கதிரழகி தூங்கிவுடன், சிறிது நேரம் அமர்ந்து அவளை பார்த்து இருந்தவன், அவள் தூக்கம் கலைக்காமல் அறையை வெறுமனே சாற்றிவிட்டு வெளியே வந்தான். இப்போது நேரம் 11 மணியை கடந்து இருந்தால், வெளியில் வெயில் சற்று அதிகமாக இருக்க, இங்கு இருக்க முடியாது என்று உணர்ந்தவன், கீழே வந்தான். அவன் கீழே வருவதற்குள், கதிர் கிளம்பி இருக்க, அதை பாரத்துக்கொண்டு இருந்த அன்பழகன் அறையை விட்டு வெளியேவர, சரியாக கீழே வந்த பரிதியிடம் சிக்கிக்கொண்டான்…………………….
யாரும் கூடத்தில் இல்லை என்று உறுதிபடுத்திக்கொண்டு வெளியே வந்தவன் தன் அறை கதவை சாற்றி விட்டு திரும்ப, அவனுக்கு முன் நின்று இருந்தான் பரிதி, அவனை பார்த்தும் அன்பழகன் அவன் யார்? என்பது போல் பார்த்தான். அவனுக்கு பரிதியை தெரியவில்லை என்பது தான் உண்மை. ஆம் உண்மையில் இதுவரை பரிதியை அன்பழகன் பார்த்து இல்லை. அவன் இந்த வழக்கில் சம்பந்தபட்டு இருப்பதே அவனுக்கு கடைசியில் தான் தெரியும்.
அதுவும் நல்லதம்பி சொல்லி தான், பரிதி என்பவன் தான் இந்த எல்லாவற்றிக்கும் காரணம் என்பது அவனுக்கு தெரியவந்த போது அன்புவின் வாழ்கையை அவன் முற்றிலும் புரட்டி போட்டு இருந்தான். அப்போதும் கூட பரிதி பாக்கயாவின் மகன் என்று மட்டுமே தெரியுமே தவிர, அவன் புகைபடத்தை கூட இதுவரை அன்பு பார்த்து இல்லை. அவனை தெரிந்துக்கொள்ளும் மனநிலையும் அப்போது அவனுக்கு இல்லை.
இப்படி ஒரு நாள் அவன் கதிரழகியோடு அந்த வீட்டுக்கு விருந்தாட வருவான் என்று தெரிந்து இருந்தால் அவன் நிலைபாடு என்னவாக இருந்து இருக்குமோ? வழக்கு முடிந்த பின் வீட்டில் போசிக்கொண்டது, அவன் மருத்துவன், இராணுவத்தில் பணி செய்கிறான். கதிரழகியையும், குழந்தையும் தன்னோடு அழைத்து போய்விடுவான், இதுவும் இன்னும் இரு நாட்களில் என்பது போன்ற செய்திகளை தான். அதனால் அன்பு அவர்களின் இந்த வரவை எதிர்பார்க்கவில்லை,
இப்போதும் அவர்கள் வருகையை பற்றி யாரும் அவனுக்கு தெரிவிக்கவில்லை. இவர்கள் உள்ள வந்ததும், பின்னால் வந்த கதிர் இவர்கள் வரவை பற்றி பேச அப்போது தான் கதிரழகி இங்கு வருகிறாள் என்று அவனுக்கு தெரிந்தது. இன்று காலையில் இரத்தினமும்,கனேசனும் கிளம்புவது கூறித்து நேற்று இரவு பிள்ளைகளிடம் பேசிக்கொண்டு இருக்க, அதை அப்போது பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை அவன். போனவர்கள் வேலை முடிந்ததும் திரும்பாமல், இவளை எதுக்கு கூப்பிடனும், அவளுக்கும் கொஞ்சமும் வெட்கம் இல்லாமல், புது புருஷன் கூட வரா பார்!!!! என்று தான் பெரும்மினான். அந்த நிமிடம் இது அவள் வீடு, அவள் வீட்டில் தான் வேண்டாத பொருள் போல் அமர்ந்து இருக்கிறோம் என்ற எண்ணம் இல்லை அவனுக்கு அல்லது அதை பற்றிய கவலை இல்லை அவனுக்கு.
காலையில் இவர்கள் கிளம்பி இருக்க, நந்தினியும் தன் தாய் வீட்டுக்கு புறபட்டு விட்டாள். அவனுக்கு வீட்டில் யாரும் இல்லை என்ற மனநிலை இன்று ஒய்வு எடுக்கலாம் என்று நினைத்து லீவ் எடுத்து இருக்க, இப்போது இப்படி சிக்கி இருந்தான். அதனால் இப்போது அவன் இருக்கும் மனநிலையில் முன்னால் நிற்பது பரிதி என்று அவனுக்கு அனுமானம் கூட இல்லை. எல்லாவற்றையும் விட இப்போது இந்த இடத்தில் இருந்து போனால் போதும் என்ற மனநிலையில் இருந்தான்.
