அவர்கள் இருவரும் வெளியே வந்து சரியாக பின்வாசல் வரும் போது இவள் சற்று பதட்டத்தோடு அங்கு நிற்பதை பார்த்தவர்கள் ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்துக் கொண்டனர்.
“மாப்பிள்ளை அந்த பொண்ணு பயந்து போய் நிக்குதுடா., வருவோமா ஹெல்ப் பண்ணுவோமா, மாட்டோமான்னு, பாவம் என்ன பிரச்சனையோ., அவங்க அப்பா எந்தளவு கட்டாயப்படுத்தினாரோ யாருக்கு தெரியும்”., என்றான்.
“மாமா சும்மா இருங்க., எங்க அம்மாவோட அண்ணணைப் பத்தி தெரியாது உங்களுக்கு., லண்டன்ல வளரும் போது எங்க வீட்டுக் கதை எதையும் சொல்லி வளர்த்திருக்க மாட்டார்., ஒரு ரெண்டு நாள் கழிச்சு போய் விசாரிச்சு பாருங்க சொல்லுவாங்க., ஆனா பாருங்க எவ்வளவு பதட்டம் டென்ஷன்., நம்மள யாருன்னு கூட தெரியாம பேசாம வந்து பேசுறாங்க., எங்க அம்மாவ போட்டோல பார்த்துச்சாமா., பிளான் பண்ணி தப்பிச்சு வந்திருக்கேன் ன்னு சொல்லுறாங்க., பெரிய பிளான் தான்., ஏன் எங்களுக்கு ஒரு வார்த்தை போன் பண்ணி சொல்லி இருக்க வேண்டியது தானே”., என்று சொன்னவன். அவள் அருகில் வரவும் அவள் முகத்தில் ஒரு நிம்மதி பரவுவதை பார்க்கவும் அதையே கேட்டான்.
“ஐய்யயோ பாட்டி தாத்தா கிட்ட பேசறதுக்கே எங்க அம்மா கூடவே சுத்துவாங்க., பாட்டி தாத்தா கிட்ட என்னன்னு போய் நான் கேட்கிறது., பாட்டி தாத்தாக்கு எனக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லை என்கிறது கூட தெரியுமா தெரியாதா ன்னு கூட எனக்கு தெரியல”., என்றாள்.
“அவங்க கிட்ட போய் சொல்றதுக்கு உங்களுக்கு பயம்., நீங்க சொல்லியிருந்தீங்கன்னா., அட்லீஸ்ட் செய்கைல காட்டியிருக்கலாம்., ஒரு வார்த்தையோ இல்ல உங்க செயலில் சின்னதா ஒரு விருப்பமின்மையை காமிச்சிருந்தாலும் ஆச்சி தாத்தா கண்டிப்பாக ஹெல்ப் பண்ணி இருப்பாங்க., நீங்க ஹெல்ப் கேட்க தயங்கி இருக்கீங்க., வேற ஒன்னும் இல்ல”., என்று சொன்னான்.
“ஹலோ நீங்க என்ன விட சின்ன பையனா தான் இருப்பீங்க., இருந்தாலும் சொல்லுறேன் உங்களுக்கு என்ன தெரியும்., அங்க நடக்கிறது பத்தி” என்று கேட்டாள்.
“உங்க அப்பா லண்டன்ல இருக்கும் போது உங்களுக்கு எங்க ஃபேமிலியை பத்தி எதுவும் சொல்லி வளத்தாரா., இல்ல தானே அப்ப நீங்க இப்படித்தான் பேசுவீங்க”., என்று சொன்னான்.
அருகில் நின்று பார்த்தவன்., “டேய் என்னடா பண்றீங்க., அர்த்தமில்லாத ஆர்கியூமென்ட் இப்ப எதுக்கு., கார்ல ஏத்தி விடுவோம்., அவ போய் பத்திரமா சேர வேண்டிய இடத்தில் சேரட்டும்., அதுக்கப்புறம் பார்த்துக்கொள்ளலாம்”., என்று சொன்னவர்
“அங்க போன் பண்ணி சொல்லிருங்க” என்று சொன்னான்.,
“அக்கா கிட்ட சொல்லிட்டேன் மாமா., நீங்க வேலைய பாருங்க”., என்று சொன்னான்.,
“ஆமாடா அக்காவும் தம்பியும் பேசறதுத என்கிட்ட சொல்லிட்டு தான் பேசுறீங்க” என்று கேட்டார்.,
“ஆமாமா நாங்க சொல்லிட்டாலும் எங்க மாம்ஸ் உடனே வந்து செஞ்சிடுவீங்க”.,என்றான்.
