துளசியை தேடும் படலம் வீட்டில் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது.
ஏர்போர்ட் மட்டுமே அவளுக்கு தெரிந்த இடம், வேறு எங்கே என்று பார்த்தால், வேறு எதுவும் இல்லையே என்று சுற்றியுள்ள பகுதிகளில் தேடியவர்கள், அவள் ஏர்போர்ட்டிற்கும் செல்லவில்லை என்று தெரிந்தவுடன் எங்கு போனால் என்று தெரியவில்லையே என்ற பயத்துடன் போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என நினைத்தனர்.
ப்ரண்ட்ஸ் யாரிடமும் ஹெல்ப் வாங்கி யாருக்கும் சொல்லி வைத்து போயிருப்பாளோ., ஒரு வேளை பஸ்ஸிலோ ட்ரெயினிலோ சென்று இருந்தால் கண்டுபிடிப்பது கஷ்டம் என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.
அப்போது தான் துளசியின் அப்பா வேண்டுமென்றே அவள் தங்கை குடும்பத்தை பற்றி சொல்லி., “அவர்கள் ஒருவேளை கடத்தி இருந்தால்” என்று சொன்னார்.
“சார் அப்படி எல்லாம் எடுத்த உடனே யார் மேலேயும் சந்தேகப்பட முடியாது, சரி முதல்ல யாருன்னு சொல்லுங்க”, என்று கேட்டார்.
அவர்கள் தொழிலையும், அவர்கள் குடும்பத்தையும் சொன்னார்.
“சார்,என்ன சார் நீங்க, அவங்க எப்படி சார், அவங்க பையனுக்கு பொண்ணு குடுக்க நான் நீ ன்னு போட்டி போட்டுட்டு ஆள் இருக்காங்க, அப்படி இருக்கும் போது எப்படி சார், உங்க பொண்ண கடத்த போறாங்க”, என்று கேட்டார்.
“இல்ல, எனக்கு அவங்க மேல தான் சந்தேகமா இருக்கு”, என்றார்.
“சரி, வாங்க அவங்க வீட்டில் போய் பாத்துருவோம்”, என்று சொல்லிக் கொண்ட அங்கிருந்து கிளம்பினார்.
ஏற்கனவே அவள் அங்கிருந்து சென்று இரண்டு நாட்கள் ஆகி இருக்க, பாட்டியும், தாத்தாவும், தற்செயலாக அவளை வீட்டில் பாதுகாப்போடு விட்டு விட்டு கிருஷ்ணா வீட்டிற்கு வந்திருந்தனர்.
அதே நேரம் போலீஸோடு துளசியின் அப்பாவும் வந்து சேர்ந்தார்.
போலீஸை பார்த்தவுடன் வீட்டின் பெரியவர்கள் என்ன என்று கேட்டனர்.
போலீஸ்ஸோ., “அவர் மகளைக் காணவில்லையாம், நீங்கள் கடத்தி வந்திருப்பீர்களோ, என்று ஒரு சந்தேகம்”,என்று சொன்னார்.
“தாராளமா வந்து தேடி பார்த்துக்கோங்க, இங்க எல்லாம் யாரும் கிடையாது”, என்று வீட்டு பெரியவர் சொல்லவும்,
துளசி அத்தையோ., “ஒரு நிமிஷம், நான் பேசலாமா”, என்று கேட்டுக் கொண்டே முன்னாள் வந்து நின்றார்.
“அவர் பொண்ணு எப்படி இருப்பான்னு கூட தெரியாது., அப்புறம் எப்படி நாங்க தான் கடத்துனோம் ன்னு எப்படி சொல்றாங்க., எங்களுக்கு வேற வேலையே இல்லையா, அவர் பொண்ணு எப்படி இருக்கும் ன்னு கூட எங்களுக்கு தெரியாது, தெரியுமான்னு கேட்டு பாருங்க”, என்று சொன்னார்.
துளசியின் அப்பாவிடம் திரும்பிய போலீஸ் இன்ஸ்பெக்டர்.,
” முத்தரசு சார், என்ன சொல்றாங்க அவங்க, உங்க பொண்ணையே தெரியாதுன்னு சொல்றாங்க., ஆனா நீங்க அவங்க தான் கடத்தி இருப்பாங்கன்னு சொல்றீங்க”, என்று கேட்டார் .
