இங்க என்ன பன்றீங்க அண்ணா என்ற கதிரின் வார்த்தையில், இருவரும் திரும்பி பார்க்க, இவன் யாரை அண்ணானு கூப்புடுறான் என்று அன்பு யோசிக்க, பரிதி வா கதிர், ப்ரோ கிட்ட பேசிகிட்டு இருந்தேன் என்று கூற…………. கதிர் என்ன? என்று அதிர்ந்தவன் ஏதோ சொல்ல வர…………..
அதுவரை அவனிடம் விளையாட்டாக பேசிக்கொண்டு இருந்த, பரிதி என்னைய உனக்கு யாருனு தெரியலையா? மிஸ்டர். அன்பு என்று அவன் கேட்க இதுவரை அவன் பேசிய தோனி இது இல்லை என்று புரிந்தவன், அவனை யார் என்பது போல் பார்க்க…………………….. இதோ இப்படி யாரும் வீட்டில் இல்லாமல் இருக்கும் போது, யாரு கண்ணுலயும் படமா தப்பிச்சி போகனும் நினைக்கிறயே, இந்த நிமிசம் வரைக்கும் இந்த வீட்டில் இருக்கறது முள் மேல இருக்க மாதிரி இருக்கியே, எல்லாத்துக்கும் மேல நிம்மதி இல்லாம சுத்திட்டு இருக்கியே அது எல்லாத்துக்கும் காரணமானவனே நான் தான்……………………
புரியலையா? அதாவது பெதுவா, நாம வாழ்க்கையில் நம்ம வில்லனுக்கு, யாரு ஹீரோ தெரிஞ்சி இருக்கும் ஆனா பாரு கதையே முடிய போது உனக்கு ஹீரோ யாருனு இன்னுமும் தெரியல? அதனால தான் நீ இப்படி இருக்க………………….. இன்னும் விளக்கமா சொல்லனும்னா……………. இந்த வீட்டோட ஒரிஜினல் மாப்பிள்ளை நான் தான்……………………… என்றவன் தன்னை காட்டி மிஸ்டர். கதிரழகி……………………… என்று சொல்லிவிட்டு சிரிக்க. கேட்டு இருந்த அன்புவுக்கு இவனா………………. என்று தான் இருந்தது. ஏன் என்றால் அவன் பரிதியாக இருக்க கூடும் என்ற அனுமானம் கூட அவனுக்கு இல்லை.
அவனை பெருத்தவரை அவர் இருவரும் மாடியில் இருக்க, இப்போது வீட்டில் கனேசன் மற்றும் கதிர் இல்லை, அக்கா சமையகட்டில் இருப்பார் என்று தெரியும், இவர்கள் பார்வையில் படும் முன் வெளியேறிவிட வேண்டும். என்பது தான் அவன் எண்ணமாக இருந்தது. ஆனால் அவனிடமே இப்படி சீக்கிக்கொள்ளுவோம் என்று நினைக்கவில்லை அவன். பரிதி வந்து இவனிடம் பேசிய போது யார் இவன் என்ற எரிச்சலில் தான் பார்த்து இருந்தான் பரிதியை…………….
ஆனால் பரிதிக்கோ அப்படி இல்லை, அவன் அன்புவிடம் நேரடியாக பேசியது இல்லையே தவிர அவனை ஆதி முதல் அந்தம் முதல் தெரிந்து வைத்து இருந்தான், அதனால் தான் தனக்கு சாதகமாக காய்களை நகர்த்தி மதிழயகியை தன் சொந்தம் ஆக்கிகொண்டான்.
கதிர் வந்துவிட்டது ஒரு அதிர்வு என்றால், இவன் தான் பரிதி என்பது அவனுக்கு அடுத்த அதிர்ச்சி. அப்போ இவ்வளவு நேரம் இவன் என்னைய வேணுமுன்னு வெறுப்பு ஏத்தி இருக்கான் என்று எண்ணியவனுக்கு மனதில் வன்மம் பெங்கியது. இன்னும் அங்கு நிற்க விரும்பாதவன், அவர்களை தவிர்த்துவிட்டு போக பார்க்க, என்ன மிஸ்டர். அன்பழகன் அதுக்குள்ள எங்க போறிங்க, என்று அவன் தோள் மேல் கை போட்டவன், அவனிடம் பேச முனைய அவன் கையை தட்டிவிட்டவன், என்னடா பூச்சாண்டி காட்றீங்களா? என் கண்ணு மறைவா எல்லாத்தையும் செய்து இந்த முறை நீங்க ஜெயிச்சு இருக்கலாம். ஆனா நான் இதை இப்படியே விடமாட்டேன். மறுபடியும் மேல அப்பீல் பன்னுவேன். எனக்கு இல்லைனா அது யாருக்கும் இல்லை…………………….
