மார்க்குடன் பேசிவிட்டு வந்த ஹாசி யார் மீதோ மோதி “ஆஆஆ…..” என்று கத்தி கொண்டே தலையை தேய்த்து இங்க எப்படி திடீர்னு மரம் வந்தது என்று நிமிர, அவள் அண்ணன்தான் நின்று கொண்டிருந்தான்.
“டேய் அண்ணா நீயா” என்றவள் கேட்க, அவனோ ஆராய்ச்சி பார்வை பார்த்து கொண்டிருந்தான்.
“என்ன ப்ரோ என்னை புதுசா பார்க்கிற மாதிரி பார்க்குற”
“கன்பார்ம் பண்ணிட்டியா”.
“ஆமா……” என்றாள் சாதாரணமாக.
“அவனை எனக்கு பிடிக்கல”
“டேய் லூசு பயலே. அவனை உனக்கு பிடிக்க கூடாது. எனக்குதான் பிடிக்கணும்”.
“என்ன ஜோக்கா இதுக்கு நான் சிரிக்கணுமா”.
“அது உன் இஷ்டம்”.
“அவனுக்கு உன் நியாபகம் இருக்குமான்னே தெரியல”.
“ஓஹோ…. அது எப்படி மறப்பார். எனக்கே நியாபகம் இருக்கும் போது அவருக்கு நியாபகம் இருக்காதா. அதெல்லாம் இருக்கும்”
“இல்ல ஹாசினி….”
“நீ என்ன காரணம் சொன்னாலும் நான் கேட்க மாட்டேன். ஏன்டா அண்ணா உங்களை நம்பி அனுப்பி வைக்கறேன்னு சொன்ன பொண்ண நீ லவ் பண்ணலாம். அவ அண்ணனை நான் லவ் பண்ண கூடாதா”.
“எங்க கதை வேற. ஆனா……”
“ஒரு ஆவன்னாவும் இல்ல…. எனக்கு அவன்தான் வேணும்” என்ற தங்கையை குழப்பமாக பார்த்த நிரஞ்சன் “ஒருவேலை அவன் வேற பொண்ணை லவ் பண்ணுனா என்ன பண்ணுவ”
“சோ சிம்பிள் அந்த பொண்ண போட்டு தள்ளிட்டு. நான் அவனுக்கு வாழ்க்கை குடுத்துடுவேன்”.
“விளையாடாத ஹாசி. நான் சீரியஸா பேசறேன். மித்ரா அவன் மேல சந்தேகமா இருக்குன்னு சொல்ற. நீ கொஞ்சம் யோசியேன்”.
“டேய் அண்ணா. அவன் அந்த அளவுக்கு எல்லாம் ஒர்த் இல்ல. அந்த அம்மாஞ்சி அம்பிக்கு என்னை தவிர வேற யாரும் வாழ்க்கை குடுக்க மாட்டாங்க. சோ அந்த கவலை உனக்கு வேண்டாம். நான் முடிவு பண்ணிட்டேன்” என்ற தங்கையை பெரு மூச்சுவிட்டு பார்த்த நிரஞ்சன் “அவனை பார்க்கதான் வேலைய காரணம்காட்டி இந்தியா போறியா?”
“அதுல உனக்கு என்ன சந்தேகம் ப்ரோ. நான்சி போறதா இருந்தது. அவ பாய் பிரண்ட புடிச்சு அவளைப்பத்தி ரெண்டு மூணு பிட்டு போட்டு சந்தேகத்த வர வச்சு, அவனை அவகூட சண்டை போட வச்சு, அவளையே வந்து நான் போகலைனு சொல்ல வச்சு…. ஹப்பா….. எவ்ளோ வேலை எல்லாம் எதுக்காக என் சிக்கி செல்லத்துக்காக” என்று கண்கள் மின்ன சொன்ன தங்கையிடம் “எப்போ இந்தியா கிளம்பற?” என்க,
“நெக்ஸ்ட் வீக். என் ஆள பார்க்க போறேன்….. அவன் கூட பேச போறேன்…..” என்று பாடி கொண்டே துள்ளி குதித்து ஓடும் தங்கையை பார்த்தவன் இவ ஆசை நிறைவேறணும் கடவுளே’ என்ற வேண்டுதல் வைக்க. அந்த நேரம் பார்த்து கடவுள் தூங்க போய்விட அவன் வேண்டுதல் கவனிக்கப்படாத பட்டமாக பறந்து போய்விட்டது.
