக்கும் போது பாட்டி துளசிகென்று ஒரு புடவையை வாங்கி இருந்தார்.
அப்போது நவீனின் அம்மாவிடம்,”கலை இந்த சேலையை தான் துளசிக்கு என்று நான் எடுத்தேன்”, என்று சொன்னார் .
கிருஷ்ணாவின் அம்மாவோ, “நான் கூட யோசிச்சேன் அத்தை எதுக்கு இன்னொரு சேலை எடுக்குறாங்க ன்னு , அதுவும் நீங்க கட்ற மாதிரி இல்ல, சின்னத்த பிள்ளைகளுக்கு கொடுக்கிற மாதிரியும் நீங்க எடுக்கல, எங்களுக்கு தெரியும் சின்னத்த பிள்ளைங்களுக்கு நீங்க வேற வாங்கிட்டிங்க, மொத்தமா ஒன்னு போல வாங்கிட்டீங்க., இது கொஞ்சம் வித்தியாசமாக இருந்துச்சு, நல்லாவும் இருந்துச்சு, எப்படி கேட்க அங்க வச்சு ன்னு யோசிச்சேன், கிருஷ்ணா இருந்ததனால நான் வேற எதுவுமே கேட்கல”, என்று சொன்னார்.
“நானும் அதனால தான் கடையில வச்சு சொல்லல., இந்த சாரி எப்படி இருக்கு”, என்று அந்த சேலையை காட்டிக் கேட்கவும் அனைவருக்குமே பிடித்திருந்தது.
நவீன் முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான். “ஏன்டா” என்று கேட்டார்.
அவனும் விலையை காட்டி., “எவ்ளோ விலைக்கு எடுத்திருக்கீங்க, ஒரு சண்டைக்காரன் பொண்ணுக்கு எடுத்து குடுக்குற மாதிரியா எடுத்து கொடுக்குறீங்க”, என்று கேட்டான்.
மற்றவர்களோ, “நீ அவங்க அப்பாவ பத்தி மட்டும் தான் நினைச்சுட்டு, அவளை அவரோட பொண்ணா மட்டும் தான் பார்க்கிற, நாங்க அப்படி நினைத்து புடவை எடுக்கல”, என்று தாத்தா சொன்னார்.
“என்னமோ பண்ணுங்க” என்று சொன்னவன். மீண்டும் விலையை காட்டி, “எனக்கு எடுத்ததுல ட்ரிபிள் மடங்கு ரேட்ல டிரஸ் எடுத்து இருக்கீங்க”, என்று சொன்னான்.
தாத்தாவும் “ஆம்பள பிள்ளைக்கு அவ்வளவு விலைக்கு டிரஸ் எடுத்ததே அதிகம், பொம்பள பிள்ளைக்கு எடுத்ததை பற்றி நீ கணக்கு பார்க்கக் கூடாது”, என்று சொன்னார்.
“இதுக்கு பொம்பள புள்ளையாவே பிறந்திருக்கலாம்”, என்று சொன்னவன்.
“நகை எடுக்கலையா” என்று கேட்டான்.
பாட்டி தான், “ஏண்டா இந்த ஐடியாவை அங்கேயே சொல்லியிருந்தேனா, நான் பக்கத்துல இருந்த நகைக்கடையில அந்த பிள்ளைக்கு ஒரு மாலை வாங்கி இருப்போம்ல”, என்று சொன்னார்.
“எங்க பெரியப்பாவும் , அப்பாவும் சம்பாதிப்பாங்களாம்., நீங்க ஊரா விட்டு பிள்ளைக்கு நகை எடுத்து குடுப்பீங்களா, நல்லா இருக்கே”, என்று சொன்னான்.
“நீ ஏண்டா சண்டக்காரன் பிள்ளையாவே பாக்குற, வேற மாதிரி யோசியேன்”, என்று சொன்னார்.
“என்னால் அப்படி எல்லாம் யோசிக்க முடியாது., ஏன்னா அவங்க எங்க அண்ணனை நோகடிச்சவங்க, எங்க அண்ணனோட வருத்தம் வலி என்னன்னு எனக்கு தெரியும், அதனால என்ன பொறுத்த வரைக்கும் சண்டக்காரங்க பொண்ணு தான்”, என்று சொன்னான்.