“சார் நாங்களும் கேள்விப்பட்டோம், அவர் பொண்ணு ஓடிப் போயிடுச்சுன்னு., ஆனா அது ஓடிதான போயிருக்கு., எங்க வீட்டுக்கா வந்து இருக்கு, எங்களிடம் வந்து கேக்குறீங்க”, என்று கேட்டார் துளசியின் அத்தை.
அவரும் “இல்ல மேடம் அந்த பொண்ணுக்கு கல்யாணம் இஷ்டம் இல்லையாம், அதனால போயிருக்கலாம் ன்னு சார் வொய்ப் சொன்னாங்க”, என்றார்.
“ஓஹோ பிடிக்காத கல்யாணத்தை பண்ணி வைக்க முயற்சி பண்ணினா, கல்யாணம் புடிக்காத பிள்ளை எங்க போச்சோ, அதை தேடுறத்தை விட்டுட்டு., எங்க வீட்டுல வந்து கேட்டுட்டு இருக்கீங்க, இது என்ன அநியாயமா இருக்கு”, என்று வேகமாக கேட்டார்.
முத்தரசை திரும்பி பார்த்த போலீஸ், “என்ன சார் இத தான் நான் சொன்னேன்ல., உங்க பொண்ணு ஊருக்கே கூட திரும்பி இருக்கலாம்., இல்ல பிரண்ட்ஸ் ஹெல்ப்போட பிரண்ட்ஸ்க்கு சொந்தக்காரங்க யார் வீட்லையாவது கூட இருக்கலாம் ன்னு சொன்னேன் இல்ல., நீங்க தான் இல்லன்னு சொன்னீங்க”, என்று சொன்னார்.
அவரோ முறைத்த படி “வீட்டுக்குள் எல்லாம் தேடுங்க”, என்று சொன்னார்.
அதே நேரம் கிருஷ்ணா வரவும் சரியாக இருந்தது. வாசலுக்கு வந்தவன், “சித்தி இங்க என்ன பேச்சு, உள்ள போங்க”, என்று சொன்னவன்,
“உங்களுக்கும் சேர்த்து தான் சொல்லுறேன்” என்று மற்றவர்களை பார்த்து சொன்னவன்.
“சார் இங்க பாருங்க, அந்த பொண்ணு யாரு, எவர் ன்னு எங்களுக்கு தெரியாது, அந்த பொண்ணு எப்படி இருக்கணும்னு கூட எங்க வீட்ல யாருக்கும் தெரியாது., சோ அப்படி இருக்கும் போது எங்க மேல இவர் பழி சொல்றதுக்கு என்ன நியாயம் இருக்கு., ஒன்னே ஒன்னு கேட்கிறேன் எங்கள பத்தி அந்த பொண்ணுக்கு என்ன தெரியும்னு சொல்லி அவர்கிட்ட கேளுங்க, உறவு முறை தெரியுமா ன்னு கேளுங்க”, என்று சொன்னான்.
போலீசும் “சார் இப்ப நீங்க சொல்லுங்க., அவர் கேட்கிற கேள்விக்கு பதில, உங்க பொண்ணுக்கு உங்களோட ரிலேஷன் எல்லாம் இங்கதான் இருக்காங்கன்னு தெரியுமா., இவங்க இன்னார் ன்னு தெரியுமா”, என்று கேட்டார்.
சிறிது தயக்கத்துடன், “இல்ல அவளுக்கு யாரையும் தெரியாது, நான் யாரைப் பற்றியும் சொன்னதில்ல”, என்று சொன்னார்.
“அப்புறம் எப்படி சார் இங்க வந்து கேக்குறாங்கன்னு, கேளுங்க, முதல்ல இடத்தை காலி பண்ணுங்க., எங்க வீட்டு முன்னாடி போலீஸ் நின்னா எங்களுக்கு தான் அசிங்கம்”, என்று சொன்னான்.
கோபமாக பார்த்த போலீஸ் இன்ஸ்பெக்டர்., “சார் ஒரு விஷயம் னா விசாரிக்க வரத்தான் செய்வாங்க., அதுக்காக அசிங்கம் ன்னு எல்லாம் பேசாதீங்க”, என்றார்.
“போலீஸ் வந்தாலே தப்பா தானே எல்லாரும் பாக்குறாங்க., இப்ப நீங்க வந்திருக்கிறது கூட அப்படி தானே பார்ப்பாங்க., நல்லவேளை நீங்களாவது மப்ட்டில இருக்கீங்க., ஆனா போலீஸ் ஜீப்ல தானே வந்து இருக்கீங்க., எங்களுக்கு அது ஷையா தான் இருக்கு, இடத்தை காலி பண்ணுங்க., யாரும் இல்லை”, என்று சொன்னான்.