வீட்டிற்கு வந்து பெட்டில் விழுந்த ஹாசி தன் போனில் இருக்கும் தன்னவனின் நிழல் படத்தை எடுத்து அதனுடன் பேச துவங்கினாள்.
‘என்ன சிக்கி என்னை மறந்துருப்பியா? அண்ணா சொல்றான்’ என்றவள் கேள்விக்கு வசிகரனமான புன்னகையை பதிலாக தந்து கொண்டிருந்தான் அவன்.
‘அவனுக்கு என்ன தெரியும். சின்ன வயசுலயே நாம கல்யாணம் பண்ணிட்டோம்னு. (எதே…. கல்யாணம் முடிஞ்சுதா…….)
சரி…. சரி…. அது விளையாட்டு கல்யாணம்தான். ஆனா அது அப்படியே என் மனசுல பதிஞ்சுடுச்சு. அப்போல இருந்து என் மனசுல நீ மட்டும்தான் இருக்க.
நம்மளோட பிரிவு கூட உன்னை என்கிட்ட இருந்து பிரிக்கல. உன்னை நேர்ல பார்க்கணும். என்னை நீ முதன் முதல்ல பார்க்கும்போது என்ன ரியாக்ட் பண்றன்னு நேர்ல பார்க்கணும்னுதான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். நான் உனக்காக காத்திட்டு லூசு மாதிரி உன் போட்டோ கூட பேசிட்டு இருக்கேன். நீ என்ன பண்ணிட்டு இருக்க.
சிக்கி……. எனக்கு இப்போவே உன்னை பார்க்கணும் போல இருக்குடா. சீக்கிரமா இந்தியா வரேன். அங்க ஒவ்வொரு இடமும் உன் கைய புடிச்சுட்டே சுத்தி வரணும்.
உன் தோளுல சாஞ்சுட்டு கடல் அலைய ரசிக்கணும். ஊரே பொறாமை படற ஜோடியா நாம இருக்கணும். உன்னை பார்க்க முடியாம போன இந்த பதினஞ்சு வருஷங்களுக்கும் சேர்த்து ஈடு செய்யற மாதிரி நல்லா சுத்தி என்ஜாய் பண்ணிட்டு அப்புறம்தான் கல்யாணம்.
அப்புறம்……உன்னை மாதிரி ஒன்னு…இல்ல…இல்ல…மூணு பையன்…. என்னை மாதிரி ரெண்டு பொண்ணு. போதும் இதுக்கு மேல வேண்டாம். அளவான குடும்பம் அழகான குடும்பம். உனக்கு ஓகேவா’ என்று பேசி கொண்டிருந்தவள் மனம் முழுவதும் காதல்…. காதல்…. காதல்…. மட்டுமே.
நினைவு தெரிவதற்கு முன்பே அவள் மனதில் பதிந்து போனவனின் மீது அளவில்லாத காதல் கொண்டவள் அவனோடு வாழ போகும் காதல் வாழ்க்கையை எதிர்பார்த்து கொண்டு இருப்பவள் மனதை ஆணவன் அறிவானா?
மேலும் சிறிது நேரம் அந்த நிழல் உருவத்திடம் பேசியவள் “ஓகே சிக்கி குட் நைட் எனக்கு தூக்கம் வருது” என்றுவிட்டு தலையணையை அணைத்து கொண்டு தூங்க துவங்கினாள்.
சிறு வயதில் இருந்து அவன் ஒருவனை மனதுள் கணவனாகவே நினைத்து கனவில் காதல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறாள் பேதை.
நிழல் உருவத்தில் இருந்தவனோ இந்தியாவில் அந்த பெரிய ஐடி கம்பெனியில் பெண்கள் புடை சூழ சிரித்து பேசி கொண்டு இருந்தான். அந்த கம்பெனியில் வேலை செய்யும் அனைத்து ஆண்களின் வயித்தெரிச்சலையும் கொட்டி கொள்ளும் ஆண் அழகன்.
அந்த கம்பெனியில் வேலை செய்யும் அனைத்து பெண்களுக்கும் கனவு நாயகன் அவன்தான் ஹர்ஷ வர்தன்.