“டேய் அந்த பொண்ண அனுப்பி விட்டுட்டு என்கிட்ட சண்டை போடு போடா” என்று சொன்னார்.
“ஓகே ஓகே சண்டெல்லாம் அப்புறம் போட்டுக்கலாம்”., என்று மாமனிடம் சொன்னவன்., “வாங்க வாங்க அந்த பக்கம் கிராஸ் பண்ணி போகலாம்”., என்றான்.
“என்னது கிராஸ் பண்ணனுமா” என்று கேட்டாள்.
“ஏன், இவ்வளவு ஷாக்” என்று கேட்டான்.
“ஐயோ இங்க அந்த ஜிப்ரா கிராசிங் லைனே இல்லையே., அப்புறம் எங்க போய் கிராஸ் பண்றது” என்று கேட்டாள்.
“இங்க எல்லாம் கிராசிங் லைன்ல எல்லாம் யாரும் கிராஸ் பண்றது கிடையாது., அப்படி வாங்க கொஞ்சம் டிராபிக் குறையற நேரத்துல டக்குனு கிராஸ் பண்ணி அந்த ரோட்டுக்கு போயிரலாம்., அங்க தான் கார் வரும், உங்களை அங்க தான் ஏத்தி விடணும்”., என்று சொன்னான்.
“எனக்கு கிராஸ் பண்ண தெரியாது” என்று சொன்னாள்.
அவளை திரும்பி பார்த்தவன்., “எல்லாம் தலையெழுத்து வாங்க எங்க கூட”., என்று சொன்னான்.
அருகில் இருந்த அக்காவின் கணவர் தான், “டேய் ஏன்டா இந்த பொண்ணுகிட்ட போட்டி போடுற., நீ வாமா எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல”., என்று சொன்னான்.
அதுவரை தோளில் சாய்ந்து அமைதியாக இருந்த குழந்தை இவளை மெதுவாக எட்டி பார்க்கவும் இவர் அந்த குழந்தையை பார்த்தபடி “க்யூட்” என்றாள்.
“அப்படியே அந்த பக்கம் வாங்க” என்று சொன்னவன் அவளை இவர்களுக்கு ஊடே நடக்க விட்டு ரோட்டை கிராஸ் செய்து கூட்டி சென்றான்.
அங்கு சென்று ஒரு மரத்தடியில் நின்றவுடன் சுத்தி முத்தி இளையவன் பார்க்கவும்., அவனைப் பார்த்தவள் “எதுக்கு இப்படி ஒரு மாதிரி முழிச்சிட்டு பார்க்கிறீங்க தம்பி”., என்று கேட்டாள்.
“ஹலோ நான் உங்களுக்கு தம்பி இல்ல”., என்று சொன்னான்.
“ஹலோ நான் இங்கே வளர்ந்திருந்தா நீ எனக்கு தம்பி மாதிரி தான் இருந்திருப்ப”., என்று சொன்னாள்.
“ஹலோ அதுக்காக தம்பி ன்னு சொல்லுவீங்களா” என்று கேட்டான்.
“என்ன தம்பி கூப்பிட்டேன்னா நீ ஒன்னும் அக்கா ன்னு கூப்பிடவே வேண்டாம் போ”.,என்று அவள் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“அப்படி எல்லாம் கூப்பிடுவேன் ன்னு நினைப்பு வேறயா” என்றான்.
