நிச்சயதார்த்த புடவை செலக்ஷன் மும்மரமாக நடந்து கொண்டிருந்தது. தள்ளி நின்றவள் மெதுவாக நகரத் தொடங்கினாள்.
“துளசி இங்கே வா” என்ற அம்மாவின் அழைப்பில் பதறியவள் தன்னை நிதானப் படுத்திக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள்.,
அவளைப் பார்த்தவர் வேகமாக அவள் அருகில் வந்து “ஏன் ஒரு மாதிரி இருக்க” என்றார்.
“ஆமா எங்க உங்க பாட்டி தாத்தாவ” என்று சேர்த்து கேட்டார்.,
“அந்த பக்கம் போனாங்க” என்று கையை ஒரு திசையில் காட்டியவள்., மறுபக்கம் நகர போனாள்.
“நீ இப்போ எங்க போற., வா
சேலை செலக்ட் பண்ணு”., என்று அழைத்தார்.
“ரெஸ்ட் ரூம் போயிட்டு வர்றேன், நீங்களே செலக்ட் பண்ணுங்க” என்றவள் அங்கிருந்து மெதுவாக நடந்து சென்றாள்.
” கொஞ்சம் இரு, அப்பா ட்ட சொல்லிட்டு நான் வேணும் னா உன்னோட வர்றேன் ” என்றார்.
“ம்மா, இதெல்லாம் போய் சொல்லுவீங்களா., அது மட்டும் இல்லாம கடைக்குள் இத்தனை லேடி ஸ்டாப்ஸ் இருக்காங்க., யார் ட்ட கேட்டாலும் வழி சொல்லுவாங்க., நான் போயிட்டு வர்றேன்., நீங்க போய் செலக்ட் பண்ணுங்க”., என்றவள் அவரைத் திருப்பி முதுகில் கை வைத்து தள்ளி அவர் சேலை எடுக்கும் இடத்திற்கு சென்ற பிறகே அங்கிருந்து நகர்ந்தாள்.
பின்புறம் திரும்பித் திரும்பிப் பார்த்தவள்., மெதுவாக நகர்ந்தது போல் தெரிந்தாலும் வேகமாக அங்கிருந்து நடந்து அடுத்த பகுதிக்கு சென்றாள்.
அங்கிருந்து சென்ற தாத்தா பாட்டியும் இங்கே எங்கேயும் இருக்கிறார்களா என்று சுற்றிப் பார்த்தவளுக்கு தன் கண்ணையே நம்ப முடியாத அளவிற்கு இருந்தது.
பாட்டி அங்கு ஒரு குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்தார். தாத்தாவும் அங்கிருந்த ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.,
ஏற்கனவே பாட்டி வீட்டில் போட்டோவில் பார்த்த முகமாக ஒருவர் நின்று இருக்க., அவர்களையும் பார்த்துக் கொண்டவள் ‘ஓஹோ இது அத்தை ஃபேமிலியா அதுக்கு தான் ரெண்டு பேரும் போன் பண்ணி பேசிட்டே வந்தாங்களா’ என்று நினைத்துக் கொண்டாள்.
ஒரு அலங்கார பொம்மை அருகில் நின்றிருந்தாள். அவள் நின்ற இடத்தில் இருந்து திரும்பிப் பார்க்க பட்டு செக்க்ஷன் தெரியவில்லை என்றதும் மனதிற்குள் நிம்மதி பெரும் மூச்சோடு மீண்டும் எட்டிப் பார்த்தாள்.
இங்கேயும் அனைவரும் பேசிக் கொண்டிருக்க., ‘இப்போது எப்படி தப்பிக்கிறது., இந்த பக்கமா போக முடியாது., திருப்பி அந்த பக்கமா போனா யாரும் பார்த்திரக்கூடாதே’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே தாத்தாவும் பாட்டியும் அங்கிருந்து கிளம்புவது தெரிந்தது.
என்ன செய்வது என யோசித்தவள்., ‘அம்மாட்ட சொன்னதே சொல்லிட்டு நகன்றுவோம்’ என்று பொம்மையிலிருந்து சற்று பின்னோக்கி நடந்தாள்.