தன்னை அவனுக்கு அடையாளம் தெரியவில்லை, என்று உணர்ந்துக்கொண்ட பரிதி அப்புறம் ப்ரே!!! எங்க இவ்வளவு அவசரம் என்றான் அவன் தோளில் கை வைத்தபடி, ஏற்கனவே கிளம்பும் அவசரத்தில் இருந்தவன், அவனின் அழைப்பையும், அவனையும் கண்டு கொள்ளாமல், ஹலோ யாரு நீ? இது வரைக்கும் உன்னைய இந்த ஊர்ல பாத்த மாதிரி இல்லையே, யாரை பார்க்க வந்த? வீடு திறந்து இருந்தா நேர உள்ள வந்துடுவியா? என்றான் அதிகாரத்துடன்……………
அவனுக்கு அன்பழகனை பார்த்தும், கண்ணா லட்டு தின்ன ஆசையா……………………… என்ற மூமென்ட் தான்……………. அவன் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்ப் போல பிரகாசிக்க அவன் மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை.
தன்னை பார்த்தும் இவன் ஏன் இவ்வளவு சந்தோஷ படுறான், யார் இவன் என்ற கேள்வி அன்பு முகத்தில் இருக்க…………….. அதை புரிந்துக்கொண்ட பரிதியே என்ன ப்ரோ இப்படி பாக்கிறீங்க………………….. என்றான்…………… நீ யாரு ? என்று கேட்க. என்னது நீயா……………….. என்ன என்னை தெரியலையா!!!!!!!!!! என்றான் வாயில் கைவைத்து அதிர்வாக………………………
அவன் கேட்டதில் அதிர்ந்து போன அன்பு ஒருவேளை நம்ம கூட படிச்சவன் எவனாவது இருப்பானோ……………. நம்மளை பார்க்க வந்து இருக்கானோ……… இவன் முககச்சாயல் யாரையும் ஞாபகபடுத்தலையே என்று மனதில் ஒட்டிப்பார்க்க…………… எதுவும் அவன் மனதில் பதியவில்லை, அதைவிட வீட்டுக்கு யாராவது வரும் முன் வெளியே போய்விட வேண்டும் என்ற அவசரமும் அவனுக்கு, யாருடா? இவன் என்று எரிச்சல் தான் வந்தது அன்புவுக்கு………..
அவன் எரிச்சல் எல்லாம் அவனை ஒன்றும் செய்யவில்லை. என்னை போய் எப்படி………………… என்னை போய்……………. நான் உங்களை எந்த இடத்தில் வைச்சி இருக்கேன் தெரியுமா? ஆனா உனக்கு என்னை தெரியல? என்று மேலும் அவனை வெறுப்பு ஏற்றினான். பரிதி ஓஓஓஓஓஓஓஓ…. ப்ரே என்னை நாய் சொல்றிங்க……………. ம்மம்மம்மம்மம்ம சரி சரி, அதாவது ப்ரே……. என்று இழுத்தவன் திறந்த வீட்டில் நுழைஞ்சா மட்டும் நாய் இல்லை……………. நமக்கு சம்பந்தமே இல்லாம………………. செந்தம் இல்லாம………………….. மரியாதை இல்லாம…………………….. சுடு சூரனை இல்லாம………………………… ஒரு இடத்தி்ல் இருந்துகிட்டு, அங்க நான் தான் எல்லாம் நினைக்கறது…………………… என்று இழுத்தவன். என்ன புரியலையா? சரி உங்களுக்கு இன்னும் விளக்கமா சொல்றேன் ஏன்னா நீங்க என்ன ப்ரோவா போய்டீங்க…………. என்று அவன் இழுக்க…………..
அதில் கடுப்பான அன்பு வாய் திறந்து பேசும் முன்…………………. பரிதி ஆரம்பித்து இருந்தான், அதாகபட்டது. சில சமயம் நம்ம வீட்டில் சமைச்ச சாப்பாடு மீந்து போய் அதை கீழ கொட்ட மனசு இல்லாம, சரி ஒரு பிச்சைகாரனுக்காவது போடலானு நினை வச்சு இருப்போம் ஆனா சில சமயம் அவனும் வரலைனா, தெருவில் சுத்தற நாய்க்காவது போடுவோம்னு நினைச்சு போட்ட, அந்த நாயும், சாப்பிட ஏதும் கிடைக்கம காஞ்சி போய் இருக்கும், சாப்பாடு கிடைச்ச குஷியில் அது சாப்பிட, அதுக்கு அப்புறம்,எப்பெல்லாம் சாப்பாடு இருக்கோ அப்போ எல்லாம் அதுக்கும் பாவம் பார்த்து அதுக்கும் அந்த வீட்டில் போடுவாங்க.