“அம்மாடியோ இப்ப தான ரெண்டு பேரும் பார்த்தீங்க., அதுக்குள்ள ஏன்டா எலியும் புனையுமா சண்டை போடுறீங்க., உங்க அம்மாக்கும் அவங்க அப்பா பக்கம் தான் ஏதோ தகராறு., நீங்க ஏன்டா வாய்க்க தகராறு மாதிரி சண்டை போட்டுட்டு இருக்கீங்க., உங்க ரெண்டு பேருக்கும் இப்ப என்னடா தகராறு”., என்று கேட்டார்.
துளசியும் “சும்மா தான் எனக்கு அங்க வீட்டில் சண்டை போடுவதற்கு யாரும் இல்லையா., நான் தனியாவே வளர்ந்துட்டேன்., பிரெண்ட்ஸ் எல்லாம் சொல்லுவாங்க., அவங்க வீட்ல அவங்களோட சிஸ்டர் அன்ட் பிரதர்ஸ் கூட இருக்கிற ஆர்கியுமென்ட்ஸ் எல்லாம் சொல்லுவாங்களா., அப்ப நான் ரொம்ப பீல் பண்ணி இருக்கேன்., நமக்கு இந்த மாதிரி சண்டை போட யாரும் இல்லையே., ஆர்கியு பண்ண ஆள் இல்லையே, சேர்ந்து விளையாட ஆள் இல்லை ன்னு எல்லாம் பீல் பண்ணி இருக்கேன்., இவன் வயசு படியும் எனக்கு தம்பி மாதிரி தானே இருக்கான்”., என்று சொன்னாள்.
” ஹலோ மரியாதை கொடுத்து பேசுங்க” என்று சொன்னான்.
“சரிங்க தம்பி” என்று இவளும் நிதானமாக பேசினாள்.
பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கு தான் சிரிப்பு வந்தது. அதற்குள் தூரத்தில் கார் வருவது தெரிந்தவுடன்., “டேய் கார் வருதுடா., நீ பேசாத” என்று சொன்னார்.
“ஏன் பேசக்கூடாது” என்று கேட்டாள்.
“நீ சும்மா இரும்மா, பத்திரமா போய் சேர வேண்டிய இடத்தில் சேரணுமா, இல்லையா, அவனே ஒரு கோவக்காரன் அவன் கூட பத்திரமா நீ போய் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கினதுக்கு அப்புறம் தான் எங்களுக்கு நிம்மதி., பாதியிலே இறங்கிடாதே., அவன் ஏதும் கோபப்பட்டு பேசினால் கூட இறங்கிடாதே”., என்று சொன்னார்.
இவள் மெதுவாக தலையை ஆட்டிக் கொண்டு “யாரு அவங்க” என்று கேட்டான்.
இவளால் தம்பி என்று அழைக்கப்பட்ட அத்தை மகன் அவளை மேலும் கிழுமாக பார்த்தபடி “போக போக தெரியும் யாரு ன்னு”., என்று சொன்னான்.
” கார் வரட்டும் ஏத்தி விட்டுட்டு போறோம்”., என்றார்.
கார் வரவும் அவள் பின்பக்கமாக ஏற போக., “ஹலோ உங்களுக்கு யாரும் டிரைவர் கிடையாது., முன்னாடியே ஏறுங்க”., என்று சொல்லி கதவை திறந்து அவளை முன் பக்கமாக அமர வைத்து விட்டான்.
அதற்குள் இந்த பக்கமாக நின்ற அக்கா கணவன் அவளுக்கு அறிவுரை சொல்ல தொடங்கினார்.
“இங்க பாருங்க நீ போற இடத்தில பத்திரமா இருக்கணும்., அங்க வயசானவங்க தான் ரெண்டு பேர் இருக்காங்க., உங்க தாத்தா பாட்டி கூட இருந்த நான் எப்படி இருப்பியோ அப்படி இருந்துக்கோ., நல்ல டைப் தான்., அங்க போ உனக்கு எதுனாலும் போன் போட்டு எனக்கு கூப்பிட்டாலும் சரி இல்ல., இந்த வாயாடி இருக்கானே அவனை கூப்பிட்டாலும் சரி., பேசு”, என்று சொன்னான்.
அவள் தலையாட்டிக் கொண்டிருக்க., அதே நேரம் அந்தப் பக்கமாக சென்றவன் “அண்ணா இவங்கள தாத்தா பாட்டி ட்ட விட்ருவீங்களாம்., மீதிய அப்பா அப்புறமா பேசுவாங்களாம்., அப்பா சொன்னாங்க”., என்று சொன்னான்.