முகத்தை தொங்க போட்டுக் கொண்டு முத்தரசு கிளம்பினார்.
அவர்கள் கிளம்பியவுடன், “நவீன் கேட்ட சாத்திட்டு கேட் க்கு பூட்டு போட்டுட்டு வா” என்று சொன்னான்.
நவீன் சென்று பூட்டு போட்டு வரும் வரை வாசலில் நின்று பார்த்துக் கொண்டே இருந்தவன். அவன் உள்ளே வந்த பிறகு தன் தந்தையிடம் கேட்டான்.
“இது தேவையா, இதுக்கு தான் சொன்னேன்., நீங்க தான் என்னமோ பாவம், பரிதாபம் எல்லாம் பார்த்தீங்க பாருங்க., அவர் நேரா இங்க தான் வந்து நிற்கிறார்”, என்று சொன்னான்.
“டேய் இப்ப தான சொன்னான், அந்த பொண்ணுக்கு எதுவுமே சொல்லி வளர்க்கலைன்னு., ஆனால் அவனுக்கு எப்படி சந்தேகம் வந்துச்சு., யாரும் ஏதாவது சொல்லி இருப்பாங்கன்னு சந்தேகம் வந்திருக்கும் ன்னு நினைக்கிறாயா”, என்று கேட்டார்.
“அந்த பொண்ணு ஏதோ ஹெல்ப் கேட்டு பண்ணிட்டீங்க, சீக்கிரம் லண்டனுக்கு அனுப்புற வழிய பாருங்க இல்லை., எங்க போறதா சொன்னாலும் அங்க அனுப்பி வைங்க., அதை விட்டுட்டு இங்கே வச்சுட்டு இருக்காதீங்க., ஏதோ பாட்டி, தாத்தா இன்னைக்கு இங்க இருக்க போய் சரியா போச்சு., இல்லாட்டி கண்டிப்பா உங்க ப்ரண்ட் பாட்டி தாத்தா வீட்டை டவுட் பண்ணி இருப்பாரு”., என்று சொன்னான்.
அமைதி காத்தவர் பெற்றவர்களை பார்த்து., “அந்த பொண்ணு கிட்ட எதுக்கும் சொல்லி வைங்க, அந்த பொண்ணு கிளம்புவதற்கான ஏற்பாடு பண்ணலாம்., ஆனா அதுக்கு முன்னே இவன் எப்போ கிளம்புகிறான்னு தெரியலையே., இவன் கிளம்பிட்டா னா அதுக்கப்புறம் தான் அனுப்பனும்., இல்ல இவன் கிளம்புவதற்கு முன்னாடி சேப்பா அனுப்பி வைக்கணும்., எப்படி போறாங்கன்னு தெரியலையே”, என்று சொன்னார்.
நவீன் அம்மாவிடம் சொல்லி, அவள் அம்மாவிற்கு போன் செய்து விசாரிக்க சொன்னார்கள். ஃபோனில் பேசிவிட்டு சொல்வதாக நவீன் அம்மா சொல்லிக் கொண்டிருந்தார்.
வீட்டில் உள்ளவர்களும் “சரி பார்க்கலாம்”, என்று சொன்னார்கள்.
பெரியவர்களும் “கிளம்பறோம்” என்று சொன்னார்கள்.
“கொஞ்ச நேரம் இருந்துட்டு போங்க இப்ப உடனே ஊருக்கு கிளம்பாதீங்க” என்று சொன்னான் கிருஷ்ணா.
சற்று நேரம் கழித்து, “பாட்டி எதுக்கும் வீட்ல இருக்குற அலமேலு ஆன்ட்டி கிட்ட சொல்லி வைங்க., அந்த பொண்ண ரூம்குள்ளே இருக்க சொல்லுங்க., யாரு வந்தாலும் வீட்ல யாரும் இல்லன்னு சொல்ல சொல்லுங்க”, என்று சொன்னவன்.,
“சீக்கிரம் கிளம்புவதற்கு ரெடி பண்ணுங்க”, என்று சொன்னபடி அவசரமாக கிளம்பி விட்டான்.
வீட்டில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, “இதுக்கு என்ன தான் முடிவு”, என்று தாத்தா கேட்டார்.
