5

       இருவரும் கடைக்குள் செல்ல,  “நவீன் துளசியை பத்திரமாக அனுப்பிட்டியா”, என்று கேட்டார்.

    “பத்திரமா அனுப்பியாச்சுமா, உங்க அண்ணன் பொண்ண”, என்று பதில் அளித்தான் அவன்.,

அதே நேரம் குடும்பத்தில் பெரியவர்.,  “மாப்பிள்ளை நீங்க எதுவும் தப்பா நினைக்கலையே”, என்று கேட்டார்.

    “மாமா இதுல தப்பா நினைப்பதற்கு எதுவுமே இல்லை, அந்த பொண்ணு ஹெல்ப் கேக்கும் போது நீங்க ஹெல்ப் பண்ண தயங்கி இருந்தா கூட நான் போய் ஹெல்ப் பண்ணிடலாமா., அப்படி ன்னு தான் யோசிச்சேன்., ஏன்னா இங்க நடந்த கதை எல்லாம் தெரியும், தெரிஞ்சும் நம்ம ஹெல்ப் பண்ணி, நமக்கு சாதகமா இதுல ஏதாவது பண்ண முடியுமான்னு பார்க்கனும், அப்புறம் வருத்தப்பட்டு யோசிக்கிற மாதிரி  ஆகிற கூடாது இல்ல மாமா”, என்று சொன்னான்.

     அதே நேரத்தில் அவன் மனைவியானவள், அருகில் வந்து “ரொம்ப தேங்க்ஸ்” என்றாள்.

     “இதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லுவியா என்ன, உங்க அண்ணா வரட்டும் கேட்போம்”, என்று சொன்னான்.

     “அண்ணனுக்கு எல்லாம் எதுவும் தெரியக்கூடாது”, என்றாள்.

    “அம்மா நீங்க அண்ணனுக்கு போன் போட்டு சொல்லிடுங்க, அண்ணா போன் பண்ண மாட்டாங்க”, என்று நவீன் சொன்னான்.

          “டேய் ஒரு பத்து நிமிஷம் கழிச்சு பேசுவோம்டா”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே. அங்கிருந்து துளசியின் பாட்டியும் தாத்தாவும் வருவது தெரிந்தவுடன் இவர்கள் பேச்சை நிறுத்தி அமைதியாகி., துணி தேடுவது போல பார்த்துக் கொண்டிருந்தனர்.

     அருகில் வந்தவர்கள்., “எம்மா உங்க அண்ணன் மகளே காணுமா”, என்றனர்.

“என்னம்மா சொல்றீங்க”, என்று எதுவுமே தெரியாதது போல கேட்டவரிடம்,

      “ஆமாமா கல்யாணம் ன்னு நிச்சயதார்த்த புடவை எடுக்க வந்த பிள்ளை, பாத்ரூம் போறேன் ன்னு வந்து இருக்கா, இப்ப ஆள காணோம் ன்னு அங்க தேடிட்டு இருக்காங்க, இப்ப அண்ணங்காரன் வருவான், அதுக்கு முன்னாடி நீங்க இங்க இருந்து கிளம்பிருங்கன்னு சொல்லதுக்கு தான் வந்தேன்”, என்று சொன்னார்.

          அதற்கு  வீட்டில் உள்ளவர்களும், “அது தான் சரி, நாம் இங்கிருந்து கிளம்பி விடுவோம், நம்மை பார்த்தால் கூட கொஞ்சம் தான் உங்க அண்ணன் சண்டை போடுவான்”, என்று  துளசியின் அத்தையிடம் அவள் மாமா சொன்னார்.

     “வாங்க வாங்க போவோம், அவன் புத்தி தெரிஞ்சது தானே”, என்று சொல்லி விட்டு ஆளாளுக்கு கிளம்ப தொடங்கினர்.

    பாட்டியும் தாத்தாவும் அங்கும் இங்கும் தேடி நடந்து கொண்டிருந்தனர்.