“சரி சரி நாளைக்கு எப்படி மாறினாலும், நீ சண்டைக்காரன் பொண்ணாவே மட்டும் தான் பாக்கணும்., அப்புறம் மாத்தி பேசக்கூடாது”,என்று சொன்னார்.
“பாட்டி ஆசையை வளர்த்துக்காதீங்க பாட்டி., அது லண்டன்ல வளர்ந்த கேஸ், லண்டன்ல இருந்து வந்ததெல்லாம் நம்ம ஊருக்கு செட்டாகாது., நம்ம கல்ச்சருக்கும் செட்டாகாது”, என்று சொன்னான்.
அனைவருக்கும் முகம் சற்று வாடினாலும், பெரியம்மா தான், “எத பத்தியும் யோசிக்க வேண்டாம்., நம்ம வீட்டுக்கு அடைக்கலமா வந்த பொண்ணு., அப்படி மட்டும் யோசிங்க., நம்ம எல்லாரும் புது துணி போட்டு ஒரு விசேஷத்தில் இருக்கும் போது, அந்த நேரத்துல அந்த பொண்ணு நம்ம வீட்டு விசேஷத்தில் கலந்துக்கிறவ, அவளும் நம்ம கூட நல்ல துணி போட்டு நிக்கணும் என்பதற்காக எடுத்திருக்காங்க, அப்படின்னு நினைச்சுக்கோ., அப்படி இல்ல ன்னு நினைச்சேன்னா., நம்ம வீட்டுக்கு யாரும் வந்துட்டு போனா அவங்களுக்கு அட்லீஸ்ட் ஒரு பிளவுஸ் பிட்டாவது வச்சு மஞ்சள் குங்குமம் வச்சு கொடுத்து அனுப்புவது தான் நம்ம வீட்டு வழக்கம்., அப்படி ஒரு கல்யாணம் ஆகாத பிள்ளைக்கு ஒரு சேலையை வைத்து கொடுக்கோம் ன்னு நினைச்சுக்கோ”, என்றார்.
“ஏதோ பண்ணுங்க., ஆனா ஒன்னு எல்லார் காசையும் எடுத்து போட்டு செலவு செய்ங்க அவளுக்காக”, என்று சொன்னான்.
“நீ ஏன்டா கரிச்சி கொட்டிக்கிட்டே இருக்க., அவன் கிட்ட சொன்னா கூட, அவனே ஒன்னும் சொல்ல மாட்டான் போல., நீ இந்த வரத்து வர்ற”, என்று சொன்னார்.
“அதெல்லாம் கிடையாது, எங்க அண்ணன் மனசு நோகடிச்ச, அந்த குடும்பத்துக்குள் உள்ளவர்கள் எல்லார்மே எனக்கு எதிரி தான்”, என்று சொன்னான்.
“போ போ என்னத்தையோ போ”, என்று ஆளாளுக்கு பேசிக் கொண்டே சென்றனர்.
பாட்டியும் தாத்தாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
சற்று நேரத்தில் மாலை சிற்றுண்டி காபியும் முடித்தவுடன் தாத்தாவும் பாட்டியும் கிளம்புவதாக சொன்னார்கள்.
“கிருஷ்ணா வந்ததுக்கு அப்புறம் போங்களேன்”, என்று சொன்னார் பெரியப்பா.
நவீன் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க., பாட்டி தான், “இல்லப்பா ஒரு புள்ளய தனியா வீட்டில் விட்டுட்டு வந்து இருக்கோம்ல., அலமேலு சாயங்காலம் டிபன் செய்ற வரைக்கும் தான் இருப்பா., ஏழு மணி ஆகவும் அவ கிளம்பிருவா., வீட்டுக்கு நாங்க போறோம் ப்பா, பிள்ளை தனியா இருப்பா”, என்று சொன்னார்.
நவீன் ம்ஹூம் என்று தொண்டையை கணைத்துக் கொள்ள., பாட்டி தான், “நீ பேசாம இரு, அந்த பொண்ணு நம்ம வீட்ல இருக்கிற வரைக்கும் நம்ம பாதுகாப்புல இருக்கா, பத்திரமா அவளை அனுப்பி வைக்கிற வரைக்கும் நம்ம பாதுகாப்பா பாத்துக்கணும், யாருக்கு வந்த விதியோ ன்னு யாரையும் விட்டுட்டு வர முடியாது”, என்று சொன்னவர்.