அப்போது தான் அப்பகுதிக்கு வருவது போல வரவும் தாத்தாவும் பாட்டியும் அந்த பக்கம் வரவும் சரியாக இருந்தது.
தாத்தா யோசனையோடு அவளை உற்று நோக்க., பாட்டியோ சற்று பதட்டமாகவே “நீ எங்கம்மா இங்க வந்த” என்று கேட்டார்.
“நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வரலாம்னு வந்தேன்., நீங்க போங்க உங்களை தான் அங்க தேடுறாங்க” என்று சொன்னாள்.
பாட்டியும் தாத்தாவும் நகரும் போதே, “நீ தனியாவா வந்த” என்று தாத்தா கேட்டார்.
“தாத்தா அந்த பக்கம் பாத்ரூம் இருக்குன்னு சொன்னாங்க, போயிட்டு இப்ப வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
தாத்தா பாட்டியும் போவதை பார்த்துக்கொண்டே நின்றவள்., அவர்கள் தலைமறையவும் வேக வேகமாக அவர்கள் பேசிக் கொண்டிருந்த குடும்பத்தை நோக்கி நடக்க தொடங்கினாள்.
சற்றே வேகமாக படபடப்போடு வந்தவள் அருகில் வந்து நின்று அனைவரையும் ஒரு முறை பார்த்துக் கொண்டவள்.
“ஹலோ எக்ஸ்க்யூஸ் மீ., எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா”., என்று கேட்டாள். மற்றவர்கள் இவளை கேள்வியாக திரும்பிப் பார்த்தனர்.
தன் அப்பாவை விட கொஞ்சம் வயது கூடியவராக தெரியக் கூடிய ஒரு தம்பதிகளும்., அப்பாவின் தங்கை அவர் கணவர் என ஒரு தம்பதிகளும் நின்றனர். அவர்களோடு சிறு வயது தம்பதிகள் ஒருவரும் நின்றனர்., அத்தோடு 20 வயதில் மதிக்கத்தக்க ஒரு ஒருவனும் நிற்க., இவளை அனைவரும் கேள்வியாக பார்க்க., “ஓ சாரி சாரி இப்போ தாத்தா பாட்டி பேசிட்டு போனாங்க இல்ல” என்று கேட்டாள்.
“ஆமா” என்ற அவளது அத்தை “நீ யாருமா” என்று கேட்டார்.
“நான் யார் ன்னு தெரிஞ்சா தான் ஹெல்ப் பண்ணுவீங்களா., இல்ல னா மாட்டீங்களா”., என்று கேட்டாள்.
“நீ யாருன்னு தெரியாம நாங்க எப்படி ஹெல்ப் பண்ண முடியும்” என்று அவர்களும் பதில் கேள்வி கேட்டனர்.
தன்னுடைய பின்பக்கமாக யாரும் தெரிகிறார்களா என்று சற்று திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டவள்., “நான் முத்தரசு லதா அவங்களோட பொண்ணு., எங்க பாட்டி தாத்தா இப்ப ஜஸ்ட் முன்னாடி வந்து உங்க கிட்ட பேசிட்டு போனாங்க இல்ல”., என்றாள்.
அவள் அத்தையோ அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
இவளோ அவர்களை பார்த்து “உங்க போட்டோவ பாட்டி வீட்டுல பார்த்து இருக்கேன்., நீங்க அப்பாவோட தங்கச்சி ஐ அம் கரெக்ட்”., என்று கேட்டாள்.
“போட்டோவை பார்த்து உறவு முறையை தெரிஞ்சுக்கிற அளவுக்கு தான் உங்க உறவு இருக்கு., அதனால நீ இடத்தை காலி பண்ணு முதல்ல”., என்று அவர் சற்று கோபமாக சொன்னார்.