கடை பெண்களிடம் “கேட்டா பாத்ரூம் போனாள் ன்னு மட்டும் சொல்லி இருங்கம்மா, வேற எதுவும் சொல்லாதீங்க”, என்று சொல்லிவிட்டு போனார்கள் நவீன் குடும்பத்தினர்.

    கட்டாய கல்யாணம் என்று ஒரு விற்பனை பெண்ணிடம் சொல்லி இருந்ததால், அந்த பெண் “நான் பாத்துக்குறேன், கட்டாய கல்யாணம் எல்லாம் ஒரு பொண்ணுக்கு எவ்வளவு கொடுமையானது தெரியுமா”, என்று சொல்லிவிட்டு “நீங்க போங்க”, என்று சொன்னாள்.

அவர்கள் அங்கிருந்து கிளம்பினர்.

     இவர்கள் கிளம்பி சற்று நேரத்திற்கெல்லாம் கடை  முழுவதுமாக அலசி தேடி இருந்தார் துளசியின் அப்பா.

        அங்குள்ள ஆட்களிடம் கேட்டனர். அங்குள்ள பெண்ணோ ஒரு பெண்  வந்ததாகவும் அவள் பாத்ரூம் எங்கே என்று கேட்டதற்கு தான் காட்டித் தந்ததாகவும் மட்டும் தான் சொன்னாள்.

கடையில் உள்ள சிசி கேமராவை எல்லாம் சோதனை செய்யும் போது அவள் அவ்வழியாக செல்வது மட்டும் தெரிந்தது இவர்கள் பேசிக் கொண்டிருந்த இடத்தில் கூட்டமாக இருந்ததால் அவளை ஏற்கனவே மறைத்தபடி பேசியதால் அங்கு எதுவும் தெரியவில்லை,  யார் முகமும் துளசியின் அப்பாவுக்கும் சரியாக தெரியாததால், அத்தோடு கடையிலிருந்து எப்படியோ கிளம்பி போய்விட்டாள், என்பதை தவிர அவர்களுக்கு வேறு எதுவும் தெரியவில்லை,

   “சரி போலீசுக்கு செல்லலாம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, துளசியின் அம்மா தான்,

    “பொறுங்க அவ பிரெண்ட்ஸ் எல்லாரிடமும் பேசுவோம், இவ ஏதாவது பேசி இருப்பா”, என்று சொன்னார்.

   அதற்குள் அவள் அப்பாவோ,  “இல்ல நாம இம்மீடியட்டா ஏர்போர்ட் போனோம் னா, கிடைக்க  வாய்ப்பிருக்கு, எங்கேயும் போயிருக்க மாட்டா, அவளுக்கு வேற பாதை எதுவும் தெரியாது, முக்கியமா பஸ்ல டிராவல் பண்றது எல்லாம் அவளுக்கு தெரியாது”, என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

     அதற்குள் அவர்கள் குடும்பம் இங்கிருந்து கிளம்பி அவர்கள் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது.

     அதே நேரம் போனில் அவனிடம் பேசிய துளசியின் அத்தை, “கிருஷ்ணா அவளை பாட்டி தாத்தா கிட்ட கொண்டு போய் விடுவதற்கு முன்னாடி, ஏதாவது துணிக்கடையில் நிறுத்தி இரண்டு செட் டிரஸ் அவளுக்கு தேவையானது எல்லாம் வாங்கிக்க சொல்லுடா”, என்று சொன்னார்.

      “ஏன் சித்தி  வர்றவங்களுக்கு அவங்களுக்கு தேவையானதை எடுத்துட்டு வர தெரியாதா”, என்று சொன்னார்.

    “டேய் கொஞ்சம் ஹெல்ப் பண்றா கிருஷ்ணா”, என்று சொன்னார்.