ரேவதி, ராஜ் தம்பதிகள் சென்னையில் இருந்தப்போது அவர்கள் பக்கத்து வீட்டுகாரர்கள்தான் நந்தகிருஷ்ணன், பத்மாவதி தம்பதி இவர்களுக்கு ஹர்ஷவர்தன், மித்ரா என்ற இரண்டு குழந்தைகள்.
ராஜ் குடும்பமும், கிருஷ்ணா குடும்பமும் நல்ல நண்பர்களா பழகி வந்தனர். நட்பு அடுத்த நிலைக்கு சென்று உறவினர்கள் ஆக ஆசை கொண்ட இரு குடும்பமும் தங்கள் இரு குழந்தைகளுக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று பேசி வைத்து கொண்டனர். இதை தாயிடம் ஏதோ பேச வந்த ஹாசி கேட்டுவிட அப்போதிலிருந்து அவள் மனதில் ஹர்ஷா பதிந்து போனான்.
நாட்கள் அதன் போக்கில் செல்ல ராஜ்ஜிற்கு அமெரிக்கா செல்ல கம்பெனி மூலமாக வாய்ப்பு கிடைக்க அவர்களும் கிளம்பிவிட்டனர்.
இரு குடும்பமும் பிரிந்து இருந்தாலும் அவ்வபோது போன் செய்து பேசி கொண்டுதான் இருக்கின்றனர்.
இப்போது மித்ரா, ஹர்ஷா இருவரும் படிப்பு முடிந்து ஐடி கம்பெனியில் வேலை செய்து கொண்டு இருக்கின்றனர்.
மித்ரா போன வாரம்தான் வேலை விஷயமாக அமெரிக்கா வந்துவிட்டு இந்தியா கிளம்பியிருந்தாள். அவளை பார்த்தவுடன் நிரஞ்சனுக்கு பிடித்துவிட சில பல குட்டிகரணங்கள் அடித்து அவளிடம் சம்மதமும் வாங்கி அவர்களது காதல் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது.
ஹாசி தன்னவன் தன்னை நேரில்தான் முதல் முறை பார்க்க வேண்டும் என்று அவளது போட்டோவை கூட அவர்களுக்கு அனுப்பியது இல்லை. வீடியோகாலில் போன் செய்து பேசுபவள் தன்னவன் வருவது தெரிந்தாலே எதாவது சாக்கு சொல்லி ஓடிவிடுவாள்.
ஆனால் அவன் மற்றவர்களுடன் பேசுவதை ஓர கண்ணால் பார்த்து ரசிப்பாள்.
ராஜ் ஹாசி இந்தியா வரும் விஷயத்தை கிருஷ்ணா குடும்பத்திடம் சொல்லிவிட அவர்களும் பல வருடம் கழித்து வரும் ஹாசியை பார்க்க ஆவலுடன் காத்திருக்க துவங்கினர்.
ஹாசிக்கு எப்போதையும்விட அந்த ஒரு வாரம் ரொம்ப மெதுவாக செல்வது போல் இருந்தது.
‘என்னடா இது நாள் போகவே மாட்டேன்னு நிக்குது. ஒரு கயிறு இருந்தா குடுங்கடா ஒரே இழு இழுத்து ஒரு வாரத்தையும் ஓட வைக்கறேன்’ என்ற நிலையில் சுத்தி வர,
மார்க்கோ ஹாசியை பார்க்கும் போதெல்லாம் காதல் தோல்வி பாடல் பாட,’கடவுளே இந்த கொசு தொல்லை தாங்க முடியலையே என்ற ரேஞ்சில் அவனை பார்த்துவிட்டு கடந்து சென்றாள்.
அடுத்த நாள் காலை பிளைட் என்ற நிலையில் மகளை அழைத்த ராஜ் “ஹாசிம்மா பாத்து பத்திரமா போகணும். அங்க உன்னை வீட்டுக்கு கூட்டி போக ஹர்ஷா வருவான். வேலை முடிஞ்ச உடனே கிளம்பி வந்திடனும். அங்க யாருக்கும் தொந்திரவா இருக்க கூடாது. புரியுதா?.