அவர்களிடம் “ப்ளீஸ் ப்ளீஸ் எனக்கு இந்த ஊர்ல யாரையுமே தெரியாது., நான் இங்க இருந்து எப்படி தப்பிக்கிறது ன்ற பிளானோட தான்., வீட்டில் இருந்து இங்க வந்தேன்., பட் பாட்டியும் தாத்தாவும் உங்க கிட்ட பேசுறத பாத்த உடனே கண்டிப்பா நீங்க ஹெல்ப் பண்ணுவீங்கன்னு நினைச்சேன்., எதிரிக்கு எதிரி நண்பன் தானே”., என்று கேட்டாள்.
“என்னது எதிரிக்கு எதிரி நண்பனா” என்று வேகமாக அந்த சிறு வயதுக்காரன் கேட்டான்.
“எஸ், எஸ்”, என்றவள் அவளையும் அவள் அத்தையையும் செய்கையில் காட்டினாள்.
பின்பு அவனிடம் “ஹாய்” என்று சொன்னாள்.
“என்னது ஹாய்., அப்படிலாம் நாங்க யாருக்கும் ஹாய் சொல்ல மாட்டோம்” என்று சொன்னான்.
“ஓகே ஓகே ஹலோ” என்று அவனிடம் சொன்னவள்.
“ப்ளீஸ் என்னை எப்படியாவது இங்கிருந்து மட்டும் தப்பிக்க வச்சிருங்க அது போதும் எனக்கு., இந்த ஊர்ல எதுவுமே தெரியாது., ஜஸ்ட் என்னை திருச்சி ஏர்போர்ட்ல விட்டா போதும்”., என்று சொன்னாள்.
“ஹலோ., நீங்க யாருன்னு இன்னும் முழுசா சொல்லல., முத்தரசு லதாவுக்கு பொண்ணுன்னு சொன்னீங்க., மூத்த பொண்ணா ரெண்டாவது பொண்ணா., உங்க பேர் என்ன”., என்று கேட்டான்.
“இல்ல இல்ல அவங்களுக்கு நான் ஒரே பொண்ணு தான்., என் பேரு துளசி” என்று அவர்களிடம் அறிமுகப்படுத்தவும் அங்கு உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர்.
“இது என்னடா வம்பா போச்சு’ என்று யோசனையோடு மீண்டும் திரும்பி பார்த்தவள்., “எனக்கு பேசுவதற்கு நேரம் இல்ல., சாரி, நீங்க ஹெல்ப் பண்றதுக்கு இஷ்டம் இல்ல ன்னு நினைக்கிறேன்., பரவாயில்லை ஓகே”., என்று சொன்னவள் அருகில் இருந்த கடைக்கார பெண்ணிடம் பேசத் தொடங்கினாள்.
“இங்க ரெஸ்ட் ரூம் எங்க இருக்கு” என்று கேட்டாள்.
அவர் ஒரு பக்கம் கையை காட்டினார்.
“இந்த மெயின் என்ட்ரன்ஸ் தவிர வேற ஏதாவது பாதை இருக்கா” என்று கேட்டாள்.
“வேற பாதையா., ஏன் நீங்க மெயின் ல போக வேண்டியது தானே” என்று கேட்டார்.
“இல்ல நான் மெயின் ல போக முடியாது., அதனால பின்பக்கமா போகணும்”., என்றாள்.
“எதனால” என்று கேட்ட படி சந்தேகமாக பார்க்க.,
“ஹலோ., என் கையில என் பர்ஸ் தவிர வேற எதுவும் கிடையாது., நான் இங்கிருந்து யார் கண்ணுக்கும் தெரியாம வெளிய போகணும்., ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க” என்றாள்.
“அந்த அளவுக்கு பிரச்சனையா., யாருக்கும் பயந்துட்டு போறீங்களா” என்று கேட்டார் கடை பெண்
“ஆமாங்க கட்டாய கல்யாணம்., அதிலிருந்து தப்பிச்சு போறதுக்கு என்ன வழி உண்டோ அதுதான் இது., கிடைச்ச வாய்ப்பில் நான் தப்பிக்க பார்க்கணும் இல்ல” என்று சொன்னாள்.