நவீனின் அம்மா தான்., “தப்பு எங்க அண்ணன் மேல தான்., அவன் எதுவும் சொல்லாமல் வளர்த்தது ஒரு பக்கம் தப்புன்னா., போன முறை வந்திருக்கும் போது நம்ம கேட்டதுக்கு ஒன்னு சரியான பதில் சொல்லி இருக்கணும்., இல்ல அப்படின்னு சொன்னா., அதற்கு தகுந்தாப்ல ஏதாவது சொல்லியிருந்தா கூட நமக்கு ஒன்னும் தோனி இருக்காது., ஆனா அவன் வார்த்தையை விட்டது, ரொம்ப அதிகமா விட்டுட்டான். அதனால தான் இப்ப இந்த முடிவு., ஆனால் என்ன பண்ணனும் தான் தெரியல”, என்று சொல்லிவிட்டு,
“ஏன் அத்தை, அவளிடம் இங்க நடந்த விஷயங்கள் எல்லாம் சொல்லிட்டீங்களா”, என்று கேட்டார் .
“ஆமாமா அந்த பிள்ளை வந்து தான் அஞ்சு நாள் ஆகுது இல்ல., முதல் நாள் அமைதியா இருந்தாள், அதுக்கப்புறம் அவ நல்ல பேசுறதில்லையோ, இல்ல அந்த பொண்ணு பழகுவதிலேயோ எந்த குறையும் சொல்ல முடியாது., அப்ப தான் கேட்டா”, ஏன் அத்தை ஃபேமிலியோட அப்பா பேச மாட்டேங்கிறாங்க அப்படின்னு கேட்டா., என்றார்.
“அது என்ன சொல்ல ன்னு தெரியல, அதனால கலை கல்யாணம் முடிஞ்ச சமயம் , அப்புறம் அவங்க லண்டன் போன புதுசுலை ன்னு , சின்ன சின்ன பிரச்சனைகள் வந்துட்டு இருந்துச்சு, நாங்க எதுவும் சொல்லல., அப்புறம் ஒரு ஸ்டேஜ்ல அவனா பேசுறத குறைச்சுக்கிட்டான்., ஏன் பேச மாட்டேங்கறன்னு நினைச்சுமே ஒழிய, அவங்கிட்ட என்ன பிரச்சனை அப்பவே கொஞ்சம் தீர விசாரித்திருந்தால்., இன்னிக்கு இந்த நிலைமை வந்திருக்காது, அப்படிங்கிறதெல்லாம் சொன்னேன்”, என்று சொன்னார்.
கிருஷ்ணாவின் அப்பா தான், “எல்லா விஷயத்தையும் சொல்லிட்டீங்களாமா”, என்று கேட்டார்.
“சொல்லிட்டேன்பா”, என்றார்.
நவீன் தான் அவசரமாக, “அவங்களோட ரியாக்ஷன் எப்படி இருந்துச்சு பாட்டி”, என்று கேட்டான்.
“எங்களால கண்டுபிடிக்க முடியல”, என்று சொன்னார்.
தாத்தாவோ, “நானும் உங்க பாட்டி சொல்ல சொல்ல, அவ பக்கத்துலையே தான் உட்கார்ந்து இருந்தேன்., அவ முகம் எப்படி மாறுதுன்னு பார்த்தேன்., கொஞ்ச நேரம் அமைதியா கண்ண மூடிட்டு இருந்தா., கண்ணை திறந்தே பார்க்கல., அவ பாட்டி சொல்லும் போது குனிஞ்ச தலை நிமிரவே இல்லை., பாட்டி சொல்லி முடிக்கவும் கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா நிமிர்ந்தாலும்., கண்ணை திறக்காமல் இருந்தவ., அப்புறமா கண்ணை திறந்து சாதாரணமா தான் பேசினா., எனக்கு எதுவுமே தெரியாது பாட்டி., இந்த மாதிரி எந்த விஷயமும் தெரியாது, எனக்கு யாரும் எதுவும் சொன்னது இல்ல., அப்படின்னு தான் சொன்னாலே ஒழிய, அவகிட்ட வேற எந்த விதமான ரியாக்ஷனும் இல்ல., மறைக்கிறாளா., இல்ல அதை அவளால ஏத்துக்க முடியலையா., அப்படிங்கிறது எனக்கு தெரியல, ஆனா ஏதோ மனசுக்குள்ள போட்டு அந்த பொண்ணு யோசிச்சிட்டு இருக்காங்கிறது மட்டும் நல்லா தெரியுது.,