ஹாசி, “புரியுதுப்பா. ஆனா….. அங்க ஏன்ப்பா என்னை போக சொல்லறீங்க. வேற எதாவது ஹாஸ்டல் பார்க்கலாம்ல” என்று நல்லபிள்ளை போல் சொன்னவளை,
‘நீ அவளோ நல்லவ இல்லையே என்பது போல் பார்த்தான் அவள் அண்ணன்’
“எங்க? கிருஷ்ணா கேட்டாதானே நீ இந்தியா வரேன்னு தெரிஞ்ச உடனே இங்கதான் தங்கணும்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டான். நீ கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோம்மா”.
“சரிப்பா உங்களுக்காக நான் அங்க தங்கறேன். நீங்க சொன்னதுக்காக மட்டும்தான்” என்று சொல்லி தந்தையை அணைக்க,
அவள் அண்ணனோ ‘எது….. அப்பக்காக நீ அங்க தங்குறியா . இந்த வேலையே உன் ஆள பார்த்து அவன் வீட்ல தாங்குறதுக்காக நீ உருவாக்குன வேலைனு தெரியாம இந்த தகப்பன் வேற ஓவரா நெஞ்ச நக்குறாரே’ என்றவன் மனதில் புலம்ப,
அப்போது அங்கு வந்த அவன் தாய் ரேவதி “ஹாசிம்மா இது வரை உன்னை நாங்க பிரிஞ்சதே இல்ல. இப்போ ஒரு வருஷம் உன்னை எப்படி பிரிஞ்சு இருக்க போறோம்னு தெரியலையே என்று அழ, ராஜ் கண்களும் கலங்கி போய்தான் இருந்தது.
மூவரும் அணைத்து கொண்டு நிற்பதை பார்த்த ரஞ்சன் கடுப்பாகி “உங்க ட்ராமாவ கொஞ்சம் நிறுத்தறிங்களா. நேரம் ஆகிடுச்சு வா கிளம்பலாம். அந்த பேகை தூக்கிட்டு வா. நான் முன்னால் போறேன்”.
ரேவதி, “டேய் என்னடா புள்ளைய பை தூக்க சொல்ற. நீ எடுத்துட்டு போடா. பாவம் இன்னொரு வீட்டுக்கு போற வரை அவ ஜாலியா இருக்கட்டுமே”.
ரஞ்சன், “ம்கூம்…. இப்படியே சொல்லிட்டு இருங்க. பேசாம நான் இன்னொரு வீட்டுக்கு பையனா போயிடலாம் போல. இவங்க பண்ற அலப்பறை தாங்க முடியல” என்றுவிட்டு பையை தூக்கி கொண்டு செல்ல,
ஹாசி தாய், தந்தையிடம் சொல்லிவிட்டு அண்ணனுடன் வந்து காரில் அமர்ந்து கொண்டாள்.
தன்னவனை பார்க்க போகும் ஆர்வம் அவள் கண்களில் தெரிய, அவளை முறைத்த ரஞ்சன் “ஏன்டி நீ எல்லாம் மனுஷியா. அம்மா, அப்பா, அண்ணன்னு எங்களை எல்லாம் விட்டுட்டு போறோமேங்கற பீலிங் கொஞ்சமாவது உனக்கு இருக்கா.
“ஏன் இல்ல. அதெல்லாம் நிறையவே இருக்கு. ஆனாலும் நாம என்ன பார்க்கவே முடியாத மாதிரி அந்த காலத்துலயா இருக்கோம். நினைச்சா வீடியோ கால் போட்டு பார்த்துக்கலாம் பேசிக்கலாம் எதுக்குடா அண்ணா கவலைப்படணும்”.
“நல்லா பேசற. ஆமா உன் ஆள வேற ஒரு பொண்ணு கரெக்ட் பண்ணிடுச்சுன்னா என்ன பண்ணுவ?”
“சோ சிம்பிள் உன்னை கொன்னுடுவேன்”.