“படிச்ச பொண்ணு மாதிரி இருக்கீங்க., போராட வேண்டாமா., இந்த காலத்திலும் கட்டாய கல்யாணம் பண்றாங்களா., இந்த பக்கமா போனீங்கன்னா பாத்ரூம் இருக்கும்., அதை தாண்டி போனீங்கன்னா பின்வாசல் வரும்., பாத்ரூம் பாதை போற பகுதி என்ட்ரன்ஸ் வரைக்கும் உங்களுக்கு சிசி கேமரா இருக்கும்., அதுக்கப்புறம் கேமரா எதுவும் கிடையாது” என்று கேட்காததையும் சேர்த்து சொன்னார் கடைப் பெண்.,
“தேங்க்ஸ்ங்க” என்று சொல்லி அங்கிருந்து வேகமாக அவள் நடக்க தொடங்கவும்.,
அவள் அத்தை தான் மூத்த தம்பதியினராக இருந்த பெண்மணியிடம் “அக்கா சீக்கிரம்”., என்று சொன்னார்.
அவசரமாக அவளை பார்த்தவர்கள்., “துளசி ஏன் அவசரம் நில்லு கொஞ்சம்” என்று அழைத்தனர்.
“இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாலும் மாட்டிவிடுவேன்., சோ பய் நான் கிளம்புறேன்., நீங்க யாரும் எனக்கு ஹெல்ப் பண்ண மாட்டீங்கன்னு தெரிஞ்சிருச்சு., இட்ஸ் ஓகே”., என்று சொன்னாள்.
“அப்படி எல்லாம் மாட்டிட விட மாட்டோம்” என்று சொல்லி அந்த பக்கமாக சென்று அவளை சூழ்ந்து நின்று கொண்டனர்.
“யாருக்கும் தெரியாத அளவுக்கு நாங்க பாத்துக்குறோம்., இப்படி உட்காரு”., என்று சொல்லி அவளை ஓரிடத்தில் உட்கார வைத்தவர்கள். அவளை சுற்றி நின்றபடி “நீ எதுக்கு இப்ப தப்பிக்கணும்” என்று கேட்டனர்.
“ஹய்யோ இப்ப தான் ஹெல்ப் பண்றேன்னு சொன்ன அவங்க ட்ட சொன்னேன்., எனக்கு கட்டாய கல்யாணம் பண்ண பார்க்காங்க., எங்க அப்பா அந்த ஹிட்லர் கிட்ட இருந்து தப்பிச்சு போயிட்டு இருக்கேன்” என்று சொன்னாள்.
“என்னது உங்க அப்பா ஹிட்லரா” என்று அந்த பையன் சிரிக்கவும்.
“ஹிட்லர் கூட பரவால்ல போல., எங்க அப்பா அதைவிட மோசமா மாறிக்கிட்டு இருக்காரு., சோ இப்ப நான் தப்பிக்கணும் இங்க இருந்து., அதுக்கு என்ன வழின்னு தான் நான் தேடிட்டு இருக்கேன்., உங்களால முடியாதுன்னா விடுங்க., எங்கப்பா அங்க நிச்சயதார்த்த புடவை எடுத்துட்டு இருக்காரு., நான் இப்ப தப்பிச்சு போனா தான் உண்டு., இதுக்கு அப்புறம் எனக்கு தப்பிக்கிறதுக்கு வாய்ப்பே கிடையாது”., என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
அதைக் கேட்ட குடும்பத்தினர் ஒருவரை ஒருவர் பார்த்தபடி “நீ கொஞ்சம் இருமா” என்று சொல்லிவிட்டு வீட்டு ஆண்களோடு சென்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். அதில் இளம் தம்பதியராக சிறு கைக்குழந்தையுடன் இருந்தவர்கள் மட்டும் அவளோடு நின்றனர்.
மற்றவர்கள் சென்று பேசிவிட்டு வந்து “சரி இப்போ உங்களுக்கு நாங்க ஹெல்ப் பண்ணுகிறோம்., நீங்க பின் வாசல் வழியாகவே போங்க., அந்த பின்வாசல் முடியுற இடத்தில் நில்லுங்க” என்று அந்த பையன் சொன்னான்.