“நாங்க கிளம்புறோம்”, என்று சொல்லிக்கொண்டு கிளம்பினர்.
நவீனின் அம்மாவிற்கு தான் என்ன சொல்வது என்று தெரியவில்லை.,
பாட்டியின் பின்னே வந்தவர், “அத்தை” என்று அழைக்க,
“அவ எதுவும் மறுப்பா சொன்னாலும், சொல்லிருங்க அத்தை”, என்று கேட்டார்.
பாட்டி தான், அவள் கையை பிடித்துக் கொண்டு, “இப்போது வரை, நான் அவளிடம் மற்ற எந்த விஷயத்தையும் பேசவில்லை, ஆனால் முழு கதையும் சொல்லிவிட்டேன்., அவ மனதிற்குள் என்ன முடிவெடுக்கிறா என்று தெரியவில்லை, அவளாக முடிவு எடுப்பது தான் நல்லது”, என்று சொன்னார்.
அதை ஒத்துக் கொண்ட கலையும், “நீங்க சொல்றது சரி தான் அத்தை., ஆனா நவீன் சொல்ற மாதிரி கிருஷ்ணாவையும் நம்ம யோசிக்கணும் இல்ல”, என்று சொன்னார்.
“கிருஷ்ணாவும் ஒரு முடிவுக்கு வரலையே., கிருஷ்ணாவுக்கு தெரியும் இல்ல, பெரிய மருமகள் சொன்னா, கிருஷ்ணா கிட்ட அன்னைக்கே சொல்றேன் ன்னு, உண்மையிலேயே அவனுக்கு மனசுல வேற ஏதும் எண்ணம் இருந்துச்சுன்னா, திருப்பி வந்து அவளை பார்க்க வந்திருக்கலாம்ல, அந்த புள்ள வந்து அஞ்சு நாள் ஆச்சு இல்ல., அட்லீஸ்ட் யாரிடமாவது ஒரு வார்த்தை அவளை பத்தி விசாரிச்சி இருக்கலாம் இல்ல., எதுவுமே செய்யல”, என்று சொன்னார்.
பெருமூச்சு விட்டுக் கொண்ட கலை, “என்ன த்தை சொல்ல, அவன் மனசு அந்தளவு நொந்து போய் இருக்கு, எப்படி கேட்க முடியும், அவன் மனசுல என்ன நினைக்கிறான்னு சொல்ல முடியல., நவீன் கோவப்படுறத என்னால தடுக்க முடியாம போன காரணமும் அது தான்., எனக்கும் நவீனுக்கு முன்னாடி கிருஷ்ணா தான்., அவன் என்ன முடிவு பண்றானோ, அது தான் முடிவு, நாங்க எதுவும் சொல்ல தயாராக இல்லை, ஆனால் எங்களுக்கும் எதிர்பார்ப்பு இருக்கு, இந்த பிள்ளை ஏதாவது வாயை திறந்து சொன்னானா, நாம மேற்கொண்டு பேசலாம்”, என்று சொன்னார்.
“தெரியல பார்ப்போம்” என்று சொன்னவர், “சரி நைட்டு உங்க அம்மா பேசினானா, உங்க அண்ணன் என்னைக்கு ஊருக்கு போறேன்னு கேட்டு வையி, உங்க அண்ணன் ஊருக்கு போனதுக்கப்புறம் இந்த பிள்ளையை கெளப்பி அனுப்பனுமா இல்ல, அதுக்கு முன்னாடி அனுப்பனுமா ன்னு யோசிக்கலாம், ஒருவேளை உங்க அண்ணன் போனதுக்கப்புறம் இந்த புள்ள கிளம்புற மாதிரி இருந்துச்சுன்னா., நம்ம வீட்டு விசேஷத்திலும் கலந்துட்டு போயிருவா இல்ல., நமக்கும் ஒரு சந்தோஷமா இருக்கும்ல”, என்று சொன்னார்.
“உண்மையிலே சந்தோஷம் தான் அத்தை, ஆனால் இது எல்லாமே தற்காலிக சந்தோஷம் தானே”, என்று சொன்னார்.