“எதே…..” என்று அதிர்ந்து காரை சடன் பிரேக் போட்டு நிறுத்திய ரஞ்சன் “வை மீ……”
“ஏன்னா நீதானே இப்படி ஏடா கூடமா யோசிக்கற அதான். பாசிட்டிவ்வா யோசிடா அண்ணா. எப்போ பாரு லூசு போல பேசிட்டு” என்றவள் அண்ணனை முறைக்க,
அவனோ “அது சரி. தோணுனா சொல்ல மாட்டோமா. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்” என்றவனை என்ன என்பது போல் அவள் பார்க்க, காரின் பின் சீட்டில் இருந்த கவரை எடுத்து தங்கையிடம் கொடுத்தவன் “இது மித்துக்கு நான் குடுத்ததா சொல்லி குடு” என்று அசடு வழிய சொல்ல,
அண்ணனை நக்கலாக பார்த்தவள் “ஹலோ என் நெத்தில ஹாசி கொரியர் சர்வீஸ்னு போர்ட் எழுதி வச்சிருக்கனா என்ன? அதெல்லாம் முடியாது.” என்றவள் முன் அடுத்த கவரை எடுத்து வைத்தவன் இது உனக்கு” என்க,
அதை ஆர்வமாக வாங்கி பிரித்து பார்த்தவள் உள்ளே இருந்த ஐ போனை பார்த்து கண்கள் மின்ன அதை எடுத்து பார்த்தவள் “டேய் அண்ணா இது எனக்கா சூப்பர் டா. செம்மையா இருக்கு. பாக்கெட் மணியை சேர்த்து வச்சு நானே வாங்கணும்னு நினைச்சேன். நீ வாங்கி குடுத்துட்ட.
சரி…. சரி குடு அந்த பார்சலை என் அண்ணிக்கிட்ட கொடுக்கறேன்” என்றவள் அந்த பார்சலை வாங்கி பத்திரபடுத்தி கொண்டாள்.
ஒரு வழியாக பேசி கொண்டே இருவரும் விமான நிலையம் வந்துவிட காரில் இருந்து இறங்கிய இருவரும் உள்ளே சென்றனர்.
விமானம் செல்வதற்கான அறிவிப்பு வந்துவிட ரஞ்சன் தங்கையிடம் “ஹாசி நெகடிவ்வா பேசறேன்னு சொல்லாத அண்ணனா சில விஷயங்கள் நான் உனக்கு சொல்ல வேண்டி இருக்கு” என்றவனை அவள் அமைதியாக பார்க்க,
“ நீ நினைக்கற காதல் உனக்கு கிடைச்சுடுச்சுனா, அதை நினைச்சு சந்தோஷப்படற முதல் ஆளு நான்தான் ஆனா…..
சப்போஸ் ஹர்ஷா வேற பொண்ண லவ் பண்ணுன்னா நீ மனசு உடைஞ்சு எந்த தப்பான முடிவுக்கும் போக கூடாது. உனக்காக நாங்க எல்லாரும் இருக்கோம். அதை மனசுல வச்சு எந்த முடிவா இருந்தாலும் எடு” என்றான். தங்கையின் பல வருட காதல் தெரிந்ததால்.
அண்ணன் கை மீது தன் கையை வைத்த ஹாசி “அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. இருந்தாலும், உன் நிம்மதிக்காக நீ சொன்ன விஷயத்தைஏத்துக்கறேன்.
என்னோட காதல் உங்க காதல் விஷயத்துல இடைல வர கூடாது அதுவும் நியாபகம் வச்சுக்கோ” என்று சொல்ல, அவனும் சம்மதமாக தலையசைத்தான்.
மேலும் சற்று நேரம் பேசிவிட்டு அண்ணனிடம் விடைபெற்று சென்றவள், பல வருடம் கழித்து தன்னவனை பார்க்க போகும் ஆவலுடன் விமானத்தில் அமர்ந்தாள்.
அவ்வளவுதான் இன்னும் சற்று நேரத்தில் தன்னவனின் அருகில் இருக்க போகிறோம் என்ற உணர்வே அவளுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்த அங்கு வரும் ஏர் ஹோஸ்டஸ் பெண்ணிடம் சென்னை செல்ல இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது என்று கேட்டு கொண்டே இருக்க,
பொறுமை இழந்த அந்த பெண் ஹாசியை பார்த்தாலே ஓடி ஒழிந்து கொள்ள துவங்கிவிட்டார்.
வெகுநேர விமான பயணத்தின் பின் ஹாசியின் பொறுமையை வெகுவாக சோதித்து ஒருவழியாக சென்னை ஏர்போட்டில் வந்து இறங்கியது அந்த விமானம்.
ஹாசிக்கு இருக்கும் காதலும், ஆர்வமும் ஹர்ஷாவிற்கு இருக்குமா, அவளைபற்றிய எண்ணமாவது அவனுக்கு இருக்குமா அடுத்தடுத்த எபியில் பார்ப்போம்……