ஆனா பாருங்க கொஞ்ச நாள் கழிச்சு அந்த நாய் அந்த வீட்டு வாசலிலேயே படுத்து கிடக்கும். ஏன்னா அதுக்கு தான் தெரியும்மே இங்க சாப்பிட கிடைக்கும்னு. அதொட விடமா, அந்த விடே தனக்கு தான் நினைச்சு கொஞ்சம் கொஞ்சமா வீட்டுக்குள்ளயும் வரும், சரி பாவமுன்னு பார்த்தா, அதுக்கு வீட்டுக்குள்ள ஏசி ரூம் கூட கேட்கும் என்று அவன் பேசிக்கொண்டு இருக்க………….. ஏய் இப்ப யாரை பார்த்து நாய்னு சொல்லுற……………………………. என்று சீற…………
அட உங்களை நினைச்சுடிங்களா ப்ரோ? கண்டிப்பா இல்லை…………… ஏன்னா………….. இத்தனை செய்ற அந்த நாய் அந்த வீட்டுக்கு விசுவாசமா இருக்கும். நம்ம அந்த மாதிரி இல்ல………… அப்போ நம்ம நாய் பத்தி என்று என்ன பேசி இருப்பனோ…………… அதற்குள் கோவமான அன்பு டேய் எங்க வந்து யாரு கிட்ட என்ன பேசிட்டு இருக்க? எவ்வளவு தைரியம் இருந்த என்னைய பார்த்து நாய்னு சொல்லுவ, நான் யார் தெரியுமா? என்னோட இடம் தெரியாம விளையாடிட்டு இருக்க………………… என்று கோவபட்டவன். அப்போதும் அவன் யார் என்று கேட்கவில்லை.
ஓஓஓஓஓஓஓஓ சமுகம் பெரிய இடம் போலயே சொல்லுங்க தெரிஞ்சுக்கலாம் என்றான் நக்களுடன்………………. அவன் பேச்சில் இருந்த நக்கல் அவனை உசுப்பிவிட, எதையும் யோசிக்காமல், இந்த வீட்டில் என்னை கேட்காம ஏதும் நடக்காது, இந்த வீட்டில் நான் தான் எல்லாம்……………. என்னைய மீறி இந்த வீட்டில் ஒரு துரும்பு கூட கிள்ள முடியாது……………. நான் இந்த வீட்டு மருமகன்……….. என்று அவன் கூறி, பரிதியை மிதப்பாய் பார்க்க, எதிரில் இருப்பவன் முகத்தில் அதற்கான எந்த பிரதிபலிப்பும் இல்லை.
அவனை இதுவரை இந்த ஊரில் பார்த்து இராத அன்பு எதை பற்றியும் யோசிக்காமல், தன்னை அவன் கீழாக பார்ப்பது பிடிக்காமல், இவனுக்கு என்ன தெரிய போகிறது என்ன நினைப்பில் சொல்லிவிட, ஆனால் அதற்கும் அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. அதை பார்த்தும் அன்புவுக்கு துனுக்குற்றது, ஒரு வேளை இவன் அந்த கதிர் பைய கூட வந்து இருப்பானோ…………………. நம்மை பத்தி அவன் ஏதும் சொல்லி இருப்பானோ………… என்று தான் நினைத்தானே தவிர, இவன் பரிதி என்று அப்போதும் அவன் எண்ணவில்லை.
மேலும் அவன் சொன்னது பற்றி எந்த கவலையும் இல்லாமல் நின்று இருப்பதில் அவனுக்கு, இன்னும் கோவம் கூட, ஏய் யாருடா நீ என் வீட்டுக்கு வந்து என்னையே கேள்வி கேட்குற? என்று அவனிடம் எகிற……………….. என்னாது உன் வீடா? உன் மாமனார் இந்த வீட்டை உனக்கு எழுதி வைச்சுட்டாரா என்ன? என்றான் அப்போதும் அசால்டாக……………..
இது தன் வீடு, தான் இந்த வீட்டின் மாப்பிள்ளை என்று சொல்லியும், எதிரில் இருப்பவன் அதை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் பேசுவது அன்புவுக்கு எரிச்சல் மூட்ட………………. ஏய் என்று பேச வந்தவன்.