       “யார் சித்தி, யார் இவங்க,  எதுக்கு இவங்களுக்கு ஹெல்ப் பண்ண சொல்றீங்க”, என்று கேட்டான்.
மெதுவான குரலில் ஆனால் சற்று அழுத்தமாகவே பேசினான்.

“டேய் நான் சொல்றதை கேளுடா”, என்று சொல்ல,

    அவன் திரும்பி பார்க்க, அவளோ வெளியே வேடிக்கை பார்த்தபடி எந்த நினைப்பும் இல்லாமல் இருப்பவள் போல அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள்.

      “சரி வைங்க”, என்று சொன்னவன் திரும்பிப் பார்த்து,

        “உன் பெயர் என்ன”, என்று கேட்டான்.

   அவளோ ‘வாயே திறக்க கூடாது, இவன் கோபக்காரன்’ என்று சொன்னதை மனதில் கொண்டவள்,  ‘ஐயையோ பாதி வழியில் இறக்கி விட்டுட்டா, என்ன செய்ய’ என்று யோசித்தவள்.

  “தமிழ் பேச தெரியும் இல்ல, நவீன் ட்ட அவ்வளவு பேசின”, என்றான்.

      “நவீனா யாரு” என்று கேட்டாள்.

     “அது தான் வாலு அப்பிடி ன்னு சொன்னீயே”, என்றான்.

       “ஓகோ தம்பி பேரு நவீனா” என்று கேட்டவள்,
“ஆமா உங்க பேர் என்ன” என்று அவனிடம் கேட்டாள்.

   அவனும் “உன் பேர கேட்டேன்”, என்றான்.

    மீண்டும் திருதிருவென முழித்தவள்,  “அது சாரி உங்க கிட்ட வாய் திறக்க கூடாது ன்னு சொன்னாங்க”,என்று சொல்லிக்கொண்டு திரும்பி அமர்ந்து கொண்டாள்.

   “ஓகோ அப்படியா”என்றான் யோசனையாக,

      அவனைப்  பயந்தபடி லேசாக ஒரு பார்வை பார்த்தாள். பின்னாளில் அவன் முகத்தை சரியாக பார்க்கலையே என்று வருந்த போவது தெரியாமல்,

     அவனும் “ஹலோ என்ன பார்த்து பயப்பட தேவையில்லை, உனக்கு டிரஸ் வாங்கி கொடுக்கணும்னு எங்க சித்தி சொன்னாங்க, அதனால அங்க ஏதாவது ஒரு கடையில் நிப்பாட்டுறேன், உனக்கு தேவையான டிரஸ் எடுத்துக்கோ”, என்று சொன்னான்.

     ‘அச்சச்சோ நான் ஏர்போர்ட்ல தான விட சொன்னேன்., இவங்க தான் ஏர்போர்ட் போனா கண்டுபிடிச்சுடுவாங்கன்னு சொன்னாங்க, சரி இப்ப நான் என்ன பண்ண’, என்று யோசித்துக் கொண்டே தலையை மட்டும் ஆட்டினாள்.

    “நல்ல ஆள கொண்டு வந்து என் கையில விட்டாங்க பாரு”, என்றவன், வண்டியை வேகம் கூட்ட,

    “ஹலோ நான் நல்ல பேசுவேன்”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

    அருகில் இருந்த கடையில் நிறுத்தவும்.,  “இது எந்த இடம்”, என்று கேட்டாள்.

      “ஏன்” என்று அவன் கேட்டான் .

இல்ல நம்ம கிளம்பின இடத்திலிருந்து கொஞ்சம் டிஸ்டன்ஸ் தாண்டி வந்துட்டோமா.,  இல்ல  பக்கத்திலேயே சரவுண்டிங்கில் இருக்கோமா”, என்று கேட்டாள்.

     “இல்ல தள்ளி வந்துட்டோம், ஏன்”, என்றான்.

     “ஹப்பா அது போதும்”, என்று சொல்லி விட்டு அவனோடு கடைக்குள் சென்றாள்.