அவனும் “ஆமாடா அப்பா போன் பண்ணாங்க., யார் இது”., என்று கேட்டான்.
“அதெல்லாம் தெரியாது, அப்பா வந்து இவங்கள பாட்டி வீட்டுல விட சொன்னாங்க., இவங்களுக்கு இப்போ ஒரு பிரச்சனை., இவங்களுக்கு அந்த பிரச்சனையிலிருந்து வெளியே வருவதற்காக மட்டும் ன்னு இல்லாம எதுவா இருந்தாலும் அப்பா நீங்க வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் உங்ககிட்ட டீடையிலா சொல்லுவாங்களாம்., அது மட்டும் இல்லாம., அம்மா ஐ மீன் உங்க சித்தி உங்களை வந்து கால் பண்ண சொன்னாங்க., பேசிட்டு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க., சரியா, அப்புறம் இப்போதைக்கு அந்த லூசு கிட்ட எதுவும் பேசிடாதீங்க., அது பயங்கரமா ஆர்கியு பண்ணிட்டே இருக்கு., என்கிட்ட கூட என்னை யாருன்னு தெரியாம தம்பி தொம்பின்னு பேசி ஆர்கியு பண்ணிட்டே இருக்கு., சோ அது கிட்ட ரொம்ப பேச்சு வச்சுக்காதீங்க., அது கொஞ்சம் லூசு ன்னு நினைக்கிறேன்”., என்று சொன்னான்.
“ஏன்டா பார்க்க நல்லா தானே தெரியுது”., என்று சொன்னான்.
அவனும் திரும்பி பார்த்த படி நல்லதான் இருக்கும்., ஆனா அது கொஞ்சம் அப்படித்தான்., நீங்க பேச்சு மட்டும் எதுவும் கொடுக்காதீங்க”., என்று சொன்னான்.
“சரிடா., அது மட்டும் இல்லாம ஒரு பொண்ண ஏன்டா என்கூட அனுப்பி வைக்கிறீங்க”., என்று கேட்டான்.
“எல்லாம் நீங்க ஆஞ்சநேயர் பக்தன் ன்ற காரணம் தான்., கூட்டிட்டு போங்க”., என்று சொன்னான்.
” நல்ல கிண்டல் பண்ண கத்துக்கிட்டடா நீனு”., என்று சொல்லி விட்டு அவன் கிளம்ப தயார் ஆனான்.
சிரித்துக் கொண்டே “ஸ்டார்ட் பண்ணிடாத அண்ணா” என்று சொல்லிவிட்டு இந்த பக்கம் வந்தவன். “ஹலோ போற இடத்துல ஒழுங்கா வாலை சுருட்டி வச்சிட்டு உட்கார்ந்திருக்கனும்”., என்று சொன்னான்.
“ஹலோ எனக்கு வாலு இருக்குன்னு பார்த்தியா., உனக்கு இருக்க வாலை விட எனக்கு கம்மியா தான் இருக்கும்”., என்று இவள் பதில் பேசினாள்.
அவனும் இவர்கள் இருவரும் பேசுவதை வாய் திறந்து பார்த்தபடி., ‘என்னடா இந்த பொண்ணு இப்படி பேசுது., அவனும் அதிகமா பேசுறான்’ என்று மனதிற்குள் சொல்லி விட்டு அவனை சந்தேக கண்ணோடு பார்த்தான்.
அதே நேரம் இவளோ “தம்பி நீ வாலு தெரியும்., நீ வாய மூடிட்டு போ” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
“டேய் இப்ப நான் காரை ஸ்டார்ட் பண்ணனுமா, இல்ல இங்கே நிக்கனுமா”, என்று அவன் கேட்டான்.
“அய்யய்யோ நீங்க கிளம்புங்க கிளம்புங்க” என்று சொல்லி இருவருக்கும் டாட்டா காட்டி அனுப்பி விட்டு அவர்கள் இருவரும் கடைக்குள் சென்றனர்.