3
வீட்டிற்கு வந்து நான்கு நாட்கள் கடந்த நிலையில் அப்பா அன்று அதிக உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தார். காலை உணவின் போது தான் அவர் உற்சாகத்தின் காரணம் தெரிந்தது.
மாப்பிள்ளை வீட்டினர் இன்னும் இரண்டு நாட்களில் வருவதாக சொல்லிக் கொண்டிருந்தார்.
அதன் பிறகு துணி எடுக்க கடைக்கு போக வேண்டும் என்றும், திருச்சியில் உள்ள பெரிய கடையில் தற்போது நிச்சயதார்த்தத்திற்கு புடவை எடுப்பதாகவும்., காஞ்சிபுரத்தில் சென்று கல்யாணத்திற்கு துணிகள் வாங்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்.
உணவில் இரண்டு வாய் சென்றிருக்க மூன்றாவது வாயை., வாய்க்கும் வைக்காமல் கையில் வைத்தே இட்லியை கூலாக மாற்றிக் கொண்டிருந்தாள்.
துளசி நிமிர்ந்தே பார்க்காமல் இருந்தாள். சற்று நேரம் கழித்து மெதுவாக உண்ணத் தொடங்கியவளோ உணவைக் கொறித்த படியே யோசனைக்குள் சென்றாள். (chl.ca)
இந்த திருமணத்தை நிறுத்த எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வேன், என்று மனம் உறுதி எடுத்தது.
இந்தியா வந்து சேரும் வரை ஒரு பயமும் பதட்டமும் இருந்தது என்னமோ உண்மைதான்., ஆனால் இப்போது பயம் மனதிற்குள் இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் தைரியமாக இருக்க தொடங்கி இருந்தாள்.
ஏனோ தன்னால் இதிலிருந்து தப்பிக்க முடியும் என்ற எண்ணம் மட்டும் அவள் மனதில் வலுவாக இருந்தது.
தப்பிக்க வேண்டும் ஆனால் எப்படி என்பது தான் அவளுக்கு தெரியவில்லை., இத்தனை தூரம் மனதில் நம்பிக்கை இருக்கும் போது கடவுள் தனக்கு நிச்சயமாக வழி காட்டுவார் என்ற எண்ணத்தோடு தான் இருந்தாள்.
அவ்வப்போது நண்பர்களிடம் பேசிக் கொண்டாலும் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை., எதுவாக இருந்தாலும் தான் மட்டுமே முடிவு செய்ய வேண்டும்., பின்பே மற்றவர்களிடம் அதைப் பற்றி சொல்லலாம்., ஆனால் இந்த வீட்டில் இருக்கும் வரை நண்பர்களிடமும் தோழிகளிடமும் கூட தன்னால் மனம் விட்டு பேச இயலாது என்பது அவள் அறிந்ததே.,
ஏனென்றால் அவ்வப்போது அம்மாவும் அப்பாவும் அவளை கண்காணிப்பதை அவள் புரிந்து கொண்டாள். பாட்டி தாத்தாவிடம் கூட அதிகமாக பேச முடியாத சூழ்நிலை அவர்களிடம் பேசினாலாவது ஏதாவது வழி கிடைக்குமா என்று பார்த்தால்., பாட்டி தாத்தாவின் அருகில் இவள் சென்று அமர்ந்து பேச தொடங்கினாலே யாராவது வந்து இவர்களோடு அமர்ந்து கொள்வதை இப்போது வழக்கமாக வைத்துள்ளனர்.
எனவே இப்போது எல்லாம் அவர்களிடம் கூட சாதாரண பேச்சுவார்த்தையோடு நிறுத்திக் கொள்கிறாள்.
அவ்வப்போது பின்புறம் உள்ள தோட்டத்தில் சுற்றிப் பார்ப்பது வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தாள். தினமும் அந்த பக்கம் செல்ல அங்கிருக்கும் பறவைகளின் ஒலி அவள் மனதிற்கு இதமாக இருந்தது.,
அங்கிருக்கும் காற்று மட்டுமே அவளுக்கு சுதந்திரமாக உணர்வைக் கொடுக்க., தன்னை இப்படியே விட்டு விட்டால் கூட போதும் இங்கேயே இருந்து கொள்ளலாம் என்ற எண்ணம் மனதிற்குள் வலுக்கத் தொடங்கியது.
இந்தியா வந்து சேர்ந்த பிறகு அவளிடம் இருந்த பாஸ்போர்ட்டை அப்பா வாங்க மறந்து இருந்தாரா., அல்லது இங்கிருந்து இவளால் செல்ல முடியாது என்று நினைத்தாரோ என்னவோ., பாஸ்போர்ட் அவள் கையில் இருந்தது.