  ‘பதில் சொல்லுதா பாரு திமிரு பிடிச்சது’, என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

“உங்களுக்கு தேவையானது எல்லாம் வாங்கிக்கோங்க, நான் இங்க வெயிட் பண்றேன்” என்று சொன்னான்.

“எத்தனை எடுக்கணும்” என்று அவனிடம் கேட்டாள் .

   அவனும் “உங்களுக்கு என்னென்ன வேணுமோ வாங்கிக்கோங்க, இது என்ன எத்தனை ன்னு கேட்கிறீங்க”, என்றான்.

     மூன்று செட் உடைகளை மட்டும் வீட்டிற்கு அணியும் படி சாதாரண உடைகளாக எடுத்துக் கொண்டாள்.

   கையில் இருக்கும் பணத்தை மனதில் கொண்டு ‘ஐயோ இதுக்கே எவ்வளவு போகும் என்று தெரியவில்லையே’, என்று யோசனையோடு பில் பே பண்ணும் இடத்திற்கு வந்தாள்.

    அவனும் “நான் பே பண்ணிக்கிறேன் போங்க”, என்று சொன்னான்.

    “இல்ல வேண்டாம் நானே பே பண்ணிடுறேன்”, என்று சொன்னவன், எங்க சித்தி மட்டும் இல்ல அம்மாவும் சொல்லி இருக்காங்க,அதனால நானே பே செய்கிறேன்,  வெயிட் பண்ணுங்க”, என்று சொல்லிவிட்டு பணத்தை செலுத்தவும்,

        “கணக்கு வெச்சிக்கோங்க, நான் ரிட்டர்ன் பண்ணிடுவேன்”, என்றாள்.

       “உங்களுக்கு வாங்கி கொடுக்க சொன்னவங்க ட்ட கொடுத்துக்கோங்க”, என்றான்.

   இவளோ ‘அப்ப சரி’ என்று யோசித்துக் கொண்டே அவனோடு மீண்டும் காரில் பயணத்தை தொடங்கினாள்.

       அங்கிருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக பாட்டி வீட்டில் கொண்டு வந்து இறக்கிவிட, அதற்குள் பாட்டிக்கு ஏற்கனவே விஷயம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

  அவரோ வெளியே வந்தவர் காரில் இறங்கி தயங்கிய படி நின்றாள்.

       முன்னால் சென்ற கிருஷ்ணாவிற்கு பின் மெதுவாக சென்றவளை, அவன் திரும்பி பார்த்து “என்ன தயங்கி தயங்கி வர்றீங்க ஒழுங்கா வாங்க”, என்றவன்,

    “பாட்டி” என்று அழைத்த படி செல்ல,

     அவரோ “டேய் நில்லுடா அங்கேயே” என்று சொல்லி விட்டு வந்தார்.

     “என்ன பாட்டி” என்று இவன் கேட்டான்.

       அவனுக்கு பதில் எதுவும் சொல்லாமல் “வாமா, எப்படி இருக்க”, என்று கேட்டார் .

   “நான் நல்லா இருக்கேன், நீங்க”, என்று கேட்டாள் .

      “உங்களுக்கு இவங்களை தெரியுமா”, என்று பாட்டியிடம் கேட்டான்.

   “எனக்கும் தெரியாது, அவளுக்கும் தெரியாது, உங்க சித்தி சொன்னா, உங்க அம்மா சொன்னா, முக்கியமா நவீன் தான் பேசினான், அதனால தான் வா மா ன்னு கேட்கிறேன்,  அவளிடமும் நவீன் சொல்லித்தான் அனுப்பி இருப்பான், அதனால நான் கேட்டவுடனே அவளும் பதிலுக்கு கேட்கிறா,  இப்ப என்னடா உனக்கு டவுட்டு, வந்ததில் இருந்து ஏன் எப்படி ன்னு கேட்டுக்கிட்டே  இருக்குற”,என்று கேட்டார்.