பார்க்கிறேன் எப்படி நீ வாழபோறேனு, எங்க அவ என் பழயை பெண்டாட்டி, அது எப்படி புது கல்யாணம் பன்னி கொஞ்சம் கூட வெக்கம் இல்லாம, உன்னைய கூட்டிகிட்டு, இந்த வீட்டு வாசபடி மிதிக்க முடியுது அவளால? என்று அன்பு ஏளனமாக கேட்க…………. கேட்டு இருந்த கதிருக்கு அவனை இழுத்து போட்டு அடிக்க வேண்டும் போல் இருந்தது. அதை புரிந்து அவன் கையை அழுந்த பற்றினான் பரிதி…………….. ம்மம்மம்மம்மம்மம நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, நல்ல மனிதனுக்கு ஒரு சொல் அப்படினு ஒரு பழமொழி இருக்கு தெரியுமா? கதிர் ஆனா மிஸ்டர் அன்புக்கு அந்த மாதிரி ஒரு சொல் சொன்னா புரியாது போல……………… சரி ஸாருக்கு புரியர மாதிரியே சொல்லிடலாம்.
என்றவன், உனக்கு என்ன ஒரு 30 வயசு இருக்குமா? இன்னும் இருக்க சொந்தமா ஒரு வீடு கூட இல்லை? சரி அதை விட் சொத்து பத்து ஏதாவது இருக்கா? ம்மம்மம்மம்மம்மம வாய்ப்பு இல்ல, இன்னும் உன் அக்காவ கட்டி கொடுத்த வீட்டில் ஓசில தங்கிட்டு, இது உன் வீடுங்கற மாதிரி பில்டப் பன்னிட்டு இருக்கு உனக்கே இவ்வளவு இருக்கும் போது. மழை, வெயில், பணி பாக்காம நாட்டுகாக உழக்கற நான் எவ்வளவு பேசனும். என்ன சொன்ன எங்கள வாழ விடமாட்டியா? அப்பீளுக்கு போவியா? என்னனு போவ, நான் யாருனு தெரியும் முன்னாலேயே உன்னைய மண்ட காயவிட்டவன் நான்…….. இப்போ பொனமாயிடுவ ஜாக்கிறதை என்றவன். உனக்கு, ஒரு விஷயம் தெரியுமா? கோர்ட்டுல நாங்க கொடுத்த உன் ரிப்போர்ட்டு எல்லாம் உண்மை தான். என்றான் அன்புவின் தலையில் இடியை இறக்கியபடி…………………….
அதுவரை அவன் பேசும் போது திமிராக நின்று இருந்தவன், பரிதி சொன்ன செய்தியில் ஏய்……… என்னடா என்னைய ஏதும் பன்ன முடியலைனு………………… போட்டு பார்க்கறியா……………….. என்றான் கோவமாக………………….. அட உன்னைய போட்டு பார்த்து எனக்கு என்ன வரப்போகுது…………. கேஸ் சம்பந்தமா, உன்னைய பத்தி விவரம் எடுக்கும் போது நீயும், உன் இன்னாள் பொண்டாடியும், குழந்தைக்காக டிரிட்மன்ட் எடுக்கறிங்கனு தெரிய வந்தது. அந்த ஆஸ்பிட்டல்ல உன்னோட எல்லா டேட்டாவையும் எடுத்து பார்த்தேன், நிசமாகவே உனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு கம்பி, அன்னிக்கு உனக்கு அடிபட்டதுக்கு நீ சரியா மருத்துவம் பார்க்கலை, அதோட விளைவு தான் இது, அதாவது உன்னால் ஒரு குழந்தைக்கு ம்மம்மம்மம்மம்முமு என்று பரிதி தலையை ஆட்டி கைகளை விரிக்க, டேய் என்ன சொன்ன என்று அன்பு அவன் சட்டையை பிடித்துவிட்டான்.
இதுவரை எத்தனையே செய்தும் மனம் கலங்காதவன், எந்த செயல் செய்யும் போதும் அதை பற்றி கண்டுக்கொள்ளாதவன், இன்று உடைந்து போய் இருந்தான். கதிருக்குமே இந்த தகவல் புதியது தான். எதற்க்கும் அன்பு இப்படி இருந்து அவன் பார்த்து இல்லை, எப்போதும் அவன் பார்வையில், செயிலில் ஒரு திமிரும் தெனாவட்டும் இருக்கும், அவன் இப்படி இருந்து இன்று தான் பார்க்கிறான். ஏய் நீ பொய் சொல்ற என்றான் அன்பு பரிதியிடம். உன்கிட்ட பொய் சொல்லி எனக்கு என்ன வர போகுது. இல்ல அப்படிய நான் பொய் சொன்னாலும் நீ ஒரு டெஸ்டு பன்னா அதை கண்டுபிடிக்க முடியாதா என்ன? இவ்வளவு பன்ன எனக்கு உன்னைய இந்த வீட்டை விட்டு வெளிய போக வைக்க எவ்வளவு நேரம் ஆகும். ஆனா நான் ஏன் அதை செய்யல தெரியுமா? எந்த சொத்துக்கும், சுகத்துக்கு ஆசைபட்டு எல்லாத்தையும் பன்னியே அதை வைச்சி உன்னால ஒன்னும் பன்ன முடியாது. தெரிஞ்சோ, உன நிலமை எப்படி இருக்கும், இது உனக்கு மட்டும் தன்டனை இல்ல தெரிஞ்சே உன் தப்புக்கு எல்லாம் துனை போன நந்தினிக்கும் இது தண்டனை தான், அவளும் இந்த வசதியான வாழ்க்கைக்கு ஆசைபட்டு தானே தன் தோழிக்கே துரோகம் செய்தா…………….