அதை பற்றி மறந்தது போல எடுத்து., தன் கையில் எப்போதும் செல்போனோடு கொண்டு செல்லும் பர்சில் வைத்து பத்திரப்படுத்தினாள்.
அதையும் மறைத்து வைத்தாள். செல்போனில் இங்கு வந்த பிறகு நண்பர்களுடன் பேசுவதற்காக வேண்டும் என்று வந்த மறுநாளே அடம்பிடித்து இங்குள்ள சிம்கார்டு ஒன்றை வாங்கி போட்டவள்., நெட் வசதி வேண்டும் என்று அடம் பிடித்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டாள்.
யாரிடமும் தொலைபேசியில் பேசவில்லை என்றாலும் அவ்வப்போது நண்பர்களோடு பேசுவது வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிய தான் செய்யும்.,
பொதுவாக வீடியோ கால் என்றால் அவர்களுடைய இரவு நேரத்தில் அழைக்கும் போது., இங்கே அது நடு இரவாக இருக்க., தன் அறையில் இருந்தே பேசிக் கொண்டாள்.,
சத்தத்தை ஹெட் போன் போட்டு அடக்கி இருந்ததால் வீட்டினில் யாருக்கும் தெரியாமல் தான் அவர்களை பார்ப்பதும் பேசுவதும்., மற்றபடி அம்மாவின் முன்னிலையில் பேசுவது சாதாரண வாட்ஸ் அப் காலில் பேசிக் கொள்வாள்.
நண்பர்கள் யாருக்கும் இவளைஎப்படி தப்பிக்க வைப்பது என்று புரியாத சூழலில்.,
இவளோ அப்பா சொன்ன அந்த துணி எடுக்கும் நாளை முடிவு செய்தாள்.
துணிக்கடையிலிருந்து தப்பித்து செல்ல ஏதாவது வழி இருந்தால் நன்றாக இருக்கும். இந்திய ரூபாயாக தன்னிடம் எதுவும் கிடையாது எப்படி செல்வது என்று யோசித்தவளுக்கு தன்னிடம் கார்டு இருப்பது நினைவு வந்தாலும் அதை வைத்து டிக்கெட் போட்டுக் கொள்ளலாம்.,
ஆனால் இங்கிருந்து பஸ்ஸில் செல்வதோ, வேறு எந்த டிரான்ஸ்போர்ட்டில் ஏர்போர்ட் செல்வதாக இருந்தால் கூட அவளுக்கு டிக்கெட் எடுக்க பணம் வேண்டுமே’ என்ற யோசனை யோடு எப்படி உதவி கேட்பது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
மாப்பிள்ளை வீட்டார் வருவதற்கு முதல் நாள் வீட்டில் பேசிக் கொண்டிருக்க.,
இவளோ “எனக்கு பிடித்த புடவையாக இருக்க வேண்டும்” என்றாள்.
அவள் அப்பாவோ “அதுதான் நாங்கள் எல்லோரும் வருகிறோமே” என்று சொன்னார்.
இவளோ “இல்லை எனக்கு பிடித்தது போல சிலவற்றை எடுக்க வேண்டும். அதனால் எனக்கு தனியாக கையில் கொஞ்சம் பணம் தாங்க” என்று கேட்டாள்.
“அவள் கல்யாணத்திற்கு டிரஸ் தானே எடுக்க கேட்கிறா”., என்று அவள் அம்மாவும் சொன்னார்.
அவள் கையில் தனியாக சிறிய தொகையாக இருந்தாலும் கையில் ஒரு தொகையை கொடுக்க., அதுவே அவளுக்கு போதுமானதாக தோன்றியது.
ஏனெனில் முதல் நாள் தான் திருச்சியில் இருந்து சென்னை செல்வதற்கு பிளைட் டிக்கெட் விலையை பார்த்து வைத்திருந்தாள்.
சரி இது போதும் இங்கிருந்து சென்னை செல்ல., அதன் பிறகு சென்னை சென்று அங்கு தன் நண்பர்கள் யாரையாவது வைத்து ஊருக்கு செல்வதற்கு டிக்கெட் போட்டுக் கொள்ளலாம் என்ற தைரியத்தோடு அமர்ந்திருந்தாள்.
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் வாழ்க்கை வேறு விதமாக அல்லவா சென்று விடும்., அது தெரியாமல் தான் அனைவரும் அவரவர் மனதிற்கு தோன்றியபடி பலவிதமான திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறோம்.
துளசியும் அப்படித்தான் அவளுக்கு தோன்றிய திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்க மாப்பிள்ளை வீட்டினரும் வந்து சேர்ந்ததாக தகவல் வந்தது.