அவனை சந்தேகமாக பார்க்க., “ஹலோ நீங்க பயப்பட அவசியம் இல்ல., அந்த பக்கமா போய் நில்லுங்க., நாங்க கார் இப்ப வர சொல்றோம்., அந்த கார்ல ஏறி தப்பிச்சிடுங்க., ஆனா உடனே ஏர்போர்ட் போகாதீங்க, மாட்டிருவீங்க., உங்க அப்பா உங்களை காணலை னா நேரா ஏர்போர்ட் தான் வருவாரு., அதனால ஏர்போர்ட் போகாதீங்க., இப்போதைக்கு இரண்டு நாளைக்கு எங்களுக்கு தெரிஞ்ச இடத்துல உங்கள ஷேபா தங்க வைக்கிறோம்.,
அப்புறமா உங்களை தேடுற பிரச்சனை ல உங்கப்பா என்னென்ன பண்ணுவார் ன்னு தெரியாது., எல்லா பிரச்சனையும் முடிஞ்சதுக்கு அப்புறம் நீங்க கிளம்பி ஊருக்கு போலாம்” என்று சொன்னான்.
அதுவும் சரியாக இருக்க சரி என்று தலையாட்டியவள் அந்த பக்க வழியாக செல்ல தொடங்கும் போது.,
சிறு வயது பையனோ., இவளுக்கு அத்தை முறையானவளிடம் “என்னம்மா உங்க அண்ணன் பொண்ணு சரியான லூசா இருக்கும் போல., நம்ம சொன்ன உடனே சரின்னு மண்டைய ஆட்டிட்டு போகுது., எதுக்கு சொல்றோம் எதிரிக்கு எதிரி நண்பனா., இங்க நாம அவங்க பேமிலியோட டச் இல்ல., சண்டைக்காரங்களா இருக்கான்னு தெரிஞ்சும் நம்ம சொல்றதுக்கு எல்லாம் தலையாடுதே., இத நம்ம கடத்திட்டு போயிட்டோம்னா இது என்னம்மா பண்ணும்” என்று சொன்னான்.
“டேய் நாம தேடிப்போய் அவளை கூட்டிட்டு வரணும்னு நினைச்சதுக்கு, அவளா வழிய வர்றா., வரட்டுமே டா அப்புறம் பாத்துக்கலாம்”., என்று சொன்னார்.
அதே நேரம் பெரிய தம்பதிகளில் உள்ள பெண்மணி “அவளுக்கு எதுவும் தெரியாது ன்னு நினைக்கிறேன்., என்ன பண்ண உங்க அண்ணன் எதுவும் சொல்லி வளர்த்திருக்க மாட்டார் ன்னு நினைக்கிறேன்”., என்று சொன்னார்.
“ஆமா, இங்கு உள்ள கதை எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை”., என்று சொன்னார்.
“சரி, அதுக்கும் ஏதாவது ஒரு வழி பண்ணுவோம்”., என்று சொல்லி விட்டு அவர்களுக்குள் பேசத் தொடங்க அதற்குள் ஆண்கள் போன் பேசி விட்டு வந்தனர்.
“சீக்கிரம் போடா., அந்த பொண்ணு பின்வாசல் போய் இருக்கும்”., என்று சொன்னார்.
“சரி போறேன்” என்று சொல்லி அவன் கிளம்பவும்., அதே நேரம் அங்கிருந்த இளம் வயது தம்பதியரில் கணவனானவன் “மாப்பிள்ளை நில்லு., நானும் வரேன்” என்று சொல்லி விட்டு அவன் மனைவியிடம் “நானும் போறேன்., பாப்பாவ கொடு அப்பதான் யாருக்கும் சந்தேகம் வராது., நாங்க திரும்பி வரும் போது குழந்தைக்காக போனோம் ன்ற மாதிரி சொல்லிடலாம்” என்று சொல்லிவிட்டு குழந்தையை தூக்கிக் கொண்டு இருவரும் வெளியே சென்றனர்.