அப்படியே உங்களுக்கு குழந்தை பிறந்தாளும், அது உன் குழந்தையா இருக்காது…………. நீங்க ஆசைபட்ட வாழ்க்கை,சொத்து, வீடு எல்லாம் இருந்தும், உன்னால எதையும் முழுசா அனுபவிக்க முடியாது. இது எல்லாம் உன் கண்ணு முன்னாடி இருக்கும் ஆனா ஏதும் உனக்கு மனநிறைவை தராது, சந்தோஷம் தராது, இனி உன் வாழ்க்கை முழுக்க இந்த குறை உன்ன தொடர்ந்துகிட்டே இருக்கும்.
மதி வயற்றியில் இருக்கும் போது அவளை கலைக்க சொன்னியாம். இப்போத பாத்தியா……………….. உனக்கு என்ன நடந்ததுனு……………….. இது எல்லாத்தையும் நீ இந்த வீட்டில் இருந்து அனுபவிக்கனும். அதுக்காக தான் உன்னைய இங்க வீட்டு வைச்சி இருக்கேன். இதை விட உனக்கு வேற பெரிய தண்டனை ஏதும் தரமுடியாது.
இன்னிக்கு எதுக்கு தெரியுமா கதிரழகியை இங்க கூட்டிகிட்டு வந்தேன், இந்த வீட்டைவிட்டு, இந்த ஊரைவிட்டு அவ போகும் போது, அவ மனசுல இருக்க மிச்ச சொச்ச கவலை எல்லாம் மறந்து, சந்தோஷமா அவ வரனும். இது அவளோட வீடு, அவ பெண்ணோட வீடு, அந்த நினைப்பு அவளுக்கு வரனும். இவ்வளவு தப்பு பன்னிட்டு நீயே எந்த உருத்தலும் இல்லாம நீயே இந்த ஊருல, இந்த வீட்டில் இருக்கும் போது அவ எதுக்கு மனசு கஷ்டபட்டு போகனும். இந்த வீட்டில் இருந்து அவ கிளம்பும் போது அவ மனசுல சந்தோஷமும் , நிறைவும் இருக்கனும். இனி உன்னால இங்க இருந்து போகவும் முடியாது, இங்க இருக்கவும் முடியாம தினம் தினம் நீ சாகனும்.
அது எப்படினு யோசிக்கிறயா…………… நந்தினிக்கு என்ன தான் உன் மேல் காதல் இருந்தாலும், இந்த வசதிக்கு தான் உன்னை கட்டிகிட்ட, இந்த வீடும் வசிதயும் விட்டு வர அவ ஒரு நாளும் சம்மதிக்க மாட்டா…………………….. இப்ப புரியுதா………… இனி என்னைய மீறி ஒரு அடி எடுத்து வைக்க நினைச்ச, இருக்க தடம் தெரியாம அழிச்சுடுவேன், உன்னைய பத்தி எல்லா விஷயமும் இந்த ஊருரில் போஸ்டர் இல்லாம பரப்பிவிட்டுவேன் பார்த்துக்க. என் வழியில் வராத வரைக்கும், உனக்கு நல்லது என்றவன் அவனை முறைத்துவிட்டு மேல சென்றுவிட்டான்.
மழை அடித்து ஓய்ந்தது போல் இருந்தது அன்புவுக்கு, உண்மை தான் நந்தினி இந்த வீட்டைவிட்டு போக ஒரு நாளும் சம்மதிக்க மாட்டாள். இனிமேல் எனக்கு வாரிசு இல்லையா…………….. அந்த நினைப்பே அவனுக்கு கசந்தது………….. இனி என்ன செய்து என்ன………… எல்லாம் கைவிட்டு போன நிலை. திரும்ப அறைகுள் போய்விட்டான்.
அதுவரை அதிர்ந்து பார்த்து இருந்த கதிர் பரிதியை தொடர்ந்து மேல போனான், அண்ணா நீங்க சொன்னது எல்லாம் உண்மையா? இது எல்லாம் அழகிக்கு தெரியுமா? காலையில் வரை தெரியாது, ஆனா இப்போ இங்க நம்ம பேசுறது எல்லாத்தையும் கேட்டுட்டு இப்பதான் ரூமுக்கு போனா என்றான் பரிதி. அவ என்று கதிர் ஆரம்பிக்க…………… அவளுக்கு இதுல சந்தோஷமும் இல்லை, வருத்தமும் இல்லை. ஆனா ஒரு மன நிம்மதி கிடைக்கும், அதுக்கு தான் அவளை இங்க கூட்டிட்டு வந்தேன், அவ கேட்களைனாலும், இங்க இருந்து போகும் முன் நானே எல்லாத்தையும் சொல்லி இருப்பேன் என்றவன், மேல அறைக்கு சென்றுவிட்டான்………………………………
வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்……………