“விதி என்னன்னு இருக்கோ, அது படி நடக்கட்டும்”, என்று சொன்னவர் அமைதியாக காரில் ஏறவும்,
அவரை பார்த்து தயக்கத்தோடு நிற்க, காரின் கண்ணாடியை இறக்கிவிட்டு அவள் கையை அழுத்தமாக பிடித்துக் கொண்டவர்., “நல்லதே நடக்கும் ன்னு நம்பு, நானும் உங்க மாமாவும் அந்த நம்பிக்கையில் தான் அவ கிட்ட எல்லாத்தையும் சொன்னோம், என்ன முடிவெடுத்து இருக்கான்னு நாங்க இப்ப வரைக்கும் கேட்கல, அவளிடம் வாயை திறந்து நாங்க எதுவும் பேசவும் இல்ல., ஆனா அந்த பொண்ணு சகஜமா பேசிட்டு நார்மலா சுத்துது., எனக்கும் உங்க மாமாவுக்குமே ஒரே யோசனையா இருக்கு., இப்ப புரிஞ்சுகிட்டாளா புரியலையா., இல்ல இங்க இருந்து தான் போயிருவோமே நினைப்புல இருக்காளா, அப்படின்னு.,
எங்களுக்கும் ஒன்னும் புரியல, அது தான் நானும் உங்க மாமாவும் மேற்கொண்டு அந்த பிள்ளை கிட்ட கேட்கல, பாப்போம் எப்படி இருக்கோ., சரி உங்க அம்மா பேசினா என்கிட்ட சொல்லு., இல்ல உங்க அம்மாவை எனக்கு பேச சொல்லு”, என்று சொல்லிவிட்டு அங்கு இருந்து காரைக் கிளப்பும் படி சொன்னாள்.
கிளம்பி சென்ற காரைச் சற்று நேரம் பார்த்துக் கொண்டே நின்ற கலையை பார்த்த நவின்,
“அம்மா இங்க வாங்க, எவ்வளவு நேரம் தான் போற காரையே பாத்துட்டு இருப்பீங்க., நீங்களும் இன்னும் கொஞ்ச நேரம் நின்னீங்கனா பாட்டி வீடு போய் சேர்ந்துருவாங்க”, என்று சொல்லி,
அவள் தோளில் கையை போட்டுக் கொண்டவன்., “ம்மா உங்களுக்கு கொஞ்சம் தள்ளி தான் நின்னேன்., பாட்டி பேசினது கேட்டுச்சு, நீங்க பேசுனதும் கேட்டுச்சு, தயவு செய்து நீங்களோ., இல்ல பாட்டியோ., இல்ல பெரியம்மாவோ, பெரியப்பாவோ, அப்பாவோ, இதை ஸ்டிக்ட்டா சொல்லி வச்சுடுங்க., எதுவும் ஏடாகூடமா பேசி அண்ணன் மனசுல ஏதாவது ஆசையை வளர்த்தீங்க., நடக்கிறதே வேற, நாளைக்கு அண்ணன் மனசு கஷ்டப்பட்டா., உங்க யாரையும் நான் சும்மா விட மாட்டேன் பார்த்துக்கோங்க., ஏன்னா அக்கா கண்டிப்பா அண்ணன் கிட்ட இத பத்தி பேச மாட்டா, எனக்கு தெரியும்., எனக்கு அண்ணன் எவ்வளவு முக்கியமோ., அதே மாதிரி அவளுக்கும் அண்ணன் அவ்வளவு முக்கியம்., சோ இத பத்தி நீங்க பேசக்கூடாது., இத்தோட விட்டுரனும்”, என்று சொன்னான்.
“நிச்சயமா டா, எனக்கும் உனக்கு முன்னாடியே கிருஷ்ணா தான் முக்கியம்., கிருஷ்ணாவுக்கு அப்புறம் தான் நீ”, என்றார்.
“அதுதான் எனக்கு தெரியுமே”, என்று சொன்ன படி சில பழைய விஷயங்களை பேசி அவரை சிரிக்க வைத்து வீட்டிற்குள் அழைத்து வந்தான்.
வீட்டில் உள்ளவர்களுக்கும் நவீனின் கோபமும் பேச்சையும் தெரியப்படுத்த., எல்லோருமே அதை ஆமோதிப்பாக ஏற்றுக் கொண்டனர்.
‘சரிதானே மீண்டும் ஒருமுறை அவனை மனச் சங்கடப்பட விடக்கூடாது’ என்பதில் குடும்பமே முடிவோடு இருந்தது.